ஞாயிறு
08 மே 2022
63-0728
கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவரகசியமாயிருக்கிறார்

அன்பான அவருடைய இருதயத்திற்கு இனியவர்களே,

உலகத்திலேயே மிகப் பெரிய நன்மதிப்பு எனக்கு உண்டு. கர்த்தர் தம்மை உங்களுக்கு அறிமுகப்படுத்த என்னை அனுமதிக்கிறார், எனவே உலக தோற்றத்திற்கு முன்னே அவர் தெரிந்துகொண்ட பாத்திரத்தின் மூலம் அவர் உங்களிடம் நேரடியாகப் பேசவும், அவருடைய எல்லா வார்த்தைகளையும் உங்களுக்கு வெளிப்படுத்தவும் முடியும்.

இது வெறுமனே தேவனுடைய மனிதனாய் மட்டுமல்லாமல், இது தேவன் தாமே, அக்கினி ஸ்தம்பமாய், பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் நேரடியாக, உதட்டிலிருந்து செவிக்கு பேசுகிறதாயுள்ளது, அவர் தெரிந்துகொண்ட தீர்க்கதரிசியை, நம்முடைய மேய்ப்பர் என்று அழைக்கும்படியான கனமும், சிலாக்கியமும் நமக்கு உண்டு.

நாம் செவிகொடுத்துக் கொண்டிருப்பது ஒரு மனிதனுக்கா, அவருடைய சிந்தனைக்கா, அவருடைய கருத்திற்கா அல்லது வார்த்தையின் அவருடைய வியாக்கியானத்திற்கா என்று ஒருபோதும் யோசிக்கவே வேண்டாம். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று தேவன் தாமே நம்மிடம் பேசுகிறதாயுள்ளது.

ஜனங்கள் வெறுமனே அதன் பேரில் திணறுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நாமோ அதில் பருகிறோம். ஏனென்றால் அது மாத்திரமே நம்முடைய தாகத்தைத் தணித்து, நம்முடைய ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறதாயுள்ளது. இது நித்திய ஜீவனின் வார்த்தைகள். நமக்கு, இது தேவனுடைய சத்தமாயுள்ளது. இது இந்த வேளைக்கான செய்தியாயுள்ளது. எனவே, இது வார்த்தையாயும், சத்தமாயும், ஒலிநாடாக்களாயும் உள்ளதேயல்லாமல் வேறெதுவும் அல்ல!

பண்டைய இஸ்ரவேலரைப் போல ஒரே தலைமையின் கீழ் நாம் ஒன்றுபட்டுள்ளோம். ஒரே தேவன், ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் ரூபகாரப்படுத்தப்பட்டு, அவருடைய தீர்க்கதரிசி மூலம் தம்மை வார்த்தையாக வெளிப்படுத்துகிறார். அதே தேவன், அதே அக்கினி ஸ்தம்பம், இன்றைக்கும் அதே விதமாகவே. தேவனால் தம்முடைய சுபாவத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவே முடியாது. அவருடைய திட்டம் அவர் தொடங்கியதிலிருந்து ஒருபோதும் மாற முடியாது, ஏனென்றால் அவர் எல்லையற்றவர் மற்றும் அவருடைய திட்டம், அவருடைய யோசனைகள் யாவுமே பரிபூரணமானவை.

அதனால்தான் அவர் ஞாயிற்றுக்கிழமை நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். இந்தச் செய்தி முற்றிலும் சத்தியம் என்பதை நாம் அறியுமளவிற்கு, அதனுடைய முனைகளையும், அதனுடைய உட்புறத்தையும், அதனுடைய வெளிப்புறத்தையும் எல்லாவற்றையும் அவர் அலசிப் பார்த்து, வேத வாக்கியங்களின் மூலமாகவும், அதனுடைய காலக்கிரம அட்டவணைகளின் மூலமாகவும் கூட அதைக் நிரூபித்துக் காண்பித்திருப்பதாக அவர் கூறினார். அதில் எந்தப் பிழையுமே இல்லை.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பரிசுத்த ஆவியானவர் செய்தியைப் புரிந்து கொள்ளும்படியாக இப்போது அதனுடைய ஸ்தானத்தில் வைக்கப் போகிறார். அவர் அதைத் தொடங்கிய இடத்திலேயே எழுப்பி, நிகழ்காலத்திற்குள்ளாக அதை அமைப்பார். ஞாயிற்றுக்கிழமை நம்முடைய மேய்ப்பர் மூலம் தேவன் என்ன சொல்லி வெளிப்படுத்தப் போகிறார் என்பதையும் நாம் சற்று பருகுவோமாக:

