
அன்பான உண்மையுள்ள மணவாட்டியே,
அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.
- இங்கு வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு இடிகள் முழங்குகின்றன. அது பரிபூரணமான எண்ணிக்கையாகும். இங்கு வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு இடிகள் முழங்குகின்றன. அப்பொழுது பரலோகத்தால் அதை எழுத முடியவில்லை. அங்கே ஒன்றும் சம்பவியாததால், பரலோகத்தால் அதை அறியமுடியவில்லை. யாரும் அதை அறியமுடியாது. அது ஓய்வின் நேரமாயிருந்தது. அது மிகவும் மகத்தானதாயிருந்ததால், அது தூதர்களும் அறியாதவாறு இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
- அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன்:…
அங்கே ஏதோ ஒன்று கூறப்பட்டது. அது வெறும் ஒரு சத்தம் மாத்திரமே அல்ல. ஏதோ ஒன்று கூறப்பட்டது. அவன் அதை எழுதப் புறப்பட்டான்.
…அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் என்னிடம் கூறக் கேட்டேன்…
அந்த சத்தங்கள், அந்த இடி முழக்கங்கள் எங்கேயிருந்தன என்பதைக் கவனியுங்கள். பரலோகத்தில் அல்ல; பூமியின் மேல்! அந்த இடி முழக்கங்கள் வானங்களிலிருந்து ஒருபோதும் சத்தமிடவில்லை.அவை பூமியிலிருந்து சத்தமிட்டன. - ஏழு என்பது தேவனுடைய பரிபூரண எண்ணிக்கையாகும். ஏதோ ஒன்று எழுத்துக் கூட்டி வாசிப்பது போல் ஏழு இடிகளும் ஒரே வரிசையில் ஒவ்வொன்றாக முழங்குகின்றன.
ஒரு உண்மையான தேவனுடைய குமாரனாக அல்லது குமாரத்தியாக இருக்க வேண்டும் என்பதே நம்முடைய இருதயத்தின் வாஞ்சையாயுள்ளது; சீக்கிரத்தில் வரவிருக்கும் அவருடைய எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். எனவே நாம் கர்த்தரிடத்தில்: “மணவாட்டிக்குத் தேவையான எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை எது கொடுக்கும்”? என்று கேட்க வேண்டும்.
- எடுத்துக் கொள்ளப்படுவதற்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்ப்பதற்கென்று, இந்த கடைசிநாட்களில் அந்த ஏழு இடிமுழக்கங்களின் மூலமாக வெளிப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.
- இங்கே இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்படுத்தின விசேஷத்தில் இருக்கின்ற ஏழு இடிமுழக்கங்கள், அது ஏதோ ஒரு இரகசியம். இது தான் "இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்படுத்தல் ” என்று வேதாகமம் கூறுகிறதல்லவா? ஏன், அப்படியானால், அதைக் குறித்த ஏதோ ஒரு மறைக்கப்பட்ட இரகசியம் அங்கே இருக்கின்றது. ஹும்! அது என்ன ? அந்த ஏழு இடி முழக்கங்கள் அதை வைத்திருக்கின்றது. யோவான் அதை எழுதவேண்டுமென்றிருந்தான், அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் கீழே வந்து, “அதை எழுதாதே. ஆனால், அதை முத்திரையிடு, அதற்கு முத்திரை போடு. புஸ்தகத்தின் பின்புறத்தில் அதை வைத்து விடு" என்று கூறினது. அது வெளிப்படுத்தப்பட வேண்டும். அது இரகசியங்கள். .
பரிசுத்த ஆவியானவர், ஊழியத்தின் மூலம், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைத் தம்முடைய மணவாட்டிக்குத் தரும் ஏழு இடி முழக்கங்களின் வெளிப்பாட்டைத் அவர்களுக்கு வெளிப்படுத்தப் போகிறாரா?
- இப்பொழுது மல்கியா 4-ம் அதிகாரத்திலும், வெளிப்படுத்தின விசேஷம் 10 : 6-லும் கூறப்பட்டுள்ள இந்த செய்தியாளன் இரண்டு காரியங்களைச் செய்யப் போகிறார். ஒன்று: மல்கியா 4-ன்படி, அவர் பிள்ளைகளின் இருதயத்தைப் பிதாக்களிடத்திற்குத் திருப்புவார். இரண்டாவது: வெளிப்படுத்தின விசேஷம் 10-ல் உள்ள ஏழு முத்திரைகளில் அடங்கியிருக்கின்ற வெளிப்பாடுகளான ஏழு இடி முழக்கங்களின் இரகசியங்களை அவர் வெளிப்படுத்துவார்.
இது எளிமையானது:
அந்த ஏழு இடி முழக்கங்களினூடான இரகசியம் மணவாட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைக் கொடுக்கும். தேவன் மாத்திரமே, அவருடைய ஏழாம் தூதனான செய்தியாளர் மூலம், ஏழு இடிமுழுக்கங்களைகளை மணவாட்டிக்கு வெளிப்படுத்துவார்.
ஏழு இடிமுழக்கங்கள் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டுமென்றால், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசம் உங்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென்றால், அந்த வெளிப்பாட்டை நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்திலிருந்து மாத்திரமே பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியேயில்லை; என்னிடமிருந்து அல்ல, உங்கள் உள்ளூர் மேய்ப்பர், சுவிசேஷகர் அல்லது போதகரிடமிருந்து அல்ல, ஆனால் இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம், உலகத்திற்கே தேவனுடைய மேய்ப்பராயிருக்கிறவரிடமிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.
எல்லா இரகசியங்களும் வெளிப்படுத்தப்படுவதைக் கேட்க வாருங்கள்; ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவன் பேசி, எளிமையில் தம்மை வெளிப்படுத்தி: ஏழாவது முத்திரையை 63-0324E நமக்கு கொண்டுவருவதை நாம் கேட்கையில் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தைப் பெற்று, எண்ணையினால் உங்கள் தீவட்டிகளை நிரப்புங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிப்பதற்கான வேத வசனங்கள்:
உபாகமம் 29:16-19
I இராஜாக்கள் 12:25-30
எசேக்கியேல் 48:1-7, 23-29
மத்தேயு 24:31-32
வெளிப்படுத்தின விசேஷம் 7
வெளிப்படுத்தின விசேஷம் 8:1
வெளிப்படுத்துதல் 10:1-7
வெளிப்படுத்தின விசேஷம் 14