
அன்புள்ள தீர்க்கதரிசியின் தேவனுடைய ஜனங்களே,
கவனியுங்கள், நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அது அவ்வளவு நன்மையானதாக உள்ளது, அது என் இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. பாருங்கள், நீங்கள் அதை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அவருடைய பிரசனத்தில், நான் இதைக் கூறட்டும். அவருடைய கிருபையினால், அண்மையில், நான் என்னுடைய ஜனங்களை, வெள்ளை அங்கிகளில் காண அவரும் கூட என்னை அனுமதித்தார்.
கிழக்கு கடற்கரை முதல் மேற்கு கடற்கரை வரை, நாடு முழுவதும், நாம் ஒன்று கூடுகிறோம். நாம் பல மணிநேர இடைவெளியில் இருக்கிறோம், ஆனால் நாம் தேவனுடைய தீர்க்கதரிசி ஜனங்களாக ஒன்றாக இருக்கிறோம். நாம் ஒரு குழுவினராக இருக்கிறோம்.
தேவனுடைய தீர்க்கதரிசி இங்கே பூமியில் இருந்தபோது, மணவாட்டி இருக்க விரும்பிய, மகத்தான, மற்றும் ஒரே இடம், தொலைபேசி இணைப்புகளில் ஒன்றாக இணைந்து, அந்த சத்தம் "காலை வணக்கம் நண்பர்களே" என்று கூறுகிறதைக் கேட்க காத்திருந்ததேயாகும்.
எட்டாவது பென் தெருவின் மூலையில் அந்த கூட்டத்தார்களில் அமர்ந்திருப்பதை அவர்கள் எப்படி விரும்பியிருப்பார்கள். அவர்கள் வாகனம் நிறுத்துமிடத்தில் சந்தோஷமாக ஒரு இரவு காத்திருந்து ஒரு இருக்கையைப் பெறுவதற்கோ, அல்லது மணிக்கணக்கில் சுவர்களின் பக்கமாக நின்று சாய்ந்துகொள்வதற்கோ கழித்திருந்திருப்பார்கள். அந்த ஒரு ஆராதனையில் இருப்பதற்கு, தங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று, தங்களுடைய வேலையையும் இழந்துபோயிருப்பார்கள்.
அவர்களுடைய முழு ஜீவியமும் தீர்க்கதரிசி உரைத்த ஒவ்வொரு வார்த்தையிலும் நிலைக்கொண்டிருந்தது. அவர்கள் ஒரு காரியத்தையும் தவறவிட விரும்பவில்லை. ஒரு நாள் அந்த ஒலிநாடாவைப் பெற முடியும் என்று அவர்கள் அறிந்திருந்தாலும், தேவன் மனித உதடுகளால் உரைத்தத் தருணத்தில் மணவாட்டியுடன் இணைக்கப்பட்டிருக்க விரும்பினர்.
இதுவே அவர்களுடைய ஜீவியமாக இருந்தது. இதற்காகவே ஒவ்வொரு வாரமும் அவர்கள் காத்திருந்தனர். அடுத்த செய்தியைக் கேட்பதைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் பொருட்படவில்லை. இப்பொழுது, தேவனுடைய ஏழாம் தூதனான தீர்க்கதரிசி அவர்களுக்காக கூறினதை, ஒரே நேரத்தில், வார்த்தைக்கு வார்த்தை கேட்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது என்பதை அவர்கள் அறிந்ததபடியால் எவ்வளவு உற்சாகமடைந்திருந்தார்கள்.
தேவன் ஒரு வழியைக் அருளியிருந்தார். அவர் தம்முடைய மணவாட்டி அவருடைய சத்தத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவருடைய மணவாட்டி ஒரே நேரத்தில் அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருடைய தூதனான செய்தியாளர் மூலம் உரைக்கப்பட்ட அவருடைய சத்தமே அவருடைய மணவாட்டியை இணைக்கும் ஒரே சத்தமாய் இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார்.
அவருடைய மகத்தான திட்டம் நடந்து கொண்டிருந்தது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த போதகர்கள் தங்களுடைய சபைகள் தொலைபேசி இணைப்பில் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்பதை விட முக்கியமானது எதுவுமில்லை என்ற தரிசனத்தை அவர்கள் புரிந்திருந்தனர்.
அதைத்தான் அவர்கள் தங்களுடைய சபைகளுக்குப் போதித்திருந்தனர். “கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு, தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கிறார், அவர் அக்கினி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிறார். இது உங்களுக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கிறது. இது மல்கியா 4, மற்றும் வெளிப்படுத்துதல் 10:7. அவர் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தேவனால் அழைக்கப்பட்ட மனிதனாயிருக்கிறார். நான் உங்கள் எல்லோருக்கும் சொல்லியிருக்கிற தீர்க்கதரிசி இவர்தான். இப்பொழுது நாம் அனைவரும் அவருக்கு செவிகொடுக்க வேண்டும். பண்டைய யோவானைப் போல, நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்.
தேவனுடைய திட்டம் இன்னும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மணவாட்டி இன்னும் அவருடைய சத்தத்தில் இணைந்துகொண்டிருக்கிறாள். ஆனால் இப்பொழுது நாம் உலகம் முழுவதிலுமிருந்து இணைந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அவருடைய மணவாட்டியின் ஒரு பகுதியினர், ஒவ்வொரு வார்த்தையையும், ஒரே நேரத்தில் கேட்க மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை இந்தச் செய்தியை இதற்கு முன் நூறு முறை கேட்டிருக்கலாம், ஆனால் இந்த முறையோ முதல் முறை போல் உணர்கிறோம். முன்னெப்போதையும் விட ஒரு மகத்தான வெளிப்பாட்டைப் பெறப் போகிறோம் என்பதை நாம் அறிந்துள்ளோம்.
நாம் வேறெந்த இடத்திலும் இருக்க விரும்பவில்லை. இதைவிட முக்கியமானது எதுவுமில்லை. நமக்கு, இது தான் அது. இது நமக்கான தேவனுடைய திட்டமாயுள்ளது. இந்த சத்தம் அவருடைய மணவாட்டியை அழைத்துக்கொண்டும், ஒன்றிணைத்துக்கொண்டும், பரிபூரணப்படுத்திக்கொண்டும் இருக்கிறது...நாமே அந்த மணவாட்டியாய் இருக்கிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரத்தில், ஆறாவது முத்திரையை 63-0323: அவர் எங்களுக்கு வெளிப்படுத்துகிறபோது தேவனுடைய சத்தத்தை கேட்க நாங்கள் ஒன்றிணைகிறபடியால் எங்களுடன் சேர்ந்துகொள்ள நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
யாத்திராகமம் 10:21-23
ஏசாயா 13:6-11
தானியேல் 12:1-3
மத்தேயு 24:1-30
மத்தேயு 27:45
பரி. யோவான் 10:27
வெளிப்படுத்தின விசேஷம் 6
வெளிப்படுத்தின விசேஷம் 11:3-6