ஞாயிறு
27 மார்ச் 2022
63-0623M
இடைவெளியில் நிற்றல்

அன்பான உண்மையுள்ளவர்களே,

இந்த கடந்த வாரங்கள் நம் எல்லோருடைய ஜீவியங்களிலும் மிகவும் மகிமையான நேரமாக இருந்து வந்தது. தேவன் ஏழு முத்திரைகளை வெளிப்படுத்துவதைக் கேட்பது, உலகெங்கிலும் உள்ள அவருடைய மணவாடியுடன் ஐக்கியமாக இருக்கும்படியான மிகச் சிறந்த சிறப்பம்சங்களில் ஒன்றாயிருந்தது.

நாம் யாவரும் ஒன்று சேர்ந்து என்ன கேட்டுக்கொண்டிருந்தோம்?

“அந்த கூர்நுனி கோபுரத்தின் உள்ளில் ஒரு வெண்பாறை உண்டாயிருந்தது. அதில் ஒன்றுமே எழுதப்படவில்லை.” ஆகவே தான் இத்தூதர்களின் செய்தியோடு பொருந்தத்தக்கதாய், நான் மேற்குக்குச் சென்று, மறுபடியும் வந்து சபைக்கு அதை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று.

அவர் எழுதப்படாததைக் கூட நமக்கு வெளிப்படுத்தும்படிக்கு திரும்பி வர, அந்த 7 தூதர்ளுடன் தொடர்புகொள்வதற்கு மேற்கு நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது; ஆனால் இப்பொழுது, வெளிப்படுத்துதல் மூலம், நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, நமக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை அளித்துக்கொண்டிருக்கிறது.

இந்த செய்திகளை நாம் வாழ்நாள் முழுவதும் கேட்டிருக்கிறோம், ஆனால் இப்போது அவை முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன; இப்பொழுதே அந்த நாள், இப்பொழுதே அந்த நேரம். உலகத்திலும், இந்தச் செய்தியிலும், அவர் நமக்கு சம்பவிக்கப்போவதாயிருந்தைக் குறித்துச் சொன்னதையே நாம் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டுமிருக்கிறோம், அது இப்போது நம்முடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்படுகிறது.

நம்முடைய 7-ம் தூதன் பண்டைய தீர்க்கதரிசிகளைப் போல ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரா? இல்லை, அவருக்கு முன் இருந்த எல்லா தீர்க்கதரிசிகளையும் விட மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு அவர் அழைக்கப்பட்டார். ஏனென்றால், இது 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் செய்ததுபோல மானிட சரீரத்தில் மனுஷ குமாரன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்ததாகும். நம்முடைய புதிய பரலோக வீட்டிற்கு மணவாட்டியை வழிநடத்த நம்முடைய தீர்க்கதரிசி அழைக்கப்பட்டார், பின்னர் அவர் நம்மை கர்த்தரிடத்தில் அறிமுகப்படுத்துவார்.

அவருடைய ஊழியம் மோசேயின் ஜீவியத்திற்கு மிகச் சரியான மாதிரியாய் அமைந்திருந்ததாக அவர் நம்மிடம் கூறினார். மோசே அக்கினி ஸ்தம்பத்தை பின்தொடர்ந்து தன்னுடைய பயணத்தை மேற்கொண்டிருந்தபோது, மனிதர்கள் எழும்பி அவரை எதிர்த்தனர். இந்த மனிதரும் அழைக்கப்பட்டு, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லும் தங்களுடைய பாதையில் இருந்தனர். அவர்கள் மோசே தன்னை மிஞ்சினவனாகக் காண்பித்துக் கொள்கிறான் என்றும்; அவன் ஒருவன் மாத்திரமே அழைக்கப்பட்டு பரிசுத்தமாயிருக்கவில்லை, அவர்களும் கூட பரிசுத்தமாயிருந்தார்கள் என்றும், அவர்களும் கூட ஏதாவது பிரசங்கிக்க வேண்டியிருந்தது என்றும் கூறியதின் மூலமே அவனுக்கு சவாலிட்டனர்.

அவர்கள் பரிசுத்த மனிதராயிருந்தனர் என்றும், அவர்களும் உண்மையிலேயே ஏதாவது செய்ய வேண்டியதாயிருந்து என்றும் அவன் கூறினான், ஆனால் ஜனங்களை வழிநடத்த தேவன் அவனை, மோசேயை, ஒரு மனிதனையே அழைத்திருந்தார்.

