ஞாயிறு
26 பிப்ரவரி 2023
65-0822E
ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி

அன்புள்ள சகோதரன் பிரான்ஹாமினுடைய சபையோரே,

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஒவ்வொரு இருநூறு சதுர மைல்களிலும் உள்ள தீர்க்கதரிசியினுடைய சபைகளில் ஒன்றில் கழுகுகள் ஒன்று கூடுவதால், எங்களுடன் இணைந்துகொள்ளுமாறு நான் உலகத்தை அழைக்க விரும்புகிறேன். தேவன் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலம் பேசி நம்மிடம் சொல்வதைக் கேட்போம்:

இந்தச் செய்தியும், நான் பேசுகின்ற மற்றெல்லாச் செய்திகளும், என்னுடைய சபைக்கு அனுப்பப்பட்டவைகளேயாகும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பினாலொழிய அது உங்களுடைய சபைக்கானதல்ல. ஆனால் இது இங்குள்ள இந்த ஜனங்களுக்கு அனுப்பப்படுகிறது.

அவர் நம்மிடம், மகிமை, அவருடைய சபையோரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். "சகோதரன் பிரான்ஹாம் தீர்க்கதரிசி, ஆனால் அவர் என்னுடைய மேய்ப்பர் அல்ல. எங்களுடைய மேய்ப்பர் சபையில் ஒலிநாடாக்களை இயக்குவது இந்நாளுக்கான வார்த்தையின்படியானதல்ல" என்று கூறுகிற உங்களிடத்தில் அல்ல. "நாம் அவருக்கு செவி கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய மேய்ப்பர் எங்களுக்குச் சொல்லுகிறார். வார்த்தையின்படி அவர் எங்களை பரிசுத்த ஆவியானால் இப்பொழுது வழிநடத்திக் கொண்டிருக்கிறார்."

தீர்க்கதரிசி உங்களுக்கும் உங்கள் மேய்ப்பருக்கும் உரையாற்றினார்.

எந்த இடத்திலும் உள்ள எந்த ஊழியக்காரர்களுக்கும், எந்த நேரத்திலும், இது உங்களுடைய உபதேசங்களை அவமதிக்க அளிக்கப்படவில்லை, இது உங்களுடைய ஆடுகளுக்கு அளிக்கப்பட்டதும்கூட அல்ல.

சகோதர சகோதரிகளே நாங்கள் உங்களுடன் வம்பு செய்ய விரும்பவில்லை. இது உங்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் அவருடைய சபையாகிய, எங்களை வழிநடத்த எங்களுக்கு மேய்ப்பராயிருக்க பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளனை வைத்திருக்கிறார் என்று விசுவாசிக்கிற எங்களுக்கேயாகும். ஒலிநாடாக்களை இயக்குவது மாத்திரமே உண்மையான வழியாய் இருக்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீங்கள் சரியாயிருந்து தீர்க்கதரிசி செய்யும்படி உங்களிடத்தில் சொன்னதை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

அவர்கள் ஏதாவதொரு சபையின் ஒரு அங்கத்தினராயிருந்தால், "உங்களுடைய மேய்ப்பரைப் பாருங்கள்" என்றே நான் எப்பொழுதும் அவர்களுக்கு குறிப்பிடுகிறேன்.

உங்களுடைய மேய்ப்பர் கூறுகிறதையே நீங்கள் செய்ய வேண்டும்.

பின்னர் தீர்க்கதரிசி உங்களுடைய மேய்ப்பருக்கு மீண்டும் ஒருமுறை சொல்கிறார், அவர் புரிந்துகொள்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்படிக்கே.

இப்பொழுது, மேய்ப்பரே, நான் பேசுகிற இந்த காரியங்கள் என்னுடைய சபையோருக்கு மாத்திரமே, அதாவது, நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதை செய்ய எனக்கு ஒரு உரிமை உண்டு, ஏனென்றால் இந்த ஆடுகளை கண்காணிக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.

