
அன்புள்ள இளைப்பாறுகிற மணவாட்டியே,
பயம், பீதி, ஏவுகணைகள், அணு குண்டுகள், அழிவு, பொய்கள், வஞ்சகம், அரசியல், மரணம் என நேற்று உலகில் நடந்ததைக் கேட்க இன்று உலகம் தலைப்புச் செய்திகளை வாசித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் மணவாட்டியோ இயங்கு பொத்தானை அழுத்தி, வெள்ளை அங்கிகள், நீதிமானாக்கப்படுதல், முன்குறித்தல், ஊக்குவிக்கப்படுதல், வெளிப்பாடு, சத்தியம், ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல், நித்திய ஜீவன் என்று கூறி அவர்களிடம் பேசுகிற தேவனுடைய சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
பயப்படாதே அன்பே, நான் உன்னுடன் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியும் இருக்கிறேன். இது என்னுடைய மகத்தான திட்டத்தைக் குறித்த யாவற்றையும் நான் உங்களிடம் கூறியிருப்பதாயுள்ளது. இப்பொழுது, உங்களுடைய கண்களுக்கு முன்பாக இவை அனைத்தும் படிப்படியாக வெளிப்படுகிறது.
அவர்கள் கூறுவதோ: இது நம்முடைய வாழ்வின் மிக மோசமான நாட்கள்; எல்லாம் நாளை முடியலாம்.
நாம் கூறுவதோ: இது நம்முடைய வாழ்வின் மிகச் சிறந்த நாட்கள்; எல்லாம் நாளை முடியலாம்.
தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார், அவருடைய வார்த்தை. அவர் தம்முடைய மணவாட்டியை அழைக்கவும், அவர்களுக்காக அவர் ஆயத்தப்படுத்தியுள்ள அவர்களுடைய புதிய வீட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்லவும் அவர் தம்முடைய தூதன் தீர்க்கதரிசியை தம்முடைய வார்த்தையுடன் அனுப்பினார்.
இதே ஆறுதலையும், சாமாதானத்தையும் மற்றும் நாம் பெற்றுள்ள உறுதியையும் நீங்கள் விரும்பினால்; அவர் தம்முடைய மணவாட்டிக்காக ஆயத்தம்பண்ணியுள்ள அந்த பரலோக வீட்டிற்குள் நீங்கள் வந்து வசிக்க விரும்பினால்; ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, இந்நாளுக்காக தேவனால் அருளப்பட்டிருக்கிற ஒரே வழியை கேட்பதற்கு எங்களுடன் சேர்ந்துகொண்டு, முத்திரைகள் மீதுள்ள கேள்விகள் பதில்களில் 63-0324M: அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தம் நம்மிடத்தில் முழங்குவதைக் கேளுங்கள்.
ஞாயிற்றுக்கிழமை நீங்கள் கேட்கப்போகும் தலைப்புச் செய்திகளின் ஒரு சிறிய முன்னோட்டம்.
மணவாட்டியை எது இணைக்கும்: வார்த்தையே
வார்த்தை யாருக்கு வருகிறது: தீர்க்கதரிசிக்கே.
அந்த வார்த்தையின் தெய்வீக வியாக்கியானி யார்: தீர்க்கதரிசியே.
உங்களுக்கு தேவனுடைய சத்தமாயிருப்பது யார்: தீர்க்கதரிசியே.
யாருடைய வார்த்தைகளால் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம்: தீர்க்கதரிசியால்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்