
அன்பான உயரிய விசுவாசமுள்ள மணவாட்டியே,
இது முறையற்ற இலக்கணத்துடன் கூடிய ஒரு எளிமையான கடிதம் என்பதை நான் அறிவேன், ஆனால் நம்முடைய தீர்க்கதரிசி கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசித்து, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றே ஏற்றுக்கொள்கிறோம் என்பதை உலகம் அறிந்ததுகொள்ள நான் விரும்புகிறேன். ஒலிநாடாவில் அவர் ஏதேனும் ஒன்றைக் கூற நாம் கேட்கும்போது, நாம் அதை விசுவாசிக்கிறோம், நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம், அதன்பின்னர் தேவன் தாமே நேரடியாக நம்மிடம் பேசுவதுபோல அதைத் தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொள்கிறோம்.
இது பிரசங்கிக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தையினால் திட்டவட்டமாக ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது இது மனிதனாயிருக்க முடியாது, இது தேவனாயிருக்க வேண்டும்.
இயேசுவானவர் இங்கே இருந்தபோது தோன்றினதான காணக்கூடிய அதே அடையாளங்கள் இன்றைக்கு பூமியில் தோன்றியுள்ளன என்று நாம் விசுவாசிக்கிறோம். பரிசுத்த பவுல் கண்ட அதே அக்கினி ஸ்தம்பம், அதே தன்மையுடன்,நம்முடைய நாளில் வந்து, அதே காரியத்தைச் செய்கிறது. இது தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறதாயுள்ளது:
அவர் தம்மை மேசியாவாக அடையாளங்காட்டின அதே ஆவிக்குரிய அடையாளம், இன்றைக்கும் அவரை அடையாளங்காட்டியுள்ளது. அவர் இன்னமும் மேசியாவாக இருக்கிறாரே!
இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவதாயுள்ளது என்று நீங்கள் விசுவாசித்தால் மாத்திரமே உங்களால் இந்த மகத்தான ஆசீர்வாதங்களைப் பெற முடியும். நீங்கள் அதை விசுவாசிக்காத ஒருவராக இருந்து, "இது கர்த்தருடைய வார்த்தை, இது வெறுமனே சகோதரன் பிரான்ஹாம் பேசுகிறது," என்று அறிவுப்பூர்வமாகவோ அல்லது யாரேனும் உங்களுக்குச் சொல்வதன் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்றால்: அப்படியானால் இது உங்களுக்கானது அல்ல.
மோசே இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய காலத்தில், ஒருவன் இருந்தான், அது மோசே. மீதமுள்ளவர்கள் அந்த செய்தியைப் பின்பற்றினர். புரிகிறதா?
ஆனால் இன்றைக்கு, அந்த விதமாக இதை விசுவாசிக்கிற நமக்கு, நம்முடைய இருதயங்கள் மிகுந்த சந்தோஷத்தினால் நிறைந்து, பொங்கி வழிகிறபடியால், நம்மால் நம்மைக் அடக்கிக்கொள்ள முடியவில்லை.
அவர் நம்மை மீட்டுள்ளார் என்பதை நான் உணருகிறேன். அவருடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் இருக்கின்றன என்பதை நான் உணருகிறேன். நாம் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் மீட்கப்பட்டிருக்கிறோம் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.
இந்தச் செய்தி தேவனுடைய சத்தம் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறது என்றே நாம் விசுவாசிக்கிறபடியால், தேவன் நம்மிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவது போன்றே நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவருடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
நான் இதை இந்த விதமாக கூறுவேனாக, இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இந்த கடைசி நாட்களில் மறுபடியுமாக மாம்சத்தில் தோன்றி அவருடைய சபையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதைத்தான் நம்மில் அநேகர் விசுவாசிக்கிறோம். நானும் உங்களோடு விசுவாசிக்கிறேன்.
நாம் அதை அப்படியே விசுவாசிக்கிறோம், இயேசு கிறிஸ்து மாம்சத்தில் தோன்றி, அவருடைய மணவாட்டியிடம் ஒலிநாடாவின் மூலம் பேசுகிறார்.
ஒவ்வொரு முறையும் நாம் இயங்கு பொத்தானை அழுத்தும்போது நம்முடைய விசுவாசம் புதிய உச்சங்களை அடைகிறது. இது வேறொரு பிரசங்கியார் பேசுவது அல்ல, இது தேவன் தாமே நம்மிடம் பேசிக்கொண்டிருப்பதாகும். நமக்கு 100% சுத்தமான வார்த்தை மாத்திரமே வேண்டும்.
