
அன்பான வெட்டியெடுக்கப்பட்டவர்களே,
நாம் ஏன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!!
நாம் கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டோம். தேவனுடைய தீர்க்கதரிசியான மல்கியா 4-ன் மூலம் உரைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. நாம் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி. நாமே அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்திற்கு உண்மையாக தரித்திருக்கிறவர்களாய் இருக்கிறோம். நாமே அவர் அளித்திருக்கிற மகத்தான கிரயத்தின் முத்தான, அவருடைய செய்திக்கும், அவருடைய செய்தியாளனுக்குமான உண்மையான வெளிப்பாடாக இருக்கிறோம்.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியின் வார்த்தையை எடுத்து, ஒவ்வொரு சிறு எழுத்தையும் ஒவ்வொரு சிறு உறுப்பையும் விசுவாசிக்கிற ஒரு மணவாட்டியை வெட்டியெடுத்துள்ளார். அவர் செய்வதாக வாக்களித்தபடியே அவர் நம்மை வெட்டியெடுத்துள்ளார். நாம் தேவனுடைய ஆடுகளாயும், தேவனுடைய சத்தத்தை மாத்திரமே கேட்கிறவர்களாயும் இருக்கிறோம்! "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது" என்றவாறே, நாம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கிறோம்.
நாம் தேசம் முழுவதிலுமிருந்து; நியூயார்க், மாசசூசெட்ஸ், பாஸ்டன், மைனே, டென்னசி, ஜார்ஜியா, அலபாமா மற்றும் தேசம் முழுவதிலிருந்துமே உருவாக்கப்பட்டிருக்கிறோம். ஆப்பிரிக்காவிலிருந்து மெக்சிகோ, ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை, நாம் ஒரே செய்தி, ஒரே சத்தத்தின் கீழே ஒன்றுகூடிக்கொண்டிருக்கிறோம், இது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான மணவாட்டியை இணைத்துக் கொண்டிருக்கிறது.
நம்முடைய தீர்க்கதரிசி, தேவனுடைய செய்தியாளர், மனுஷகுமாரன் தன்னை மாம்சத்தில் வெளிப்படுத்தி, "சாத்தானே, என்னுடைய வழியை விட்டு விலகு, நான் ராஜாவின் செய்தியை உடையவனாயிருக்கிறேன். நான் ராஜாவினுடைய செய்தியாளன். நான் இன்றைக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையை உடையவனாயிருக்கிறேன். நான் அவருடைய மணவாட்டியை வெளியே அழைத்து, வழிநடத்த முன்குறிக்கப்பட்டிருக்கிறேன்.
"நான் ஒரு ஜனத்தை வெளியே இழுத்து, இந்தக் காரியங்களிலிருந்து அவர்களை வெட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் ரூபகாரப்படுத்துதலோடு; தேவன் இங்கு நின்றுகொண்டிருக்கிறார் என்று, வேத வாக்கியங்களினால், அவர்களுக்கு காண்பிக்கும்படி; அவர்களை வெளியே இழுக்கிறேன்.
அவர் ஜீவனுக்கு முன்குறித்திருந்த ஜனங்கள் பூமியின் மேல் இருக்கிறதை தேவன் அடையாளம் கண்டு கொண்டார். அவர் தம்முடைய செய்தியாளனை அனுப்பி தம்முடைய மணவாட்டியை வெளியே அழைக்க இதுவே நேரம் என்பதை அடையாளம் கண்டு கொண்டார், எனவே அவர் அதை செய்தார். நாமே அதை அடையாளம் கண்டு கொண்டவர்களாக இருக்கிறோம். நாமே ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்போம் என்று அவர் அறிந்திருந்தார்.
தேவன் மானிட சரீரத்திலிருந்து தன்னிடம் பேசிக்கொண்டிருந்தார் என்பதை ஆபிரகாம் அடையாளம் கண்டு கொண்டான். அவன் அவருடைய அடையாளத்தை அடையாளம் கண்டு கொண்டு அவரை ஆ-ண்-ட-வ-ரே, எலோஹிம் என்று அழைத்து, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டான். அது அந்த நாளில் இருந்தது போலவே, மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படும்போது, எலோஹிம், மானிட சரீரத்தினூடாக பேசுகிறார் என்பதை நாம் அடையாளம் கண்டு கொண்டோம்.
நாம் அவருடைய பாகமாயும், அவருடைய குமாரனின் பாகமாயும் இருக்கிறோம், நாம் அவருடன் என்றென்றும் நிலைத்திருப்போம். இது நம்முடைய அழைப்பினாலோ அல்லது நம்முடைய தெரிந்துகொள்ளுதலினாலோ அல்ல, ஆனால் அவருடைய தெரிந்துகொள்ளுதலினாலே. நமக்கு அதனோடு எந்த சம்பந்தமும் இல்லை. அவரே உலகத் தோற்றத்திற்கு முன்னர் நம்மைத் தெரிந்துகொண்டவராய் இருக்கிறார்.
