
அன்பான எழுதப்பட்ட வார்த்தையே,
ஒவ்வொரு வாரமும் மகத்தானதாகிக்கொண்டே போகிறது. ஞாயிற்றுக்கிழமை, நாம் நோக்கிப் பார்த்து தீர்மானம் செய்யும்படியான ஒரு தருணம் உண்டாயிருந்தது, நாம் எதைப் பார்த்தோம்? நாம் ஒரு ஊழியக்காரரைப் பார்த்தோமா, இல்லையே! நாம் நம்முடைய மேய்ப்பரைப் பார்த்தோமா, இல்லையே! நாம் மாம்ச சரீரத்தின் திரைக்கப்பால் நோக்கிப் பார்த்தபோது, நாம் இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துகிறதையும், தம்மை வெளிப்படுத்தினதையும் கண்டோம்.
அவர்கள் தொடர்ந்து ஒலிநாடாக்களை நாம் கேட்டுக்கொண்டு வருவதுபோல் கேட்டிருந்தால், உங்களுக்கு கேட்பதற்கு காதுகளும், பார்ப்பதற்கு கண்களும் இருந்தால், அது மிகத் தெளிவாகிவிட்டிருக்கும். இப்போது நாம் தேவனை வெளிப்படையாகக் காண்கிறோம். திரையானது கிழிக்கப்பட்டு, தேவன் நமக்கு முன்பாக வெளிப்படையாக நிற்பதையும், அக்கினி ஸ்தம்பம் தம்மை தெளிவான காட்சியில் வெளிப்படுத்துகிறதையும் நாம் காண்கிறோம்.
இது சிலரைக் குருடாக்கியுள்ளது, ஆனால் நமக்கு, அது சத்தியத்தை வெளிப்படுத்தியுள்ளது. தேவன் மோசேக்கு செய்ததைப் போலவே, அவர் நமக்கு முன்பாக அவருடைய செய்தியாளரை மகிமைப்படுத்தியிருக்கிறார்.
சிறியோரே, நீங்கள் இனி அந்த திரைக்கு பின்னால் இல்லை, தேவன் உங்களுடைய முழு காட்சியில் வந்துள்ளார்.
அது என்ன? தெய்வீகத்தன்மை மானிட சரீரத்தில் திரையிடப்பட்டது. தேவன், ஒரு மனித ரூபத்தில், அவர்களுடைய பார்வையிலிருந்து தம்மை மறைத்துக் கொள்ளுதல். அவர்களால் ஒரு மனிதனை மாத்திரமே பார்த்து, தேவனுடைய தீர்க்கதரிசி தவறுகளைச் செய்கிறார் என்று சொல்ல முடியும், ஜனங்களுக்கு போதிக்க முயற்சிக்கிற இந்த ஒலிநாடாக்களில் தவறுகள் இருக்கின்றன என்று அவரும் தாமே கூறினார். ஆனால் நமக்கு, அவருடைய முன்குறிக்கப்பட்ட மணவாட்டியான, நாம் தேவன் பேசுவதை கேட்டு, அதில் தவறுகளே இல்லை என்பதை புரிந்துகொள்ளுகிறோம்.
ஒருவன் ஒரு மனிதனைப் பார்த்தான், மற்றொருவன் தேவனைப் பார்த்தான். புரிகிறதா? அது தேவன் ஒரு மானிட சரீரித்தில் திரையிடப்பட்டு, இருவர் செய்வதும் சரியென்றே காண்பிக்கிறார், ஆனால் நீங்கள் காணாததில் உங்களுடைய விசுவாசம் உள்ளது.
நம்மைப் பொறுத்தவரை, தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியின் தவறுகள் ஏதேனும் இருந்தால், நாம் அவர்கள் கூறுகிற அவைகளை ஏற்று அவர்களுடைய கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை விசுவாசிப்பதற்கு முன்பே, நாம் தீர்க்கதரிசியினுடைய தவறுகளையே விசுவாசித்து பின்தொடருவோம்.
மோசே இரண்டாவது முறை கன்மலையை அடித்திருக்க வேண்டியதில்லை. அதே ஆவி அந்நாளில், “பாருங்கள், மோசே தவறு செய்கிறான்” என்று கூறியிருக்கும். ஆனால் எப்படியும் தண்ணீர் வந்தது, நீங்கள் தவறு செய்வதாக அழைத்த மோசேயிடமிருந்து வந்த தண்ணீரை குடித்திருக்கவில்லையென்றால், நீங்கள் மரித்துவிட்டிருப்பீர்கள். அது இன்றைக்கும் அவ்ண்ணமாகவே உள்ளது. எவ்வளவோ குற்றச்சாட்டுகள்.
