
அன்புள்ள வார்த்தையின் மேல் வார்த்தையாயுள்ளவர்களே,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உலகெங்கிலும் உள்ள இந்த "ஒலிநாடாவை கேட்கிற ஜனங்கள்" மூலம் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பல சபைகள் திகைப்புற்று, பதற்றமடைந்து, திகைப்படைந்து, பிரமிப்படைந்து, குழப்பமுற்று, தடுமாற்றமடைந்தும் கூட இருக்கின்றன.
இது கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பாய், குமாரனின் பிரசன்னத்தில் அமர்ந்து, முதிர்ச்சியடைந்து, நம்மை ஆயத்தப்படுத்துகிறதாயுள்ளது. நம்முடைய பரலோக மணவாளன் அவரோடு இருக்கும் நம்முடைய வருங்கால வீட்டைப் பற்றி நம்மிடம் சொல்லிக்கொண்டு வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு அவர் நம்மிடம் கூறினார்: “இந்த உலகம் உங்களுடைய வீடு அல்ல, இது சாத்தானின் ஏதேன், நான் அதை அக்கினியால் அழிப்பேன். நீங்கள் என்னுடைய இனிய இருதயமாய் இருக்கிறீர்கள், உலகத் தோற்றத்திற்கு முன்பே என்னுடைய மணவாட்டியாய் இருக்கும்படி நான் தெரிந்துகொண்டேன். இப்போது, இந்த ஞாயிற்றுக்கிழமை நான் உங்களுக்கு என்னுடைய அதிசீக்கிரமான வருகையான ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்த எல்லாவற்றையும் நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்."
இப்படிப்பட்ட மகத்தான எதிர்பார்ப்பின் கீழ் நாம் இருக்கிறோம். நம்மால் அதை ஆகாயத்தில் உணர முடியும். காரியங்களோ மிக துரிதமாக சம்பவித்துக் கொண்டிருக்கிறன.
இந்நாளில் என்ன நடக்கும் என்று வேதம் கூறினதோ, அதுவே ஒவ்வொரு நாளும் சம்பவித்துக்கொண்டிருக்கிறது. காரணம், இது அங்கே வேகமாக, அந்த வனாந்தரங்களிலும் கூட குவிந்து கொண்டிருக்கிறது, அநேக காரியங்கள் சம்பவிக்கின்றன, என்னால் அவைகளை தொடர்ந்து மனதில் வைத்திருக்கக் கூட முடியவில்லை. நாம் இயேசுவின் வருகைக்கு அருகில் இருந்து, அவருடைய சபையுடன் ஒன்றாக இணைக்கப்படத்தக்கதாக, வார்த்தையோடு வார்த்தையாகிறோம்.
இந்த நாளின் மணவாட்டியான, அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட சீமாட்டியான நமக்காக இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக் காரியங்கள் வெளிப்படுவதை நாம் மாத்திரமே காண்கிறவர்களாக இருக்கிறோம்.
அவர் இந்த காலத்திற்கென நம்மை முன்குறித்திருக்கிறார், எவருமே நம்முடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. நாம் அவரோடு ஐக்கியங்கொள்ளும்படியாக குமாரரும் குமாரத்திகளுமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறோம்; அதுதான் அவருக்குத் தேவையாயிருக்கிறது.
நாம் வார்த்தையின் மேல் வார்த்தையாகவும், மூல உயிரணுவின் மேல் உயிரணுவாயும், ஜீவனின் மேல் ஜீவனாகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியின் பரிபூரண வளர்ச்சியாயுமிருக்கிறோம்.
உங்களுக்கு தேவை இருந்தால், அதைப் பேசுங்கள். நீங்கள் வார்த்தையின் மேல் வார்த்தையாய் இருக்கிறீர்கள். நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் உள்ள இருளைப் பார்க்காதீர்கள்; சுகவீனம், வியாதி, கொலை, விரக்தி, அவர்கள் ஒரு மனிதனா அல்லது ஒரு ஸ்திரீயா என்று தெரியாத ஜனங்களின் பைத்தியக்காரத்தனம். நாம் மணவாட்டியாய், முன்குறிக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
எதற்கும் பயப்படாதீர்கள். மகிழ்ச்சியாயிருந்து களிகூருங்கள். காலம் சமீபித்துவிட்டது. நாம் இந்த தொற்றுநோய் மருத்துவமனை வீட்டை விட்டுச் செல்ல ஆயத்தமாயிக் கொண்டிருக்கிறோம். மகிமை!!!
ஞாயிறு பிற்பகல் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில் நேரப்படி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற செய்தியைக் கேட்பதற்காக எங்களுடன் வந்து ஆயத்தமாகுங்கள். நீங்கள் இருந்து வருகிற விதமாக ஒருபோதும் இருக்க மாட்டீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
சங்கீதம் 27:1-5