ஞாயிறு
12 நவம்பர் 2023
63-0724
தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை

அன்புள்ள சிறிய கம்பிச்சுருளே, முக்கிய கம்பிச்சுருளே, விவசாயியே & இல்லத்தரசியே,

தேவன் உங்களை எதைச் செய்ய வைத்தாலும், அதற்கு நீங்கள் ஒரு உக்கிராண ஊழியத்தைப் பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் தேவனிடம் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் எவ்வளவு அற்பமானவர் என்று சத்துருவானவன் உங்களிடம் சொன்னாலும், நீங்கள் தேவனுக்கு மிகவும் முக்கியமானவர், அவருடைய மகத்தான கடிகாரம் நீங்கள் இல்லாமல் இயங்க முடியாது.

அவர் உங்களை அழைத்தார், உங்களைத் தெரிந்துகொண்டார், உங்களை முன்குறித்தார், மேலும் அவருடைய மகத்தான கடைசி கால செய்தியின் ஒரு வெளிப்பாட்டை உங்களுக்கு கொடுத்தார். அவர் உங்கள் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளார். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மெய்யான மணவாட்டியாய், அவருடைய இனிய இருதயமாய் இருக்கிறீர்கள், அவர் உங்களை மிகவும் நேசிக்கிறார்.

"மனந்திரும்புங்கள், அல்லது அழிந்து போங்கள்", "வார்த்தைக்குத் திரும்புங்கள்", "ஆயத்தமாயிருங்கள், ஏதோ நடக்கப் போகிறது" என்று தேசங்கள் முழுவதும் உள்ள மக்களை அவர் தொடர்ந்து எச்சரித்துள்ளார். அந்த நேரம் இறுதியாக வந்துவிட்டது. தேவன் வருவதாக நமக்கு வாக்களித்ததுபோலவே, அவர் தம்முடைய மணவாட்டிக்காக வருகிறார். அவர் தம்முடைய சக்கரத்திலிருந்து சக்கரத்தை அழைத்திருக்கிறார்.

அநேகர் இன்றைக்கான தேவனுடைய மகத்தான கடைசி கால செய்தியிலிருந்து விழுந்துபோய், "அவர் சம்பவிக்கப் போகிறது என்று கூறினது நடக்கவில்லையே. எல்லா காரியங்களும் இருக்கிறவிதமாகவே இருக்கிறதே" என்று கூறுகின்றனர். தேவனுடைய தீர்க்கதரிசிகளின் பல தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதற்கு முன்பே தலைமுறைகள் கடந்து வந்தன. ஆனால் இருப்பினும் அவர்கள் கூறினதுபோலவே, அது வார்த்தைக்கு வார்த்தை நடந்தது.

அவருடைய வேதம்: “நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரனின் வருகையிலும் நடக்கும்” என்று நமக்குச் சொல்கிறது. அந்த மாபெரும் ஜலப்பிரளயத்துக்கு முன்பிருந்த உலகை அழிக்க தேவன் நியாயத்தீர்ப்பை அனுப்பும் முன், தேவன் ஒரு தீர்க்கதரிசியை உலகிற்கு அனுப்பினார். அந்த தீர்க்கதரிசி என்ன செய்தார்?

ஜனங்களை அந்த நேரத்திற்காக ஆயத்தப்படுத்தினார். நோவா ஜனங்களை ஆயத்தப்படுத்தினான், அது நியாயத்தீர்ப்புக்கு முன்பான ஒரு இரக்கத்தின் அழைப்பாயிருந்தது.

நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பே நோவா ஜனங்களை எச்சரித்து அவர்களை ஆயத்தப்படுத்தினான். அது அந்த நாளுக்காக தேவன் அருளியிருந்த வழியாயிருந்தது.

தேவன் தம்முடைய திட்டத்தை ஒருபோதும் மாற்றுவதில்லை என்று தேவனுடைய தீர்க்கதரிசி கூறினார். அப்பொழுது அவர் என்ன செய்தாரோ, அதையே அவர் இன்றைக்கும் செய்கிறார். நாம் இன்றைக்கான தேவன் அருளியிருக்கிற வழியோடு தரித்திருந்து இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்போம்.

அதுபோல, தேவனுடைய தீர்க்கதரிசியின் மீதே நாம் அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறோம் என்று ஜனங்கள் கூறுகிறார்கள்; இது பரிசுத்த ஆவியேயன்றி, வில்லியம் பிரான்ஹாம் அல்ல. நாம், ஆமென், என்று கூறுகிறோம், நாம் அந்த மனிதனுக்கு செவி கொடுக்கிறதில்லை, அவர் என்ன கூறினார் என்பதற்கே நாம் செவி கொடுக்கிறோம்.

பரிசுத்த ஆவியானவரே இந்த வேளையின் தீர்க்கதரிசியாயிருக்கிறார்; அவர் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தி, அதை நிரூபிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் மோசேயினுடைய வேளையின் தீர்க்கதரிசியாயிருந்தார். பரிசுத்த ஆவியானவர் மிகாயாவினுடைய வேளையின் தீர்க்கதரிசியாயிருந்தார். வார்த்தையை எழுதிய, பரிசுத்த ஆவியானவர், வந்து வார்த்தையை உறுதிப்படுத்துகிறார்.

ஆனால் சகோதரன் பிரான்ஹாம் கடந்த வாரம் தான் உங்களிடம் கூறினார்;

இப்பொழுது, பாருங்கள், நீங்கள் எதற்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் உங்களை கேட்டுள்ளேன். புரிகிறதா? அதைக் குறித்த அதிகமானது மானிடப் பட்சத்தில் உள்ளது.

கர்த்தர் அதை என்னிடம் சொன்னார் என்று நான் சொல்லவில்லை. "நான்" விசுவாசிக்கிறேன், பாருங்கள். அதை செய்யக்கூடாது என்று நான் விசுவாசிக்கிறேன்.

எனக்கும் என் வீட்டாருக்குமோவென்றால், தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் விசுவாசிக்கிறதையே, மற்ற எந்த ஊழியக்காரரையும், பேராயரையும் அல்லது மனிதனையுங் குறித்து சிந்திக்கிறதை அல்லது உணருகிறதையுங் கூட நான் எடுத்துக் கொள்வேன்.

தேவன் எப்போதாவது அவருடைய தீர்க்கதரிசி எதை விசுவாசிக்கிறார், உணருகிறார் அல்லது நினைக்கிறார் அல்லது ஆவியில் ஏவப்பட்டிருக்கவில்லையா என்பதை நிதானிக்க யாரை அனுப்பினார்?...அவர் யாரென்று நான் நினைக்கிறேன் என்பதை உங்களுக்குச் சொல்லட்டும்.

கோராகை கவனியுங்கள், தேவன் மோசேயை செய்தியுடன் அனுப்பின நாட்களில் கோராகும் தாத்தானும் யோசனை செய்து, மோசேயிடம் வந்து, “இப்பொழுது, ஒரு நிமிடம், நீர் மிஞ்சிப்போகிறீர். நீர் கடற்கரையில் உள்ள ஒரே கூழாங்கல்தான் என்றும்; நீர் மாத்திரமே, சேற்றில் உள்ள ