ஞாயிறு
21 ஜனவரி 2024
63-1124M
கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?

அன்புள்ள ஒலிநாடாப் பிரியர்களே,

இந்த செய்தியை நம்முடைய முழு மனதோடு நாம் நேசிக்கிறோம். இது தேவனுடைய கரும்பின் இனிமையாயுள்ளது. இது முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்டு, மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிற தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. இந்த செய்தி தேவனுடைய வார்த்தைக்கு விடையாக உள்ளது. இது நம்முடைய நாளுக்கான அதே அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவாய், அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாக உள்ளது.

நாம் இங்கே ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையைப் பெற்றுள்ளோம், அவர் நம்மை ஏற்றுக்கொண்டு, நமக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை கொடுத்திருக்கிறார் என்பதை ஆவியினால் நிரூபித்து, ரூபகாரப்படுத்துகிறார். நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அதே சுவிசேஷம், அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே ஊழியம், அதே அக்கினிஸ்தம்பமும் கூட நமக்கு முன்பாக காணப்பட்டு, அதே அடையாளங்களையும் அற்புதங்களையும் நடப்பிக்கிறது. எனவே எங்கும் சாக்குபோக்குக்கு இடமில்லை.

இது தேவனும் அவருடைய மணவாட்டியும் ஒன்றிணைந்து கொண்டிருக்கிற ஒரு நேரமாயுள்ளது. கிறிஸ்துவின் மணவாட்டி அழைக்கப்பட்டிருக்கிறாள். நாம் தேவனுடைய ராஜ்யத்தில் முத்திரையிடப்பட்டிருக்கிறோம். ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதலில் இந்த பூமியிலிருந்து நம்மை மகிமைக்கு அழைத்துச் செல்லும் இயக்கவியலுக்காக இங்கே இயந்திரவியல் காத்திருக்கிறது.

அந்த இயக்கவியல் பரிசுத்த ஆவியின் மறுநிரப்பீடாயுள்ளது. தலைக்கல்லானது கீழே வந்து சரீரத்தோடு இணையும். அப்பொழுது, தலையும் சரீரமும் ஒன்று சேரும்போது, பரிசுத்த ஆவியின் முழு வல்லமை நம்மை எழுப்ப, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும் அவருடைய பரிசுத்தத்தின் அழகில் எழுப்பி, ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதலில் கொண்டு செல்லும்.

அந்த நேரமோ துரிதமாக அணுகிக் கொண்டிருக்கிறது. நேரமோ முடிவுக்கு வந்துவிட்டது. இறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். நம்முடைய நாளுக்கான அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையை நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த மணி நேர செய்தியில் உங்கள் நிலைப்பாடு என்ன?

“நான் செய்தியை விசுவாசிக்கிறேன். தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார் என்று நான் விசுவாசிக்கிறேன்: என்று நீங்கள் எளிமையாகச் சொல்வீர்களா.

அதுவரை நின்று விட்டு, “நான் செய்தியை விசுவாசிக்கிறேன்” என்று கூறிவிடாதீர்கள். நீங்கள் செய்தியாளனுக்குக் கீழ்ப்படியுங்கள்!

நீங்கள் செய்தியாளனுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்றால்: கவனியுங்கள், செய்தியாளனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் கூறினார். அப்படியானால், செய்தியாளர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு விசுவாசிப்பது எவ்வளவு முக்கியம்?

நீங்களோ “சரி, சகோதரன் பிரான்ஹாம் கூறின ஒவ்வொரு வார்தையும் நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறலாம். அது நல்லதுதான். ஆனால் அதை வெறுமன-அதை வெறுமென படிக்க முடிந்தால் மாத்திரம் போதாது.

ஏன் ஜனங்கள் ஒலிநாடாக்களால் திருப்தியடைய முடியவில்லை? எல்லோரும் தீர்க்கதரிசியாயிருக்க முடியாது. ஒரே ஒரு தீர்க்கதரிசிதான் உண்டு, வார்த்தை அந்த தீர்க்கதரிசிக்கே வருகிறது.

அவர்கள் அதை சந்தேகிக்கத் துவங்கும் வரை சபை அருமையாக செயல்பட்டது; அதாவது அந்த தீர்க்கதரிசி கூறினதை அவர்களுக்குச் சொல்லவும், அவர்களுக்கு வியாக்கியானிக்கவும் பல்வேறுபட்ட சத்தங்கள் தேவைப்பட்டன. அவர்கள் ஒரு நவீன கோராவையும், தாத்தானையும் விரும்பினர்.

பாருங்கள், வார்த்தையை சிறிது தவறாக அர்த்தம் கொண்டதன் நிமித்தம் அது தொடங்கினது, அதே காரியம், அதே விதமாகவே அது முடிவடைகிறது.

