
அன்பான இயங்கு பொத்தானை அழுத்தி கேட்கும் மணவாட்டியே,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் ஒன்றுகூடி உலக சரித்திரத்திலேயே மிக மகத்தான ஜீவனுள்ள ஊழியத்திற்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவனுடைய சத்தத்தை கேட்பதற்கு நாம் ஒன்றுகூடி சந்திக்கையில் நாம் மிகவும் மகிமையான நேரத்தை உடையவர்களாய் இருந்து கொண்டிருக்கிறோமே! இது தேவ குமாரனாகிய, இயேசுவே, வேத வாக்கியங்கள் மூலமாக தம்மை வெளிப்படுத்தி, இந்நாளுக்கென முன்குறிக்கப்பட்டிருந்த வேதவாக்கியத்தை, அவருடைய நாளிலும், மற்ற எல்லா நாட்களிலும் இருந்தது போலவே, ஜீவனுள்ளதாக்குகிறதாய் இருக்கிறது. இதை விசுவாசிப்பதே, பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாக இருக்கிறது.
பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டதற்கான உண்மையான அத்தாட்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபைக்கு செல்வது அல்ல; அது "நானே அவர்" என்றும், உங்களுடைய நாளுக்கான வார்த்தையை நீங்கள் விசுவாசிப்பதுமேயாகும். இன்றைக்கான வார்த்தை என்னவாயிருக்கிறது? மணவாட்டி தன்னுடைய கணவனை அறிந்துகொள்ளும்படியாக, தன்னுடைய துணையை, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை அறிந்து கொள்ளும்படியாக, தேவனுடைய தீர்க்கதரிசி இந்நாளுக்கான வார்த்தையாய் இருந்து, அவரே ஜனங்களை திரும்ப வார்த்தைக்கு கொண்டுவர வேண்டியதாய் உள்ளது.
அவருடைய சொந்த ஜீவியமும், அவருடைய சொந்த கிரியைகளும், இந்த நாளின் வார்த்தையை வெளிப்படுத்தி ரூபகாரப்படுத்துகிறது.
இது மீண்டும் பரிசுத்த ஆவியானவர் சபையில்; கிறிஸ்து, அவர் செய்வதாக வாக்களித்தபடியே, சாயங்கால நேரத்தில், மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்தினதாயுள்ளது. அது அவர்களை சற்று மூச்சுத் திணற வைக்கும் என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் வரிகளுக்கிடையே உள்ள மறைபொருளை படித்து புரிந்துகொள்ள வேண்டும், அதுவே அந்த காட்சியை தோன்றச் செய்கிறது.
நாம் மணவாட்டியாய், ஆபிரகாமின் ராஜரீக சந்ததியாய் இருக்கிறோம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு ஆபிரகாம் கண்ட கடைசி அடையாளம் என்னவாயிருந்தது? தேவன், ஒரு மனித சரீரத்தின் ரூபத்தில், ஜனங்களின் சிந்தனைகளை வகையறுக்க முடிந்தது. ஒரு மனிதன், ஒரு டஜன் அல்ல, ஒரு மனிதனே.
நாம் தேவனுடைய சிந்தனைக்கே செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்; ஒரு மனிதனுடைய சிந்தனைக்கு அல்ல, ஆனால் தேவனுடைய சிந்தனைக்கே. நம்முடைய தீர்க்கதரிசி எழுதப்பட்டுள்ள வார்த்தையை வெளிப்படுத்துபவர்.
உங்களுடைய வீடுகளிலோ அல்லது உங்களுடைய சபைகளிலோ ஒலிநாடாக்களை போட்டுக் கேட்பது அனைவருக்குமானதல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் எங்களுக்கான, ஒரே வழி இதுவேயாகும். தேவனுடைய சத்தம் நேரடியாக எங்களிடம் பேசுவதைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு எந்த வியாக்கியானமோ அல்லது விளக்கமோ தேவையில்லை; அது தேவன் எங்களிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதாயுள்ளது.
இந்த ஞாயிற்றுக்கிழமை தேவன் பேசி, மறுபக்கத்தில் நம்முடைய ஒரு முன் காட்சியை அவர் தம்முடைய தீர்க்கதரிசிக்கு எப்படி காண்பித்தார் என்பதை நமக்கு சொல்வதையும் நாம் கேட்போம். அந்த மணவாட்டி எப்படி அவரை சரியாகப் பார்த்துக் கொண்டிருந்து, அவரிடம் பேசிக் கொண்டிருந்தாள், நாம் அவருடன் ஒன்றாக நின்றுகொண்டிருந்தோம். நாம் கர்த்தருக்கு முன்பாகப் பரிபூரணமாக நடந்துகொண்டிருந்தோம்.
அப்பொழுது தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக பேசி, மீண்டும் ஒருமுறை தீர்க்கதரிசனமுரைத்து, இவ்வாறு கூறுகிறார்:
இந்த ஒலிநாடா உலகம் முழுவதிலுமுள்ள தேசங்களிலுள்ள ஐனங்களை அவர்களுடைய இல்லங்களில் அல்லது அவர்களுடைய சபைகளில் சந்திக்கக் கூடும், கர்த்தாவே, இங்கு ஆராதனை நடக்கும்போது…அல்லது ஒலிநாடா போட்டுக் கேட்கப்படும்போது, நாங்கள் எந்த ஸ்தானத்தில் அல்லது-அல்லது எந்த நிலையில் இருக்க நேரிட்டாலும், பரலோகத்தின் மகத்தான தேவன் தாமே எங்களுடைய இருதயத்தின் இந்த உத்தமத்தை இன்று காலை கனப்படுத்தி, சுகம் தேவையுள்ளவர்களுக்கு சுகத்தையும், இன்னும் என்ன தேவையோ அவைகளை அவர்களுக்கு அளிப்பாராக என்றே நாங்கள் ஜெபிக்கிறோம்.
நீங்கள் ஒலிநாடாக்களை கேட்டுக் கொண்டிருந்தால், இது நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தம் என்று விசுவாசித்தால், அப்பொழுது உங்களுக்கு எது தேவையாக இருந்தாலும், தேவன் தம்முடைய செய்தியாளர் மூலம் பேசி, "நமக்கு என்ன தேவையாய் இருந்தாலும் அவைகளை அளியும்" என்றே கூறுவார்.
என் நண்பனே இயங்கு பொத்தானை அழுத்தி கேட்பதன் மூலம் மாத்திரமே அது சம்பவிக்க முடியும்.
எக்காளங்களின் பண்டிகை 64-0719M என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், தேவன் எங்களிடத்தில் பேசுகிறதை கேட்கிறபடியால், தேவன் பேசி தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கினிப்பதையும், மானிட சரீரத்தின் மூலமாக தம்மை வெளிப்படுத்துவதையும் நீங்கள் கேட்டு, உங்களுடைய தேவை எதுவாயிருந்தாலும் அதை பெற்றுக்கொள்ள விரும்பினால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
லேவியராகமம் 16
லேவியராகமம் 23:23-27
ஏசாயா 18:1-3
ஏசாயா 27:12-13
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7
வெளிப்படுத்தின விசேஷம் 9:13-14
வெளிப்படுத்தின விசேஷம் 17:8