மோசே வார்த்தையை உடையவனாயிருந்தான். இப்பொழுது நினைவிருக்கட்டும், வார்த்தை வெளிப்படுத்தப்பட்ட பிறகு, மோசே மீண்டும் மோசேயாக இருந்தான். புரிகிறதா? ஆனால் அளிக்கப்படும்படியான அந்த வார்த்தை அவனுக்குள் இருந்தபோது, அவன் தேவனாயிருந்தான்; பாருங்கள், அப்பொழுது அவன் மோசேயாயிருக்கவில்லை.
சகோதரன் பிரான்ஹாம் வார்த்தையை உடையவராயிருந்தார். வார்த்தை வெளிப்படுத்தப்பட்ட பிறகு, சகோதரன் பிரான்ஹாம் மீண்டும் சகோதரன் பிரான்ஹாமாயிருந்தார், ஆனால் அந்த வார்த்தை ஒலிநாடாவில் ஜனங்களுக்கு அளிக்கப்படும்படியாக அவருக்குள் இருந்தபோது, அவர் தேவனாயிருந்தார்; அப்பொழுது அவர் சகோதரன் பிரான்ஹாமாக இல்லை. இவ்வாறு நாம் கற்றுக்கொள்கிறோம், ஒலிநாடாக்களில் இருப்பது தேவனுடைய வார்த்தைகள், தேவனுடைய வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை.
நாம் அதை விசுவாசிப்பது மாத்திரமல்ல, ஆனால் அதன் மூலம் ஜீவிக்கிறோம். அவர்கள் அனைவரும் அதைவிட்டு விலகிச் செல்லும்போது, நாம் அதனுடன் தரித்திருக்கிறோம்! நாம் அதை விசுவாசிக்கிறோம்! வேறுயாரும் என்ன செய்தாலும் அல்லது கூறினாலும் பொருட்படுத்தாமல், நாம் அதை விசுவாசித்து, அதன்பின்னர் அதன் பேரில் செயல்படுகிறோம். நீங்கள் அவ்வாறு செயல்படவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் அதை விசுவாசிக்கிறதில்லை.
எனவே நான், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கூறுகிறேன்: ஒரு காரியத்தையும் நீங்கள் கூட்டவோ, எடுத்துப்போடவோ, உங்களுடைய சொந்தக் கருத்துக்களை அதில் நுழைக்கவோ வேண்டாம், ஒலிநாடாக்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே கூறுங்கள், என்ன செய்யவேண்டுமென்று தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறாரோ, அதை சரியாக அப்படியே நீங்கள் செய்யுங்கள்; அதோடு கூட்டாதீர்கள்!
தேவன் செய்யும்படி நமக்கு கட்டளையிட்டிருக்கிறபடியால் இயங்கு பொத்தானை அழுத்தி ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசியுங்கள். இது தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசிக் கொண்டிருக்கிறதாயுள்ளது.
தேவன் திரையிட்டுக்கொள்வதனால், தம்மை அதே அக்கினியினால், அதே அக்கினி ஸ்தம்பத்தினால் இறங்கி வந்து திரையிட்டுக் கொள்வதனால், மீண்டும் திரையிட்டு மோசையை ரூபகாரப்படுத்தினார். அப்பொழுதிலிருந்து-இருந்து…அவர்களிடத்திலிருந்து, எனவே அவர்களால் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே கேட்க முடிந்தது. உங்களுக்கு இது புரிகிறதா? வார்த்தையை மாத்திரம், அவர்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டனர். ஏனென்றால், மோசே அவர்களுக்கு, ஜீவிக்கிற வார்த்தையாய் இருந்தான்.
தேவன் தம்முடைய திட்டத்தை மாற்றுகிறதில்லை, அவரால் மாற்ற முடியாது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாய் இருக்கிறார். இதனால், நம்மைப் பொறுத்தவரை, அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரான்ஹாம் நம்முடைய தேவசத்தமாயும், நம்முடைய நாளுக்கான ஜீவனுள்ள வார்த்தையாயுமிருக்கிறார்.
