ஞாயிறு
03 டிசம்பர் 2023
63-0825M
நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?

அன்புள்ள குளத்து லீலிபுஷ்பமே,

இப்பொழுது என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஞாயிற்றுக்கிழமை நம்முடைய கர்த்தர் பேசி நம்மிடத்தில் சொல்லும்போது நம்முடைய இருதயங்கள் சந்தோஷத்தால் எப்படியாய் துள்ளின. நாம் வார்த்தையுடன் இணைந்துகொண்டு, அவருடன் ஒன்றாகிக்கொண்டிருக்கிறோம். வெகு சீக்கிரத்தில் நமக்கு முன் சென்றுள்ள பரிசுத்தவான்களோடு நாம் ஒன்றாக இருக்கும்படி நாம் இணைக்கப்படுவோம். பின்னர் ஆட்டுக்குட்டியின் கலியாண விருந்துக்காக நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் ஒன்றாக இணைக்கப்படுவோம்.

ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, என்ன நடக்கிறது என்று உலகமும் கூட அறியாது என்பதை அவர் நம்மைச் சிந்திக்கச் சொன்னபோது, நம் ஆத்துமாக்கள் என்னே சந்தோஷத்தால் நிறைந்திருந்தன; ஆனால் திடீரென்று, நம்முடைய கண்களுக்கு முன் முன்னதாகவே சென்றுள்ள நம் அன்புக்குரியவர்களைக் நாம் காண்போம், நாம் அவர்களுடன் மீண்டும் இணைக்கப்படுவோம்.

நம்முடைய தகப்பன்மார்கள், நம்முடைய தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள், கணவர்கள், மனைவிகள், குழந்தைகள், நம் தீர்க்கதரிசியையும் கூட, ஒரு நொடியில், நம் முன் நிற்பதை நாம் காண்போம் என்பதை நினைக்கும்போது என்ன ஒரு எதிர்பார்ப்பு நம்முடைய இருதயங்களை நிரப்புகிறது. நாம் அவர்களை, மாம்சத்தில் காண்போமே!!

இதுதான் அது என்பதையும்; அந்த நேரம் வந்துவிட்டது என்பதையும், நாம் அதை அடைந்துவிட்டோம் என்பதையும், அது முற்றுப்பெற்றுவிட்டது என்பதையும், நாம் அப்பொழுதே அறிந்துகொள்வோம். வெளிப்பாட்டினால் உண்டாகும் ஊக்கமளித்தலை குறித்து பேசுகிறோமே!!

அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பேசுகையில், நீங்கள் மகிமை, அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்று, ஆரவாரமிடுவதை என்னால் கேட்க முடிகிறது.

நமக்காக விடப்பட்டிருக்கிற இந்த காதல் கடிதங்களின் பேரில் நாம் விருந்துண்டு, என்னே ஒரு நேரத்தை உடையவர்களாய் இருந்துகொண்டிருக்கிறோம். காதல் கடிதங்களை நாம் எப்போது வேண்டுமானாலும் வெளியே எடுத்து மேலும் மேலும், மீண்டும் மீண்டும் படிக்கலாம். அதுமட்டுமல்ல, ஆனால் அதைப் பார்க்கிலும் கூட மகத்தானது, நம்முடைய கர்த்தர் தாமே மானிட உதடுகளினூடாக பேசி, “என் இனிய இருதயமே, நான் உனக்காக இந்தக் காதல் கடிதங்களை சேமித்து வைத்தேன். நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதையும், நீ என்னுடையவள் என்பதையும் நான் உனக்கு சொல்வதை நீ கேட்க வேண்டிய நேரம் வரும் என்று எனக்குத் தெரியும்” என்று சொல்வதை நம்மால் கேட்க முடிகிறது.

"சத்துரு உன்னைத் தாக்குகிறபோது, உன்னுடைய எல்லா சோதனைகள் மற்றும் பரிசோதனைகளினூடாக கடந்து செல்லும்போது, நீ என்னுடையவள் என்று ஒவ்வொரு நாளும் நான் உனக்குச் சொல்ல விரும்பினேன். நான் ஏற்கனவே கிரையத்தை செலுத்திவிட்டேன். என்னவாயிருந்தாலும் நான் ஏற்கனவே ஜெயங்கொண்டுவிட்டேன்...என்று நான் கூறினதை என் இனிய இருதயமே நீ கேட்டாயா? உனக்கு என்னவெல்லாம் தேவையோ, நான் ஏற்கனவே உனக்காக ஜெயங்கொண்டுள்ளேன், ஏனென்றால் நான் உன்னை நேசிக்கிறேன்".

