
அன்புள்ள விசுவாசியே,
சகலத்தையும் உண்டாக்கி, ஒழுங்குபடுத்திய தேவன், நம்மை மீட்பதற்காக, நம்மிடையே மாம்சமானார், அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். அதன்பின்னர் அவர் கடைசி நாட்களில் இந்த பாவ பூமியில் இங்கே நின்று, அவருடைய வார்த்தையை அப்படியே நிரூபிக்க வேண்டும் என்றே, அவர் தம்முடைய மகத்தான பிரசன்னத்தால் நம்மை மிகவும் கனப்படுத்துகிறார், ஏனென்றால் அவர் அந்த வார்த்தைக்கு கடமைப்பட்டவர்.
பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்கு உயிர்ப்பித்திருக்கிறார். அது ஜீவனுள்ளதாகிவிட்டது. விசுவாசத்தினால் நாம் அதைக் காண்கிறோம். வார்த்தை அவ்வண்ணமாய்க் கூறியுள்ளபடியால் அது அவ்வண்ணமாகவே உள்ளது என்பதை நாம் அறிவோம், மேலும் ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்கு உயிரப்பிக்கிறார். தேவனுடைய வார்த்தை மாம்சத்தில் வெளிப்படுத்தப்படும் என்று தீர்க்கதரிசி கூறினதுபோலவே, இப்பொழுது நாம் அதனால் இணைக்கப்பட்டிருக்கிறோம்.
விசுவாசி அதை விசுவாசிக்கிறான், (எதை?) வார்த்தையை விசுவாசிக்கிறான். சபைக் கோட்பாட்டை அல்ல; வார்த்தையையே! வேறு யாரோ ஒருவர் கூறுகிறதை அல்ல; வார்த்தை என்ன கூறுகிறது என்பதையே! இப்பொழுது, நினைவிருக்கட்டும், அதுதான் விசுவாசி. விசுவாசி கேள்வி கேட்பதில்லை. விசுவாசி, “அது எப்படி இருக்க முடியும்? அது எனக்கு விளக்கப்பட்டிருந்தால் நலமாயிருக்குமே!” என்று கூறுவதில்லை. அதுதான் அவிசுவாசி, அதாவது, அது என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், “அது வார்த்தையாயிருந்தால், அது வார்த்தையே! அது உண்மையே.” அதுதான் விசுவாசி.
நீங்கள் ஒவ்வொரு சிறு எழுத்தையும், ஒவ்வொரு எழுத்தின் சிறு உறுப்பையும், அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு காரியத்தையும் விசுவாசிக்க வேண்டும். அது உண்மையாக இருக்க வேண்டும். நீங்கள், “நான் அதை விசுவாசிப்பதில்லை. சில வார்த்தைகள் தேவனுடையது, சில வார்த்தைகள் மனிதனுடையது, அவைகளில் சில வேட்டையாடுதலின்போது நிகழ்ந்த கட்டுக் கதைகள்” என்று கூறினால், பாருங்கள், அப்படியானால் நீங்கள் ஒரு அவிசுவாசி. விசுவாசி கேள்வி கேட்பதில்லை. விசுவாசி அதை விசுவாசிக்கிறான், அது எப்படித் தென்பட்டாலும் அல்லது வேறு யாரேனும் அதைப் பற்றி என்ன கூறினாலும், அது எவ்வளவுதான் சாத்தியமற்றது என்பதாய் தென்பட்டாலும் பொருட்படுத்தாமல், நாம் அதை விசுவாசிக்கிறோம்!
இங்குள்ள ஒவ்வொரு நபரும், தற்போது, இந்த ஒலி நாடாவைக் கேட்கிற ஒவ்வொரு நபரும்; என்றோ ஒரு நாளில் நான் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்ல வேண்டியிருந்தாலும், இந்த ஒலிநாடாக்கள் அப்பொழுதும் ஜீவனுள்ளதாயிருக்கும். அது உண்மையே. புரிகிறதா? நீங்கள் இந்த வகுப்பினரில் ஒருவராயிருக்கிறீர்கள். நீங்கள் அவைகளில் ஒருவராயிருக்கத்தான் வேண்டும்.
நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம், நீங்கள் எந்த வகுப்பின ஜனங்களாய் இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க, உங்களுடைய ஜீவியத்தையே பார்க்க வேண்டும். நீங்கள், “அக்கினி ஸ்தம்பத்தினால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு தீர்க்கதரிசியை தேவன் அனுப்பினார் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுகிறீர்களா? ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படிக்கு அவர் எங்களிடம் கூறினார். சரியாக ஒலிநாடாவில் உள்ளதையே சொல்ல வேண்டும், ஒரு வார்த்தையையும் மாற்ற வேண்டாம். அவர் என்ன கூறினார் என்பதனால் நாம் நியாயந்தீர்க்கப்படுவோமேயன்றி, அவர் என்ன கூறினார் என்று யாரோ ஒருவர் கூறினதினாலுமல்ல, அவர் என்ன பொருட்படுத்தி கூறினார் என்று யாரோ ஒருவர் கூறுவதானாலும் அல்ல, ஆனால் ஒளிநாடாக்கள் என்ன கூறுகிறது என்பதன் மூலமேயாகும்.
இல்லையென்றால், நீங்கள், "அவர் மட்டும் பரிசுத்த மனிதன் அல்ல. அவர் செய்த இந்தக் காரியங்களைச் செய்ய மற்ற ஜனங்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசியை மிக மிஞ்சின ஸ்தானத்தில் பொருத்துகிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இது ஒரு வித்தியாசமான காலம்" என்று கூறுகிற, கோரா மற்றும் தாத்தானோடும் போகப் போகின்றீர்களா?