நான் உங்களிடம் ஒன்றை கேட்கட்டும். வில்லியம் மரியன் பிரான்ஹாம் உங்களுடைய மேய்ப்பரா? அவர் தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்ட ஏழாவது தூதனாகிய செய்தியாளனா? அவர் தேவனிடம் செய்யும்படி கேட்டுக்கொண்டதை, தேவன் செய்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் இந்த நாளுக்கான தேவனுடைய சத்தமாயிருந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஞாயிற்றுக்கிழமை வார்த்தைகளால் சொல்ல முடியாதபடி நீங்கள் மீண்டும் ஒருமுறை ஆசீர்வதிக்கப்படப்போகிறீர்கள்.
நீங்கள் ஒலிநாடாக்களைக் கேட்டு, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது கர்த்தர் உரைக்கிறதாவது என்று விசுவாசித்தாலொழிய, உங்களால் வேறெந்த வழியிலும் இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவே முடியாது. தேவன் உங்களிடம் நேரடியாக பேசுகிறார் என்றே அவர் கூறிக்கொண்டிருப்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
நான், உங்களுடைய மேய்ப்பன், உங்களுடைய சகோதரன் என்ற முறையில், எனக்குள்ள விசுவாசத்தைக்கொண்டு, நான் அதை உங்கள் மீது வைக்கும்படி தேவனிடம் வேண்டிக்கொண்டேன். நான் கேட்டுக்கொண்டதை நான் பெற்றுக்கொள்வேன் என்று விசுவாசிக்கிறேன். இப்பொழுது நீங்கள் அதை என்னுடன் சேர்ந்து விசுவாசித்தால்; எனக்குள்ள விசுவாசத்தை, நான் இந்த வேளையில் அதை உங்களுக்குக் அளிக்கிறேன்.
நமக்கு, அவர் நம்முடைய மேய்ப்பர். நம்முடைய மேய்ப்பரான, தேவனுடைய தீர்க்கதரிசியை விட அதிகமான அல்லது பெரிதான விசுவாசம் உலகில் வேறு யாருக்குமே இல்லை. இப்பொழுது தேவனுடைய தீர்க்கதரிசி அவருடைய பெரிதான விசுவாசத்தை நமக்குக் கொடுக்கும்படி தேவனிடம் கேட்டுக்கொண்டார். நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்துடன் விசுவாசித்தால், அது இப்பொழுது உங்களுடைய விசுவாசமாயுள்ளது...மகிமை, நாம் விசுவாசிக்கிறோமே!!! நம்முடைய விசுவாசம் பலவீனமாக இருந்திருக்கலாம், ஆனால் இனி அவ்வாறிருக்காது, ஏனென்றால் இப்பொழுது நாம் அவருடைய விசுவாசத்தை பெற்றுள்ளோம்.
இப்பொழுது, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்களுடைய துன்பத்தையும், உங்களுடைய சுகவீனத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அதனிடம், "நீ போகத்தான் வேண்டும்" என்று கூறுங்கள், ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் வல்லமையோடு, நீங்கள் உங்களுடைய விசுவாசத்தையும், அதனோடு சேர்த்து என்னுடைய விசுவாசத்தையும் பெற்றுள்ளீர்கள், அதை ரூபகாரப்படுத்தி, அவர் இங்கே இருக்கிறார் என்று நீரூபிக்க அவருடைய சர்வவல்லமையானது இங்கே இருக்கிறபடியால், அது உங்களை இந்த நேரத்தில் சுகமாக்கும்.
நீங்கள் எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டு இந்த பெரிதான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதைக் குறித்து நான் என்ன கூற முடியும்? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், உங்களுடைய தேவை எதுவாயிருந்தாலும், நீங்கள் வந்து அதைக் கேட்டு, விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, மணவாட்டியுடன் வந்து கேளுங்கள்: உங்களிலிருக்கிறவர் 63-1110E, என்ற செய்தியைக் குறித்த எல்லாவற்றையும் எங்களிடம் சொல்லி,கர்த்தர் உரைக்கிறதாவது எங்களிடம் பேசப்போகிறபடியால், கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் நாம் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் கேட்போம்.
ஞாயிற்றுக்கிழமை அதே நேரத்தில் எங்களுடன் உங்களால் கேட்க முடியாவிட்டால், பரவாயில்லை, எந்த நேரத்திலும் இயங்கு பொத்தானை அழுத்தி, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது உங்களிடம் பேசுகிற தேவனுடைய சத்தம் என்று விசுவாசித்துக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்