ஞாயிறு
19 நவம்பர் 2023
63-0728
கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவரகசியமாயிருக்கிறார்

அன்புள்ள தீர்க்கதரிசியினுடைய இருதயத்தின் இனியவர்களே,

அவர்கள்—சத்திய வசனத்தினால், உம்முடைய ஆவியினால் உமக்கென்று பிறப்பிக்கப்பட்டவர்கள். கர்த்தாவே, நீர் இவர்களை ஆசீர்வதித்து, கிறிஸ்துவின் அன்பு என்னும் கட்டுகளினால் இவர்களை ஒன்றாக பிணைக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.

ஆயத்தமாகுங்கள், நாம் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆசீர்வாதங்களையும், அபிஷேகங்களையும் மற்றும் வெளிப்பாட்டையும் பெறப்போகிறோம். நாம் அதை நம்முடைய ஆத்துமாக்களில் உணர முடிகிறது, ஏதோ காரியம் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. நேரம் ஆயத்தமாக உள்ளது. நாம் மிகவும் உற்சாகமடைந்து, பெரிய எதிர்பார்ப்புகளுடனும் இருக்கிறோம். நம்மை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்று, நிரப்ப, நிரப்ப, பின்னர் அவருடைய பரிசுத்த ஆவியால் நம்மை மீண்டும் நிரப்ப தேவனுடைய சிங்காசனத்திலிருந்து ஒரு செய்தியை கேட்க உலகெங்கிலும் உள்ள மணவாட்டி ஒன்றுகூடிக்கொண்டிருக்கிறாள்.

வேதவாக்கியம் நிறைவேற்றப்படப் போகிறது. எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியாயத்தீர்ப்பு சமீபித்துவிட்டது. கர்த்தர் தம்முடைய மணவாட்டியை நம்முடைய கலியாண விருந்திற்கு அழைக்க வருகிறார். கடைசி அழைப்பு வந்ததுள்ளது. தேவனுடைய வருகை வந்துவிட்டது. அவர் நமக்காக வருகிறார்.

நாம் அதை காண்கிற, அதை ஏற்றுக் கொண்டுள்ள அவருடைய முன்குறிக்கப்பட்ட வித்தாய் இருக்கிறோம். நம்முடைய பாவங்கள் அழிக்கப்பட்டு, போய்விட்டன. இது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மையில் போடப்பட்டது, அது ஒருபோதும் நினைவுகூரப்படுவதில்லை. தேவன் அவை அனைத்தையும் மறந்துவிட்டார். தேவனின் முன்னிலையில், நாம் தேவனுடைய ஒரு குமாரனாக குமாரத்தியாக நிற்கிறோம். நாம் இப்போதே அவ்வாறு இருக்கிறோம்... நாம் அவ்வாறு இருப்போம் என்று அல்ல; நாம் இப்பொழுதே தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம்.

நாம் ஒரு காரியத்தை அடையாளங் கண்டுகொள்கிறோம், வார்த்தை. ஒலிநாடாக்கள். இந்த செய்தி, அவைகள் ஒன்றாயிருக்கின்றன.

ஒருமுறை, சில நாட்களுக்கு முன்பு, இங்கே இச்சிறிய கூடாரத்தில், ஆகாரத்தைச் சேகரித்து வைக்க வேண்டும் என்றும், இவை அனைத்தும் தேவைப்படும் ஒரு நேரம் வருமென்ற தரிசனத்தையும் நீர் காண்பித்தீர்… “அந்த நேரத்திற்காக இந்த ஆகாரத்தை இங்கே சேமித்து வை.”

இப்போழுதே அந்த நேரம். இதுதான் அந்த ஆகாரம். நாம் தான் அந்த ஜனங்கள். நாம் வெளிப்பாடட்டைப் பெற்றுள்ளோம்.