“உலகத் தோற்றத்திற்கு முன்பே நான் உன்னை அறிந்திருந்தேன். அப்பொழுதே நீ என்னில் ஒரு பாகமாக இருந்தாய். உனக்கு இப்போது அது நினைவில் இல்லை, ஆனால் எனக்கு நினைவிருக்கிறது. நான் உனக்குச் சொன்னதை மறந்துவிடாதே, நீ என் மாம்சத்தின் மாம்சமும், என் ஆவியின் ஆவியும், என் எலும்பின் எலும்புமாயிருக்கிறாய்”.

“நான் உன்னிடத்தில் சொல்லிக் கொண்டு வந்துள்ளதை குறித்ததான நேரம் இப்பொழுது வந்துவிட்டது. இனி துக்கங்களே இருக்காது, சோதனைகளும் பரிசோதனைகளும் இருக்காது; அவைகளின் நாட்கள் முடிவுற்றுவிட்டன. இப்போது நித்தியம் முழுவதும் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்”.

“தைரியமாக இரு. தொடர்ந்து முன்னேறிக்கொண்டிரு. அந்த நாளின் விடியல் சமீபித்துவிட்டது. அனுதினமும் நீ கடந்து சென்று கொண்டிருக்கிற இறுக்கம் யாவும் உன்னை என்னுடன் நெருக்கமாக கொண்டு வருவதற்காகவே உள்ளது”.

"உன் மீது எந்த காரியமாவது வரும்போது, நீ மிகவும் நொருங்குண்டு, களைப்புற்று, சோர்ந்து போவதை நீ உணருகிறாய், மேலும் உன்னால் தொடர்ந்து செல்ல முடியாதுபோல் தோன்றினால், நான் அங்கே உன்னோடு இருக்கிறேன் என்பதை, நீ ஒருபோதும் மறந்து விட வேண்டாம். என் வார்த்தை உனக்குள் ஜீவிக்கிறது. நீ என்னுடைய வார்த்தையாக இருக்கிறாய்.”

“வார்த்தையைப் பேசு என்று, நான் உனக்குச் சொன்னேன். நீ வாஞ்சிக்கிறக் காரியங்கள் என்னவாயிருந்தாலும், நீ ஜெபிக்கும்போது, அதைப் பெற்றுக்கொள்வாய் என்று விசுவாசி, அப்பொழுது அது உனக்கு உண்டாயிருக்கும். அது உனக்கு கொடுக்கப்படும். உனக்காக நான் அதை ஏற்கனவே ஜெயங்கொண்டுவிட்டேன்”.

இந்த வார்த்தைகள் நமக்கு என்ன பொருட்படுத்துகின்றன. அவை அனுதினமும் நம்மைத் தாங்குகின்றன. அது நம்முடைய ஆவிகளை உயர்த்தி, உன்னதங்களில் அவரோடு நம்மை உட்கார வைக்கிறது. நாம் தேவனுக்காகவும் அவருடைய வார்த்தைக்காகவுமே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு ஒரு குறிக்கோள் உள்ளது, அது இயேசு கிறிஸ்துவே. அதைத் தவிர, வேறு எதுவும் கணக்கிடப்படுகிறதில்லை.

நாம் தரிசனத்தை புரிந்துகொண்டோம். திரை நீக்கப்பட்டு நாம் அவரை காண்கிறோம், அவருடைய வார்த்தை மாம்சமாக்கப்பட்டு, மானிட உதடுகளினூடாக நம்மிடத்தில் பேசுகிறார். இந்த வார்த்தையையும், இந்த செய்தியையும், அந்த சத்தத்தையும் நாம் நேசிக்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களோடு வந்து சேர்ந்துகொண்டு, உங்களுடைய ஜீவியத்தின் மகத்தான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். சாத்தான் உங்களுடைய வழியில் தொடுக்கிற ஒவ்வொரு யுத்தத்தையும் எப்படி ஜெயங்கொள்வது என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி என்பதை அறிந்துகொள்வதனால் உங்களுடைய இருதயம் சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நிரம்பும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

63-0825M நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?

 

செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:

வெளிப்படுத்தின விசேஷம் 3:21-22