இது வார்த்தையின் ஒரு சிறிய தவறான புரிதலுடன் ஆரம்பித்து, முடிவடையும் என்றால், நீங்கள் ஒலிநாடாக்களோடு எப்படி தரித்திருக்க வேண்டும் என்பதை நிச்சயமாக அடையாளங் கண்டு கொள்கிறீர்கள். தேவன் ஏன் இந்தச் செய்தியை மணவாட்டிக்காக ஒலிப்பதிவுசெய்து சேமித்து வைத்தார் என்பதை நீங்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

நான் இந்த காரியங்களை உங்களுடைய போதகர்களை தாழ்த்துவதற்காகவோ, அல்லது உங்களுடைய போதகருக்கு செவி கொடுக்காதீர்கள் என்று கூறவோ கூறிக்கொண்டிருக்கவில்லை, இல்லை, இல்லை, ஆனால் இந்த செய்தியை ஒலிநாடாவில் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்பதன் முக்கியத்துவத்தை உங்களுக்குக் காட்டுவதற்காகவேயாகும்.

சபையானது எவ்வளவாக அதை மறுபடியும் மறுபடியும், மறுபடியும் மறுபடியும் சோதித்துப் பார்க்க வேண்டியதாயுள்ளது! அவருடைய வருகைக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். நாம் விழித்துக் கொண்டிருக்கிறோம். நாம் பறந்து செல்ல காத்திருக்கிறோம். அதை நாம் வார்த்தையுடன் சோதித்துப் பார்ப்பது நலம், யாரோ ஒருவர் கூறினதுடன் அல்ல. உங்களையே, நீங்கள் அறிந்தவர்களாய், கிறிஸ்துவுடன் ஒரு தனிப்பட்ட விதத்தில் அனுபவம் கொண்டிருக்க நிச்சயமுடையவர்களாயிருங்கள். அதை மறுபடியும், மறுபடியும், மறுபடியும் சோதித்துப் பாருங்கள்.

அவர் என்னக் கூறினார்? நாம் அதை மீண்டும், மீண்டும், மீண்டும் வார்த்தையினால் சரிபார்க்க வேண்டும். நீங்கள் அதை வார்த்தையினால் எப்படி சரி பார்க்கிறீர்கள்? இன்றைக்கான வார்த்தை என்ன? வேதம், அது ஆதியிலிருந்ததைப் போலவே அதே விதமாகவே இருந்து வருகிறது.

தம்முடைய வார்த்தையின் வியாக்கியானி யார் என்று தேவன் கூறுகிறார்? என்னையா? உங்களுடைய போதகரையா? இல்லை, அந்த நேரத்தில் தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி மட்டுமே வார்த்தையின் வியாக்கியானியாய் இருக்கிறார். எனவே, எவரேனும் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் ஒலிநாடாக்கள் மூலம் சரிபார்க்க வேண்டும்!

அந்தக் கூற்று உண்மையாக இருந்தால், எந்த ஒரு நபரும் அல்லது எந்தப் போதகரும் செய்யக்கூடிய மிக முக்கியமான ஒரே காரியம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், அப்படியானால் அந்தச் செய்தியை விசுவாசிப்பதாக உரிமை கோருகிற எவருக்கும் அதைச் சொல்வது ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது? ஏனென்றால் அவர்கள் அதை விசுவாசிக்கிறதில்லை.

உங்களுடைய முடிவான தீர்மானம் என்ன? நானும் என் வீட்டாருமோவென்றால், இந்த செய்தியோடும், தேவனுடைய செய்தியாளரோடும், ஒலிநாடாக்களுடனும் தரித்திருப்போம். ஒலிநாடாக்களில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதை விட முக்கியமானது எதுவுமில்லை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.

● கர்த்தர் உரைக்கிறதாவது என்ற சத்தம் ஒன்று மாத்திரமே.
● அக்கினி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் ஒன்று மாத்திரமே.
● ஏழாம் தூதனாகிய செய்தியாளர் ஒருவர் மாத்திரமே.
● மணவாட்டி அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய சத்தம் ஒன்று மாத்திரமே.
● இந்த தலைமுறைக்கான தேவனுடைய சத்தம் ஒன்று மாத்திரமே.

கிறிஸ்து எனப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? 63-1124M என்ற செய்தியை ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, நாங்கள் கேட்டு, எங்களுடைய முடிவான தீர்மானத்தை எடுக்கப்போகிறபடியால், நீங்களும் அதே வெளிப்பாட்டை உடையவராய் இருந்தால், என்னோடும், அதே விதமாக விசுவாசிக்கிற உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளின் ஒரு சிறிய குழுவுடனும் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்