ஒலிநாடா ஊழியத்தின் முக்கியத்துவத்தை மற்றவர்கள் தவறவிடக்கூடும். நாம் தவறவிடுவதில்லை. இது நம்முடைய ஜீவியங்களாயும், இதுவே நமக்கு எல்லாமுமாயிருக்கிறது. இது நமக்கு ஜீவனை விட மேலானது. நமக்கு எதைக் குறித்தாவது ஒரு கேள்வி எழும்பும்போது, நாம் யாரிடமாவது சென்று அதை நமக்கு விளக்கிக் கூறும்படி அல்லது நமக்காக அதை கண்டறியும்படி கேட்கிறதில்லை. நாம் புரிந்துகொள்ளத் தவறினால் அல்லது ஒரு கேள்வியை உடையவராய் இருந்தால் தேவனுடைய தூதன் நமக்குச் செய்யும்படி கட்டளையிட்டபடியே நாம் சரியாக செய்கிறோம்.

இதை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்களா? உங்களால் விளங்கிக்கொள்ள முடியாவிட்டால், இந்த ஒலிநாடாவை மறுபடியும் கேளுங்கள். இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடனே இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்னும் சத்தியம் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். இதுதான் சத்தியம். இது வேதவசனமாயுள்ளது.

உங்களால் விளங்கிக்கொள்ள முடியாவிட்டால், ஒலிநாடாவை மறுபடியும் கேளுங்கள்.

எங்களுடன் கோபித்துக் கொள்ளாதீர்கள், அதைத்தான் அவர் சொன்னார்...மேலும், இது கர்த்தர் உரைக்கிறதாவது என்னும் சத்தியம். அதில் ஒரு பகுதியையோ, அதில் சிலவற்றையோ, அல்லது எது அபிஷேகம்பண்ணப்பட்ட வார்த்தை மற்றும் எது அபிஷேகம்பண்ணப்படாத வார்த்தை என்று யாராவது வியாக்கியானிக்கிறதையோ அவர் கூறவில்லை. ஒலிநாடாக்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பவைகளாகும்.

நீங்கள் அதைப் பெறாமலிருக்கலாம், அல்லது புரிந்துகொள்ளாமல் இருக்கலாம், அல்லது இது இன்னும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படாமலிருக்கலாம். ஆனால் நமக்கு, இதைத்தான் அவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

நீங்கள் விவாகம் செய்யப்போகிற இளம் பெண்ணிடம், உங்களுக்குத் தெரியும், நீங்கள் காரியங்களை எப்படி உங்கள் மனைவியிடத்தில் சொல்லுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவளை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்கள், நீங்கள் ரகசியங்களை அவளிடத்தில் அப்படியே சொல்லுகிறீர்கள், அவளை உங்கள் பக்கத்தில் உட்காரவைத்து, மற்ற ஒவ்வொரு காரியத்தையும் கூறி, உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லுகிறீர்கள். அது எப்படி உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அதைத்தான் தேவன், கிறிஸ்து, சபைக்குச் செய்துகொண்டிருக்கிறார். புரிகிறதா? அவள் இரகசியங்களை, இரகசியங்களை மாத்திரம் அறியும்படி அவர் அனுமதித்துக் கொண்டிருக்கிறார். எல்லாரிடமும் சல்லாபம் செய்யும் பெண்களிடமல்ல; அவருடைய மனைவியிடம் என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன்.

