ஞாயிறு
01 மே 2022
63-0724
தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை

அன்புள்ள சிறிய கடிகாரச் சுருள்வில்லே, முக்கிய சுருள்வில்லே அல்லது நீங்கள் என்னவாக இருந்தாலும்:

நாம் யாவரும் கிறிஸ்துவின் சரீரமாக, நம்முடைய ஸ்தானத்தில், ஒற்றுமையாக, அவருக்காக நம்மால் இயன்ற மிகச் சிறந்த பணியினைச் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். அவருடைய வார்த்தையான, இந்தச் செய்தியைத் தவிர, வேறு எதுவும் நமக்கு முக்கியமில்லை.

தேவனுடைய தீர்க்கதரிசி நம்மிடம் சொல்வதைக் கேட்க நாம் விரும்புகிறோம்: "குறிப்பிட்ட ஜனங்களாகிய உங்களைக் குறித்தும் ஒரு காரியம் உண்டு. நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் விசேஷித்த ஜனங்களாய் இருக்கிறீர்கள். உங்களை சந்தித்து, உங்களோடு உரையாட நான் நேசிக்கிற மற்றொரு காரியமும் உண்டு."

"என்னுடைய சொந்த சிறு தாழ்மையான ஊழியத்தைச் சுற்றியே நான் நோக்கிப் பார்க்கிறேன்; இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன்; மணவாட்டியின் குழுவை அழைத்து ஒன்றாக இணைத்துக்கொண்டிருக்கிறது. அது சக்கரத்திலிருந்து ஒரு சக்கரத்தை வெளியே எடுக்கிறது."

அது ஒரு மனிதன் அல்ல, அது அவருடைய மணவாட்டியை ஒன்று சேர்க்கும் தேவனுடைய வார்த்தை என்பதை நாம் அறிவோம். செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற காரியங்களை நாம் காண்கையில் அது தேவனைத் தவிர வேறுயாரும் அல்ல. இவ்வாறு இருக்கலாம், இருக்கக்கூடும், அது இருக்கலாம் என்பது போல் காணப்படுகிறது என்பதல்ல, அது தேவனே!!

இது நமக்கு மிகவும் விலையுயர்ந்த முத்தாயிருக்கிறது என்றே நாம் அந்த இடத்திற்கு வந்துள்ளோம். அதற்கு முரணாக வேறு யாரேனும் நம்மிடம் கூறுகிற எதிலிருந்தும் நாம் விலகிவிட்டோம். மனிதன் எதைச் சாதித்திருக்கிறான் அல்லது என்ன கூறுகிறான் என்று நாம் பார்க்கிறதில்லை, தேவன் என்ன கூறியிருக்கிறார், நம்முடைய நாட்களில் அவர் என்ன செய்வதாக அவர் வாக்களித்தார் என்றே பார்க்கிறோம், அவர் அதைச் செய்கிறதை நாம் காண்கிறோம்.

அதுவே நம்முடைய முடிவான ஆதாரம். நமக்கிருக்கும் ஒவ்வொரு காரியமும், நமக்கிருந்த ஒவ்வொரு காரியமும், நமக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற ஒவ்வொரு காரியமும் இந்த செய்தியில் வைக்கப்பட்டுள்ளன. இது நமக்கு ஜீவனைப் பார்க்கிலும் மேலானது.

உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தேவன் எச்சரிக்கை கொடுப்பதைக் நாம் காண்கிறோம், நியாயத்தீர்ப்புக்குத் ஆயத்தமாகுங்கள். அணுகுண்டுகள் விமானக் கொட்டகைகளில் உள்ளன, ஒவ்வொரு காரியமும் ஆயத்தமாக உள்ளது.

இந்த முறை, இது நோவாவின் நாட்களிலோ அல்லது ஆபிரகாமின் நாட்களிலோ இருந்தது போன்ற ஒரு சிறிய குழுவினருக்கு மட்டுமல்ல; தேவன் உலக மக்களை எச்சரித்து, அவருடைய தீர்க்கதரிசி மூலம் பேசுகிறார், இதுவே உங்களுடைய கடைசி எச்சரிக்கை..

அவர் நம்மிடம், “இந்தக் காரியத்தை நான் சம்பவிக்க அனுமதிக்கும் முன்னே, நான் சோதோமுக்கு செய்ததைப் போல, அதிலிருந்து வெளியே வாருங்கள் என்று ஒரு கடைசி அழைப்பை விடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆயத்தமாயிருங்கள். ஏதோ சம்பவிக்கப் போகிறது” என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

உலகம் அவர்களின் மாபெரும் அறிவியல் சாதனைகளைச் சார்ந்துள்ளது; தலைமுறைகளுக்கு மரணத்தை கொண்டு வந்த கலப்பினங்கள். ஜ.நா, வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு, உலக நாடுகளின் சங்கங்கள்: என்ற புத்திசாலியான மற்றும் படித்த அறிவாற்றலுள்ளவர்களின் பட்சமாக சார்ந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நியாயத்தீர்ப்பு மிக நெருக்கமாக வருவதைக் காண்கிறோம். ரஷ்யா, போர், எண்ணெய், வத்திக்கான், யூதர்கள், அணு குண்டுகள் என தீர்க்கதரிசி வெகு தொலைவில் பார்த்து, நமக்குச் சொன்னது நடக்கும்.