இப்பொழுது அது நமக்கு வெறும் எழுதப்பட்ட வார்த்தை அல்ல, அது மெய்மையாயுள்ளது. நாம் அவருக்குள் இருக்கிறோம். இப்பொழுது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் அவரை காண்கிறோம். இப்பொழுது நாம் அவரை, வார்த்தையாக, தம்மை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். அது அங்கு வெளியே, மறைக்கப்பட்டுள்ளது, காரணம் (ஏன்?) அது மானிட சரீரத்தில் திரையிடப்பட்டுள்ளது. புரிகிறதா?
என்னவாயிருந்தாலும், அவர்கள் அதைப் பார்ப்பதில்லை. ஏன்? அது அவர்களுக்கு அனுப்பப்படவில்லை.
நீங்கள் அதைப் பார்ப்பதால், நீங்கள் யார் என்று அவர் மீண்டும் ஒருமுறை உங்களிடத்தில் சொல்வதைக் கேட்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? அவர் மகிமையின் பாதுகாப்பு அரண்களிலிருந்து கீழே நோக்கி பார்த்து, உங்களைக் காணும்போது, அவர் யாரைக் காண்கிறார்?
- வார்த்தை வெளிப்பட்டதை நான் காண்கிறேன். இந்தக் கடைசி நாட்களில் அவர் என்ன செய்வேன் என்று கூறினாரோ, அது வளருவதை நான் காண்கிறேன். அந்த முதிர்ச்சியடைந்த வார்த்தையிலிருந்து வரும் ஷெகினா அப்பத்தை, அதை விசுவாசிக்கிற, பிள்ளைகள் புசிப்பதை நான் காண்கிறேன். ஆமென்!
- நீங்கள் அவரை மறைக்கும் திரையாயிருக்கின்றபடியால், அப்பொழுது நாம் அவருடைய பாகமாகிவிடுகின்றோம். ஏனெனில். கிறிஸ்து தேவனுடையவராயிருந்தது போல, நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும் வரை, அவருடைய பாகமாய் இருக்கிறீர்கள். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்ததினால், அவரை தேவனாக்கினார். கிறிஸ்து உங்களுக்குள்ளாக, மகிமையின் நம்பிக்கையாக இருக்கின்றபடியால், நீங்கள் கிறிஸ்துவின் பாகமாகிவிடுகிறீர்கள்.
- "நீங்கள்," அது, "நீங்கள் எழுதப்பட்ட நிரூபங்கள்" அல்லது, "நீங்கள் எழுதப்பட்டு, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை," என்று கூறப்பட்டுள்ளது, அதனுடன் ஒன்றையும் கூட்ட முடியாது. "நான் ஒரு எழுதப்பட்ட நிரூபம்" என்று நீங்கள் கூறிவிட்டு, ஏற்கனவே எழுதியுள்ளதைத் தவிர வேறு எந்தவிதமாகவும் ஜீவிக்க முடியாது, ஏனெனில் எதையும் கூட்டவோ அல்லது எடுத்துப்போடவோ முடியாது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம். அவர் நம்மைப் பார்க்கிறார். நாம் அவரைப் பார்க்கிறோம். நாம் இந்நாளில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய வார்த்தையாயிருக்கிறோம்.
நாங்கள் இந்த நாளில் ஜீவிக்க வேண்டிய வார்த்தையை எங்களிடம் பேசுகிற, தேவன் எங்களுக்கு முன்பாக நிற்கிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ஜெபர்சன்வில் நேரப்படி, 12:00 மணிக்கு, எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள். இது ஷெகினா மகிமை நம்மை முதிர்ச்சியடையச் செய்கிறதாயிருக்கிறது. விசுவாசிகளுக்கான சமுகத்தப்பம்.
தேவன் திரைநீக்கப்படுதல் 64-0614M
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
மத்தேயு 24:24
பரி. லூக்கா 17: 28-29
பரி. யோவான் 14:14
1 கொரிந்தியர் 12:13
2 கொரிந்தியர் 3:6 – 2 கொரிந்தியர் 4:3
பிலிப்பியர் 2:1-8
1 தீமோத்தேயு 3:16
எபிரெயர் 13:8
வெளிப்படுத்தின விசேஷம் 10:7 & 19:13 யாத்திராகமம் 19 & 20, அதிகாரங்கள்
யோவேல் 2:28
மல்கியா 4:5