நாம் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறோம். ஒரு மணவாட்டி கலியாணத்திற்கு முன்பு எவ்வளவு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறாள். நாம் அமைதியாக இருக்க முடியாது. நாம் நிமிடங்களை...நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறோம். அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நம்மிடம் அவர் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் சாத்தான் நம்மைத் தாக்கிக்கொண்டே இருக்கிறான், ஆனால் நாம் யார் என்று இப்போது நமக்குத் தெரியும் என்பதற்கு அவன் ஆயத்தமாக்கப்பட்டிருக்கவில்லை. இனி எந்த சந்தேகமும் இல்லை, நாம் உரைக்கப்பட்ட வார்த்தையாயிருக்கிறோம். நாம் வார்த்தையை உரைத்து, கிரியை செய்ய முடியும், கிரியையும் செய்கிறோம். சாத்தானுக்குரிய பதில் நம்மிடம் உள்ளது. தேவன் தம்மை ரூபகாரப்படுத்தியிருக்கிறார். தேவன் தம்மை நிரூபித்திருக்கிறார். நாம் அவருடைய ஜீவனுள்ள வார்த்தையாக இருந்து, அவர் நமக்குக் கொடுத்திருக்கிற சகல அதிகாரத்தோடும் பேசுகிறோம்.

இன்றைக்கு அவர் இங்கே, தம்முடைய வார்த்தையில், அவர் தாமே அங்கே செய்த அதே காரியத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவள் மற்ற தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடியாது. இல்லை, ஐயா. எந்தப் பேராயரும் இல்லை, வேறெந்த காரியமும் இல்லை. அவள் ஒரு தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறாள், அதுதான் கிறிஸ்து, கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். ஓ, என்னே! வ்யூ! எனக்கு அது பிரியம். ஹூம்! ஆம், ஐயா.

நாம் ஒரு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் ராஜ்யம் என்பது நம்முடைய சொந்த ஜீவியத்தில் ஆவியையும் ஜீவனையும் உண்டுபண்ணின தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. ஆகையால், நாம் அவருடைய ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறோம்.

நீங்கள் அதைப் பெறுவதற்கும் விசுவாசிப்பதற்கும் உண்மையான வெளிப்பாட்டை பெற்றிருந்தால், என் நண்பர்களே இதுதானே அவை யாவற்றையும் உண்மையாக கூறுகிறது.

இப்பொழுது கவனியுங்கள், பண்டைய இஸ்ரவேலின் மாதிரியான, ஒரே விதமாக, ஒரே தலைமையின் கீழ் ஒன்றுசேர்ந்து இணைக்கப்படுதல். இப்பொழுது நீங்கள் அதை புரிந்துகொள்ளுகிறீர்களா? பண்டைய இஸ்ரவேலரைப் போன்று; ஒரே தேவன், ஒரு அக்கினி ஸ்தம்பத்தினால் ரூபகாரப்படுத்தப்பட்டு, தம்மை வார்த்தையாக ஒரு தீர்க்கதரிசி மூலம் வெளிப்படுத்தினார். அதே தேவன், அதே அக்கினி ஸ்தம்பம், அதே முறை; அவரால் தம்முடைய வழியை மாற்றிக்கொள்ள முடியாது. அது…அது அவ்வளவு பிழையின்றி அமைந்துள்ளது.

தீர்க்கதரிசி...அது உள்ளே பதியட்டும். ஒரே தேவன் அந்த நாளுக்கான வார்த்தையாயிருக்கும்படியாக, ஒரு தீர்க்கதரிசி மூலமாக, ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாக ரூபக்காரப்படுத்தப்பட்டார், அவரால் மாற்றிக்கொள்ள முடியாது.

என்னால் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க முடியும், மேலும் மேற்கோளுக்குப் பிறகு மேற்கோள் காட்டுவதில் நாம் களிகூர்ந்து ஐக்கியங்கொள்ளும்படி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவ ரகசியமாய் இருக்கிறார் 63-0728: என்ற செய்தியை நாம் கேட்கப்போகின்றபடியால் உலகம் முழுவதிலுமிருந்து, நாம் கேட்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 16:15-17
பரி. லூக்கா 24வது அதிகாரம்
பரி. யோவான் 5:24 / 14:12
1 கொரிந்தியர் 2-ம் அதிகாரம்
எபேசியர் அதிகாரம் 1
கொலோசெயர் அதிகாரம் 1
வெளிப்படுத்தின விசேஷம் 7:9-10