ஞாயிறு
10 செப்டம்பர் 2023
63-0324E
ஏழாம் முத்திரை

அன்புள்ள ஒலிநாடா மணவாட்டியே,

நாம் என்னே ஒரு நாளில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்! என்னே ஒரு மகத்தான நேரம்! இரகசியங்கள், அந்தரங்கங்கள் யாவுமே அனுதினமும் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் கடந்து வந்துள்ளதைப் பார்ப்பது மட்டுமல்லாமல், நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நேரத்தையும் மற்றும் முன்னால் என்ன இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்.

என்ன சம்பவிக்கப்போகிறது என்பது வசனத்திற்கு வசனம் நமக்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் யார், யார் அங்கே இருப்பார்கள், நாமும் கூட என்ன செய்வோம் என்று அவர் தெளிவாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். 1,44,000 யூதர்கள், உபத்திரவத்தால் சுத்திகரிக்கப்பட்ட சபை, திராட்சைத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் நகரத்திற்குள் தங்களுடைய கனத்தையும் மகிமையையும் கொண்டு வருவார்கள்.

ஆனால் அப்பொழுது அது நீங்களாக இருக்காது என்று அவர் நம்மிடம் சொல்கிறார்...ஓ இல்லை, நீ என்னுடைய மணவாட்டி, நீ அந்த நகரத்தில் என்னுடன் இருக்கிறாய். நீ திராட்சைத் தோட்டங்களில் வேலை செய்யப்போவதில்லை, நீ என்னுடைய இனிய இருதயமாயிருக்கிறாய். உன்னுடைய இராஜாவாகிய, என்னோடு நீ என்னுடைய இராணியாயிருக்கிறாய். உலகத் தோற்றத்திற்கு முன்பே நான் தெரிந்துகொண்ட ஐந்தின் ஒரு பாகத்தில் உள்ள நூறில் ஒரு பாகமாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த இடத்தை உங்களுக்காகவே…நீங்கள் அதை விரும்புகிற விதத்தில் நான் ஆயத்தம் செய்தேன்.

அவர் வாரந்தோறும், நாளுக்கு நாள், ஒவ்வொரு மணிநேரமும், அவருடைய அற்புதமான வார்த்தைகள் அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்தி நம்மிடம் பேசுகிறபடியால் நாம் அவருடைய மேஜையைச் சுற்றி ஒன்று கூடுவதை, சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் யார் என்பதையும்; அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதையும்; என்ன இருந்தது, என்ன உள்ளது, என்ன நடக்கப் போகிறது என்பதையும் மீண்டும் மீண்டும் அவர் நமக்குச் சொல்கிறார்.

இது நமக்கு என்னப் பொருட்படுத்துகிறது, அல்லது அவர் இந்தக் காரியங்களை நம்மிடம் பேசுவதை நாம் கேட்கும்போது நாம் எப்படி உணர்கிறோம் என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. நாம் இயங்கு பொத்தானை அழுத்தி, அந்த சத்தத்தைக் கேட்கும்போது, நாம் இந்த உலகத்தை விட்டு வெளியேறி, உடனடியாக அவருடன் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய ஆத்துமாக்கள் ஆறுதலடைகின்றன. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய முழு உள்ளிந்திரியங்களையும் அவருடைய ஆவியால் நிரப்புவதை நாம் உணர்கிறோம். இது விவரிக்கப்பட முடியாத ஒரு சந்தோஷமாக இருக்கிறது. தேவன் நம்மிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு உரைக்கப்பட்ட வார்த்தையையும், அவர் நமக்காகவே உரைத்தார். நாம் எதைக் கேட்க வேண்டும், எப்போது அதைக் கேட்க வேண்டும் என்று சரியாக அவருக்குத் தெரியும்...பலமுறை நாம் அதைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும்... ஒவ்வொரு முறையும் அது நம்முடைய ஆத்துமாவை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது.

தரிசனங்கள், சொப்பனங்கள், கர்த்தர் உரைக்கிறதாவது, காலத்தின் திரைக்கபால், வெள்ளை அங்கிகளில் நம்மைக் கண்டது, மூன்றாம் இழுப்பு, அணில்களைச் சிருஷ்டித்தல், தேவனுடைய பட்டயம் அவருடைய கரத்தில் பரிபூரணமாக பொருந்தியது, சேமித்து வைக்கப்பட்ட ஆகாரம், மேஜையின் தலைப்பகுதியில் அமர வைக்கப்பட்டிருப்பது, இடிமுழக்கங்கள், வல்லமையான தூதர்கள் வந்து அவரை தூக்கிச் சென்றது, அந்த விசேஷித்த ஏழாம் தூதன் அவருக்கு மிக முக்கியமானவராக காணப்பட்டது, பிரான்ஹாம் என்று உச்சரிக்கிற ஏழு மலைச் சிகரங்களின் நித்திய அடையாளம், ஒலிநாடாக்களில் என்ன உள்ளதோ அவைகளை மாத்திரமே கூறுங்கள் என்பதையும், நான் வார்த்தையின் பிழையின்மையைக் கொண்டிருக்கிறேன் என்பதையும், அவர் மிக உன்னத அழைப்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பதையும், நான் உங்களுக்கு என்னுடைய வெளிப்பாட்டைச் சொல்வேன் என்பதையும், நான் உங்களுக்கு தேவ சத்தமாய் இருக்கிறேன், ஒலிநாடா உபதேசத்தோடு தரித்திருங்கள், நான் உங்களை மணவாட்டி என்று அழைக்கப்போகிறேன், இலக்கணமற்ற கொச்சையான வார்த்தைகளில் இவைகளை குறித்து அவர் நமக்கு சொல்லுகிறதை நாம் கேட்க ஒருபோதும் களைப்படைகிறதில்லை…நாம் அவை யாவற்றையுமே விரும்புகிறோம்.

