
அன்புள்ள முதன்மையான உயரிய ஸ்தானங்கொண்ட மணவாட்டியே,
உலகம் முழுவதும் உள்ள நாம் ஞாயிற்றுக்கிழமை உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து அமர்ந்திருந்தபோது, ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசுவதை நாம் கேட்டுக்கொண்டிருந்தோம். எப்பொழுதும் போல, அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார்?
நாம் அவருடைய வார்த்தைகளை இதற்கு முன்பு பலமுறை கேட்டிருக்கலாம், ஆனால் அந்த நாள் வித்தியாசமாக இருக்கப்போவதாயிருந்தது என்பதை நாம் அறிந்திருந்தோம். நாம் இதுவரை கேள்விப்படாத ஒன்றை நாம் கேட்போம். நாம் கற்பனை செய்வதை விட அதிக வெளிப்பாட்டை நாம் பெறுவோம். அவர் நம்முடைய இருதயங்களையும், நம்முடைய சிந்தைகளையும், நம்முடைய ஆத்துமாவையும் திறந்து, இதனுடைய சரியான காலத்தில், இப்பொழுது உள்ளதை வெளிப்படுத்துவார்.
அதன்பின்னர் அது சம்பவித்தது. மணவாளன் தன்னுடைய மணவாட்டிக்கு கூறக் கூடிய, வெளிப்படுத்தக் கூடிய மிகச் சிறந்த வார்த்தைகள், “நீங்கள் சரீரப்பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமாய், முதன்மையான உயரிய ஸ்தானங்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். எனக்கு இருந்த அனைத்தையும், நான் கிறிஸ்துவுக்குள் ஊற்றிவிட்டேன்; கிறிஸ்துவாயிருந்த அனைத்தையும், நான் உங்களுக்குள் ஊற்றிவிட்டேன். நீங்கள் என்னுடைய பரிபூரணமான தெரிந்துகொள்ளப்பட்ட வார்த்தை மணவாட்டியாயிருக்கிறீர்கள்."
நம்முடைய முழு உள்ளமும் சந்தோஷத்தால் துள்ளியது. நாம் அவருடைய மணவாட்டி என்று பிதாவானவர் நம்மிடம் சொன்னார். நாமே அவர் நேசிப்பவர்கள். நாம் அவருடைய வார்த்தையால், அவருடைய வார்த்தையால் மாத்திரமே கர்ப்பந்தரிக்கப்பட்டிருக்கிறோம், நம்முடைய கருப்பை மற்ற எதற்கும் மூடப்பட்டுள்ளது. அவர் நமக்காக காத்திருக்கிறார், நமக்காக ஏங்கியிருக்கிறார்...நமக்காகவே!!
என்னவென்று யூகித்தீர்களா? இந்த வார்த்தைகளை நம்மிடம் சொல்ல அவர் வேறு யாரையும் அனுப்பவில்லை, அவர் மீண்டும் ஒருமுறை மானிட சரீரத்தில் வந்து வாசம்பண்ணினார், அதனால், "என் இனிய இருதயமான மணவாட்டியே, நான் உன்னை நேசிக்கிறேன்": என்று அவர் நேரடியாக, உதட்டிலிருந்து செவிக்கு பேசி நமக்குச் சொல்ல முடிந்தது.
நாம் பாடுவதை விரும்புகிறோம், நாம் ஐக்கியத்தை விரும்புகிறோம், நாம் விசுவாசிகளுடன் கூடிவருவதை விரும்புகிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நாம் தேவனுடைய சத்தத்தை: கர்த்தர் உரைக்கிறதாவது என்று, நேரடியாக நம்மிடம் பேசுவதைக் கேட்க்கவே விரும்புகிறோம். ஒவ்வொரு செய்தியும் நமக்கு ஒரு தனிப்பட்ட காதல் கடிதமாயுள்ளது. அவர் நமக்குச் சொல்ல விரும்பின ஒவ்வொரு வார்த்தையையும் நாம் அவைகளை நமக்காக கேட்கும்படியாக ஒரு காந்த ஒலிநாடாவில் வைத்தார்.
நாம் கூடி வருகையில் இந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நமக்கு என்ன சொல்லப்போகிறார்? இப்பொழுது என்ன காலம்?
ஏசாயா பேசி, "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்" என்று கூறினான், ஆனால் அது வருவதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பான காலமாருந்தது. தாவீது ராஜா, "அவர்கள் என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்" என்றான். அவர் தன்னுடைய கைகளையும், கால்களையும் போல பேசினான், ஆனால் அது அதேசமயத்தில் 1000 ஆண்டுகள் கடந்து நடைபெறவிருந்த காலமாயிருந்து.
