ஞாயிறு
03 ஏப்ரல் 2022
63-0623E
அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு

பயணிப்போரே,

தேவனுக்கு மகிமை, என்னே ஒரு நாளில் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று ஒவ்வொரு செயலாலும் நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு செய்தியை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் பூமியில் இருந்தபோது அவர் செய்த அதே காரியங்களை அது செய்திருக்கிறது; வியாதியஸ்தர்களை குணப்படுத்தினார், மனதின் எண்ணங்களை அறிந்திருந்தார், நடக்கவிருக்கும் காரியங்களை அறிவித்து, மரித்தோரை எழுப்பினார், ஒவ்வொரு முறையும், அது பரிபூரணமானதாயிருந்து வந்துள்ளது.

மலையின் உச்சியில் இருந்த மண்ணையெல்லாம் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. பாறையைத் தவிர வேறு எதுவும் விடப்பட்டிருக்கவில்லை. பாறையின் மீது இரகசியமான எழுத்து இருந்தது, எனவே அவருடைய மணவாட்டிக்கு எழுதப்பட்டதை வியாக்கினிப்பதற்கு அவருடைய வல்லமையான தீர்க்கதரிசியை தேவன் நமக்கு அனுப்பினார். இப்போது வேதம் முழுமையாக வியாக்கியானிக்கப்பட்டுள்ளது.

அவர் தம்முடைய பலமுள்ள தூதனை மலையின் மீது அழைத்துச் சென்று, கர்த்தருடைய பட்டயத்தை அவருடைய கரத்தில் வைத்தார். அவருடைய தூதன் அந்த மலையின் உச்சியை வெட்டிப் பிளந்தார். அதன் உட்புறத்தில் வெள்ளைப் பாறை, பளிங்கு போல் தீட்டப்பட்ட கருங்கல்லில் ஏதுமே எழுதப்பட்டிருக்கவில்லை.

அவர் மேற்கு நோக்கிச் செல்லும்போது இதைப் நோக்கிப் பார்க்கும்படிக்கு நம்மிடத்தில் சொன்னார். பின்னர் அவர் ஏழு தூதர்களுக்கு மத்தியில் எடுத்துக் கொள்ளப்பட்டு, திரும்பி வந்து, பாறையில் எழுதப்படாத அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்தினார்.

“இவர் என்னுடைய ஊழியக்காரன், மோசே வழிநடத்தியது போல், இவரும் மக்களை வழிநடத்தத்தக்கதாக இக்காலத்திற்குரிய தீர்க்கதரிசியாக இருக்கும்படி அவரை நான் அழைத்திருக்கிறேன். வார்த்தையைப் பேசி எதையும் உருவாக்க அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.” அது மோசே வண்டுகள் ஏற்படும்படி பேசியதுபோல் உள்ளது ஆகும். ஏற்கனவே சம்பவித்த, அணில்கள் மற்றும் காரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டதைப் பற்றி நாம் அறிவோம். எளிமையான ஹேட்டிரைட், அவள் வீட்டில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

வி-ல்-லி-ய-ம் ம-ரி-ய-ன் பி-ரா-ன்-ஹா-ம் என்ற தேவனுடைய மனிதனையே, அவர் இன்றைக்கு தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தெரிந்துகொண்டார். அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மாம்சத்தில் வந்தபோது பேசியதைப் போல நம்மிடம் பேச அவர் தெரிந்துகொண்ட மாம்ச சரீரம். ஒவ்வொரு வேதவாக்கியமும் அதை நிரூபிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பொழுது அவர் யாராயிருந்தார், அவர் யாராயிருக்கிறார், நாம் யாராயிருக்கிறோம் என்பதைக் குறித்த உண்மையான வெளிப்பாட்டைப் பெற்றுள்ளோம் என்ற அப்படிப்பட்ட ஒரு உறுதி நமக்கு உண்டு: அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட இனிய இருதயமான மணவாட்டி.

