ஞாயிறு
24 ஏப்ரல் 2022
63-0721
அவர் விசாரிக்கிறார். நீங்கள் அக்கறை கொள்ளுகிறீர்களா?

அன்புள்ள யாத்திரீக மணவாட்டியே,

எபிரெயப் பிள்ளைகள் நாள் முழுவதும் அவர்களைப் பாதுகாத்து பேணிக்கொள்ளும்படி, தங்களுக்காக இரவில் அருளப்பட்டிருந்த மன்னாவைப் பெற்றுக்கொள்ளும்படி அதிகாலையில் ஒன்று கூடினதுபோல, நாமும் கூட நம்முடைய யாத்திரையில் நம்மை பாதுகாத்துக் பேணிக்கொள்ளும்படி நமக்குக் அளிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய மன்னாவுக்காக ஒன்றுகூடி வருகிறோம்.

மணவாளனின் வெளிப்படுத்துதல் மணவாட்டியில் வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வரையில், மணவாட்டி தேவனோடு அத்தகைய இணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறாள். உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் நாம் பற்றிக்கொண்டு அவருடன் ஒன்றாகிவிட்டோம்.

தேசங்களின் அக்கிரமம் நிறைந்துவிட்டது. அவைகள் அசுத்தமாயிருக்கின்றன. இது இப்பொழுது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமான, நம்முடைய வீட்டிற்குச் செல்ல, நம்முடைய யாத்திரைக்கான நேரமாயுள்ளது. மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள்.

அவர் தம்முடைய முதலாம் யாத்திரையிலும், இரண்டாம் யாத்திரையிலும் செய்ததுபோல, இப்பொழுது மூன்றாம் யாத்திரையிலும், ஜனங்கள் தவறாக புரிந்து கொள்ளாதபடிக்கு, இது அவருடைய மணவாட்டியை வழிநடத்த தேவன் தெரிந்துகொண்டார் என்பதை அறிந்து கொள்ளும்படிக்கு, ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அக்கினி ஸ்தம்ப அடையாளத்துடன் அவர் தெரிந்துகொண்ட ஒரு தீர்க்கதரிசியை நமக்கு அனுப்பினார்.

அவருடைய தீர்க்கதரிசி கூறினது கர்த்தர் உரைக்கிறதாவதாயிருந்தது. அது தேவன், அக்கினி ஸ்தம்பத்தில் இறங்கி வந்து, அவருடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தி வெளிப்படுத்தினதாயிருந்தது. அந்த அக்கினி ஸ்தம்பம் அவருடைய தீர்க்கதரிசியை அபிஷேகித்து, அவருடைய மணவாட்டியை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தத் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவர் அவரே என்பதை நிரூபிக்கும்படியான ஒரு பரலோக சாட்சியாக நின்றது.

எல்லா சபைகளும் இந்த சத்தத்தின் கீழ், பிரிக்கப்படாமல், ஒன்று சேர்ந்து ஐக்கியம் கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். எது நம்மை வேறுபிரிக்கிறது? அது நம்முடைய தோலின் நிறங்கள் அல்ல. அது நாம் உண்ணும் உணவும் அல்ல. மனிதனே, சுவிசேஷ போதனையின் சரியான பாதையிலிருந்து ஒவ்வொரு மனிதனையும் வேறுபிரித்திருக்கிறான்.

எது சரி எது தவறு என்பதை கண்டிப்பாக காண்பிக்க ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. நீங்கள் அதை எப்போதும் செய்யக்கூடிய ஒரே வழி, வார்த்தைக்கு எந்த வியாக்கியானத்தையும் கொடுக்காமல், அதைப் படித்து, அதைக் கேட்டு, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதேயாகும்.

ஆனால் அவர்கள் பொறாமையால், ஆவிக்குரிய குருட்டுத்தனத்தினால் அதைச் செய்துகொண்டிருக்கிறவில்லை என்று அவர் கூறினார். அவர்கள் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் அதற்கு செவிகொடுக்கமாட்டார்கள்.

பரலோகத்தின் தேவன் உயிரோடெழுப்பும்போது, என் சத்தம் மறுபுறத்தில் தேவனுடைய மகத்தான காலம் என்னும் காந்த ஒலி நாடாவில் இருக்கும், அது இந்தக் கடைசி நாளில் இந்த சந்ததியை ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுத்தும். காரணம், இது-இது இப்பொழுது காந்த ஒலிநாடாவில் உள்ளது, அப்பொழுது அது நித்திய ஒலிநாடாவில் இருக்கும்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால், தேவன் தம்மைப் பிரதிபலிக்கும்படியான ஒரு ஜீவியத்தை பரிசுத்தப்படுத்தும்படியாக, மானிட சரீரத்தில் வெளிப்படுத்தப்பட்ட, தேவனைத் தாமே, வெளிப்படுத்தப்பட்ட அதே வார்த்தையை இன்றைக்கு அவர்கள் சிலுவையில் அறைகிறார்கள்.

அதன் பின்னர் ஒலிநாடா வாயிலாக கேட்கப்போகிறவர்களும் இதைக் கூர்ந்து கவனிப்பார்களாக. பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு வெளிப்படுத்த முயற்சித்துக்கொண்டிருப்பதை நாங்கள் புரிந்துகொள்வோமாக.

