
அன்பான பரிபூரண விசுவாசமுள்ள மணவாட்டியே,
மீண்டும் ஒருமுறை, இந்த செய்தி, தேவனுடைய தனிப்பட்ட காதல் கடிதங்களாய், அவருடைய இரத்தத்தால் எழுதப்பட்டு, அவரது சத்தத்தால் உரைக்கப்பட்டு, நமக்கு என்னவென்று பொருட்படுத்திக் கூறுவதை என்னால் வார்த்தைகளால் கண்டறிய முடியாது. மற்ற அனைத்துமே ஒன்றுமில்லை. நாம் அவரை நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறோம், அது நமக்கு அவருக்கான பரிபூரண அன்பைக் கொடுத்திருக்கிறது. அந்த வார்த்தையிலிருந்து எதுவுமே நம்மை அசைக்க முடியாது. அவர் ஒரு நண்பருக்கு ஒரு நண்பராக நம்முடன் உரையாடுவதைக் கேட்பதைத் தவிர வேறு எந்த மனநிறைவும் நம்முடைய வாழ்வில் இல்லை.
இது நம்மாலும் கூட அல்ல, இது அவர் நம்மில் ஜீவித்து, தம்மையே அழைக்கிறார். இது ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறதாயுள்ளது. சுத்த மகிழ்ச்சியோடு இயங்கு பொத்தானை அழுத்த, தேவன் ஒரு மானிட சத்தத்தை உபயோகித்து, நாம் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று நம்மிடம் சொல்வதை கேட்பதாகும். உலகத் தோற்த்திற்கு முன்னே அவர் நம்மை நேசித்தார் என்று நம்மிடம் சொல்கிறது; ஏனென்றால், நமக்குள் இருந்த எல்லாவற்றோடும் நாம் அவரை நேசிப்போம் என்பதையும், அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் உண்மையாக இருப்போம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
நமக்குத் தேவையான அனைத்தையும், அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஒன்றும் தவறிப்போகவில்லை. நமக்காக தம்முடைய இருதயத்தில் வைத்திருந்த முழு அன்பையும் நமக்குச் சொல்லும்படியாக, அவர் தம்முடைய வார்த்தையை எழுத்து வடிவில் எழுதி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.
அப்படியானால் அவர் நம்மிடம் கூறினது போல் அவருடைய அன்பு இன்னும் அதிகமாகிறது: “நான் மீண்டும் ஒருமுறை மாம்சத்தில் வந்து, எந்த தவறான புரிந்துகொள்ளுதலும், எந்த குழுப்பமும், எந்த வியாக்கியானமும் தேவைப்படாதபடிக்கு, உங்களிடத்தில் உதட்டிலிருந்து செவிக்குப் பேசுவேன். நான் என்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டு, என் அன்பை உங்களுக்கு வெளிப்படுத்துவேன், நீங்கள் அதை மீண்டும் மீண்டும் கேட்க முடியும். பிதா என்னில் இருக்கிறதையும், நான் உங்களில் இருக்கிறதையும், நீங்கள் என்னில் இருக்கிறதையும், நாம் ஒன்றாயிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுடைய மாம்சம் என்னுடைய மாம்சமாயும், உங்களுடைய எலும்பு என்னுடைய எலும்பாயும், என்னுடைய ஆவி உங்களுடைய ஆவியாயுமிருக்கிறது.
என் இருதயத்தில் உள்ள அனைத்தையும் நான் மிக விரிவாகச் சொல்வேன். நான் உங்களுக்காக எழுதியிருக்கிற, உரைத்திருக்கிற வார்த்தைகளை, ஒரு சந்தேகமுமில்லாமல் நீங்கள் அறிந்துகொள்ளும்படி நான் அதை மிகவும் தெளிவாக்குவேன், அவை ஒருபோதும் தவறிப்போகாது.
நான் உங்களுக்கு பரிபூரண விசுவாசத்தைத் தருவேன், அது எல்லாச் சூழ்நிலைகளையும் ஆளுகை செய்கின்ற ஒன்றாய் இருக்கும்.சத்துரு என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்று என் வார்த்தை கூறுகிறதில் நீங்கள் பரிபூரண விசுவாசம் வைத்துள்ளபடியால், அதுவே அதனை ஆளுகை செய்யும். சத்துரு உங்களுக்கு என்ன சொல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறான் என்பதைப் பொருட்படுத்துவதுமில்லை, நீங்கள் அவனுக்கு செவிகொடுப்பதுமில்லை. என்னுடைய ஆவி ஏற்கனவே உங்களுக்கு கூறியிருப்பதைத் தவிர வேறெந்த காரியத்திற்கும் உங்களுடைய செவிகள் செவிடாயுள்ளன. இது உங்கள் இதயங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதிலிருந்து உங்களை எதுவுமே எப்போதுமே அசைக்கப்போவதில்லை."
இந்தச் செய்தியை அறிந்துகொள்வதில் நமக்கு இருக்கும் அந்த பரிபூரண விசுவாசம், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயுள்ளது, அவருடைய வார்த்தையில் நம்முடையது என்று அவர் நமக்குச் சொன்ன ஒவ்வொரு வாக்குத்தத்திற்காகவும் நாம் அதே பரிபூரண விசுவாசத்தையே பயன்படுத்துகிறோம். நாம் சுகவீனமாயிருந்து, சுகமளித்தல் தேவைப்பட்டால், அது நம்முடையது. நமக்கு ஏதேனும் தேவையாயிருந்தால், நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும், ஏனென்றால் நாம் அவருடைய ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் காண்பிக்கும், கடைசி நாளின் அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாக்களாய் இருக்கிறோம்.
