ஞாயிறு
11 செப்டம்பர் 2022
64-0726E
வெடிப்புள்ள தொட்டிகள்

அன்புள்ள ஆர்ட்டீசியன் தண்ணீரை பருகுபவர்களே,

நாம் ஓட்டுப்போடப்பட்டிருக்கவில்லை, நாம் உற்பத்தியான வார்த்தையின் அசலான பாகமாக இருக்கிறோம்.பரிசுத்த ஆவியானவர் தாமே, அதை முதிர்ச்சியடைய செய்து, ரூபகாரப்படுத்தி, நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நாம் அதனுடைய ரூபகாரப்படுத்துதலின் வல்லமையிலும், அது என்னவாய் உள்ளது என்ற வெளிப்பாட்டிலும் அதை அதனுடைய பரிபூரணத்தில் ஏற்றுக்கொண்டு, நாம் அதனுடைய ஒரு பாகமாகியிருக்கிறோம். அது நமக்கு ஜீவனைக் காட்டிலும் மேலானது.

பரிசுத்த ஆவியானவர் தாமே ஒரு தாழ்மையான, தகுதியற்ற பாத்திரத்தின் மூலம் பேசி, "இதோ என் செங்கோல், என் வார்த்தை, அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்று, செய்தியைக் கொண்டு வாருங்கள்" என்றார். அவர் தம்முடைய மணவாட்டியாக நம்மை உருவாக்க, அவருடைய வார்த்தையை எடுத்து, நம்மை வெட்டியெடுத்தார்.

ஜனங்கள் சபைகளைவிட்டு வெளியேறி ஒலிநாடாக்களை போட்டுக் கேட்கப் போவதை காண்பது ஆசாரியர்களை தொல்லைப்படுத்தியிருக்கிறது. அவர்கள், "உங்களில் யாராவது கூட்டங்களில் கலந்துகொண்டால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள், நாங்கள் உங்களை எங்களுடைய ஸ்தாபன அமைப்பிலிருந்து வெளியேற்றுவோம்" என்றார்கள்.

அவர்களுடைய பிரதியுத்தரமோ: நீங்கள் எங்களைப் புறக்கணிக்கலாம், நாங்களோ எப்படியும் போய்கொண்டிருக்கிறோமே! நாங்கள் கர்த்தராகிய இயேசுவோடு, எங்களுடைய அடிக்கப்பட்ட கன்மலையோடு, தூதனுடைய ஆகாரத்தை, பரத்திலிருந்து வந்த சேகரிக்கப்பட்ட மன்னாவைப் புசித்துக் கொண்டு, கன்மலையிலிருந்து தண்ணீரைப் பருகிக்கொண்டு பயணத்தில் இருக்கிறோம். நாங்கள் எதைப் பருகிக்கொண்டிருக்கிறோம் என்பதை குறித்து ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை, அது சுத்த வார்த்தையேயல்லாமல் வேறொன்றுமில்லை.

நாம் எப்பொழுதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு எழுப்புதலைப் பெற்றுள்ளோம். நம்முடைய ஊற்று எப்பொழுதுமே பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அதற்கு முடிவே இல்லை. நாம் இயங்கு பொத்தானை அழுத்தும் ஒவ்வொரு முறையும் ஒரு நல்ல, குளிர்ந்த குடிநீரைப் பெற்றுக் கொள்கிறோம். நாம் அதன் பேரில் சார்ந்திருந்து, அதன் பேரில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அங்கு சென்று அதை பருகுவதேயாகும்.

நாம் அனுதினமும் அந்த பீறிட்டு பெருக்கெடுக்கும் ஊற்றினால் ஜீவிக்கிறோம்! நாம் ஒருபோதும் இழுக்கவோ, தோண்டவோ, அழுத்தி மேலெழும்பச் செய்யவோ அல்லது எதையுமே செய்ய வேண்டியதில்லை; அவருடைய அருளப்பட்ட வழியில், இலவசமாக பங்குகொள்ளகிறோம். நீங்கள் விரும்புகிற உங்களுடைய மனிதனால்-உண்டாக்கப்பட்ட எல்லா முறைமைகளையும், உங்களுடைய பழைய தேக்கமடைந்த எல்லா கிணறுகளையும் எடுத்துக்கொள்ளலாம்; எங்களுக்காக, நாங்கள் அவருடைய சுத்த ஊற்றண்டைக்கு வந்துள்ளோம். அதுவே எங்களுடைய சந்தோஷம். அதுவே எங்களுடைய வெளிச்சமும் பெலனுமாயிருக்கிறது.

