ஞாயிறு
10 ஏப்ரல் 2022
62-1014E
ஒரு வழிகாட்டி

அன்பான வழிகாட்டப்பட்ட ஆட்டுக்குட்டிகளே,

இறுதி யுத்தம் நெருங்கிவிட்டது. நாம் இதுவரை இல்லாத இடத்திற்கு சென்றுகொண்டிருக்கிறோம். நாம் ஒரு வனாந்தரத்தினூடாகச் செல்கிறோம், நாம் எங்கோ நம்முடைய பாதையில் இருக்கிறோம், ஒரு வழிகாட்டி இல்லாமல் நாம் தொடர்ந்து செல்ல முடியாது. கவலைப்படாதே சிறு மந்தையே, தேவன் நம்மை வழிநடத்த ஒரு வழிகாட்டியை அருளியுள்ளார்.

இந்த வழிகாட்டி நமக்கு காரியங்களை வெளிப்படுத்துவார், மேலும் அவர் கேட்டுள்ள காரியங்களையும் சொல்லுவார்; அவர் நம்முடைய வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி, நாம் சொன்னதை அவரால் சொல்ல முடியும். இந்த வழிகாட்டியை நாம் பின்பற்ற வேண்டும், ஏனென்றால் அவர் ஒருவரே வழியை அறிந்தவர்.

இயேசு பூமியில் இருந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களிடம் இன்னும் அநேகங்காரியங்களை சொல்லவும், நமக்கு வெளிப்படுத்தவும் இருப்பதால், அவர் சத்திய ஆவியானவரை நம்மிடம் அனுப்புவதாகவும், அவர் இந்த சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்துவார் என்றும் கூறினார். அவர் முதன்முதலில் மாம்சத்தில் வந்தபோது அவர் செய்ததைப் போலவே அவர் தம்மை வெளிப்படுத்தி ரூபகாரப்படுத்தும்போது அவருடைய மணவாட்டி அவரை அடையாளம் கண்டுகொள்வாள் என்று அவர் கூறினார்.

நம்முடைய இதயத்தில் இருக்கும் ஒவ்வொரு நினைவையும் அவர் அறிவார். நாம் யார் என்பதையும், நாம் என்ன செய்துள்ளோம் என்பதையும் அவர் அறிவார். அவர் நம்மைக் குறித்த எல்லாவற்றையும் அறிவார். அவர் தேவனுடைய வழிகாட்டியாய், பரிசுத்த ஆவியானவராய் மானிட மாம்சத்தில் ஜீவித்து தம்மை வெளிப்படுத்துகிறார்.

இயேசுவே சொன்னது போல், "இந்தக் கிரியைகளைச் செய்கிறது நானல்ல; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்."

அப்படியே அவருடைய தூதன் தன்னைப்பற்றிப் பேசாமல், அவர் எதைக் கேட்பாரோ அதையே பேசுவார். அவர் இந்த எல்லாக் காரியங்களையும் பிதாவினிடத்திலிருந்து பெற்றுக்கொள்வார், பின்னர் அவர் அவைகளை நமக்கு அறிவிப்பார். வார்த்தையில் மறைந்திருந்த எல்லா இரகசியங்களையும் அவர் வெளிப்படுத்துவார்.

பூமியில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை, ஒரு வழிகாட்டியாகக் கொண்டிருப்பார் என்றும், அவருடைய மணவாட்டி அவரைத் தெளிவாக அடையாளம் கண்டுகொண்டு பின்பற்றுவாள் என்றும் பிதாவானவர் நம்மிடம் கூறினார்.

அவர் தேவனை மாத்திரமே மகிமைப்படுத்துவார். அது ஏழாம் தூதனாகிய அவர் அல்ல, இது மனுஷகுமாரனின் வெளிப்படுத்துதல் என்று அவர் தெளிவாகக் கூறுவார். இது தேவனுடைய இரகசியம் வெளிப்படுத்தப்படுதலாகும். இது ஒரு மனிதன் அல்ல, இது தேவன். அவர் மனுஷகுமாரன் அல்ல; அவர் மனுஷகுமாரனிடமிருந்து வந்த ஒரு செய்தியாளன். மனுஷ குமாரன் கிறிஸ்து, அவரைத் தான் நாம் புசித்துக்கொண்டிருக்கிறோம்.

மணவாட்டியை வழிநடத்த தாங்கள் தான் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்று பலர் கூறுவார்கள், ஆனால் நீங்கள் உங்களுடைய அறிவாற்றலின் பேரிலோ அல்லது உங்களுடைய சிந்தனைகளின் பேரிலோ அல்லது மனிதனால்-உண்டாக்கப்பட்ட எந்த கருத்துக்களின் பேரிலோ சார்ந்திருக்க தேவன் விரும்புகிறதில்லை. தேவன் ஒரு வழிகாட்டியை அனுப்புகிறார், அது அவரால் நியமிக்கப்பட்ட வழிகாட்டி என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

நம்முடைய வழிகாட்டி ஒருவரை இந்தவழியாகவும், ஒருவரை அந்தவழியாகவும் அழைத்துக் கொண்டு போய்: நீ இந்தப் போதகருக்கு செவிகொடுக்க வேண்டும், பிறகு நீ அந்த போதகருக்கு செவிகொடுக்க வேண்டும் என்று கூறப்போவதில்லை; அவர்களே ஒருவருக்கொருவர் உடன்படவில்லை. அது எப்படி உங்களை பரிபூரணப்படுத்தும்?