நீங்கள் என் இதயத்திற்கு இனியவர்கள், ஆவியினாலும் சத்திய வார்த்தையினாலும் கர்த்தருக்குப் பிறப்பிக்கப்பட்டவர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, கிறிஸ்துவின் அன்பின் பிணைப்புகளால் உங்களை நெருக்கமாகப் பிணைக்குமாறு நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

நல்ல, வளமான காய்கறிகளை, இங்கே இந்தக் கூடாரத்தில்: உங்களுக்காக ஆகாரமாக சேமித்து வைக்க கர்த்தர் என்னிடம் கூறினார். இன்றைக்கு, நீங்கள் முழு ஒலிநாடாவையும் கேட்கப்போகிறீர்கள். நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நேரத்தில் இது இயேசு கிறிஸ்துவை உங்களுக்கு வெளிப்படுத்தும். இந்தச் செய்தி உங்களைத் தாங்கி பலப்படுத்தும். இது உங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள பணிக்கான ஆவிக்குரிய பெலனை உங்களுக்குத் தரும்.

நீங்கள் அதைக் கேட்க விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன் என்பதால் மீண்டும் ஒருமுறை நான் உங்களுக்கு சொல்லட்டும்: நீங்கள் மாத்திரமே தெரிந்ததுகொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட எண்ணாய், அதைக் கேட்கப்போகிறவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் தவறிப்போகாத தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டியாய், உலகில் உள்ள மற்ற அனைவரும் அதைக் குறித்து என்ன கூறினாலும் கவலைப்படாமல் அந்த வார்த்தையைப் பற்றிக்கொள்வீர்கள். நீங்கள் வார்த்தை மணவாட்டியே!

தேவன் உங்களுக்கு இந்த மகத்தான இரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், அது ஒரு புதிய பிறப்பாயுள்ளது. இப்பொழுது அவர் உங்களை பரிபூரண இணக்கத்தில் உள்ள வெளிப்பாட்டில் ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார். தேவன் அதை தம்முடைய வார்த்தையின் மூலம் அதே கிரியைகளினால், அவர் செய்த அதே காரியங்களினால், அந்த வார்த்தையை உங்களில் வெளிப்படுத்தும்படி செய்து வெளிப்படுத்துகிறார்.

பரிசுத்த ஆவியானவர், மாத்திரமே, கிறிஸ்துவின் தெய்வீக வெளிப்பாட்டினை வெளிப்படுத்துபவராக, எல்லா காலங்களிலும் இருந்து வருகிறார் என்பதை நீங்கள் ஒருபோதும் மறவாதிருப்பீர்களாக. எல்லாக் காலங்களிலுமே என்பது, நினைவிருக்கட்டும்! கர்த்தருடைய வார்த்தை யாரிடத்திற்கு வந்தது? தீர்க்கதரிசிக்கு மாத்திரமே.

