ஞாயிறு
07 ஜனவரி 2024
63-1110M
இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள்

அன்பான பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்களே,

தேவன் நம்முடைய நாளில் வந்து, மனித மாம்சத்தில், வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்ற மனிதனில் தன்னை வெளிப்படுத்தினார், அதனால் அவரால் தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற முடிந்தது. அதுவே நம்முடைய நாளில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாயுள்ளது.

அந்த சத்தத்தைக் கேட்பதும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதுமே இன்றைக்கு தேவன் அருளியிருக்கிற ஒரே வழியாயுள்ளது. அவர் தம்முடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட பல மனிதர்களை உலகிற்கு அனுப்பினார், ஆனால் அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தவும் அவருடைய மணவாட்டியை வழிநடத்தவும் ஒரே ஒரு மனிதனை மட்டுமே அனுப்பி அவன் மூலமாகப் பேசினார்.

அவர் தம்முடைய திட்டத்தை அல்லது காரியங்களை செய்யும் முறையை ஒருபோதும் மாற்றுவதில்லை. அவர் முதல் முறை செய்த விதமாகவே, அவர் அதை ஒவ்வொரு முறையும் செய்கிறார். அவர் தாமே தம்முடைய ஜனங்களை அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாக வழிநடத்துகிறார்.

நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டி என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள், பிசாசு எதையாவது செய்து அல்லது கூறி உங்களிடத்தில் இருந்து அதை பறித்துக் கொள்ளவே முடியாது, அவ்வாறு எதுவுமேயில்லை! உலகத் தோற்றத்திற்கு முன்பே அவர் உங்களை முன்குறித்தார். அப்பொழுதே அவர் உங்களை அறிந்திருந்தார், நீங்கள் அவரோடு இருந்தீர்கள். அவர் உங்களுடைய பெயரை அறிந்திருந்தார். அவர் உங்களைக் குறித்த அனைத்தையும் அறிந்திருந்தார். உங்களுடைய ஏற்ற தாழ்வுகளை அவர் அறிந்திருந்தார். அவர் உங்களுடைய தோல்விகளை, உங்களுடைய தவறுகளை அறிந்திருந்தார், அவர் அப்பொழுதும் உங்களை நேசித்து, நீங்கள் அவருடைய ஒரு பாகமாக இருந்ததற்காக உங்களைத் தெரிந்துகொண்டார்.

உங்களுடைய ஆத்துமா அவருடைய வார்த்தையை மட்டுமே போஷிக்க முடியும். அவருடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவும் உங்களைத் திருப்திப்படுத்த முடியாது. நீங்கள் அவருடைய வார்த்தையைப் படித்து அவரை தியானிக்க விரும்பி, உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிக்கிறீர்கள். அவருடைய சத்தம் உங்களிடம் நேரடியாகப் பேசுவதை நீங்கள் கேட்கும்போது, அது உங்களை காலத்தின் திரைக்கு அப்பால் உயர்த்துகிறது. ஏனென்றால் அவர் உங்களிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசி, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தி, நீங்கள் என்னுடைய மணவாட்டி என்று உங்களை நினைப்பூட்டுகிறபொழுது, நீங்கள் அவரோடு உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள்.

பிசாசு உங்களைத் தொடர்ந்து தாக்கலாம். நீங்கள் சில சமயங்களில் மிகவும் மட்டமான நிலையையடைந்து, நீங்கள் ஒரு முழுமையான தோல்வியை உணரலாம்; நீங்கள் எவருமே தவறிப்போகாது அளவிற்கு அவரிடத்தில் தவறிப்போயிருக்கிறதை போல் உணர்கிறீர்கள். நீங்கள் மிக மோசமாகியும், எங்கோ, உங்கள் ஆத்துமாவின் ஆழத்தில், அந்த அமர்ந்த மெல்லிய சத்தம்: “உங்களை என்னிடத்திலிருந்து எதுவுமே பிரிக்க முடியாது, நீங்கள் என்னுடைய வார்த்தையாக இருக்கிறீர்கள், நானே உங்களுடைய பெயரை என்னுடைய ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதினேன்” என்று உங்களிடத்தில் சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள்.

இன்று உங்களை ஊக்குவிக்க நான் என்ன சொல்ல முடியும்?

வார்த்தையில் தரித்திருங்கள். ஒவ்வொரு நாளும் இயங்கு பொத்தானை அழுத்தி கர்த்தர் உரைக்கிறதாவது என்ற தேவனுடைய சத்தம்; நான் உன்னை என்னுடைய வார்த்தையோடு ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறேன், உன்னால் எந்த காரியத்தையும் ஜெயங்கொள்ள முடியும், ஏனென்றால் என்னுடைய வார்த்தை உனக்குள்ளாக ஜீவித்து வாசம் செய்கிறது. நான் உனக்கு நிரூபித்திருக்கிறேன், உன்னிடம் பரிபூரண விசுவாசம் உள்ளது. நீ அடையாளத்தை உபயோகித்துள்ளாய், அது உன்னை பதறலில் ஆழ்த்தியுள்ளது. நான் என் வார்த்தைக்குப் பின்னால் நிற்பேன். நான் செய்வேன் என்று சொன்னதைச் செய்வேன்” என்று உங்களிடத்தில் சொல்லுகிறதைக் கேட்கிறீர்கள்.

ஒலிநாடாக்களில் அவர் நம்மிடம் பேசும் அவருடைய வார்த்தைகள் எவ்வளவு அற்புதமானவை. அது ஏதோ ஒரு மனிதனோ, நமக்கு மத்தியில் இருக்கிற ஒரு மாம்சப்பிரகாரமான மனிதனோ அல்ல என்பதை நாம் அறிவோம். இது நித்திய தேவன் நம்மிடம், அவருடைய மணவாட்டியிடம் பேசுகிறார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 63-1110M இப்பொழுது காவலிலுள்ள ஆத்மாக்கள்; என்ற செய்தியை அந்த அமர்ந்த மெல்லிய சத்தம் பேசுவதை நாங்கள் ஒன்று கூடி கேட்க போகிறபடியால், மணவாட்டியுடன் சேர்ந்துகொள்ள நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

ஆதியாகமம் 15:16
பரி. மத்தேயு 23:27-34
பரி. யோவான் 4:23-24 / 6:49 / 14:12
1 பேதுரு 3:18-22
2 பேதுரு 2:4-5
யூதா 1:5-6