அவரே என்னுடைய தண்ணீர். அவரே என்னுடைய ஜீவன். அவரே என்னுடைய சுகமளிப்பவர். அவரே என்னுடைய இரட்சகர். அவரே என்னுடைய ராஜா. எனக்கு தேவையாயிருக்கிற ஒவ்வொரு காரியமும் அவரில் காணப்படுகிறது. நான் ஏன் வேறேதோ காரியத்திற்கு செல்ல வேண்டும்?

எங்களைப் பொறுத்தவரை, வேறெங்கும் செல்லாமல் நேரடியாக தேவன் அருளியிருக்கிற ஊற்றண்டைக்கே செல்கிறோம். நாங்கள் என்னத்தைக் குடிப்போம் என்று ஒருபோதும் கவலைப்படுவதேயில்லை. பெரிய அழுக்கான பொருட்களை வடிகட்டிவிட்டு, ஆனால் அழுக்கடைந்த அதன் சாரத்தை விட்டுவிடுகிற பழைய கந்தலான வடிகட்டும் துணியை ஒருபோதும் உபயோகிக்க வேண்டியதில்லை. நாம் நமக்குத் தேவையான அனைத்து தாதுக்களோடும், ஊட்டச்சத்துக்களுடனும் சுத்தமான ஆர்ட்டீசியன் நீரைப் பெறுகிறோம்.

அவர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார்: என் சிறு பிள்ளைகளே, இனி எதற்கும் கவலைப்பட வேண்டாம், பரிசுத்த ஆவியின் அசலான அத்தாட்சி உங்களிடம் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் எனக்கு நிரூபித்துள்ளீர்கள். நீங்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், நீங்கள் என்னுடையவர்கள். நாம் ஒன்றாயிருக்கிறோம். கணவனும் மனைவியுமாகவே.

நான் உங்களுக்காக ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே வருகிறேன். நான் உங்களுக்கு ஒரு புதிய வீட்டை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறேன். என்னுடைய இறுதித் திட்டங்களை நீங்கள் விரும்புவீர்கள். இப்போது இது உங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது என்பதை நான் அறிவேன், மேலும் உங்களுக்கு பல பரிசோதனைகளும், சோதனைகளும் உள்ளன, உங்களுடைய சுமைகள் பாரமானவைகளாயுள்ளன. ஆனால் மறந்துவிடாதீர்கள், நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை, நான் உங்களுக்கு என்னுடைய வார்த்தையைக் கொடுத்துள்ளேன். நீங்கள் என்னுடைய வார்த்தையாயிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே உங்களுக்காக எல்லாவற்றையும் செய்துள்ளேன். வார்த்தையைப் பேசுங்கள், சந்தேகப்பட வேண்டாம். உங்களுடைய விசுவாசமும், மேலும் கூடுதலாக என்னுடைய தீர்க்கதரிசி உங்களுக்கு அளித்த அவருடைய விசுவாசமும் உங்களிடம் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 64-0726E வெடிப்புள்ள தொட்டிகள் என்ற செய்தியை கேட்கவும், வடிகட்டிகளே தேவையில்லாத சுத்தமான வார்த்தையை இந்த ஆர்ட்டீசியன் ஊற்று பீறிட்டுப் பொங்குவதால், இதிலிருந்து பருக நீங்கள் எங்களோடு சேர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

சங்கீதம் 36:9 எரேமியா 2:12-13 பரி. யோவான் 3:16 வெளிப்படுத்தின விசேஷம் 13-வது அதிகாரம்

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

சங்கீதம் 36:9
எரேமியா 2:12-13
பரி. யோவான் 3:16
வெளிப்படுத்தின விசேஷம் 13-வது அதிகாரம்