இதுவே என்னுடைய தரிசனம். ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே தேவனுடைய பரிபூரண சித்தமாயும், நிறைவானதாயும் உள்ளது. ஒலிநாடாக்களை இயக்குவது தேவனுடைய பரிபூரண சித்தமாயும், நிறைவானதாயுமுள்ளது. உங்களால் பிரசிங்கிமார்கள், போதகர்கள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், மேய்ப்பர்கள் பேசுவதைக் கேட்க முடியும், ஆனால் ஒலிநாடாக்களோ, நீங்கள் கேட்கக் கூடிய மிக முக்கியமான சத்தமாயும், நிறைவானதாயும், இருக்க வேண்டியதாய் இருக்கிறது. ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் தேவன் தாமே அவருக்கு செவி கொடுங்கள் என்று கூறின ஒரே சத்தமாயும், நிறைவானதாயும் இருக்கிறது.

என்னுடைய சகோதர சகோதரிகளே, நான் யாருக்கும் எதிரானவன் அல்ல, நான் அந்த சத்தத்திற்காகவே இருக்கிறேன். இந்தச் செய்தியை நேசிப்பதாகவும் விசுவாசிப்பதாகவும் அறிவிக்கும் அனைவரையும் நாமும், நானும் நேசிக்க வேண்டும். இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள் என்று நான் ஜனங்களிடத்தில் தவறாக சொல்லிக் கொண்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தாலும் கூட, நான் உங்களை நேசிக்கிறேன், நீங்களும் என்னை நேசிக்கிறீர்கள் என்றே நான் நம்புகிறேன். நாம் அனைவரும் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறோம். தயவு செய்து தேவன் உங்களை அழைத்ததை தொடர்ந்து செய்யுங்கள்; பிரசங்கிக்கவும், போதிக்கவும், ஒரு மேய்ப்பராகவும் இருங்கள், உங்கள் மந்தைக்கு அவர்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் எது என்பதைச் சொல்லுங்கள்.

ஒலிநாடாவில் உள்ள அந்த சத்தம் மாத்திரமே ஒவ்வொரு முறையும் மாறாமல் அதையே கூறுகிறது. அது ஒருபோதும் மாறுகிறதில்லை. ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மணவாட்டி மாத்திரமே ஆமென் என்று கூற முடியும், ஆனால் மணவாட்டி மற்ற மனிதன் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்றோ, நிறைவானது என்றோ சொல்ல முடியாது.

நீங்கள் அதை நம்பவில்லையென்றால், நீங்கள் மணவாட்டி அல்ல. நீங்கள் அதை நம்பினால், அப்பொழுது ஒலிநாடாவைக் கேட்பதே அவர்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் என்று உங்கள் மந்தையிடம் சொல்வதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.

இந்த அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், மக்கள் தங்களுடைய போதகர்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் மற்றும் அவர்களுடைய சபைகளை விட்டு வெளியேறுங்கள் என்று நான் சொல்கிறேன் என்று பல ஊழியக்காரர்களிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன், இது உண்மையல்ல. நான் அதை ஒருபோதும் கூறவுமில்லை, எனவே அதை நம்பாதீர்கள்.

நான் இதுவரை கூறாத, எப்போதும் நம்பாத விஷயங்களை பலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் அவர்களுக்காக பொறுப்பேற்க முடியாது, ஆனால் நான் என்ன கூறியிருக்கிறேனோ அதை மாத்திரமே நான் விசுவாசிக்கிறேன். நான் வெளிப்படையாய் தெளிவாகப் பேசி, நான் எதை விசுவாசிக்கிறேனோ அதை சரியாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் / நீங்கள் நான் என்ன கூறிக் கொண்டிருக்கிறேனோ / பொருட்படுத்துகிறேனோ அதன் பேரில் உங்களுடைய திரித்தலைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

மணவாட்டி அனைவரும் ஒரே காரியத்தையே கூறிக் கொண்டிருப்பர். இரண்டு மனிதர் ஒரே காரியத்தை கூறுகிறதில்லை. ஒரே சத்தம். ஒரே தீர்க்கதரிசி. ஒரே மணவாட்டி.

உலகெங்கிலும் உள்ள பல விசுவாசிகள் அவருடைய மணவாட்டியாக இருக்க, நீங்கள் ஒரே நேரத்தில் செய்தியைக் கேட்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை…ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் சத்தத்தைக் நீங்கள் கேட்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்…அந்த சத்தத்திற்கே முதலிடம் அளியுங்கள்.

ஏழாவது முத்திரை 63-0324E, என்ற செய்தியை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியின் ஒரு பகுதியினர் ஒரே நேரத்தில் அந்த சத்தத்தைக் கேட்கப்போகிறபடியால்: நீங்களும் எங்களோடு கேட்கும் படி அழைக்கப்படுகின்றீர்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

உபாகமம் 29:16-19
I இராஜாக்கள் 12:25-30
எசேக்கியேல் 48:1-7, 23-29
மத்தேயு 24:31-32
வெளிப்படுத்தின விசேஷம் 7
வெளிப்படுத்தின விசேஷம் 8:1
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7
வெளிப்படுத்தின விசேஷம் 14