ஞாயிறு
07 ஆகஸ்ட் 2022
64-0614E
வினோதமானவன்

அன்பான ஷெகினா மகிமை மணவாட்டியே,

உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுகூட்டப்பட்டு, அவருடைய செய்தியாளர் மூலம் பேசும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, நாம் யார் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளபடியால், நம்முடைய இருதயங்களும் ஆத்துமாக்களும் எப்படியாய் புதிய உயரங்களுக்கு உயர்த்தப்பட்டன.

இன்றைக்கு அவர் ஷெகினாவுடன் தம்மை, மண்பாண்டங்களில் திரைமறைத்துக்கொள்கிறார். வெளிப்புறமானது ஒரு கூட்ட பரிசுத்த- உருளையர்களாக, பழைய தகசுத் தோல்களாக காணப்படுகிறது, ஆனால் உள்ளே ஷெகினா மகிமையை மறைக்கிறது.

தேவனுக்கு மகிமை! நம்முடைய உட்புறத்தில் ஷெகினா மகிமையை மறைத்துக்கொள்கிறோம். நாம் திரைக்குப் பின்னால் சென்றுவிட்டோம், கிறிஸ்துவை நாம் தெளிவான பார்வையில் பார்க்க முடியும்.

இன்றைக்கு, தேவன் மனிதனில் செயல்பட்டுக்கொண்டிருக்கவில்லை, அவர் மனிதன் மூலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர் இயேசு என்ற ஒரு மனிதனில் செயல்பட்டுக்கொண்டிருந்தார். இப்பொழுதோ, அவர் இந்த நோக்கத்திற்காகத் தெரிந்தெடுத்துள்ள மனிதன் மூலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தேவன், மனித ரூபத்தில்; அவர் தன்னை தேவனுடைய ரூபத்திலிருந்து, மனிதனின் ரூபத்திற்கு மாற்றினார்.

தேவன் அழிவுக்கு முன்பாக, ஆபிரகாமினுடைய மாம்சப்பிரகாரமான சந்ததிக்கு, ஒரு மானிட சரீரத்தின் ரூபத்தில் பிரசன்னமானார், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் திரும்ப வருவதற்கு முன்பு இந்த ராஜரீக சந்ததிக்கு அதே காரியம் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார்.

தேவன் பிரசன்னமாவதாக வாக்களித்தபடியே, அவர் மீண்டும் ஒருமுறை ஒரு மானிட சரீரத்தின் ரூபத்தில் பிரசன்னமாகியிருக்கிறார். அது வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்ற ஒரு மாம்சத்தின் திரைக்குப் பின்னால் மறைந்துள்ள தேவனாகும். நீங்கள் அந்தத் திரைக்குப் பின்னால் சென்று தேவனைப் பார்த்தாலொழிய, மனிதனை அல்ல, நீங்கள் தேவனின் முழு திட்டத்தையும் தவறவிட்டுவிடுவீர்கள்.

சில ஜனங்கள், “நீங்கள் சகோதரன் பிரான்ஹாமை ஒரு தேவனாக்குகிறீர்கள்” என்று கூறுகிறார்கள். சரி, அது சரியான விதமாகத்தான் தென்படுகிறது என்று நாம் கருதுகிறோம். அவர்கள் நம்மை விமர்சிக்க முயற்சிக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். நாம் அதைச் செய்யவில்லை என்பதையும் நாம் அறிவோம். ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்ளவில்லை என்பதையும் கூட நாம் அறிவோம், ஏனென்றால் அவர்கள் தோலின் மறுபக்கத்தில் இருப்பதால், அவர்கள் திரைக்குப் பின்னால் வரவில்லை.

நாம், “சரி, அது தேவனுடைய வார்த்தையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. அது அவ்வாறிக்கிறதா?” என்று தெளிவாகக் கேட்க முடியும். நாம் இழக்கப்படவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்யவே விரும்புகிறோம். நாம் எந்நிலையில் இருந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். நாம் எந்த விதமான கடற்பயணத்தில் உள்ளோம் என்றும், எந்தவிதமான காற்று நமக்கு வீசிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். நம்முடைய திருகு மறைகள் என்னவாயிருக்கின்றன என்பதையும், நம்முடைய திருகாணிகள் என்னவாயிருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் அறிவோம்.

