
தீர்க்கதரிசிக்கு அன்பான நண்பர்களே,
தேவனுடைய சத்தம் நம்மிடம் பேசுவதைக் கேட்க இந்த ஞாயிற்றுக்கிழமை நாம் ஒன்றுகூடுவதைப் பற்றி நினைக்கும் போது என் இருதயம் உற்சாகத்தினால் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தில் இருப்பதும், அவர் தம்முடைய மணவாட்டியினிடத்தில், உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதை கேட்பதைக் காட்டிலும் பெரிதான சந்தோஷம் என் ஜீவியத்தில் எதுவுமே இல்லை.
இந்த உலகில் எனக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொண்டு வருகிறது, அவருடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவுமே இல்லை. "காலை வணக்கம் நண்பர்களே" என்று நான் கேட்கும்போது, அது நித்திய ஜீவனின் வார்த்தைகளை என்னிடத்தில் பேசுகிறபடியால், நான் வசதியாக அமர்ந்து, இளைப்பாறி, அந்த ஆர்ட்டீசியன் ஊற்றிலிருந்து பருகுகிறேன். தேவன் அவரை எனக்கும் உங்களுக்கும் அனுப்பினார் என்பதை, சிந்தித்துப் பார்க்க வேண்டும், நாம் தேவனுடைய தீர்க்கதரிசி மற்றும் செய்தியாளனின் நண்பர்களாய் இருக்கிறோம்.
அவர் நம்முடைய வருங்கால பரலோக வீட்டைக் குறித்த யாவற்றையும் நமக்கு சொல்லும்படி தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பி மிக அதிகமாய் நம்மை நேசிக்கிறார். யோவானிடத்தில் சொல்லப்பட்டதை காட்டிலும் அதிகமான விவரத்தோடு கூட, அதைப் பற்றின எல்லாவற்றையும் நம்மிடத்தில் கூற அவர் மிகவும் உற்சாகமடைந்தார். அவர் எங்களுக்கு வெளிப்படுத்தினார், அது ஒரு சதுரமாக வடிவமைக்கப்பட்ட நகரம் அல்ல, ஆனால் ஒரு கூர்நுனி கோபுர நகரம், அங்கே ஆட்டுக்குட்டியானவர் அதன் உச்சியின் மேலிருந்து உலகத்தின் ஒளியாய் இருப்பார்.
வீதிகள் பொன்னினால் உண்டாக்கப்பட்டவை என்றும், நாம் ஜீவிக்கும் வீடுகளோ தெளிவான பளிங்குபோன்ற பொன்னாயிருக்கும் என்றும் அவர் நம்மை தெரிந்துகொள்ளச் செய்கிறார். அவர் ஒவ்வொரு சிறிய காரியத்தையும் சரியாக நம்முடைய மனதைத் தொடும் வண்ணமாகவே, நாம் விரும்பும் விதமாகவே அமைத்துக்கொண்டிருக்கிறார். அவர் எதையும் செய்யாமல் விட்டுவிடவில்லை. தெய்வீக கட்டிடக் கலைஞர் நமக்காக, அவருக்கு பிரியமானவர்களுக்காக, இதை வடிவமைத்துள்ளார்.
ஜீவ விருட்சங்கள் அங்கே இருந்து, பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும். நகரத்தின் வாசல்கள் இரவில் அடைக்கப்படுவதில்லை, ஏனென்றால் அங்கு இரவே கிடையாது, அவரே நம்முடைய ஒளியாக இருப்பார்.
அங்கே யார் இருக்கப்போகிறார்கள்?
நோவா தீர்க்கதரிசியுடன் புதிய பூமியில் யார் வெளியே வந்தார்கள்? அவருடன் பேழைக்குள் சென்றவர்கள். அது சரியா? அவர்கள் தான் வெளியே வருகிறார்கள். புரிகிறதா? நோவாவினுடைய செய்தியின் மூலம் உள்ளே சென்றவர்களே, புதிய பூமியின் தண்ணீர் ஞானஸ்நானத்திற்குப் பிறகு அதில் வெளியே வந்தவர்களாயிருந்தனர்.
என்னுடைய நண்பர்களே, அவர் நம்மைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறாரே! நாம் இன்றைக்கான நம்முடைய பேழையில்; அவருடைய வார்த்தையான, இந்த செய்தியில், நம்முடைய நோவா தீர்க்கதரிசியோடு இருக்கிறோம். அப்பால் உள்ள அந்த தேசத்தில், ஆட்டுக்குட்டியானவரே அங்கே அந்த நகரத்தில் விளக்காயிருக்கிறார், அவர் நம்மை அறிந்துகொள்வார். நாம் அவருடைய ஜனங்களாயும், கிரீடத்தில் உள்ள அவருடைய இரத்தினங்களாயும் இருக்கிறோம். நாம் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து, நான்கு சதுரமாக கட்டப்பட்டுள்ள அந்த நகரத்திற்கு வந்துள்ளோம். அந்த நகரத்திற்காகவே ஆபிரகாம் காத்துக்கொண்டிருந்தான்.
