ஞாயிறு
05 நவம்பர் 2023
63-0721
அவர் விசாரிக்கிறார். நீங்கள் அக்கறை கொள்ளுகிறீர்களா?

அன்புள்ள சுவிசேஷ பிள்ளைகளே,

பூமியிலே இதுவரை சஞ்சரித்த ஜனங்களிலேயே நாம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறோம். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஏழாம் தூதனாகிய செய்தியாளர் இந்த வார்த்தைகளை நம்மிடம் சொல்வதை நாம் கற்பனை செய்யது கூட பார்க்க முடியாதே:

நான் உங்களை நேசிக்கிறேன். ஓ, நான் உங்களை என்னுடைய சொந்த பிள்ளைகளைப்போல நேசிக்கிறேன். நான் கிறிஸ்துவுக்கு சுவிசேஷத்தின் மூலமாக, உங்களைப் பெற்றெடுத்தேன்.

இந்த மனிதன் நம்மோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கவில்லை, ஆனால் இது அவருக்கு மேலே உள்ள தேவனாய் இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளும்படிக்கு ஓரு அக்கினிஸ்தம்ப அடையாளத்தோடு அவர் தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியை நமக்கு அனுப்பினதற்காக தேவன் நமக்காக மிகுந்த அக்கறை காண்பிக்கிறாரே. அவர் ஒருவரே வழிநடத்திக் கொண்டிருக்கிறவராய் இருக்கிறார்.

அவர் நம்மீது அக்கறை கொண்டுள்ளதால், பெரிதான நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பு, வந்து கொண்டிருக்கிற எல்லா நியாயத்தீர்ப்புகளிலிருந்தும் நாம் விடுபடுவதற்கு அவர் ஒரு வழியைத் ஆயத்தம் செய்திருக்கிறார். அந்தத் தப்பிக்கும் வழி தெரிந்துகொள்ளப்பட்ட, நமக்கானதாய் மாத்திரமே உள்ளது. நாமே இந்த மூல ஜீவணுவை ஏற்றுக்கொண்டவர்களாயிருக்கிறோம். அதைப் புரிந்துகொள்வதற்கு நாமே முன்குறிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். நாமே இந்த மகத்தான ஒலிநாடா ஊழியத்தின் ஒரு வெளிப்பாட்டை பெற்றவர்களாய் இருக்கிறோம்.

இந்த ஊழியத்திற்காக அவர் மரித்தார். இந்தக் காரியங்களைக் காண்பிக்க பரிசுத்த ஆவியானவர் இந்நாளில் இங்கே இருப்பதற்காக அவர் மரித்தார். அவர் உங்களுக்காக அக்கறைகொண்டார். அவர் அதை இங்கே கொண்டு வர அக்கறைகொண்டார். அவர் இந்த கூற்றை கூறும்படி அக்கறை கொண்டார். அவர் உங்களை நேசித்தபடியால் அவர் அக்கறை கொண்டார். அவர் அதைச் செய்ய, பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதற்கு, இன்றைக்கு இந்த ஊழியத்தைச் செய்ய போதுமான அக்கறைகொண்டார்.

நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டிருந்தால், நீங்கள் இதற்கு செவிகொடுப்பீர்கள், நீங்கள் இதில் களிகூருவீர்கள். இதுவே உங்களுடைய ஆறுதல். இதுவே உங்களுடைய ஜீவிய காலமெல்லாம் நீங்கள் வாஞ்சித்திருந்த காரியமாய் உள்ளது. இதுவே விலையுயர்ந்த முத்து. இந்த செய்திக்காக, இந்த சத்தத்துக்காக ஒவ்வொரு காரியத்தையும் நாம் விட்டுவிடுகிறோம். இது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறதாய் உள்ளது.

யாரும் நம்மை குழந்தையைப்போல ஊக்குவிக்க வேண்டியதில்லை, நாம் விசுவாசிகள், அதை நம்மிடமிருந்து பறிக்க எதுவும் இல்லை. மற்றவர்கள் கூறுகிறதை நாம் பொருட்படுத்துவதில்லை, நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்.