அவருடைய வார்த்தையுடன் தரித்திருப்பதனால் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். இது நமக்கு அத்தகைய சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அது நமக்கு என்னவென்று பொருள்படுகிறது என்பதை வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது.

அங்கே வித்தியாசமான ஒன்று இருந்ததை நாம் எப்பொழுதும் நம் இருதயத்திலும் ஆத்துமாவிலும் ஆழமாக அறிந்திருக்கிறோம். நாம் பாவத்தில் இருந்தபோதும் கூட, நம்மால் விளக்க முடியாத ஏதோ ஒன்று இருந்தது என்பதை நாம் அறிந்திருந்தோம், ஆனால் அது அங்கேயே இருந்தது. இப்பொழுது நமக்குத் தெரியும். இதற்கு முன்பு நாம் இதைப் போல் ஒருபோதும் உணர்ந்ததில்லை, இனி எந்த சந்தேகங்களும் இல்லை, வியப்புமில்லை, எந்தக் கேள்வியும் இல்லை, இது நம் ஆத்துமாவில் பொறிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. தேவனுக்கே மகிமை!!

இவை அனைத்தும் நிகழும் வரை ஒழிந்துபோகாத தலைமுறையாக நாம் இருக்கிறோம். நம்முடைய கண்களுக்கு முன்பாக நடக்கும் துரோகத்தை பார்த்துக்கொண்டிருக்கும் தலைமுறையாயும் நாம் இருக்கிறோம். வேளையோ சமீபமாயிருக்கிறது. அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிவப்பு விளக்கு இங்கே உள்ளது. அவருடைய கடைசி எச்சரிக்கை விடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மரணமும் அழிவும் நம் யாவரையும் சுற்றியே இருக்கிறது. நாம் சோதோம் கொமோராவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அசுத்தம், பாவம், மனிதனுடைய இருதயம் பயத்தால் சோர்ந்து போய்க்கொண்டிருக்கிறது, அணுகுண்டுகள், தேசங்களுக்கிடையே தத்தளிப்பும் உண்டாயிருக்க, தேவன் தாமே, பயப்பட வேண்டாம், நீங்கள் என்னுடைய இனிய இருதயமாயிருக்கிறீர்கள் என்று நம்மிடத்தில் சொல்லுகிறபடியால், நாம் முழு நேரமும் ஒன்றுபட்டு, உன்னதங்களிலே ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்கு ஒன்றுமே சம்பவிக்க முடியாது. நீங்கள் என்னுடைய மணவாட்டி என்று நான் உங்களிடத்தில் சொல்லி வழிநெடுக உங்களிடத்தில் பேசும்போது உங்களுடைய இருதயங்கள் உங்களுக்குள்ளாக கொழுந்துவிட்டு எரியட்டும்.

ஒரு இரைச்சல் உண்டாக்கிக் கொண்டிருக்கிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள். கை காட்டி கீழே இறக்கப்பட்டுள்ளது. சிவப்பு விளக்கு பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது. நீங்கள் எங்களுடன் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று எதிர்பாரத்துக் கொண்டிருந்தால், நீங்கள் அந்த வேர்க்கடலைப் பையை கீழே எறிந்துவிட்டு, உங்கள் பேச்சை நிறுத்திவிட்டு, உங்கள் கைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு, ஆயத்தமாகுங்கள், இல்லையென்றால் நீங்கள் விடப்படுவீர்கள், 'ஏனென்றால் அவர் உள்ளூரில் சில நிமிடங்கள் மட்டுமே நிற்பார். அவர் பேச வருகிறார்: அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிவப்பு விளக்கு 63-0623E .

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

செய்திக்கு முன்னர் படிப்பதற்கான வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 5:28 / 22:20 / 24-ம் அதிகாரம்
2 தீமோத்தேயு 4-வது அதிகாரம்
யூதா 1:7
ஆதியாகமம் 6-ம் அதிகாரம்