
அன்புள்ள பூலோக மணவாட்டியே,
மல்கியா 4 என்பது தேவனுடைய வார்த்தையாகும், மேலும் இது அவருடைய மணவாட்டியான, நமக்கு, அதனுடைய தன்மையைக் கொண்டு வந்துள்ளது. இது பரிசுத்த ஆவியாகிய, இயேசு கிறிஸ்து என்னும் நபர், செயலில், நம் இருதயங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் உரைத்த ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம், ஏனென்றால் “என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கும்; ஒரு அந்நியனை அவைப் பின் தொடராது.”
ஜெபர்சன்வில்லில் தீர்க்கதரிசியைப் பின்தொடர்ந்த, கடந்த மாதங்கள் எவ்வளவு அற்புதமானவைகளாக இருந்து வந்துள்ளன. தேவன் தம்முடைய பலமுள்ள தூதன் மூலமாகப் பேசி, தேசம் முழுவதிலும் உள்ள அவருடைய ஒரு சிறிய பண்டகசாலையிலிருந்து அவருடைய சேமிக்கப்பட்ட ஆகாரத்தினால் நம்மை போஷித்து வந்துள்ளார். இது அவருடைய மணவாட்டிக்கான, மறைவான மன்னாவாக உள்ளது.
நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியோடும், நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொண்டு களிகூருகிறோம்; "இந்தச் செய்திகளை நான் இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கிறேன், ஆனால் நான் இப்பொழுது கேட்பதுபோல ஒருபோதும் கேட்டதில்லை." இது உண்மையிலேயே நமக்குள் பொங்கி வழிகின்ற ஜீவத் தண்ணீரின் ஒரு ஊற்றாயுள்ளது. நாம் நமக்குள்ளேயே அதை அடக்கிக்கொள்ள முடியாது. நாம் பேச விரும்புவது அவ்வளவுதான். நாம் யார் என்றும், நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்றும் நம்முடைய ஜீவியங்களில் ஒருபோதும் நிச்சமுடையவர்களாக இருந்ததில்லை.
இனி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை:
“எனக்குத் தெரியாது. நான் என்னுடைய வாழ்க்கையில் பல பயங்கரமான காரியங்களைச் செய்திருக்கிறேன். நான் கர்த்தரிடம் பலமுறை தவறியிருக்கிறேன். நான் எப்போதும் குழப்பமடைவது போல் தெரிகிறது.
இனிமேல் சந்தேகத்திற்கு இடமேயில்லை:
"நான் ஒருவேளை உண்மையாகவே ஒரு தேவனுடைய பிள்ளை என்று நம்புகிறேன். நான் அவ்வாறிருக்க விரும்புகிறேன். நான் அவ்வாறிருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன்."
அந்த நாட்கள் எல்லாம் முற்றுபெற்று விட்டன. இப்பொழுதே நாம் அறிவோம். தேவனுக்கே மகிமை!!
நமக்கு எப்படித் தெரியும்? "நான் உங்களுக்குள் இருக்கிறேன், நீங்கள் எனக்குள் இருக்கிறீர்கள். நாம் ஒன்றாய் இருக்கிறோம். நான் உலகத் தோற்றத்திற்கு முன்பே உங்களைத் தெரிந்துகொண்டேன். நீங்கள் என்னுடைய மாம்சத்தின் மாம்சமும், எலும்பின் எலும்புமாயிருக்கிறீர்கள்" என்று ஒலிநாடாக்களில் அவருடைய சத்தத்தின் மூலமாக நம்மிடத்தில் நேரடியாக பேசிக்கொண்டும், திரும்பத் திரும்ப இதை நமக்கு சொல்லிக் கொண்டும் வருகிறார்.
நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த உலகம் எப்படி நம்முடையது அல்ல என்றும், அது சாத்தானின் ஏதேன் என்பதைப் பற்றி நமக்குச் சொல்ல தேவன் ஞாயிற்றுக்கிழமை நம்மிடம் என்னே ஒரு பரிபூரணமான செய்தியைப் பேசினார். அவன் ஆதியிலே ஏவாளை எப்படி வெறுமனே ஒரு வார்த்தையை சந்தேகித்து கேள்விக் கேட்கும்படி வஞ்சித்தான். அவள் தேவனுடைய பரிசுத்தத் திரையை எடுத்துவிட்டு, அறிவின் திரையை அணிந்துகொண்டாள், அப்பொழுதே அவளுடையக் கண்கள் திறக்கப்பட்டு, அவள் நிர்வாணமாக்கப்பட்டதை அறிந்து கொண்டாள்.
சாத்தான் மூல வார்த்தையைத் தாறுமாறாக்கி, அவள் இன்னமும் நிர்வாணமாயிருப்பதை அறியாதிருக்கும்படி இப்பொழுதும் அவளை குருடாக்கியிருக்கிறான். அவள் சாத்தானின் இராணியாகிவிட்டாள், இந்த பூமி அவளுடைய ஏதேன் இராஜ்யமாயிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை, நம்முடைய பரலோக மணவாளன் தம்முடைய பூலோக மணவாட்டிக்கு நம்முடைய வருங்கால வீடு எங்கே உள்ளது என்றும், அது என்னவாயிருக்கும் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறார். “அன்பான இனிய இருதயமே, இந்த உலகத்தைக் குறித்த எல்லாவற்றையும் மற்றும் அது எப்படி சாத்தானின் ஏதேன் என்றும் நான் இப்பொழுது உங்களுக்குக் சொல்லியிருக்கிறேன், என்னுடன் உங்களுடைய வருங்கால வீட்டைப் பற்றி மீண்டும் ஒருமுறை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
நான் உங்களுக்கு மிக விரிவாகச் சொல்ல விரும்புகிறேன். இதைப் பற்றி நான் பலமுறை கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் காத்திருங்கள், இந்த முறை நான் உங்களிடம் சொல்வது நீங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் கேட்காதது போல் இருக்கப்போகிறது.
