ஞாயிறு
17 செப்டம்பர் 2023
63-0623M
இடைவெளியில் நிற்றல்

அன்பான தெரிந்துகொள்ளப்பட்டவர்களே,

நம்முடைய கர்த்தராகிய இயேசு நம்மை மிகவும் நேசிக்கிறார், அதாவது நம்முடைய நாளில் நமக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவது அவருக்கு பிரியமாயிருந்தது. ஒருவர் பேரில் அவருக்கு 100% நம்பிக்கை இருந்தது. அந்த ஒருவருக்குள் அவர் வந்து ஜீவித்து, தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்க அந்த மானிட சரீரத்தினூடாக அவரால் தம்மை வெளிப்படுத்த முடிந்தது.

அவருடைய தீர்க்கதரிசி நம்மை மிகவும் நேசித்ததால், எந்த புதிய செய்தியும் அவருடைய சிறிய கூடாரத்திலிருந்தே வரும் என்று அவர் நமக்கும், தேவனுக்கும் ஒரு வாக்குறுதியை அளித்தார். அவர் மறைந்துபோனபோதும் கூட தேவனுடைய மணவாட்டி ஆவிக்குரிய ஆகாரத்தை விருந்துண்ணும்படியாக அவர் அதைப் பதிவுசெய்து, சேமித்து வைத்தார்.

தேவன் அவருடைய தூதனான தீர்க்கதரிசி அவருடைய வார்த்தையை நமக்கு காத்துக் கொள்ளும்படியாக அவருடைய தீர்க்கதரிசிக்கு அவ்வளவாய் உதவி செய்தார்.

தேவன் தம்முடைய பலமுள்ள தூதனின் மூலமாக உரைத்து, முழுமையாக வெளிப்படுத்தி, நமக்கு முழு வேதாகமத்தையும் வியாக்கியானித்தார், எழுதப்பட்டிராமல் கூட இருந்த, அந்த கூர்நுனி கோபுரம் போன்ற கற்பாறையின் உச்சியை அவர் திறந்து, அதை தம்முடைய தூதனுக்கு வெளிப்படுத்தினார், எனவே அவரால் அவருடைய மணவாட்டியாகிய, நமக்கு அவருடைய மறைக்கப்பட்டிருந்த எல்லா ரகசியங்களையும் கூற முடிந்தது.

சகோதரன் ராபர்சனுக்கு கூட தேவன் ஒரு தரிசனத்தைக் கொடுத்தார், அங்கு அவர் அக்கினி ஸ்தம்பம் அவருடைய தீர்க்கதரிசியைத் தூக்கி மேற்கு நோக்கி கொண்டு சென்று, பின்னர் அவரைத் திரும்பக் கொண்டு வந்து, மாற்றப்பட்டிருந்த அவரை மேசையின் தலைப் பகுதியில் அமர வைத்ததையும் கண்டார்.

அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவரிடம் பேசி, “இவர் என் ஊழியக்காரன். மோசே செய்தது போல ஜனங்களை வழி நடத்துவதற்கு, இந்த காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாயிருக்கும்படிக்கு நான் அவரை அழைத்திருக்கிறேன். பேசி சிருஷ்டிக்கும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று சொன்னார்.

மோசேயின் அழைப்பு என்னவாயிருந்தது? அவன் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது? வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு ஜனங்களை வழிநடத்தும்படிக்கு தேவன் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால் தேவன் மோசேக்கு அளித்திருந்த ஆணையில் தலையிட முடிவு செய்த மனிதர் அங்கு எழுந்து, "நீ மிஞ்சிப் போகிறாய். இந்தக் கூட்டத்தில் நீ ஒருவன் மாத்திரமே இன்னார் இன்னார் என்று கூறி உன்னை பெரிதாக காண்பித்துக்கொள்ள முயற்சிக்கிறாய்" என்றனர்.

தேவன் மோசேயினிடத்தில், “அவர்கள் மத்தியிலிருந்து உன்னைப் பிரித்துக் கொள். நான் அந்த முழு கூட்டத்தையும் கொன்று போட்டு, ஒரு புதிய சந்ததியை உருவாக்கி உன்னோடு அனுப்புவேன்" என்று சொல்லுமளவிற்கு இந்த செயல் அவரை மிகவும் கோபமூட்டினது. மோசே தேவனுடைய சந்நிதியில் விழுந்து, அப்படியானால் அவர் அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று கூறினான்.