தேவன் நம்முடைய நாளில் நம்முடைய தீர்க்கதரிசி மூலம் பேசி, இன்று நடைபெறும் பல காரியங்களை முன்னமே கூறினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடுகளும் உலகமும் ஒன்றுபடுவதை நாம் காண்கிறோம். கம்யூனிசம் என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயம் என்றும், அது அழிந்துவிட்டதாகவும் நாம் நினைத்தோம், ஆனால் அவர் அதை நமக்கு தீர்க்கதரிசனமாக உரைத்துக் கூறினபடியால், இப்பொழுது அது நிகழ்ந்துகொண்டிருப்பதையும், தேவனுடைய கைகளில் ஒரு கருவியாக இருப்பதையும் நாம் காண்கிறோம்.
மற்றதை மிஞ்சி நிற்க மேற்கொள்ளும் சூழ்ச்சிப்போர் முடிந்துவிட்டது என்றும், அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் இல்லையென்றும் உலகம் நினைத்துக்கொண்டது. ஆனால் இன்றைக்கு, அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் நிஜமாகிவிட்டது. அது இருக்கும் என்று அவர் நமக்கு சொன்னது போலவே எல்லாம் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. அதுவே இந்தக் காலம்.
ஞாயிற்றுக்கிழமை, அவர் மீண்டும் நம்மிடம் உதட்டிலிருந்து செவிக்கு, நேரடியாகப் பேசுவார், நாம் கேட்பதற்காக உரைக்கப்பட்டு, சேமிக்கப்பட்ட மற்றொரு காதல் கடிதத்தைக் நாம் கேட்போம். அவர் நமக்கு என்ன கூறி வெளிப்படுத்துவார்? இது என்னக் காலமாயுள்ளது? என்ன நடக்கிறது?
தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்துக்கொண்டிருக்கிறார். அவள் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து வந்து ஒன்று சேருகின்றாள். ஒரு இணையும் நேரம் உண்டு, அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அவள் எதற்காக இணைந்துகொண்டிருக்கிறாள்? எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக.
எனவே உலகம் முழுவதிலும் தேவனுடைய சத்தத்தை நாம் கேட்டுக்கொண்டிருக்கும்போது இந்த செய்தி என்ன செய்கிறது? மணவாட்டியை வார்த்தையுடன் ஒன்று சேர்க்கிறது. வார்த்தை தேவனாயுள்ளது. மணவாளன் வார்த்தையாயிருக்கிறார். மணவாட்டி அந்த வார்த்தையைக் கேட்பவளாய் இருக்கிறாள், நாம் ஒரு ஐக்கியத்திற்குள் ஒன்று சேர்ந்து வருகிறோம். நாம் வார்த்தையோடு ஒன்றாகிவிடுகிறதான ஒரு கலியாணத்திற்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.
பிதா என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவை அனைத்தும் நானாக இருக்கிறேன்; நான் என்னவாகவெல்லாம் இருக்கிறேனோ, அவையனைத்தும் நீங்களாக இருக்கிறீர்கள். நீங்கள் என்னவாகவெல்லாம் இருக்கிறீர்களோ, அவையனைத்துமாக நான் இருக்கிறேன். நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்றார். புரிகிறதா? “அந்த நாளிலே” எந்த நாளிலே? இந்த நாளிலே! மறைக்கப்பட்ட தேவனுடைய மகத்தான இரகசியங்கள் வெளிப்படுவதை நாம் கண்டறிகிறோம். ஓ, அது எனக்கு எவ்வளவு பிரியம்!
இப்பொழுதே அந்த நேரம். இப்பொழுதே அந்த காலம். மணவாட்டி மணவாளனுக்காக தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள். “இதோ, மணவாளன் வருகிறார்!” என்ற நள்ளிரவு சத்தத்தைக் நாம் கேட்கிறபடியால் நாம் செவிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் சரியாக கடைசி நேரத்தில் இருக்கிறோம்.
இதுவே: இணையும் நேரமும் அடையாளமும் 63-0818 என்று தேவனுடைய சத்தம் நமக்குச் சொல்வதை நாம் கேட்க, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்ஸன்வில் நேரத்தில், நாங்கள் வார்த்தையில் இணையும்போது எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிப்பதற்கான வேத வசனங்கள்
சங்கீதம் 86:1-11
பரி. மத்தேயு 16:1-3