அவர் நம்மீது மிகவும் அக்கறை கொண்டிருக்கிறார்; நமக்கு சுகம் தேவைப்பட்டால், நாம் அவருடைய வார்த்தையை நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து விசுவாசிக்கிறோம். அப்படியானால் எந்த ஆலோசகர், எந்த தேற்றரவாளர், எந்த மருத்துவர், எந்த மருத்துவமனை, எந்த நோயறிதல் என்ன சொல்வது என்பது முக்கியமல்ல, நாம் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறோம். நாம் அதை அறிந்திருக்கிறோம்! இதைப் பற்றி வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை; நாம் அதை அறிவோம்.

அவர் நமக்காக மிகுந்த அக்கறை கொண்டு தம்முடைய மணவாட்டிக்கான ஆகாரத்தை சேமித்து வைத்த தம்முடைய தீர்க்கதரிசியை அவர் உடையவராய் இருந்தார். அவர் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மேய்ப்பருக்கும், ஊழியக்காரருக்கும், மற்றும் ஜன குழுவிற்கும் தங்களுடைய சபையில் அல்லது குழுக்களில் இந்த ஒலிநாடாக்களை இயக்கி தன்னுடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றும்படிக்கு கூட அறிவுறுத்தினார்.

இந்தக் காலையில் ஜெபிக்கப்படப்போகிற ஜனங்களாகிய நீங்கள், இந்தக் காரியத்தை மாத்திரம் செய்வீர்களானால் நலமாயிருக்கும், உலகெங்கிலும், இந்த ஒலிநாடாவைக் கேட்கிற ஜனங்களாகிய நீங்கள், ஒரு சபையில் இதைப் போட்டு காண்பிக்கிற ஊழியக்காரனோ அல்லது அந்த நபரோ, வெளியே காடுகளில் உள்ள குழுக்களிலோ அல்லது இதைப் போட்டு காண்பிக்கிற, நீங்கள் எங்கிருந்தாலும், இந்த ஒலிநாடா போட்டுக் காண்பிக்கப்பட்ட பிறகு, முதலில் தெளிவாக உங்களுடைய அறிக்கையை செய்துவிட்டு, அதன் பின்னர் விசுவாசத்தை தவிர வேறு ஒன்றும் உங்கள் இருதயத்தில் இல்லாமல், ஜெபித்துக்கொள்ளப்படுவதற்காக வரும்பொழுது, அங்குதான் மருந்து பலனளிக்கும்.

தீர்க்கதரிசி சபையில் ஒலிநாடாக்களை ஒருபோதும் போட்டுக் கேட்கும்படி கூறவேயில்லை என்று நம்முடைய விமர்சகர்கள் கூறுகிறார்கள் என்று நான் நினைத்தேனா? அவர் அவர்களுடைய சபைகளில் மட்டுமல்லாமல், காடுகளிலும் அல்லது நீங்கள் எங்கிருந்தாலும்...ஒலிநாடாக்களை போட்டுக் கேளுங்கள் என்று கூறினார்.

தேவன் தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட ஏழாம் தூதனாகிய செய்தியாளரினால் உரைத்ததற்கு நீங்கள் கீழ்ப்படிந்து அதை சரியாக செய்வீர்களானால், அப்பொழுது நீங்களும் கூட எப்போதும் கொண்டிருக்கக் கூடியதைக் காட்டிலும் மகத்தான விசுவாசத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

நான், நான்...முதலில், இதை அணுக, கூட்டத்தார் விசுவாசித்தால் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். நீங்கள்-நீங்கள், உங்களுக்கு விசுவாசம் இல்லையென்றால், அப்பொழுது- ஜெபித்துக்கொள்ளப்பட இங்கு வரவேண்டிய அவசியமேயில்லை, ஏனென்றால் அவரை விசுவாசிக்கும்படியான என் விசுவாசமும் அவரை விசுவாசிக்கும்படியான உங்களுடைய விசுவாசமும்; உங்களுடைய விசுவாசமும் என்னுடைய விசுவாசமும் ஒன்றாகத் தேவைப்படுகிறது.

