ஞாயிறு
20 ஆகஸ்ட் 2023
63-0322
ஐந்தாம் முத்திரை

அன்புள்ள பரிபூரண வார்த்தை மணவாட்டியே,

தேவன் தம்முடைய கடைசி வல்லமையை அனுப்பியுள்ளார். நம்முடைய பிதாக்களின் மூல விசுவாசத்தை நமக்கு திரும்ப அளிக்க அவர் தம்முடைய மகத்தான கழுகை அனுப்பினார். இது கழுகின் காலம். இனி வேறு மிருகங்களே இல்லை. இனி செய்தியாளர்களே இல்லை. இனி மனிதக் குழுவே இல்லை. அவ்வளவுதான். நாம் முடிவில் இருக்கிறோம். வெளிப்படுத்தல் 10:7-ன் சத்தம் வந்துவிட்டது, அவர் தம்முடைய மணவாட்டியை அழைக்க தம்முடைய மகத்தான தீர்க்கதரிசி கழுகைப் பயன்படுத்தியுள்ளார்.

நீங்கள் ஞாயிற்றுக்கிழமை நம்முடைய மேய்ப்பரான, தேவனுடைய மகத்தான கழுகுகிற்கு செவி கொடுத்துக் கொண்டிருந்திருந்திருந்தால், அவர் எங்களிடத்தில் கூறியதுபோல உங்களுக்கும் சொல்வதை நீங்கள் கேட்டிருந்திருப்பீர்கள்:

"ஏழு இடி முழக்கங்களான தேவனுடைய வார்த்தையைக் கொண்டு துண்டாக வெட்டி, வானங்களையும் கூட அடைக்கப்போகும் அந்தக் குழு நீங்களே. உங்களால் இதை அடைக்க, அல்லது அதை செய்ய, நீங்கள் விரும்பினதை செய்ய முடியும். உங்களுடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தையினால் சத்துரு கொல்லப்படுகிறான், இருபுறமும் கருக்கான எந்த பட்டயத்திலும் அது கருக்கானதாயிருக்கிறது. நீங்கள் விரும்பினால் கோடிக்கணக்கான டன்கள் எடையுள்ள வண்டுகளை உங்களால் வரவழைக்க முடியும். நீங்கள் என்ன கூறினாலும், அது சம்பவிக்கப்போகிறது, ஏனென்றால் அது தேவனுடைய வாயிலிருந்து வருகிற தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அது அவருடைய வார்த்தையாக இருக்கிறது, ஆனால் அவர் எப்பொழுதுமே அதை கிரியை செய்ய மனிதனை உபயோகிக்கிறார்."

தேவன் அனுப்பின கழுகிற்கு செவி கொடுக்கும்படிக்கு; இயங்கு பொத்தானை அழுத்துவதன் முக்கியத்துவத்தை இதற்கு மேல் நான் எப்படி வலியுறுத்த முடியும்? அவர் இந்த செய்திக்கு ஒரு தேவதூதனை கூட நம்ப முடியாதபடிக்கு இது மிக முக்கியமானதாயும், அவ்வளவு பரிபூரணமானதாக…அவ்வளவு பரிபூரணமானதாக இருக்கிறது, வேறு எந்த மனிதனும் இல்லை, வேறு எந்த மனிதக் குழுவும் இல்லை, அவருடைய மகத்தான கழுகுத் தீர்க்கதரிசியைத் தவிர, அவர் அதை கொடுக்கக் கூடிய வேறொருவரும் இல்லை.

நாம் இதைக் குறித்து பேச முடியும், இதைப் போதிக்க முடியும், இதைப் பிரசங்கிக்கக் கூட முடியும், ஆனால் ஒரே ஒரு சத்தம் மாத்திரமே "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதை உடையதாய் இருக்கிறது, எனவே நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டும். உங்களுடைய நித்திய இலக்கை நீங்கள் வைக்கக்கூடியதற்கு ஒரே ஒரு சத்தம் மாத்திரமே உள்ளது. அவருடைய மணவாட்டியை வழிநடத்த தேவன் தெரிந்துகொண்ட ஒரே ஒரு சத்தம் மாத்திரமே உண்டு, அவருடைய மணவாட்டி மாத்திரமே அந்த வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்வாள்.

உலகத் தோற்றத்திற்கு முன்பே அவருடைய எல்லா வார்த்தையையும் வெளிப்படுத்த அவர் தெரிந்துகொண்ட கழுகு தீர்க்கதரிசி ஒருவர் மாத்திரமே…வில்லியம் மரியன் பிரான்ஹாம், அவர், அவர் மட்டுமே, இந்த நாளுக்கான தேவனுடைய கழுகு செய்தியாளராய் இருக்கிறார். அவர், அவர் மட்டுமே, தேவனுடைய மணவாட்டியை வழிநடத்த அனுப்பப்பட்டார்.

