
அன்புள்ள முளைப்பிக்கப்பட்ட வித்தே,
தேவனுடைய ஏழாம் தூதன், எப்படி தேவனுடைய முழு ஆலோசனையையும் மறைத்துவைக்காமல் உங்களுக்கு அறிவிக்கும்படிக்கு உங்களுக்கு சொல்வதை உட்கார்ந்து கேட்பது எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? மூன்றாவது இழுப்பைப் பற்றி விரிவாகச் சென்று, இப்போது அது எவ்வாறு ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு நிரூபிக்க வேண்டுமா?
எப்படி அணில்கள் உண்டாகும்படி உரைத்த தேவன்; ஆபிரகாமுக்காக ஒரு ஆட்டுக்கடாவை அவர் உரைத்த அதே விதமாகவே. அது சரியான காரியம் என்று உரைத்திருந்த ஹேட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு தாழ்மையான எளிய சகோதரியினிடத்தில் பேசும்படிக்கு அவரிடத்தில் உரைத்த அதே சத்தம் எப்படியாய், அவள் விரும்பினது எதுவாய் இருந்தாலும் அதை அவளுக்கு கொடுக்கும்படி அணில்கள் உண்டாகும்படி உரைத்த அதே சத்தம் அவளிடத்தில் சொல்லும்படிக்கும், அது அப்பொழுதே சம்பவிக்கிறதா என்று பார்க்கும்படிக்கும் சொன்னது.
எப்படி ஒரு நாள் தன்னுடைய நண்பர்களுடன் வனாந்தரத்தில் வேட்டையாடும்போது, ஒரு சக்திவாய்ந்த புயல் அவரை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. ஆனால் எப்படி தேவன் அவரிடம் உதட்டிலிருந்து செவி கேட்கப் பேசி, “நான் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தேன். நான் சமுத்திரங்களில் பலத்த காற்றை அடக்கினேன்” என்றது.
அந்த சத்தம் அவரிடத்தில், “புயலினிடத்தில் பேசு, அது நின்றுவிடும். நீ என்ன கூறினாலும், அது சம்பவிக்கும்என்று கூறினபோது அவர் எப்படி குதித்து தன்னுடைய தொப்பியைக் கழற்றினார்.
அவர் அந்த சத்தத்தை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை, ஆனால், “புயலே, நீ நில். மேலும், சூரியனே, நாங்கள் இங்கிருந்து வெளியேறும் வரை, நான்கு நாட்களுக்கு நீங்கள் சாதாரணமாக பிரகாசி” என்று உரைத்தார்.
அவர் அதை உரைத்த மாத்திரத்திலே, பனிக்கட்டி மழையும், உறைந்த பனியும் மற்ற ஒவ்வொரு காரியமும் நின்றுவிட்டது. எப்படி ஒரு நொடிப்பொழுதில் உஷ்ணமான சூரியன் அவருடைய முதுகின் மேல் பிரகாசித்தது. காற்றுகள் திசைமாறி வீச, மேகங்கள் ஒரு மர்மமான காரியம் போல, காற்றில் உயர்த்தப்பட்டு, சில நிமிடங்களில் சூரியன் பிரகாசித்தது.
சகோதரி பிரான்ஹாமின் இடது கருப்பையில் ஒரு நீர்க்கட்டி இருப்பதை அது வெளிப்படுவதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் அவருக்குக் காண்பித்ததையும், அது ஏன் வைக்கப்பட்டது என்பதையும் அவர் உங்களுக்குச் சொல்வார். அவர்கள் எப்படி ஜெபித்தனர், அதை எடுத்துப்போடும்படி தேவனிடத்தில் எப்படி ஜெபித்தனர். அப்பொழுது, தேவன் அவர்களுடைய விசுவாசத்தை சோதிக்கிறதாய் அது இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார்.
அறுவைசிகிச்சை மூலம் அதை அகற்றுவதற்கு முன், அவள் தனக்கு எவ்வளவு அற்புதமான மனைவியாக இருந்து வருகிறாள் என்று அவர் தேவனிடம் பேசிக்கொண்டும், அவரிடத்தில் சொல்லிக் கொண்டும் இருந்தார். அவர் வீட்டில் ஒருபோதும் இல்லை என்று அவள் எப்படி குறை கூறவேயில்லை. அவர் வேட்டையாடச் செல்லவும், ஓய்வெடுக்கவும், கர்த்தரிடத்தில் பேசவும் விரும்பும்போது அவருக்காக எல்லாவற்றையும் அவள் எப்போதும் ஆயத்தமாக வைத்திருந்தாள்.
அப்போது அவர் அறையில் ஏதோ ஒன்றைக் கேட்டார். அவர் மேல்நோக்கிப் பார்த்தபோது, அந்த சத்தம், “எழுந்து நில்” என்று கூறியது, “இப்போது நீ என்ன கூறினாலும், அது அப்படியே இருக்கும்” என்று அவரிடம் சொன்னது.