நாம் அவ்வாறு யூகிக்கவோ, கற்பனை செய்யவோ, நம்பவோ இல்லை. ஒலிநாடாக்களே இன்றைக்கான தேவனால் அருளப்பட்ட வழியாய் இருக்கின்றன. இது வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்று பெயரிடப்பட்ட ஒரு மனிதனின் வார்த்தைகள் அல்ல, இது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள். இது முற்றிலுமாக, "ஆமென்" என்பதாயுள்ளதே! இது நம்முடைய முடிவானது. இதுவே சத்தியம், சத்தியமேயல்லாமல் வேறொன்றுமில்லை.

நீங்கள் தேவனுடைய முடிவான, அவருடைய வார்த்தையை, ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீதான வாக்குறுதியை கண்டறியும்போது, அது தேவனுடைய வார்த்தை என்பதை நீங்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும், செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற அந்த காரியம் தேவனாயுள்ளது. "அப்படி இருக்கலாம், அது இருக்கக் கூடும், இது அதைப் போன்று காணப்படலாம்" என்று இல்லை- இல்லை. "அது தேவனே!" ஆகையால் அந்த ஸ்தானத்தை நீங்கள் அடையும்பொழுது, அப்பொழுது அது விலையுயர்ந்த முத்தாய் இருக்கிறது, அதற்கு மாறாக வேறு யாராவது உங்களிடம் சொன்னால் நீங்கள் விலகிச் செல்ல வேண்டும். மனிதன் என்ன சாதித்துள்ளான் என்று நீங்கள் பார்க்கக்கூடாது.

இந்த ஞாயிற்றுக்கிழமை நமக்கு ஒரு மகத்தான அன்பின் விருந்து இருக்கப் போகிறது. தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட ஏழாம் தூதனாகிய செய்தியாளர் நமக்கு என்ன செய்யும்படி சொல்லுகிறாரோ அதை நாம் சரியாக செய்யப்போகிறோம்: இயங்கு பொத்தானை அழுத்தி கேட்டு கீழ்படியுங்கள்.

நமக்கு எது தேவையோ, அதை நாம் பெறுவோம். நாம் அவரை விசுவாசிக்கும்படிக்கு நம்முடைய விசுவாசத்தை அவருடைய விசுவாசத்தோடு சேர்க்கப் போகிறபடியால் நாம் அதைப் பெறப் போகிறோம். பின்னர் நாம் அனைவரும் இவ்வாறு கூறப்போகிறோம்:

இந்த மணி நேரம் முதற்கொண்டு, என்னுடைய தொல்லைகள் முற்றுபெற்றுவிட்டன என்று எனக்கு சொல்லுகிற ஏதோ ஒன்று என் இருதயத்தில் உள்ளது. நான் - நான் நன்றாக இருக்கிறேன், நான் நன்றாக இருக்கப்போகிறேனே"? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கரங்ளை உயர்த்தி, "நான் அதை விசுவாசிக்கிறேன்!" என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

தேவன் அக்கறை கொள்வதினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, அவர் விசாரிக்கிறவராய் இருக்கிறார். நீ கவலை கொள்கிறாயா? 63-0721 என்ற செய்தியை நாங்கள் கேட்கப்போகின்றபடியால், எங்களுடன் சேர்ந்துகொள்ளும்படிக்கு; அல்லது உங்களுடைய போதகரை உங்களை வழிநடத்துபவரை தீர்க்கதரிசியினுடைய அறிவுறுத்தல்களை பின்பற்றும்படிக்கு, தேவனுடைய ஏழாம் தூதன் தேவனுடைய வார்த்தையை பேசுவதை கேட்டு, உங்களுடைய தேவை எதுவாயிருந்தாலும் அதைப் பெற்றுக் கொள்ளும்படி உற்சாகப்படுத்த நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. யோவான் 5:24 / 15:26
1 பேதுரு 5:1-7
எபிரெயர் 4:1-4