இனி என்ன நடக்கப்போகிறது என்று யோசிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் நடப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம், உலகில் பயம் என்பது ஒரு நிஜமாகி, ஒவ்வொரு நாளும் மிக அதிகமாகி வருகிறது.

ஆனால் அவர் எசேக்கியாவின் நாட்களில் செய்ததைப் போலவே, தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் பேசினபோது, "ஆயத்தமாகுங்கள், ஏனென்றால் நியாயத்தீர்ப்புகள் விழ ஆயத்தமாயிருக்கின்றன" என்று ஜனங்களை எச்சரித்தார். அவருடைய தீர்க்கதரிசி வரவிருந்த காலத்திற்கு ஜனங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தான்.

நோவா தன்னுடைய காலத்திற்கான ஜனங்களை ஆயத்தப்படுத்தினான். அது நியாயத்தீர்ப்புக்கு முன்னதான ஒரு இரக்கத்தின் அழைப்பாயிருந்தது. தேவன் ஒரு வழியை, அவர்களை வழிநடத்த ஒரு தீர்க்கதரிசியை அருளியிருந்தார்.

நோவாவின் காலத்தில் அவர் செய்ததைப் போலவே, அவர் எப்போதும் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் நம்முடைய வார்த்தையை அனுப்புகிறார். நோவாவின் நாட்களில் அவர் அதேக் காரியத்தைச் செய்தார். எலியா- நாட்களில்...மோசேயின் நாட்களில், அவர் அதேக் காரியத்தைச் செய்ததை நாம் கண்டறிகிறோம். அவர் தம்முடைய தீர்க்கதரிசியை அவர்களுக்கு அனுப்பினார், அவர்கள் அவிசுவாசத்திலிருந்து தங்களைப் வேறுபிரித்துக்கொண்டார்கள். இப்பொழுது, அந்தவிதமானவர்களே வெளியே வருகின்றனர். அந்தவிதமானவர்களே அதை விசுவாசித்தனர்.

எல்லா அவிசுவாசத்திலிருந்தும் நாம் நம்மை வேறுபிரித்துக்கொண்டோம். தேவன் இன்றைக்கு தம்முடைய மணவாட்டிக்கு ஒரு வழியை அருளியுள்ளார். அவர் தம்முடைய வார்த்தையில், "நியாயத்தீர்ப்புக்கு முன், நான் என் சிறு தாழ்மையான மந்தையைக் கூட்டிச் சேர்க்க உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவேன், நான் அவர்களை ஒரு பக்கத்தில் உட்கார வைப்பேன், அவர்கள் சமாதானமாக இருப்பார்கள், நிலுவையில் உள்ள நியாயத்தீர்ப்புக்கு தப்பிக்கவும் காத்திருப்பார்கள்” என்று நமக்கு வாக்களித்தார்.

நாமே அந்த சிறு மந்தை. நாமே பிதாவானவர் நேசிக்கிறவர்கள், அவருடைய அதிசீக்கிரமான வருகைக்காக நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றிலுமுள்ள உலகமானது சிதைந்து கொண்டிருக்கிறது, ஆனால் நாமோ இளைப்பாறுதலாகவும் அமைதியாகவும் இருக்கிறோம்.

நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். உலகில் நாம் எங்கிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவருடைய வார்த்தையிலும், அவருடைய சத்தத்திலும் நாம் யாவரும் ஒன்றிணைக்கப்படக் கூடிய ஒரு வழியைத் தேவன் அருளியுள்ளார். இதுவே தேவன் அருளியுள்ள வழியாயுள்ளது.

இந்த தீர்க்கதரிசி அவர்களை தேவன் அருளியுள்ள வழிக்கு வழிநடத்தினார். இப்பொழுது, அதுவே காரியங்களைச் செய்யும் தேவனுடைய வழியாயுள்ளது. புரிகிறதா?

வரவிருக்கும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள: 63-0724 தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை என்ற செய்தியை எங்களோடு கேட்க, இந்த ஞாயிறு பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி வாருங்கள். இதுவே தேவனுடைய சத்தம்: இது இன்றைக்கான என்னுடைய அருளப்பட்ட வழி என்று பேசி, நமக்குச் சொல்கிறாகும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

ஆராதனைக்கு முன்னர் படிப்பதற்கான வேத வசனங்கள்:

ஏசாயா 38:1-5
ஆமோஸ் அதிகாரம் 1