அவர்கள் தங்களுடைய ஸ்தானத்தை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் அபிஷேகிக்கப்பட்டிருந்தனர். "மோசேக்கு செவிகொடுங்கள்" என்று ஜனங்களுக்குச் சொல்வதன் மூலம் அவர்கள் செய்யும்படி அழைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டிருந்ததையும் செய்து கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் இன்னும் ஏதாவது அதிகமாக கூற அல்லது மோசே என்ன கூறிக்கொண்டிருந்தார் என்பதை விளக்கிக் கூற விரும்பினர். மோசேக்கு செவிகொடுக்கும்படி ஜனங்களை சுட்டிக்காட்ட அவர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் ஜனங்களை வழிநடத்த விரும்பினர். அவர்கள் செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தைவிட அதிகமாக அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினர்.

நம்முடைய தீர்க்கதரிசி யார், அல்லது அவர் என்ன செய்யும்படி அழைக்கப்பட்டார் என்று உங்கள் மனதில் எப்போதாவது சந்தேகம் இருந்தால், நம்முடைய தீர்க்கதரிசியின் பெயரை பி-ரா-ன்-ஹா-ம் என்று அந்த மலையின் மேல், தேவன் தாமே பூமியின் மேல் என்றென்றுமான ஒரு அடையாளமாக உருவாக்கிய ஒரு மலைத்தொடரைப் பார்க்க நீங்கள் மேற்கு நோக்கி செல்லும்படிக்கு நான் உங்களை அழைக்கிறேன்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி. அவர் உங்களைத் தெரிந்துகொண்டு முன்குறித்தார். அவருடைய வார்த்தை உங்களுக்குள் ஜீவிக்கிறது, வாசம்செய்கிறது. நீங்கள் மாம்சமாக்கப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறீர்கள். அவர் உங்களுக்கு தம்முடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் கொடுத்தார். சாத்தானுக்கு உங்கள் மீது அதிகாரம் இல்லை. அந்த எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான விசுவாசம் உங்களுக்குள் ஜீவிக்கிறது, வாசம்செய்கிறது.

பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மணவாட்டியை இன்றைக்கான தம்முடைய அருளப்பட்ட ஒரே வழியின் மூலம் வழிநடத்திக்கொண்டிருக்கிறார், அவருடைய வார்த்தையை தம்முடைய 7-ம் தூதனான தீர்க்கதரிசி மூலம் உரைத்தார். அந்த தீர்க்கதரிசியே நம்முடைய மேய்ப்பர்.

எந்தவொரு புதிய ஒலிநாடா செய்தியும் கர்த்தர் அதை மாற்றும் வரையில், முதலில் பண்டகசாலையிலிருந்தே வரும் என்று நம்முடைய மேய்ப்பர் நமக்கு வாக்களித்தார். அதற்காகவே அங்கே ஒலிநாடாக்கள் சேமித்து வைக்கப்படும்.

அவர் தனது உதவி போதகர் சகோதரன் நெவிலுக்கும் கூட அறிவுறுத்தினார்; இப்பொழுது அவருடைய கிருபையால், நானும், நாமும் சபையில் என்ன செய்ய வேண்டும்.

எங்கள் அருமை போதகரான சகோதரன் நெவிலுக்கு, நீர் உதவி புரிய நான் மன்றாடுகிறேன். கர்த்தாவே, அவரைக் கிருபையினாலும், வல்லமையினாலும், அறிவினாலும் நிரப்பி, சேகரிக்கப்பட்ட இந்த ஆகாரத்தைக்கொண்டு அவர் தேவனுடைய ஆட்டுக்குட்டிகளைப் போஷிக்க கிருபை செய்யும்.

இந்த ஒலிநாடாக்கள் தீர்க்கதரிசியே மேய்ப்பராயிருக்க அழைக்கப்பட்டவர் என்பவர்களுக்கானது. நீங்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை கேட்க விரும்பினால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி: மணவாட்டிக்காக அருளப்பட்டிருக்கிற சேகரிக்கப்பட்ட ஆகாரமான 63-0623M இடைவெளியில் நிற்றல், என்பதை நாங்கள் கேட்கையில் எங்களுடன் வந்து கேளுங்கள்.

பத்தி எண் 27-லிருந்து நாம் செய்தியைத் தொடங்குவோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

வேத வசனங்கள்

எண்ணாகமம் 16: 3-4