வார்த்தை தன்னை ரூபகாரப்படுத்துவதை நான் காண்கையில், சந்தேகத்திற் கிடமின்றி, அந்த நாளிலே, உலகத்தில் உள்ள எல்லாவற்றைப் பார்க்கிலும் என்னுடைய கிரீடத்தின் இரத்தினங்களாக பிரகாசமாக ஜொலிப்பீர்கள் என்பதை, நான் அறிவேன்.
சந்தேகத்திற்கிடமின்றி நாம் அவருடைய கிரீடத்தின் இரத்தினங்களாக இருக்கிறோம் என்றும், அந்நாளிலே உலகத்தில் உள்ள எல்லாவற்றைப் பார்க்கிலும் பிரகாசமாய் ஜொலிப்போம் என்பதையும், அவர் அறிந்திருந்தார் என்று, தேவனுடைய தீர்க்கதரிசி கூறினதை, நம்மால் கற்பனை செய்து பார்க்கக்கூட துவங்க முடியுமா…அல்லேலூயா...மகிமை...கர்த்தருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம்.
நண்பர்களே, உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுகூடி அமர்ந்து, இந்த ஒலிநாடாக்களில் அவருடைய வார்த்தையைக் கேட்டு, போஷிக்கப்படுவதே, இப்பொழுது அற்புதமாயிருக்கிறது என்று நாம் நினைத்தால், நாம் அவருடன் நகரத்தில் ஜீவிக்கும்போது அது எப்படி இருக்கும்!
தேவனுடைய தீர்க்கதரிசி நம்முடைய அண்டை-வீட்டுக்காரராக இருப்பார். நாம் அவரோடு அந்த மரங்களிலிருந்து புசித்து, அந்த வீதிகளில் நாம் ஒன்றாக நடப்போம். நாம் அந்த நீரூற்றண்டைக்கு அந்தப் பொன்னான வீதிகளில் நடந்து சென்று, அந்த நீரூற்றிலிருந்து பருகி, தேவனுடைய பரதீசியில் நடந்து, தேவ தூதர்கள் பூமியை சுற்றி வட்டமிட்டடிருக்க, கீதங்களைப் பாடுவோம்.
ஓ, அது என்னே ஒரு நாளாயிருக்கும்! அது முழுவதுமே பெருமதிப்புடையது. பாதையோ கரடுமுரடானதாகத் தென்பட்டு, சில சமயங்களில் அது கடினமாகிவிடுகிறது, ஆனால், ஓ, நான் அவரைக் காணும்போது அது மிக அற்பமானதாக, மிக அற்பமானதாகவே இருக்கும். அவர்கள் கூறியுள்ள காரியங்கள் மற்றும் மோசமான பெயர்கள் என்னவாயிருந்தாலும், நான் அவரை அந்த அழகான, அழகான தேவனுடைய நகரத்தில் காணும்போது அது என்னவாயிருக்கும்?
நண்பர்களே, அந்த நகரத்தைப் பார்க்கவும், அதில் இருக்கவும் நான் மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறேன். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவரோடும், அவருடைய தீர்க்கதரிசியோடும், உங்கள் ஒவ்வொருவரோடும் அங்கே இருக்க வாஞ்சிக்கிறேன்.
நான் அந்த அழகான நகரத்திற்கு புறப்பட ஆயத்தமாயுள்ளேன்
என்னுடைய கர்த்தர் தமக்கு சொந்தமானவர்களுக்காக ஆயத்தம் செய்திருக்கிற
அந்த அழகான நகரத்திற்கு நான் போக புறப்பட்டுவிட்டேன்;
அங்கே எல்லா காலங்களிலும் மீட்கப்பட்டோர்,
வெள்ளை சிங்காசனத்தை சுற்றி "மகிமை!" என்று பாடுவரே.
பரலோகம் செல்ல நான் அநேக சமயங்களில் மிகுந்த ஆவல் கொண்டவனாய் இருக்கிறேன்,
அதனுடைய மகிமைகளை நான் அங்கே நின்று பார்ப்பேன்;
அந்த அழகான பொன்னான நகரத்தில்
என்னுடைய இரட்சகரை நான் காணும் போது அது என்னே ஒரு சந்தோஷமாக இருக்கும்!
தீர்க்கதரிசியின் நண்பர்களே, பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு 64-0802 என்ற செய்தியைக் குறித்த எல்லாவற்றையும் அவர் எங்களிடம் பேசுவதை நாங்கள் கேட்கப்போகிறபடியால், ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு தேவனுடைய சத்தம் எங்களிடம் பேசுவதைக் கேட்க அவருடைய சிங்காசனத்தை சுற்றி நாங்கள் ஒன்றுகூடுகையில், எங்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு நான் உலகத்திலுள்ள எல்லோரையும் அழைக்கிறேன். இது உங்களுடைய ஜீவியத்தில் மிக மகிழ்ச்சியான ஒரு முக்கிய நாளாயிருக்கும் என்பதை, என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:
பரி.மத்தேயு 19:28
பரி. யோவான் 14: 1-3
எபேசியர் 1:10
2 பேதுரு 2:5-6 / 3-வது அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 2:7 / 6:14 / 21: 1-14
லேவியராகமம் 23:36
ஏசாயா 4-வது அதிகாரம் / 28:10 / 65:17-25 மல்கியா 3:6