
என்னுடைய அன்பான இனிய இருதயமே,
நான் என்னுடைய தூதன் மூலமாக உங்களிடம் பேசும்போது, நீங்கள் அனைவரும் என் சத்தத்தின் பேரில் ஒன்று கூடி, என் வார்த்தையைக் கேட்ப்பதை நான் காணும்போது, என் இருதயம் பொங்கி வழிகிறது.
உனக்கு நான் சத்தமாய் இருக்கும்படி தெரிந்துகொண்ட ஒருவரை குறித்த வெளிப்பாட்டை நீ பெற்றிருப்பதை அறிந்துகொள்வது என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. தீர்க்கதரிசி உரைத்த ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பது, அவருடைய வார்த்தையாயில்லாமல், உனக்கு என்னுடைய வார்த்தையாகவே இருக்கிறது.
இது எனக்கு மிகவும் முக்கியமானதாயிருந்தது, நான் அதை உனக்காக பதிவுசெய்து சேமித்து வைத்திருந்தேன், எனவே நீ அதை மீண்டும் மீண்டும் கேட்க முடியும். என் இருதயத்திலிருந்து நான் கூறினதை நீ மறக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பவில்லை. நாம் ஒன்று சேர்ந்திருக்கும்படியாக, உனக்குத் தேவையான பரிபூரண விசுவாசத்தை நான் உனக்கு வழங்குவதற்கான ஒரே வழி இதுதான் என்று எனக்குத் தெரியும்.
என் மணவாட்டியிடம் என் வார்த்தையைப் பேசவும் வெளிப்படுத்தவும் நான் எப்போதும் ஒரு மனிதனைப் பயன்படுத்தியுள்ளேன். நான் மோசேயுடன் செய்ததைப் போலவே. அவன் எதைக் கேட்டுக்கொண்டானோ, அதையே அவன் பெற்றுக்கொண்டான், ஏனென்றால் அவன் என் வார்த்தைகளை மட்டுமே பேசினான். நான் உன்னை ஒரு தேவனாக்குவேன் என்று, நான் அவனிடத்தில் கூட சொன்னேன். நீ ஒரு தேவனாய் இருப்பாய், ஆரோன் உன்னுடைய தீர்க்கதரிசியாக இருப்பான். நான் உன்னுடைய சத்தத்தை உபயோகித்து, நான் உன்னோடு சிருஷ்டிப்பேன். நான் பேசுவேன், ஜனங்கள் அதை மறுதலிக்க முடியாது. நீ என்ன கூறினாலும், நடக்கும்.
இப்பொழுது நீ என்னுடைய வார்த்தையில் பரிபூரண விசுவாசத்தைப் பெற்றுள்ளபடியால், நான் யாரை என் சத்தமாயிருக்க உனக்கு அனுப்பினேன் என்பதை நீ அடையாளங் கண்டுகொள்வது மட்டுமல்லாமல், என் வார்த்தை ஜீவிக்கிறது என்றும், உனக்குள் வாசம் செய்கிறது என்றும் உனக்கு பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது என்பதையும் நீ இப்பொழுது அடையாளங் கண்டு கொள்கிறாய்.
நீ யார் என்று உனக்குத் தெரியும். நீ என்னிலும், என் வார்த்தை உன்னிலும் நிலைத்திருக்கிறது. உனக்கு என்ன வேண்டும் என்று கேள்; அது உனக்கு கொடுக்கப்படும். என் நாமத்தினாலே நீ பிசாசுகளைத் துரத்துவாய்; நான் துரத்துவேன் என்றல்ல, நீ துரத்துவாய். நீ இந்த மலையிடம் சொன்னால்; நான் சொன்னால் என்று அல்ல, நீ இந்த மலையிடம் சொன்னால்.
உன்னுடைய சத்துருவுக்கு உன் மீது எந்த அதிகாரமும் இல்லை. நீயும் என் வார்த்தையும் ஒன்றாயுள்ளது. உன்னுடைய பிள்ளைகளோ அல்லது அன்புக்குரியவர்களோ இருக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இல்லாதிருந்தால், அவர்களை உரிமை கோரவும். இது உன் பேரில் கிரியை செய்திருந்ததானால், அப்பொழுது உன்னில் நிலைத்திருக்கும் என்னுடைய பரிபூரண வார்த்தையில் உள்ள உன்னுடைய பரிபூரண விசுவாசத்தைப் பயன்படுத்து, நீ கேட்பதை நீ பெற்றுக்கொள்ள முடியும்.
ஓ, நீ யார் என்பதை நீ அறிந்து கொள்வதற்காக நான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். என் வார்த்தையைக் கேட்பதனால் உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வதைக் காண்பதற்கே. அந்த நேரம் இறுதியாக வந்துவிட்டது என்றே நான் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன்.
உனக்காக நான் பேசி, சேமித்து வைத்த அந்த பரிபூரண வார்த்தை இன்றைக்கு ஒவ்வொரு விசுவாசிக்கும் என்னுடைய அடையாளமாகும். அது பரிசுத்த ஆவி; இரத்தமோ, இராசயணமோ அல்ல, ஆனால் அது என்னுடைய பரிசுத்த ஆவி, என் வார்த்தை, உன்னில் ஜீவித்து, வாசம் செய்கிறது.
காட்டப்பட வேண்டிய அந்த அடையாளத்தின் வேளையோ சமீபத்துவிட்டது. இரவும் பகலும் நீ அடையாளத்தை உன்னோடு கொண்டு செல்ல வேண்டும்; ஞாயிற்றுக்கிழமை மட்டும் அல்ல, நீ எல்லா நேரத்திலுமே இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க வேண்டும்.
அவர் அடையாளத்தை மாத்திரமே அங்கீகரிக்கின்றார். இதுவே இந்த மணி நேரத்தின் செய்தியாயுள்ளது! இதுவே இந்த நாளின் செய்தியாயுள்ளது, இதுவே இக்காலத்தின் செய்தியாயுள்ளது! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அதை ஏற்றுக்கொள்ளுங்கள்!
அங்கு ஏராளமான செய்திகள் உள்ளன, ஆனால் என்னுடைய சத்தமே இந்த மணிநேரத்தின் செய்தியாயுள்ளது. நீ ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்றுக்கொண்டு, விசுவாசிக்க வேண்டும். இது சாயங்கால நேரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.
நீங்கள் உலகம் முழுவதும், ஒலிநாடாக்களில் கேட்கிறீர்கள், இந்த மணிநேரத்துக்கான அடையாளம் இங்கே உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய ஒரு அடையாளம் உள்ளது, வேறு எந்த நேரத்திலும் அது வந்திருக்க முடியாது.... நீங்கள் இதைப் புரிந்துகொள்கிறீர்களா?
மணவாட்டிக்கான என்னுடைய செய்தியான அடையாளம் 63-0901M என்ற செய்தியை: நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, என்னுடைய மணவாட்டியோடு உங்களுடைய ஜீவியத்திற்கு என்னுடைய அடையாளத்தை பயன்படுத்த வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
ஆதியாகமம் 4:10
யாத்திராகமம் 12-வது அதிகாரம்
யோசுவா 12-வது அதிகாரம்
அப்போஸ்தலர் 16:31 / 19:1-7
ரோமர் 8:1
1 கொரிந்தியர் 12:13
எபேசியர் 2:12 / 4:30
எபிரெயர் 6:4 / 9:11-14 / 10:26-29 / 11:37 / 12:24 / 13:8, 10-20
பரி. யோவான் 14:12