பரிசுத்த ஆவியானவர் நமக்கு எதை வெளிப்படுத்த முயற்சிக்கிறார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம், மேலும் நாம் அனைவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றோம். நாம் ஒவ்வொருவருமே! நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும், அல்லது நீங்கள் ஒரு சிறிய பணிப்பெண்ணாக இருந்தாலும், அல்லது நீங்கள் ஒரு வயதான பெண்ணாக இருந்தாலும், அல்லது ஒரு இளைஞனாக இருந்தாலும், அல்லது ஒரு முதியவராக இருந்தாலும், அல்லது நீங்கள் யாராக இருந்தாலும், எப்படியாயினும், நாம் போகிறோம். நம்மில் ஒருவரும் கைவிடப்படப்போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் போகப்போகிறோமே!!!

நாம் தேவனுக்குக் கூறின நம்முடைய வார்த்தையைக் காத்துக்கொண்டால், தேவன் அவருடைய வார்த்தையை நமக்குக் காத்துக்கொள்ளாமலிருப்பது முற்றிலும் சாத்தியமற்றது. நீங்கள் அதை உண்மையாகவே நம்பினால், எதுவுமே உங்களை அதை சந்தேகிக்கச் செய்ய முடியாது. நேரமோ, இடமோ, வேறு எதுவுமே உங்களை சந்தேகிக்கச் செய்ய முடியாது.

அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்கு, தப்பித்துக்கொள்வதற்கான ஒரு வழியை அருளுவதன் மூலம், அவர் நமக்காக அதிக அக்கறை கொண்டு நம்மை வழிநடத்த நமக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர் நம்மை வெளியே கொண்டு வருவதில் மாத்திரம் அக்கறை கொள்ளவில்லை, நம்முடைய யாத்திரையின்போது நமக்குத் தேவையான ஒவ்வொரு காரியத்தையும் அவர் அருளியுள்ளார். அவர் நமக்காக ஒவ்வொரு சத்துருவையும் ஜெயங்கொண்டார். நாம் சுகவீனமாயிருக்கும்போது அவர் நம்மைக் குணப்படுத்துகிறார். அவர் அனுதினமும் நம்மை போஷிக்க மறைவான மன்னாவை நமக்கு சேமித்து வைத்தார்; அவர் மரணத்தையும் கூட ஜெயங்கொண்டார், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையாயிருந்து, அதை விசுவாசிக்க வேண்டும் என்பதேயாகும்.

நாம் நித்திய ஜீவனுக்கு முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அதற்கு செவிகொடுக்கிறோம், நாம் அதைக் கேட்டு களிகூருகிறோம். இதுவே உங்களுடைய ஆறுதலாயுள்ளது. இதுவே நம்முடைய ஜீவியம் முழுவதும் நாம் ஏங்கிக்கொண்டிருந்த காரியமாகும். இந்த முத்திற்காகவே நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். இது நமக்கான தேவனுடைய அன்பான அக்கறை என்பதை நாம் அறிந்துள்ளபடியால் நமக்கு இது வேண்டும்.

உங்களுக்கு ஆவிக்குரியப்பிரகாரமான, மாம்சப்பிரகாரமான, அல்லது இன்னும் நெருங்கி சஞ்சரிக்க, அல்லது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட அல்லது மீண்டும் நிரப்பப்பட வேண்டும் என்ற எந்தக் காரியமாவது உங்கள் தேவையாயிருக்கிறதா? நீங்கள் கவலைகொண்டால், இன்றைக்கான அருளப்பட்ட தேவனுடைய வார்த்தையில் எங்களுடன் இணைந்து, உங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் அதை அனுப்புவதாக வாக்களித்தார், அவர் அதைச் செய்துள்ளார்! அவர் அதை அவருடைய வார்த்தையில் வாக்களித்தார், இதோ அது உள்ளதே! அவர் விசாரிக்கிறார், இப்பொழுது உங்களைக் குறித்து என்ன?

உங்களுடைய இருதயத்தில், “என் தொல்லைகள் முடிந்துவிட்டன. நான் நன்றாக இருக்கப்போகிறேன். நான் நிரப்பப்படப்போகிறேன். நான் அவரிடத்தில் நெருக்கமாக இருக்கப் போகிறேன். நான் அவருடைய மணவாட்டி" என்று உங்களிடம் சொல்லுகிற ஏதோ ஒன்று இருக்கும்.

அவர் விசாரிக்கிறார், நீ கவலை கொள்கிறாயா? 63-0721:என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், ஜெபர்ஸன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00., மணிக்கு, எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.

சூரிய வெளிச்சத்தினூடாகவோ அல்லது நிழலினூடாகவோ, அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார் என்று அவர் உங்களிடம் சொல்வதை நீங்கள் கேட்கும்போது அது ஒரு மகத்தான பெரிய அன்பின் விருந்தாயிருக்கப்போகிறது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

செய்திக்கு முன்னர் படிப்பதற்கான வேதவசனங்கள்:

பரிசுத்த யோவான் 5:24 / 15:26
1 பேதுரு 5:1-7
எபிரெயர் 4:1-4