உலகம் முழுவதிலும் நாங்கள் ஒலிநாடா ஊழியத்தைப் பெற்றுள்ளோம், எனவே நான் ஆயிரக்கணக்கானவர்களுடன் ஒலிநாடாவில் பேசுக்கொண்டிருக்கிறேன் என்பதை தெளிவாக உணருகிறேன். மற்ற இடங்களைவிட பத்து மடங்கு சிறந்த ஒரு ஒலிநாடாவை நாம் இங்கிருந்து உருவாக்க முடியும் என்பதுபோல் தெரிகிறது. இந்த ஒலிநாடாவை கேட்கும் ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ஸ்திரீயும் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

இப்போது அவர்கள் எந்த ஒலிநாடாவையாவது கேட்க வேண்டும் என்று விரும்பினால் அது அவர்களைப் பொருத்தது, ஆனால் நீங்கள் இதைத் தவறவிடக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். ஒலிநாடாக்களை கேட்கிற ஜனங்களாகிய நீங்கள்; காடுகளிலும் மற்றும் நீங்கள் எங்கிருந்தாலும் அதைக் கேட்கிறீர்கள், இப்போது கவனியுங்கள்.

நாம் விசுவாசிப்பதன் பேரிலான ஒலிநாடாக்களை நாம் பெற்றுள்ளோம். சபையில் ஒழுக்கமாயிருப்பதன் பேரிலேயும், இங்கே எப்படி ஒன்று கூடி வந்து உன்னதத்திலே ஒன்று சேர்ந்து உட்கார்ந்திருக்கிறோம் என்பதன் பேரிலேயும் நாம் ஒலிநாடாக்களை பெற்றுள்ளோம்.

ஒலிநாடாவில் கேட்கிற ஒவ்வொருவரும் அதை புரிந்துகொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால், இந்த ஒலி நாடாவை மீண்டும் கேளுங்கள். நான் இன்னும் எவ்வளவு காலம் உங்களுடன் இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் குறித்த சத்தியம் என்பது நினைவிருக்கட்டும். இது தான் சத்தியம். இது வேத வசனம்.

தலைமைத்துவமும் சரீரமும் ஒன்றாக இணைந்துவிட்டது. அது தேவன் உங்களில், அவருடைய ஜனங்களில் வெளிப்பட்டதாயுள்ளது. அதுவே கணவனும் மனைவியும் இனிமேல் இருவரல்ல என்பதற்கான காரணம்; அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். தேவனும் அவருடைய சபையும் ஒன்றாயுள்ளது, "கிறிஸ்து உங்களுக்குள் இருத்தல்,” என்பதே தேவனுடைய மகத்தான வெளிப்பாடு.

இது என்னுடைய கருத்தல்ல; இது அவருடைய வல்லமை, இது அவருடைய வார்த்தை. அவர் இதை வாக்களித்தார்; இது இங்கே உள்ளது. இது இங்கே இருக்கும், இது இங்கே இருக்கிறது என்று அவர் கூறினார். நீங்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய புத்திரராயிருப்பீர்கள் என்றல்ல; நீங்கள் இப்பொழுதே தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள்!

எங்கள் பாத்திரத்தை நிரப்பும், கர்த்தாவே நாங்கள் அதை உயர்த்துகிறோம், எங்களுடைய இந்த ஆத்தும தாகத்தை வந்து தணியும். எங்களுக்கு போதுமென்ற அளவிற்கு, பரலோக அப்பத்தினால் எங்களை போஷியும். எங்களுடைய பாத்திரத்தை நிரப்பும், அதை நிரப்பி, எங்களை முழுமையாக்கும்.

கிறிஸ்து தேவனுடைய பரமரகசியத்தின் வெளிப்படுத்தலாயிருக்கிறார் 63-0728 என்ற செய்தியை கேட்க ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்ஸன்வில் நேரப்படி நாம் கூடிவருகையில் உலகம் முழுவதிலும் உள்ள நாம் என்ன ஒரு எழுப்புதலின் நேரத்தை உடையவர்களாயிருப்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 


 

படிப்பதற்குரிய வேத வசனங்கள்:

பரி. மத்தேயு 16:15-17
பரி. லூக்கா 24-ம் அதிகாரம்
பரி. யோவான் 5:24 / 14:12
1 கொரிந்தியர் 2-ம் அதிகாரம்
எபேசியர் 1-ம் அதிகாரம்
கொலோசெயர் 1-ம் அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 7:9-10