தேவன் நம்முடைய நாளில் ஜனங்களை அதம்பண்ணப்போகிறார் என்றால், மோசேயைப் போல ஜனங்களுக்கு யார் நிற்பார்? அவ்வாறு நிற்கக் கூடிய, அல்லது நிற்க முடிந்த ஒரு நபரை, தேவன் மோசையை ஏற்றுக்கொண்டதுபோல ஏற்றுக்கொள்ளக்கூடிய யாரையாவது நாம் எங்கே கண்டறிவோம்? தேவனுடைய கோபத்தையே தடை செய்து நிறுத்துமளவுக்கு இந்த பூமியில் அவருடைய வல்லமையான ஏழாம் தூதனான, அந்த ஒரு மனிதனுடைய ஜீவியம் மாத்திரமே அவருக்கு அதிக விசேஷித்ததாயிருக்கிறது.

தேவன் எப்பொழுதுமே ஒரு திட்டத்தை உடையவராயிருக்கிறார். அவருடைய மணவாட்டி அந்த திட்டத்தை அடையாளங் கண்டுகொண்டு, வார்த்தைக்கு வார்த்தை அதனோடு தரித்திருப்பாள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சென்றடையும்படிக்கு அவர்களை வழிநடத்த தேவன் தெரிந்து கொண்டிருக்கிற அந்த சத்தத்தோடு அவர்கள் தரித்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் பேசி, நோவா புறா மற்றும் காகத்துடன் பேழையில் செய்தது போல், வேறு திசையில் செல்ல நிறைய இடம் கொடுத்தார். ஆனால் எப்போதும் பேழைக்குத் திரும்பும் புறாவைப் போலவே, மணவாட்டி எப்போதும் செய்திக்கும், அந்த சத்தத்திற்கும், ஒலிநாடாக்களுக்கும் திரும்புவாள்.

நம்முடைய நாளின் தீர்க்கதரிசி யாராயிருந்தார்? காலங்களினூடாக தம்முடைய ஜனங்களை வழிநடத்த இதற்கு முன்பு தேவன் அழைத்து அனுப்பியிருந்த வல்லமையான தீர்க்கதரிசிகள் இருந்து வந்திருக்கின்றனர்: ஆபிரகாம், மோசே, எலியா, எலிசா, ஆனால் அவர்களில் எவருமே நம்முடைய நாளின் வல்லமையான தீர்க்கதரிசியைப் போன்று இருந்ததில்லை. இவர் அவர்கள் எல்லோரைக் காட்டிலும் ஒரு மிக உயரிய பதவிக்கு அழைக்கப்பட்டிருந்தார். தேவனுடைய எல்லா ரகசியங்களையும் வெளிப்படுத்தும்படிக்கு அவர் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார். ஒன்றுமில்லாததிலிருந்து ஏதோ ஒன்றை பேசி உருவாக்கும்படிக்கு தேவன் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார். மூன்றாம் இழுப்பை வெளிப்படுத்தும்படிக்கு அவர் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார். தேவன் தம்முடைய மணவாட்டிய வழிநடத்தும்படிக்கு அவர் தெரிந்து கொண்ட ஒருவராய் இவர் இருந்தார்.

நாம் என்னே ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட ஜனங்களாய், தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாய் இருக்கிறோம். நாம் எப்படி தாழ்ந்தவராக இருக்க முடியும்? நாம் எப்படி சோகமாக இருக்க முடியும்? சாத்தான் நம்மை மனத் தளர்வடையச் செய்ய முயற்சிக்கிறான், ஆனால் நமக்கோ ஜெயம் உண்டு, நாமோ பாதுகாப்பாக பேழையில், முத்திரையிடப்பட்டுள்ளோம். கதவுகள் மூடப்பட்டுள்ளன. எதுவுமே நமக்கு தீங்கிழைக்க முடியாது. நாமே அவருடைய திரும்பளிக்கப்பட்ட ஆதாம்.

அவர் நமக்காக, அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டிக்காக வருகிறார். நம்மில் சிலர் மரணத்தை ருசி பார்க்காமல், ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்படுவோம். மகிமை!!

உங்கள் ஒவ்வொருவரையும் போலவே, ஒவ்வொரு நாளும், அவருடைய வார்த்தையிலும், அவர் எனக்குக் கொடுத்துள்ள என் வெளிப்பாட்டிலும், மேலும் மேலும் பலமடைடைந்து, நானும் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன். நான் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறேன். அவர் இன்று வரவில்லையென்றால், நாளை வரலாம், ஆனால் அவர் மிக விரைவில் வருவார் என்று எனக்குத் தெரியும், அவர் எனக்காகவும் உங்களுக்காகவும் வருகிறார்.

ஒரு சிறு இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுருக்கிற ஆகாரமான இடைவெளியில் நிற்றல் 63-0623M என்ற செய்தியை நாங்கள் உற்று நோக்கி கேட்கப் போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளுங்கள். நாம் எண் 27-ம் பத்தியிலிருந்து செய்தியைத் தொடங்குவோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:

எண்ணாகமம 16:3-4