நான் மிக விரிவாகக் கூற விரும்புகிறேன். என்னுடைய வார்த்தையுடனும் என்னுடைய தீர்க்கதரிசியுடனும் தரித்திருப்பதன் மூலம் நீங்கள் என்னுடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை நான் உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் வாழப்போகும் புதிய நகரத்தின் ஒரு பரிபூரண மாதிரியாக இன்று நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
நாம் உண்மையாகவே ஏதோவொன்றினை அடையப் போகிறோம். நான் உங்களுக்கு சிறிதாக ஏதோ ஒரு காரியத்தை கூறவுள்ளேன்; நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் என்னுடன் அந்த நகரத்தில் வாழ்வீர்கள். என்னுடைய தீர்க்கதரிசி உங்களுடைய பக்கத்து வீட்டில் வசிப்பார். அவர் உங்களுடைய அண்டை வீட்டாராக இருப்பார். நீங்கள் அந்தப் பொன்னான வீதிகளில் நடந்து, என்னுடைய நீரூற்றிலிருந்து பருகுவீர்கள். தேவதூதர்கள் வட்டமிட்டு, கீதங்களை பாடுவதோடு நீங்கள் தேவனுடைய பரதேசிக்குள்ளாக நடந்து கொண்டிருப்பீர்கள்.
என்னுடைய தீர்க்கதரிசியின் கிரீடத்தில் நீங்கள் இரத்தினங்களாக இருப்பீர்கள். அந்த நாளில், நீங்கள் உலகில் உள்ள அனைத்தையும் மிஞ்சிவிடுவீர்கள். ஞாயிற்றுக்கிழமை நான் உங்களுக்கு நிறைய வெளிப்படுத்த விரும்புகிறேன். நாம் ஒன்றுசேர்ந்திருக்கப்போவது என்ன ஒரு அற்புதமான நாளாயிருக்கும்.”
அதற்கு முன் அவர் வந்து நம்மை அழைத்துச் செல்லாவிட்டால், அடுத்த சில வாரங்களில் அவர் நமக்காக நிறைய சேமித்து வைத்திருக்கிறார். வாராவாரம், நாம் யார், நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம், அங்கு எப்படி இருக்கும் என்று நமக்கு சொல்லுகிறார். அவரைத் துதித்து ஆராதிப்பதைத் தவிர வேறொன்றினாலும் நிரப்பப்படாமல், நமக்கு எப்போதும் இருந்து வருகிறதான மிகவும் மகிமையான ஈஸ்டர் வாரத்திற்கு அவர் நம்மை வழிநடத்துவார்.
என்ன ஒரு உற்சாகமான நேரம். நம்முடைய கண்களுக்கு முன்பாக தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வார்த்தை நமக்குள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அவருடைய வருகை எந்த நேரத்திலும் இருக்கலாம். கரங்களில் பூங்கொத்துடன் நாம் வாசலண்டையில் நிற்கிறோம். குதிரைகள் நாலுகாற் பாய்ச்சலில் ஓடிவருவதையும், சக்கரங்களின் கீழிருந்து மணலைக் கிளப்புவதையும் நம்மால் கேட்க முடிகிறது.
குதிரைகள் இழுத்துகொண்டு வரும் வண்டியோ சீக்கிரத்தில் நிறுத்தப்படும். நாம் இந்த பழைய சரீர வாசலிலிருந்து குதித்து, அவருடைய கரங்களுக்குள் பறந்து செல்வோம். அவர் நம்மை நோக்கிப் பார்த்து, "இப்பொழுது எல்லாம் முற்றுபெற்றுவிட்டது, தேனே, நான் உன்னை இப்போது உன்னுடைய வருங்கால வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்" என்று கூறுவார்.
உலகம் இதுவரை கண்டிராத மகத்தான நாட்களின் ஒரு பாகமாயிருக்கும்படி இருக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12 மணிக்கு, பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு 64-0802 என்பதைக் குறித்து தேவனுடைய சத்தம் தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசி அவளிடத்தில் சொல்லப் போவதைக் கேட்க உலகெங்கிலுமிருந்து கழுகுக் குஞ்சுகள் ஒன்று கூடிவரும்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
நினைவூட்டல்: பகல் சேமிப்பு நேரத்தைக் குறித்து மறந்துவிடாதீர்கள்.
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:
பரி. மத்தேயு 19:28
பரி. யோவான் 14:1-3
எபேசியர் 1:10
2 பேதுரு 2:5-6 / 3-வது அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 2:7 / 6:14 / 21:1-14
லேவியராகமம் 23:36
ஏசாயா 4-வது அதிகாரம் / 28:10 / 65:17-25
மல்கியா 3:6