அவர் ஒரு நிமிடம் காத்திருந்தார், பின்னர் அவர், "மருத்துவர் கை அவளைத் தொடும் முன், தேவனுடைய கரம் அந்தக் கட்டியை அகற்றிவிடட்டும், அது இருந்தது கூட கண்டுபிடிக்கப்படக் கூடாது" என்றார்.
மருத்துவரின் கரம் அவளைத் தொடுவதற்கு ஒரு நொடிக்கு முன்பே, அவள் குணமடைந்தாள். எப்படி மருத்துவர் அவளிடம், “திருமதி. பிரான்ஹாம், அந்தக் கட்டி அங்கு இல்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களுக்கு எந்த கட்டியும் இல்லை" என்றார்.
கர்த்தருடைய வார்த்தை எவ்வளவு பூரணமாயுள்ளது!
மூன்றாவது இழுப்பு என்னவென்று அவருக்குத் தெரியும், அது என்ன செய்கிறது என்பதும் அவருக்குத் தெரியும், அதைக் குறித்து அவர் மனதில் இனி எந்த சந்தேகமும் இல்லை என்பதை அவர் உங்களுக்கு சொல்வதைக் கேட்க வேண்டும். அவரது கருத்துப்படி, எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக, எடுத்துக் கொள்ளப்படுவதற்குரிய விசுவாசத்தை துவங்கும் ஒரு காரியமாக அது இருக்கும்.
தேவன் நமக்காக சில மகத்தான காரியங்களைச் செய்யப்போகும் நேரம் விரைவில் வரும் என்பதால், நாம் பயபக்தியுடன் இருக்கவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். அந்த நேரம் வரும்போது, இறுக்கம் வரும்போது, அப்பொழுது நாம் தற்காலிகமாகப் பார்த்துள்ளதை, அதனுடைய பரிபூரண வல்லமையில் வெளிப்படுவதை நாம் காண்போம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, நமக்கு அந்த மகத்தான ஆசீர்வாதம் கிடைக்கும். பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள் 63-1229E: என்ற செய்தியை நாங்கள் கேட்கும்போது எங்களோடு ஒரு பாகமாக இருக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
ஒரு மனிதன் பேசுவதைப் கேட்க நாம் ஒன்று கூடி இருக்கமாட்டோம்; வீதியில் ஏராளமான பருஷர் உள்ளனர், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கூறுகின்றனர். நாம் ஒரு ஊழியரையோ அல்லது ஒரு போதகரையோ நோக்கிப் பார்த்து கேட்க மாட்டோம், நாம் இயேசுவை நோக்கிப் பார்த்துக் கேட்போம்.
அந்த மனிதன், அந்த தேவனுடைய மனிதன், அந்த மாம்சமான நசரேயனாகிய இயேசு, தேவனாயிருந்து, அவருடைய மணவாட்டியிடம் பேசுவதைக் கேட்க உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுபடுவோம்.
நீங்களே உங்களை கேட்டுக்கொள்ள வேண்டும், இன்றைக்கு நீங்கள் எதை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நோக்கிப் பார்க்கும்போது என்ன காண்கிறீர்கள்? வார்த்தையின் மூலம் நீங்கள் அவரை நோக்கிப் பார்க்கும்போது உங்களால் அவரை மாத்திரமே காண முடியும்.
அவர் கலிலேயாவில் நடந்தபோது என்னவாயிருந்தாரோ, அதேவிதமாக அவர் இன்றிரவு ஜெபர்ஸன்வில்லில் இருக்கிறார், அதேவிதமாக பிரான்ஹாம் கூடாரத்தில் இருக்கிறார். நீங்கள் எதைக் காண நோக்குகின்றீர்கள். ஒரு ஸ்தாபகரையா? ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு மனிதனையா? அதை நீங்கள் இயேசுவில் ஒருபோதும் காணவேமாட்டீர்கள். நீங்கள் ஒரு பெரிய குருவானவரின் நன்மைகளைக் காண நோக்குகின்றீர்களா? நீங்கள் அதை ஒருபோதும் இயேசுவில் காணவேமாட்டீர்கள். காணவேமாட்டீர்கள். நீங்கள் இயேசுவை எப்படி காண்கிறீர்கள்? தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்படுவதன் மூலம், ஏனெனில் அவர் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருந்தார். அவர் அன்று என்னவாயிருந்தாரோ, அவ்வாறே இன்றிரவும் உள்ளார், என்றென்றும் அவ்வாறே இருப்பார்.
இப்போது இயேசுவை நோக்கிப் பார்த்து பிழையுங்கள்; இது வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லேலூயா! அது நாம் "நோக்கிப் பார்த்து பிழைப்பது" என்பதாய் மாத்திரமே உள்ளது.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
பிரசங்கத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாக படிக்க வேண்டிய வசனங்கள்:
எண்கள் 21:5-19
ஏசாயா 45:22
சகரியா 12:10
பரி. யோவான் 14:12