
அன்புள்ள பத்து இலட்சத்தில் ஒருவரே,
நான் உங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்து வருகிறேன். நீங்கள் என்னுடைய அன்பான இனிய இருதயமாய் இருக்கிறீர்கள், மேலும் நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நான் உங்களுக்கு வாக்களித்தபடி, நான் உங்களுக்கு ஒரு புதிய வீட்டை உருவாக்கிக்கொண்டு வருகிறேன், அங்கு நாம் நித்தியத்தினூடாக ஒன்றுசேர்ந்து ஜீவிப்போம். நீங்கள் விரும்பியதைப் போலவே அவை எல்லாவற்றையும் நான் செய்துள்ளேன்.
என்னால் இப்பொழுது உங்களை நோக்கிப் பார்த்து, நீங்கள் என்னுடைய பிரதிபலிப்பாயிருக்கிறீர்கள் என்பதைக் காணமுடிகிறது. நீங்கள் என்னுடைய குணாதிசயத்தையும், என்னுடைய மாம்சத்தையும், என்னுடைய எலும்புகளையும், என்னுடைய அதே ஆவியையும், அப்படியே சரியாக, என்னுடைய எல்லா காரியத்தையும் உடையவர்களாக இருக்கிறீர்கள்.
சாத்தானின் ஏதேனிலிருந்து உங்களை அழைக்க நான் என்னுடைய பலமுள்ள தூதனை பூமிக்கு அனுப்பினேன். என்னுடைய சிந்தனைகளையும், என்னுடைய தன்மைகளையும், வரவிருக்கின்ற காரியங்களையும் உங்களுக்கு சொல்லி வெளிப்படுத்தும்படியாக நான் அவரை அனுப்பினேன். நான் அவைகளை வெளிப்படுத்தும்படிக்கு அவருடைய வாயையும், அவருடைய சத்தத்தையும் உபயோகித்தேன். அவர் அவைகளைக் கூறினப் பிறகு, நான் அவைகளை நிறைவேற்றினேன், ஏனென்றால் வானங்களும் பூமியும் ஒழிந்துபோகும் என்னுடைய வார்த்தையோ உங்களுக்கு ஒருபோதும் ஒழிந்துபோகாது.
என் தூதனுடைய சத்தத்தை உபயோகித்து, நான் பேசுவதை நீங்கள் கேட்கும்போது, உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில், அது அவராயிருக்கவில்லை, அது நான் உங்களிடத்தில் பேசிக்கொண்டிருப்பது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்பதை நான் அறிந்திருந்தேன், அது நான் உங்களுக்கு ஒரு காதல் கடிதத்தை அனுப்பி, நீங்கள் என்னுடைய இனிய இருதயமாகிய மணவாட்டியாய் இருக்கும்படி நான் தெரிந்துகொண்டுள்ளேன் என்று உங்களுக்கு சொல்லுகிறதாய் இருந்தது.
என்னுடைய பார்வையில், உங்களைப்போல யாருமே இல்லை. உங்களுடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் என்னிடத்தில் உண்மையாகவும் உத்தமமாகவும் தரித்திருக்கிறீர்கள். நான் உங்களை நோக்கிப் பார்க்கும்போது, என்னுடைய இருதயம் சந்தோஷத்தால் துடிக்கிறது.
இனிய இருதயமே, நீங்கள் எதற்கு செவி கொடுக்கிறீர்கள் என்பதற்கு மிகவும் கவனமாக இருங்கள் என்று, நான் உங்களிடத்தில் சொன்னேன், அபிஷேகிக்கப்பட்ட அநேகர் என்னுடைய வார்த்தைகளை உபயோகிப்பார்கள், ஆனாலும் அவர்கள் போலியாய் இருக்கிறார்கள். நீங்கள் வெளிப்பாட்டினால் என்னுடைய எச்சரிக்கையை புரிந்துகொண்டு உண்மையாயும் என்னுடைய சத்தத்திற்கு உத்தமமாகவும் தரித்திருந்தீர்கள்.
நீங்கள் எந்த சபையோடு ஐக்கியங்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து நீங்கள் ஊக்கமாக ஜெபித்தபோது நான் மிகவும் பெருமைப்பட்டேன். நான் உங்களுக்கு சரியான தெரிந்துகொள்ளுதலை செய்யும்படி உங்களிடத்தில் கூறி, பரிபூரணமான சபை என்னவாயிருக்கும் என்பதை குறித்த உதாரணங்களை உங்களுக்கு அளித்தேன். அவர்கள் யாவரும் வேறு ஆவிகளை பெற்றுள்ளனர் என்று நான் கூறினதை நீங்கள் நினைவில் கொண்டு, பரிபூரண சபையைத் தெரிந்துகொண்டீர்கள்.
உங்களுடைய போதகர் யாராயிருக்கிறார் என்பதை குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூட நான் உங்களிடத்தில் சொன்னேன். எனவே உங்களை என்னிடத்தில் கொண்டு வரும்படிக்கு நான் அனுப்பின மேய்ப்பரோடு நீங்கள் தரித்திருந்ததை நான் கண்டபோது என்னுடைய இருதயம் எப்படியாய் மகிழ்ச்சியால் துள்ளிற்று என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். அது என்னிடத்திற்கு உங்களை வழிநடத்த என்னுடைய தீர்க்கதரிசிக்குள் ஜீவித்த என்னுடைய பரிசுத்த ஆவியாக இருந்தது என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள்.