பரிபூரண வார்த்தை ஒன்று மாத்திரமே, ஒலிநாடாவில் உள்ள அவருடைய பரிபூரணமான ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தின் வார்த்தையே நம்மைக் கொண்டு வந்து ஒன்றாக வைத்திருக்கப்போகிறது.

இன்று பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட நபர்களாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்று அவர்கள் கூறுகின்றனர், இது உண்மை. பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்றால் அப்பொழுது ஏன் ஒரு போதகர் வேண்டும்? நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்: தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி இல்லாமல், ஒரு போதகர் என்னை வழிநடத்தி எனக்குப் போதிக்க விரும்புகிறேனா? தேவனுடைய சத்தத்திலிருந்து அவரே அதை மிக சிறப்பாக விளக்கிக் கூறுவதை நேரடியாக கேட்பதை விட வார்த்தையின் வியாக்கியானத்தை ஒரு பிரசங்கியினிடத்திலிருந்து நான் கேட்க விரும்புகிறேனா?

நான் ஊழியத்தை கண்டிக்கவோ, அல்லது அவர்கள் போலியானவர்கள் என்று கூறவோ, அல்லது நீங்கள் அந்த ஊழியத்திற்கு செவிகொடுக்கக் கூடாது என்று கூறவோ முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை. நான் அதை சரியாகக் கூறிக்கொண்டிருக்கவில்லையெனில் தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும். அவர்கள் உங்களின் முற்றிலுமான, முற்றிலுமான வார்த்தையாக, உங்களுடைய வழிகாட்டியாக இருக்க முடியாது என்றுதான் நான் கூறிக்கொண்டிருக்கிறேன். மனிதர்களால் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒரு வித்தியாசமான எண்ணத்தையும், வித்தியாசமான வழிநடத்துதலையும் உடையவனாயிருக்கிறான். அது எப்படி மணவாட்டியை பரிபூரணப்படுத்த முடியும்? நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் செவிகொடுத்து, அவர்கள் கூறுவதே தேவனுடைய பரிபூரண வார்த்தை என்று கூறும் அவர்களே ஒருவருக்கொருவர் உடன்பட முடியாமலிருப்பதை அறிந்தால், அது எப்படி மணவாட்டியை பரிபூரணப்படுத்த முடியும்? அது எப்படி உங்களுடைய வழிகாட்டியாக இருக்க முடியும்?

பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வார்த்தையுடன் நம்மை ஒன்றாக வைத்திருக்க நாம் அனுமதித்தால், நாம் ஒரே ஆவியினால், ஏக இருதயத்தோடும், ஏக சிந்தையோடும், ஒருமனப்பட்டிருப்போம்; பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய வழிகாட்டியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்துவார். ஆனால் நீங்கள் உங்களுடைய வழிகாட்டியைப் பின்பற்ற வேண்டும்.

உங்களுடைய வழிகாட்டியின் வார்த்தைக்கு ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள். அவரைப் பின்தொடருங்கள். நீங்கள் பின்தொடரவில்லையென்றால், நீங்கள் வழித்தவறி காணாமற்போய்விடுவீர்கள். மேலும், நீங்கள் அவரை விட்டுவிடும்போது, நீங்கள் சுயமாக செல்ல வேண்டும் என்பது, நினைவிருக்கட்டும், எனவே நாம் வழிகாட்டிக்கு அருகில் இருக்க விரும்புகிறோம்.

பரிசுத்த ஆவியானவர் அவருடைய வழிகாட்டியைப் பின்பற்ற நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார், இது பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ஏழாம் தூதன் மூலம் பேசுவதாகும். இது ஒரு மனிதனுடைய வார்த்தை அல்ல, இது அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறது, மேலும் இதுவே மணவாட்டியை பரிபூரணப்படுத்தக் கூடிய ஒரே காரியமாயிருக்கிறது.

நாங்கள் எங்களுடைய ஈஸ்டர் வாரத்தில் எங்களுடைய வழிகாட்டிக்கு செவிகொடுக்கத் துவங்குகையில், ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, வந்து சேர்ந்துகொள்ளுங்கள், நாம் இதுவரை செல்லாத இடத்திற்கு அவர் நம்மை வழிநடத்தப் போகிறார்.

62-1014E ஒரு வழிகாட்டி

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

பரி. மாற்கு 16:15-18
பரி. யோவான் 1:1/16:7-15 அப்போஸ்தலர் 2:38
அப்போஸ்தலர் 2:38
எபேசியர் 4:11-13 / 4:30
எபிரெயர் 4:12
2 பேதுரு 1:21
யாத்திராகமம் 13:21