
அன்பான தேவனுடைய இரத்தத்தால்- பிணைக்கப்பட்ட, அடையாளத்தால்-பிணைக்கப்பட்ட, உடன்படிக்கை ஜனங்களே,
நினைவிருக்கட்டும், நாம் ஏவாள் அல்ல, நாம் சாத்தானுடன் சமரசம் செய்து கொள்ளும் இந்த சந்தேகக்காரர்களில் ஒருவர் அல்ல. நமக்கு இந்த வார்த்தையில் அசைக்க முடியாத விசுவாசம் இருக்கிறது! அவர் எழுதின மற்றும் ஒலிநாடாக்களில் பேசின ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும் நாம் பற்றிக்கொண்டிருக்கிறோம். இது நமக்கு பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது.
நாம் நமக்குள்ளாக சுதந்தரித்துக்கொள்ள வேண்டிய ஏதோ மகத்தான விசுவாசத்திற்காக நாம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கவில்லை. நாம் போதியளவு நல்லவர்களாயிருக்க முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை; நாம் ஒருபோதும் போதியளவு நல்லவர்களாக இருக்கமாட்டோம், நாம் எப்பொழுதுமே தோல்வியுறுவோம். அவர் நம்மிடம் விசுவாசங்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னது அதுவல்ல. அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்று நம்பி விசுவாசங்கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நாம் அதை விசுவாசிக்கிறபடியால், அது நமக்கு அவருடைய வார்த்தையில் பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது.
பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பற்றி பிதாவிடம் என்ன சொல்லி அறிக்கை கொடுத்து வருகிறார் என்பதை நாம் கேட்போமாக.
“நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்துள்ளேன். உலகம் முழுவதும் சிதறியுள்ள சில சிறிய குழுக்களை நான் தேடி கண்டுபிடித்துள்ளேன். நான் சில பையன்களை அவர்களுடைய வீட்டிற்கு ஒலிநாடாக்களோடு அனுப்பி, சில ஒலிநாடாக்களை இயக்கச் செய்தேன். அவர்கள் அந்த ஒலிநாடாக்களைக் கேட்டபோது, அவர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்தனர். இப்போது அவர்கள் செய்தியைப் பெறுவதற்காக தங்களுடைய வீட்டை ஒரு சபையாக மாற்றியுள்ளனர். அவர்கள் உம்முடைய வார்த்தையைக் கேட்கக் கூடிவரும் உம்முடைய முன்குறிக்கப்பட்ட கழுகுகளாயிருக்கின்றனர்.
அடையாளத்தின் கீழ், இந்த மணி நேரத்தின் செய்தியின் கீழ் வரும் அனைவரும் இரட்சிக்கப்படுவர் என்று நான் அவர்களிடம் சொன்னேன். அவர்கள் உம்மோடும் உம்முடைய வார்த்தையோடும் ஒன்றாகிவிடுவார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். இது அவர்கள் பேரில் கிரியை செய்திருந்தால், அப்பொழுது அந்த அடையாளத்தை அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பயன்படுத்துங்கள். அதை அவர்களுடைய அன்பார்ந்தவர்களுக்குப் பயன்படுத்தி, அவர்களையும் அந்த அடையாளத்தின் கீழ் கொண்டு வாருங்கள், அவர்களும் கூட இரட்சிக்கப்படுவார்கள்.
ஒலிநாடாவை கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் நான் சொன்னேன்: நான் அவர்களை தேவனுக்காக உரிமை கோருகிறேன். நான் அதைக் கூறினபோது, அவர்கள் அதை முழு இருதயங்களோடும், முழு ஆத்துமாக்களோடும் விசுவாசித்தனர். அவர்கள் என்னுடைய ஜனங்கள், ஒலிநாடாக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிற அவர்களே நான் நேசிப்பவர்கள்.
ஏழு முத்திரைகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை கவனிக்கும்படி நான் அவர்களிடம் சொன்னேன்: ஜனங்களை ஒன்றிணைத்தல், ஒன்றுபட்ட அடையாளங்கள், கடைசி நாட்களில் ஒளிரும் சிவப்பு விளக்கு, இந்த ஒரு காரியத்தில் மூடப்பட்ட, அடையாளம்.”
ஓ, சபையே, எழும்பி உன்னை அசைத்துக்கொள்! உன்னுடைய மனசாட்சியே உன்னைக் குத்தட்டும், இந்த வேளையில், நீயே விழித்தெழு! நாம் பதறல் கொள்ள வேண்டும், இல்லையேல் அழிந்துபோக வேண்டும்! ஏதோ ஒன்று கர்த்தரிடத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறதே! அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் அறிவேன். ஏதோ ஒன்று வந்து கொண்டிருக்கிறது, நாம் பதறல் கொள்வது நல்லது. அது மரணத்திற்கும் ஜீவனுக்குமிடையேள்ளது. அது நம்மூடாக கடந்து செல்லுகையில், நாம் அதை காணமாட்டோம்.
ஏதோ நடக்கப்போகிறது என்பதை நாம் அறிவோம். கர்த்தருடைய வருகை திடீரென, இரகசியமாக சென்றுவிடுவதாயிருக்கும். நாம் பதற்றமடைந்துள்ளோம். நேரம் சமீபித்துவிட்டது. நம்முடைய நாளுக்கான அடையாளத்தை நாம் அடையாளங்கண்டுகொண்டோம், அது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஞாயிற்றுக்கிழமை பதறலின் நேரங்களில், துரிதமாக எடுக்கப்பட்ட பாஸ்காவின் அடையாளங்களை நாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். நாம் உலகம் முழுவதும், அவருடைய வார்த்தையின் பேரில் கூடிவருகிறோம்.
நாங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு, ஜெபர்ஸன்வில் நேரப்படி, 63-0901E - பதறல்கள்: என்ற செய்தியின் வார்த்தையைக் கேட்க கூடி வருகையில், இந்த மகத்தான நிகழ்வின் ஒரு பாகமாயிருக்க வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன் படிப்பதற்கான வேத வாக்கியம்:
யாத்திராகமம் 12:11
எரேமியா 29:10-14
பரி. லூக்கா 16:16
பரி. யோவான் 14:23
கலாத்தியர் 5:6
பரி. யாக்கோபு 5:16