என்னுடைய அழைப்பும், அல்லது எந்த ஊழியக்காரர்களின் அழைப்பும்: உங்களை அவரிடம், தேவனுடைய மகத்தான கழுகினிடத்திற்கு வழி நடத்துவது என்ற ஒரே காரியமாகவே உள்ளது. அவர் தெரிந்துகொண்ட ஒருவர். அவருடைய அக்கினி ஸ்தம்பத்தால் அவர் ரூபகாரப்படுத்தின ஒருவர். அவர் புத்தகத்தை எடுத்து, முத்திரைகளை உடைத்து, அதை தம்முடைய ஜனங்களுக்கு, நமக்கு அதை வெளிப்படுத்த, பூமிக்கு அனுப்பின, அவர் தெரிந்துகொண்ட ஒருவர்.

ஒலிநாடாவில் அவர் பேசின வார்த்தைகள் அவருடைய வார்த்தைகள் அல்ல, அவை அவருடைய மணவாட்டி கேட்க ஒலிநாடாவில் பேசப்பட்டு, பதிவு செய்யப்பட்ட தேவனுடைய சிந்தனைகள்; அவருடைய மணவாட்டியாகிய, நீங்கள் மாத்திரமே அதைக் குறித்த உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றிருக்கிறீர்கள்.

மணவாட்டியே, அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பார்! நாம் வந்துவிட்டோம். அவ்வளவுதான். விஞ்ஞான ஆராய்ச்சி அதை நிரூபித்துள்ளது. வார்த்தையின் ரூபகாரப்படுத்துதல் அதை நிரூபித்துள்ளது. நாம் இங்கே இருக்கிறோம்! இந்த வெளிப்பாடு தேவனிடமிருந்து வருகிறது, இது சத்தியமாயுள்ளது. நீங்கள் அதை அடையாளங் கண்டுகொண்டபடியால், நாம் அவருடைய முழுமையான திரும்பளிக்கப்பட்ட குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம்.

இனி யோசிக்க வேணடியதேயில்லை. இனி சந்தேகமேயில்லை. நாம் அவருடைய பரிபூரண வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறோம். நாம் யார் என்பதை அடையாளங் கண்டு கொள்கிறோம். தேவனுடைய கிருபையினால், வெள்ளை அங்கிகளில் எல்லோரையும் காண அவர் தம்முடைய கழுகை அனுமதித்த அவர்கள் நாம்தான்.

மணவாட்டியே தைரியமாயிரு. நாம் கிட்டத்தட்ட அங்கே இருக்கிறோம். நாம் அதை உணர முடியும். அது முன்னெப்போதையும் விட இப்போது நமக்கு மிகவும் உண்மையானது. சத்துரு நம்மை வெறுக்கிறான், ஆனால் தேவன் நம்மை நேசிக்கிறார். அவர் நம்முடன் மாத்திரம் அல்ல, அவர் நமக்குள்ளும் இருக்கிறார். நாம் மாம்சமாக்கப்பட்ட அவருடைய வார்த்தையாக இருக்கிறோம்.

நாம் தவறிப் போக முடியாது, தவறி போக மாட்டோம் என்பதை அவர் சாத்தானுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார். விசுவாசமும் சந்தேகமும் மாத்திரமே உண்டு. நாம் விசுவாசத்தை மாத்திரமே உடையவர்களாக இருக்கிறோம். நம்முடையதில் அல்ல, அவருடைய வார்த்தையில், அது தவறிப் போக முடியாது. ஏன்? நாம் வார்த்தையாய் இருக்கிறோம். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினாரே!

நீங்கள் அவரைத் தெரிந்துகொள்ள வில்லை, அவர் உங்களைத் தெரிந்து கொண்டார். சாத்தான் எப்படி எதையாவது உங்களுக்குச் செய்ய முடியும், தேவன் உங்களைத் தெரிந்து கொண்டார். அவருடைய வார்த்தையை விசுவாசிக்க நீங்கள் தவறிப் போக மாட்டீர்கள் என்று அவர் அறிந்திருந்த படியினால் அவர் உங்களைத் தெரிந்து கொண்டார். சாத்தான் உங்களிடத்தில், "ஆனால் நீங்கள் தவறிப்போய், தவறிப் போய், தவறிப்போய் இருக்கிறீர்கள்" என்று சொல்லுகிறான்…நீ சொல்வது சரிதான், நான் என்னுடைய மாம்சத்தில் தவறிப்போகிறேன், ஆனால் நான் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன், எனவே நான் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க தவறமாட்டேன்.

நாம் அவருடைய பரிபூரண வார்த்தை மணவாட்டியாய் இருக்கிறோம் என்பதை…அவருடைய மற்றும் நம்முடைய சத்துருவுக்கும் அவர் நிரூபிக்கும்படியாக, நாம் சோதிக்கப்பட்டு தேவனுக்காக சோதனைகளினூடாகச் செல்கிறோம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஐந்தாம் முத்திரை 63-0322 என்ற செய்திக்கு: தேவனுடைய மகத்தான கழுகு வெளிப்பாட்டைக் கொண்டு வரும்போது, மகத்தான பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய வீடுகளையும், உங்களுடைய சபைகளையும், அல்லது நீங்கள் எங்கிருந்தாலும் நிரப்புவாராக.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

தானியேல் 9:20-27
அப்போஸ்தலர் 15:13-14
ரோமர் 11:25-26
வெளிப்படுத்தின விசேஷம் 6:9-11 / 11:7-8 / 22:8-9