உங்களை குறித்த ஒரு முன்னோட்டத்தை நான் அவருக்கு காண்பிக்கும்படியாக ஒரு உயரிய இடத்தில் என்னுடைய தூதனை நான் அழைத்தபோது, நீங்கள் மிகவும் சந்தோஷமாய், உணர்ச்சிவசப்பட்ட அந்த நாளை நான் நினைவுகூருகிறேன். எங்களுக்கு முன்னால் கிறிஸ்தவ போர் வீரர்களே முன்னோக்கி செல்லுங்கள் என்னும் பாடலுக்கான ஒத்திசைவிற்கு நீங்கள் அணிவகுத்து சென்றபோது நாங்கள் அங்கே நின்று உங்களை கவனித்துக் கொண்டிருந்தோம்.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து; நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, நீங்கள் அனைவரும் உங்களுடைய தேசிய உடையை அணிந்திருப்பதை அவர் எவ்வளவாய் விரும்பினார். மிகவும் அருமையாக உங்களுடைய நீளமான கூந்தலில் ஒவ்வொருவரும் சரியாக இருந்தீர்கள். உங்களுடைய பாவாடைகள் அழகாக கீழ் வரை இருந்தன. அவர் திரும்பிச் சென்று உங்களை உற்சாகப்படுத்தி, அவர் உங்களை அங்கே கண்டதை உங்களிடம் சொல்லும்படிக்கு, உங்கள் அனைவரையும் அவரிடம் காண்பிப்பதில் நான் மிகவும் பெருமையும் உற்சாகமுமடைந்தேன்,
ஒவ்வொரு கண்ணும் நம் மீதுதான் இருந்தது. ஒரு சில பெண்கள், வரிசையின் பின்புறத்தில், மற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கியபோது, அவர், "அப்படிச் செய்யாதீர்கள்! வரிசையை விட்டு வெளியேறாதீர்கள்!" என்று கூச்சலிட்டார்.
நான் உங்களைப் போஷிக்கும்படியாக உங்களுக்காக ஆகாரத்தை நான் சேமித்துக்கொண்டிருந்தேன் என்று நான் உங்களிடத்தில் சொன்னபோது, நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் சரியாக அறிந்திருந்தீர்கள். நீங்கள் என்னுடைய சுத்தமான வார்த்தையான கன்னிகை மணவாட்டியாய் இருக்க விரும்பினீர்கள். நீங்கள் வேறு யாருடனும் சரசமாடுவதை நான் ஒருபோதும் காணவில்லை. அது எப்பொழுதுமே நானாகவும், என்னுடைய வார்த்தையாகவும் இருந்தது. அது என்னை மிகவும் மகிழ்ச்சியாக்கினது.
நீங்கள், என்னுடைய மணவாட்டியாய் இருக்கும்படி, நான் உங்களை தெரிந்து கொண்டுள்ளேன். நீங்கள் என்னோடு அன்பாய் இருக்கிறதுபோலவே, நான் உங்களோடும் மிகுந்த அன்பாய் இருக்கிறேன். திடனற்றுப்போகாதீர்கள், உற்சாகமாயிருங்கள், மகிழ்ச்சியாய் இருங்கள், களிகூருங்கள், நான் உங்களுக்காக வரும் நாள் தீவிரமாக சமீபத்துக்கொண்டிருக்கிறது. நாம் என்னே ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாக இருப்போம்.
ஏனையோராகிய நீங்களும், மனந்திரும்புங்கள், பூமியானது கக்கிக் கொண்டிருக்கிறது. லாஸ் ஏஞ்சலஸ் ஒரு நாளில் பூமிக்கு அடியில் மூழ்கிவிடும் என்று, நான் உங்களிடத்தில் கூறினது போலவே அது மூழ்கிவிடும். அது கீழே என்னுடைய கோபாகினையைக் கக்கிக் கொண்டிருக்கிறது. நான் அந்த மணல் தடையை இனி நீண்ட நேரம் பிடித்து வைத்திருக்கமாட்டேன். நீ ஒரு மைல் ஆழமான கடலுக்குள் சறுக்கி, மீண்டும் சால்டன் சமுத்திரத்துக்குள் செல்வாய். இது பாம்பேயின் கடைசி நாளை விட மோசமாக இருக்கும்.
நான் சீக்கிரத்தில் இந்த பூமியை அக்கினியால் சுத்திகரிக்கப்போகிறேன். அதன் மீதும் அதன் கீழும் உள்ள அனைத்தையும் கொன்றுபோடுவேன். நான் உங்களுக்கு சொன்னதுபோல, உலகம் முழுவதும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொன்னது போலவே, என்னுடைய மணவாட்டி என் வார்த்தையின் பேரில் இணைவதை நீங்கள் காண்கிறீர்கள்.
இப்பொழுதே அந்த நேரம். இப்பொழுதே அந்தக் காலம். உங்களை ஆயத்தப்படுத்துங்கள்!
அவருடைய கோபாக்கினையின் வேளையானது பூமியின் மீது உள்ளது. விரைந்தோடுவதற்கு நேரமுள்ளபோதே விரைந்தோடி, கிறிஸ்துவுக்குள் வாருங்கள்.
_______________________________________________________________இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சத்தம் எங்களிடத்தில் பேசி, மணவாட்டியை தெரிந்துகொள்ளுதல் 65-0429E: என்ற செய்தியை எங்களுக்கு கொண்டு வருவதை கேட்கப்போகிறபடியால், நாங்கள் அவருடைய வருகைக்காக எங்களை ஆயத்தப்படுத்துகையில், அவருடைய மணவாட்டியின் ஒரு பாகமான, எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஆதியாகமம் 24:12-14
ஏசாயா 53:2
வெளிப்படுத்தின விசேஷம் 21:9