நீங்கள் எவ்வளவுதான் பிரசங்கித்தாலும், நீங்கள் எதைச் செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது முதிர்ச்சியடையப்பட முடியாது, அது வெளிப்படுத்தப்பட முடியாது, அது ரூபகாரப்படுத்தப்பட முடியாது; "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்ற வார்த்தையை கூறினவரால் மாத்திரமே முடியும். இந்த நாளில் சம்பவிக்கும் என்று அவர் முன்னுரைத்திருக்கிறதை வெளிப்படுத்தும்படியாக அல்லது நிரூபிக்கும்படியாக அல்லது ரூபகாரப்படுத்தும்படியாக ஒரு-ஒரு-ஒரு வல்லமை, பரிசுத்த ஆவியானவர் தாமே வர வேண்டியதாய் இருக்கிறது. சாயங்கால வெளிச்சம் அதை உருவாக்குகிறது. என்னே ஒரு நேரம்!
நாம் அவருக்கு முன்னால் கடந்து சென்ற போது அவர் நம்மை ஒரு தரிசனத்தில் கண்டார். மணவாட்டி ஆரம்பத்தில் இருந்த அதே நிலையில், அல்பாவும் ஒமேகாவுமாக, நாம் இருந்தோம். சிலர் அணிவகுப்பின் வரிசையை விட்டு விலகுவதை அவர் கவனித்துகொண்டிருந்து, அவளை திரும்பவும் அணிவகுப்புக்குள் இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார், ஆனால் நாமே "நாங்கள் அதன்பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்" என்று சத்தமிட்டவர்கள்.
கவனியுங்கள், "யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல," அவன் தொடர்ந்து வருவான், அவர்களைப் போன்ற சிலர். இப்பொழுது இல்லை, அவர் இங்கு மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட்டைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவில்லை; அவர்கள் காட்சியிலேயே இல்லை. புரிகிறதா? “ஆனால், யந்நேயும் யம்பிரேயும் மோசேயையும் ஆரோனையும் எதிர்த்து நின்றதுபோல, அவர்களும் எதிர்த்து நிற்பார்கள்; சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிற துர்பத்தியுள்ள மனிதர்,” வேதாகமத்திற்கு பதிலாக, சபையின் உபதேசங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் தாறுமாறாக்கப்பட்டுள்ளனர்.
நம்முடைய நாளுக்கான உண்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையுடன் நாம் எவ்வளவு கவனமாக தரித்திருக்க வேண்டும். வார்த்தை யாரிடம் வருகிறது என்பதை நாம் எப்போதும் அடையாளம் கண்டு கொண்டு, நினைவில் கொண்டிருக்க வேண்டும். வார்த்தையின் ஒரே தெய்வீக வியாக்கியானி யார்? நம்முடைய நாளுக்கான வார்த்தை யார்?
"என் வார்த்தையே ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது" என்ற தேவனுடைய வார்த்தையான, தேவ ஆவியானவர், மணவாட்டியை அவளுடைய ஸ்தானத்தில் பொருத்துவார். காரணம், அவள் வார்த்தையில் தன்னுடைய ஸ்தானத்தை அடையாளம் கண்டுகொள்வாள், அப்பொழுது அவள் கிறிஸ்துவில், அவளுடைய ஸ்தானத்தில் அவள் பொருத்தப்படுவாள்.
உன்னுடைய நாளையும் அதனுடைய செய்தியையும் அடையாளம் கண்டு கொள்ளுதல் 64-0726M என்ற செய்தியை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஏலோகிம் அவருடைய தீர்க்கதரிசி மூலமாக பேசி எங்களுக்கு அதைக் கொண்டு வருவதை நாங்கள் கேட்கையில், வார்த்தையில் உங்களுடைய ஸ்தானத்தை அடையாளம் கண்டு கொண்டு உங்களுடைய ஸ்தானத்தில் பொருத்தப்பட, நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே தேவனுடைய சத்தத்தை நீங்கள் கேட்க வரும்படி அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஓசியா: அதிகாரம் 6
எசேக்கியேல்: அதிகாரம் 37
மல்கியா: 3:1 / 4:5-6
11தீமோத்தேயு: 3:1-9
வெளிப்படுத்தின விசேஷம்: அதிகாரம் 11
தேவனே, ஒரு எழுப்புதலை எனக்குள்ளாக சிருஷ்டியும். நானே அந்த எழுப்புதலாய் இருக்கட்டும். நாங்கள் ஒவ்வொருவரும் அந்த எழுப்புதலாய் இருப்போமாக, அந்த எழுப்புதல் எனக்குள்ளாக இருக்கட்டும். கர்த்தாவே, என்னை பசியுள்ளவனாக்கும், என்னை தாகமுள்ளவனாக்கும். கர்த்தாவே, எனக்குள்ளாக தேவைப்படுகின்றதை, எனக்குள்ளே சிருஷ்டியும். இந்த மணி நேரம் முதற்கொண்டு, நான் உம்முடையவனாய் இருக்கட்டும்; அதிக அர்ப்பணிக்கப்பட்ட ஊழியக்காரனாய், ஒரு மேலான ஊழியக்காரனாய், உம்மால் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவனாயும் இருப்பேனாக; அதிக ஆற்றலுள்ளவனாய், அதிக தாழ்மையாயுள்ளவனாய், அதிக தயவுள்ளவனாய், ஊழியம் செய்ய அதிக உற்சாகமுள்ளவனாய் இருப்பேனாக; அதிக உறுதியான காரியங்களையே எதிர்நோக்கி, பின்னானவைகளையும், எதிர்மறையான காரியங்களையும் மறப்பேனாக. நான் கிறிஸ்துவின் பரம அழைப்பின் இலக்கை நோக்கித் தொடர்வேனாக. ஆமென்.
சங்கை. வில்லியம் மரியன் பிரான்ஹாம்