அவர் தம்மையே நமக்குள் ஊற்றிக் கொண்டிருப்பது ஒரு காதல் விவகாரமாயுள்ளது. அந்த மகத்தான கலியாண விருந்துக்காக நாம் அவருடன் ஒன்றாகிவிடுகிறோம். அவருடைய ஆவி இங்கே நம்மோடும் நமக்குள்ளும் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான், அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்வதேயாகும்.
நாம் தேவனின் 7-ம் தூதனாகிய செய்தியாளன் அல்ல, ஆனால் நாம் அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். நம்முடைய கரங்கள் அவருடைய கரங்களாயுள்ளன. ஒலிநாடாவில் உரைக்கப்பட்டவை கர்த்தர் உரைக்கிறதாவது என்றே நாம் விசுவாசிக்கிறோம். அது ஜீவனுள்ள வார்த்தையாயுள்ளது.
அவருடைய தீர்க்கதரிசியே நம்முடைய மேய்ப்பர். ஒலிப்பதிவுசெய்யப்பட்ட வார்த்தையை நாம் கேட்கும்போது, அது தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசிக்கொண்டிருக்கிறார் என்றே நாம் விசுவாசிக்கிறோம். நாம் அதை விசுவாசிக்கும்படியான பரிபூரண விசுவாசத்தை பெற்றுள்ளோம்.
தேவன் தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் நம்மிடம் பேசுவதைக் கேட்க நாம் உலகம் முழுவதும் ஒன்றுகூடும்போது, தேவன் தம்முடைய மணவாட்டியை தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையில் ஒன்றுகூட்டி வருவதால், நம்முடைய விசுவாசம் அதிக, அதிகமாக உயர்த்தப்படுகிறது.
நாளை மற்றெந்த நாளையும் போன்றிருக்காது. அவர் நமக்குக் கொடுத்திருக்கும் நம்முடைய பரிபூரண விசுவாசத்தை நாம் எடுத்துக்கொண்டு, நமக்குத் தேவையான எல்லாவற்றிற்கும், நாம் அதைப் பயன்படுத்துவோம், மேலும் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட செய்தியாளன் மூலமாக அக்கினி ஸ்தம்பம் பேசி நமக்குச் சொல்கிறதை நாம் ஏற்றுக்கொள்வோம்:
உங்களுக்கு நான் என்ன செய்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் என்னை "உங்களுடைய மேய்ப்பர் ” என்று அழைத்துள்ளீர்கள்; நீங்கள் சொன்னது சரியே, நான் அவ்வாறே இருக்கிறேன். உங்கள் மேய்ப்பராகிய, நான், இயேசு கிறிஸ்துவினாலே அடையாளங் கண்டுகொள்ளப்பட்டு, அவருடைய கிரியையை செய்வேனேயாகில், அப்பொழுது என் வார்த்தையை விசுவாசியுங்கள். இந்த விசுவாசத்தின் கிரியை நடப்பிக்கையில், உங்கள் மீது கைகளை வைக்கையில், உங்களைத் துன்பப்படுத்துகிற, இன்னல்களையும் வியாதியையும் நான் கடிந்துகொண்டிருக்கிறேன், உங்கள் விண்ணப்பம் எதுவாக இருந்தாலும், நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள் என்றே விசுவாசியுங்கள், ஏனென்றால் விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். நீங்கள் ஜெபிக்கும்போது நீங்கள் கேட்டதை பெற்றுக்கொள்கிறீர்கள் என்று விசுவாசியுங்கள். நான் அதைப் பெற்றுக்கொள்கிறேன் என்றும், உங்கள் ஒவ்வொருவருடைய சுகமளித்தலையும் நான் என்னுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்றும், அது அளிக்கப்பட்டுவிட்டது என்றே நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன், எனக்குள்ளாக இருக்கிற எல்லாவற்றோடும் நான் அதை விசுவாசிக்கிறேன்.
இந்த நாளுக்காக உரைக்கப்பட்டு, ஒலிப்பதிவுசெய்யப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட, தேவனுடைய சத்தமே இந்தச் செய்தி என்று நம்மில் உள்ள யாவற்றோடும் நாம் விசுவாசிக்கிறோம். நாம் எதைக் கேட்டாலும், நாம் பெற்றுக்கொள்வோம் என்று நாம் விசுவாசிக்கிறோம், ஏனென்றால் அது நம்முடையது என்று கூறுகிற கர்த்தர் உரைக்கிறதாவதாக உள்ளது.
பரிபூரண விசுவாசம் 63-0825E என்ற செய்தியில் உங்களுக்கு என்ன தேவையாயிருந்தாலும் அதை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவனுடைய தீர்க்கதரிசி நமக்குச் சொல்வதைத் கேட்கையில் அதைப் பெற்றுக்கொள்ள, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
பரி. மாற்கு 11:22-26 / 16:15-18
பரி. யோவான் 14:12 / 15:7
எபிரெயர் 11:1 / 4:14
யாக்கோபு 5:14
1 யோவான் 3:21