அவருடைய ஆடுகளாகிய, எங்களை கண்காணிக்கவே அவர் அனுப்பப்பட்டிருக்கிறார்; தேவன் தம்முடைய பாதுகாப்பில் வைத்துள்ளவர்களுக்கே. பரிசுத்த ஆவியானவர் எங்களிடத்தில் பேசி தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் எங்களை வழிநடத்துகிறபடியால், அவரே எங்களுடைய மேய்ப்பராய் இருக்கிறார்.

இதை செய்யும்படிக்கே கர்த்தர் எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். நாங்கள் உங்களுக்கோ அல்லது உங்களுடைய மேய்ப்பருக்கோ அல்லது செய்யும்படி எப்படி கர்த்தரால் வழிநடத்தப்படுகின்றீர்கள் என்பதை உணருகிறதற்கோ எதிரானவர்கள் அல்ல. ஒவ்வொரு நபரும் வார்த்தையின்படி செய்ய அவர்களை கர்த்தர் வழிநடத்திக் கொண்டிருக்கிறதை அவர்கள் உணருகிற விதமாகவே செய்ய வேண்டும்.

எங்களுக்கு ஒரு வடிகட்டி உள்ளது, இந்த செய்தியே. நாம் கேட்கிற ஒவ்வொரு காரியமும் அந்த வடிகட்டியினூடாக செல்ல வேண்டும். நாம் ஒலிநாடாக்களில் கேட்கிற சத்தமே கர்த்தர் உரைக்கிறதாவது என்று 100% நம்பிக்கைக் கொண்ட ஒரே சத்தமாயிருக்கிறது.

அந்த ஜனங்களின் மீதுள்ள அந்த அபிஷேகம் அது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாய் இருக்கிறது என்றே பொருட்படுத்துகிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆம், ஐயா, அசலான தேவனுடைய பரிசுத்த ஆவி ஒரு நபரின் மீது இருந்தும், அதே சமயத்தில் அவர்கள் போலியாக இருக்கிறார்கள்.

எங்களுடைய நித்திய இலக்கு ஒலிநாடாவில் அவர் என்ன கூறினார் என்பதை சார்ந்ததேயன்றி, வேறு எந்த மனிதனோ அல்லது மனிதக் குழுவோ என்ன கூறுகிறது என்பதல்ல. இதனால், நாம் மற்ற எதையும் கேட்க முடியாது, கேட்கவும் மாட்டோம். யாராவது எப்படி ஒரு வாய்ப்பைப் பெற முடியும்?

நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய் நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ள வாருங்கள்.

ஜனங்கள் தங்களுடைய வீடுகளிலேயே அமர்ந்துகொண்டு, அல்லது அவர்களுடைய…அவர்களுடைய இடங்களில், அவர்களுடைய சபைகள், போன்றவற்றில் ஒன்று கூடி, ஆராதனையைக் கேட்கலாம்.

அதாவது, என்னுடைய நண்பர்களே, தேவனுடைய தீர்க்கதரிசியின் கூற்றுப்படி, வேதம் என்ன சொல்கிறது என்பதைக் குறித்த சில மனிதருடைய வியாக்கியானம் அல்ல, நாளானது சமீபத்து வருகிறதை நாம் காண்கையில் இன்னும் அதிகமாக வார்த்தையின் பேரில் நாம் ஒன்று கூட வேண்டும்.

தேவனில்லாமல் உடன்படிக்கைப் பெட்டியால் பிரயோஜனம் என்ன? அது ஒரு வெறும் ஒரு மரப்பெட்டி, அதனுள் இரண்டு கற்பலகைகள் இருந்தன.

ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி 65-0822E என்ற செய்தியை அவர் நமக்குக் கொண்டு வருகிறபடியால், தேவனால் அருளப்பட்டிருக்கிற வடிகட்டிக்கு நாங்கள் செவிகொடுக்கவுள்ளபடியால் எங்களோடு கூடிவாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

நீங்கள் எதற்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். எதற்காக நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் சபைக்கு எதற்காக போகிறீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். எது உங்களை உருவாக்குகிறது…சபைக்கு செல்கிறது நல்லது. ஆனால் வெறுமையாக சபைக்குச் செல்வதோடு மாத்திரம் நின்றுவிடாதீர்கள்; அது உங்களை இரட்சிக்காது.