நீங்கள் இந்த வகுப்பினர்களில் ஒருவராய் இருக்கிறீர்கள். இப்பொழுது உங்களுடைய தற்போதைய நிலையில், உங்களுடைய தற்போதைய மனநிலையில், அதாவது, காணக்கூடிய இந்த கூட்டத்தாரில் இங்கு இருக்கிற நீங்கள், இந்த ஒலி நாடாவை கேட்க போகும் காணமுடியாத கூட்டத்தாரில் இருக்கப்போகும் நீங்களும், இந்த ஒலிநாடாவைக் கேட்ட பிறகு உங்களுடைய தற்போதைய மனநிலை, நீங்கள் எந்த வகுப்பினராய் இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறது. இது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் வார்த்தையில் ஒரு விசுவாசியாக இருக்கிறீர்களா, அதனோடு தரித்திருப்பீர்களா, நீங்கள் வெளியே நடந்து செல்வீர்களா அல்லது அந்த ஒலிநாடாவை நிறுத்திவிடுவீர்களா என்பதை உங்களுக்கு சரியாக சொல்கிறது.
கர்த்தருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம், நாம் உண்மையான விசுவாசிகள், வேறு யாரோ ஒருவரால் சம்மதிக்கவைக்கப்பட்டவர்கள் அல்ல; வேறு ஏதோவொன்றாலும் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வார்த்தையைத் தாமே வெளிப்படுத்தினார். நாம் வார்த்தை தெளிவாக்கப்பட்டதையும், ரூபகாரப்படுத்தப்பட்டதையும், வெளிப்படுத்தப்பட்டதையும் காண்கிறோம்.
சோதனைகளினால், கடுமையான பாதைகளினால், கடுமையான உபத்திரவத்தினால் நாம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம், ஆனால் நம் இருதயங்களின் விசுவாசம் அந்த வார்த்தையின் பொருளுக்கே துடிக்கிறது. நாம் இப்பொழுது வனைவதற்கு செல்ல ஆயத்தமாக இருக்கிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளாயும், அவருடைய வார்த்தையில் சரியாக உருவாக்கப்பட்டவர்களாயும் இருக்கிறோம். நாம் ஜீவனுள்ள உதாரணங்களாயிருக்கிறோம், தேவனுடைய வார்த்தை நம் மூலமாக ஜீவித்துக்கொண்டிருக்கிறது. நாம் எங்கு நிற்போம் என்பதைப் பார்க்க, நம்மை மிக அடிமட்டத்தில் கீழே தள்ள, நம்மை உலுக்கும்படி சோதனைகள் உண்டாகின்றன. ஆனால் நாம் அசைக்கப்பட முடியாது, நாம் ஒவ்வொரு வார்த்தையின் பேரிலும் நிற்கிறோம்.
நீங்கள் யார் என்பதை அவர் சொல்லும்போது கேளுங்கள்.
தேவன் உலகத்தை வார்த்தையை உரைத்து சிருஷ்டித்தபோது, உங்களுடைய ஒவ்வொரு பாகமும் இங்கே இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்பொழுதே உங்களுடைய சரீரத்தை அவர் இங்கே வைத்தார். தேவனைத் தவிர வேறு எதுவும் அதைப் பறித்துக்கொள்ள முடியாது.
அதை உங்களிடமிருந்து எதுவும் பறிக்க முடியாது. நீங்கள் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் உங்கள் ஸ்தானத்தை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. நீங்களோ, "நான் வெறுமனே ஒரு இல்லத்தரசி" என்று கூறுகிறீர்கள். உங்கள் ஸ்தானத்தை யாரும் எடுத்துக்கொள்ள முடியாதே! தேவன், தம்முடைய மகத்தான நடைமுறை திட்டத்தில், கிறிஸ்துவின் சரீரத்தை ஒழுங்குபடுத்தியிருக்கிறார், உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர் எவருமே இல்லை.
மகிமை...அல்லேலூயா...தேவனுடைய சேமித்து வைக்கப்பட்ட ஆகாரத்தைக் கேட்பது இன்னும் அதிகமாகவும் மகத்தானதாகவும் இருக்கிறது. நாம் யார் என்பதை தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட செய்தியாளர் மூலம் நமக்குச் சொல்லி அவர் பேசுகிறதை நாம் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நம்முடைய விசுவாசம் அதிகமாகிறது. தெரிந்துகொள்வதினால் உண்டாகும் மகிழ்ச்சியோ:
- நாம் “உண்மையான விசுவாசிகள்”
- நாம் “அவர்களில் ஒருவர்”
- நாம் “மணவாட்டி”
கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலிருந்து நாம் கூடும்போது, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, பிரான்ஹாம் கூடாரமே மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள மணவாட்டியின் பாகமானவர்களே, என்னுடன் இயங்கு பொத்தானை அழுத்தி: மூன்று வகைகளான விசுவாசிகள் 63-1124E. என்ற செய்தியை கேட்கும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன். இதைத்தான் செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுவே நமக்கான, தேவனுடைய திட்டமாயிருக்கிறது.
- தேவன் உங்களுடைய இருதயத்தில் எந்த ஒலிநாடாவை வைத்தாலும்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
- நீங்கள் தெரிந்து கொள்ளும் நேரத்தில் கேட்க: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
- உங்களுக்கான என்னுடைய செய்தியாயிருக்கிறபடியால்: இயங்கு பொத்தானை அழுத்தவும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
பரி.யோவான் 6:60-71