தேவன் உலகில் வெளிப்பட்டபோது, அவர் ஒரு திரைக்குப் பின்னால், இயேசு என்றழைக்கப்பட்ட ஒரு மனிதனின் தோலுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தார். அவர் திரையிடப்பட்டு, மோசே என்றழைக்கப்பட்ட ஒரு மனிதனின் தோலுக்குப் பின்னால் மறைந்துகொண்டிருந்தார், அவர்கள் தேவர்களாயிருந்தனர், தேவனாய் அல்ல; ஆனால் அவர்கள் தேவர்களாயிருந்தனர், ஒரே தேவன், தன்னுடைய முகமூடியை மாற்றிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் அதே காரியத்தை செய்து, இந்த வார்த்தையைக் கொண்டு வந்தார்.

நாம் வார்த்தைக்கும், செய்திக்கும் மற்றும் இந்த மணி நேரத்தின் தீர்க்கதரிசியுடனும் இணைக்கப்பட்டுள்ளோம், அது நம்மை இழுத்து, நம்முடைய பரலோக வீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் உலகிற்கு வினோதமானவர்களாக இருக்கிறோம், ஆனால் தேவன் தம்முடைய மணவாட்டியை இந்த குழப்பத்திலிருந்து, தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக இழுக்கும் ஒரு திருகு மறையாக நம்மை அனுப்பினார். நாம் வார்த்தையினால் இணைக்கப்பட்டுள்ள ஒரு திருகு மறையாய் இருக்கிறோம்.

தேவன், தோலை உடுத்தியுள்ளாரே! அது உலகத்திற்கு ஒரு பைத்தியம் போல தென்படலாம், ஆனால் அதுவோ எல்லா மனிதரையும் அவரண்டை இழுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் செய்தி பரலோகத்திலிருந்து வருகிற மன்னாவாகும், நமக்கான விசுவாசிகளின் ஆகாரமாய் மாத்திரமே உள்ளது, அது அவருடைய மனவாட்டியை அவரண்டை இழுத்துக் கொண்டிருக்கிறது. ஷெகினா மகிமையானது, சமுகத்தப்பத்தின் மேல், அது கெட்டுப்போகாமல் பாதுகாத்தது.

இந்த செய்தியும் அவருடைய செய்தியாளனுமே, இன்றைக்கான தேவன் அருளியுள்ள ஒரு வழியாகும்; தேவன் அதன்மேல் தோலினால் திரையிட்டுக்கொண்டார். இப்பொழுது அக்னி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்ட சுத்தமான தேவனுடைய சத்தத்தை மாத்திரமே போஷிக்கும்படியாக, தேவன் தம்முடைய மணவாட்டியான, நம்மில் தம்மை மறைத்துக்கொண்டிருக்கிறார்.

நாம் ஐந்து வகையான ஊழியத்திற்கு எதிரானவர்கள் அல்ல, எதிரானவர்களல்லவே, தேவன் அவர்களை ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அவர்களை எப்படி வழிநடத்துகிறாரோ அதன்படியே பின்பற்றி செய்து கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பது போலவே நாம் செய்து கொண்டிருக்கிறோம், மேலும் அவர் நம்மை ஒலிநாடாக்களோடு மாத்திரமே தரித்திருக்கும்படி வழிகாட்டிக்கொண்டும் வழிநடத்திக்கொண்டுமிருக்கிறார்.

ஆகையால், இப்பொழுது, ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேளுங்கள். அதைப் பற்றிக்கொள்ளுங்கள். மேலும்-மேலும் இதை நீங்கள் ஒலிநாடாக்களிலிருந்து எடுத்தாலோ, அல்லது எந்தக் காரியமாயினும், ஒலிநாடாக்களிலுள்ள போதனையில் நிலை கொண்டிருங்கள். ஒலிநாடாக்கள் கூறுவதைத்தவிர வேறொன்றையும் கூறாதீர்கள். சரியாக ஒலிநாடாக்கள் கூறுவதை மாத்திரம் அப்படியே சொல்லுங்கள்.

எங்களைப் பொறுத்தவரை, கேட்பதற்கான ஒரே வழி: “ஒவ்வொரு வார்த்தையுமே, ஒலிநாடாக்கள் கூறுவதை தவிர வேறொன்றும் இல்லை,” “ஒலிநாடாக்கள் என்ன கூறுகின்றன என்பதை சரியாக,” இயங்கு பொத்தானை அழுத்தி அந்த ஒலிநாடாக்களை கேட்பதேயாகும்.

எனவே, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, வினோதமானவன் 64-0614E என்ற செய்தியை நாங்கள் கேட்கும்போது, ஒலிநாடாக்கள் என்ன கூறுகின்றன என்பதை நீங்கள் வந்து கேட்டு, எங்களோடு வினோதமானவர்களாக மாற, நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

I கொரிந்தியர் 1:18-25
II கொரிந்தியர் 12:11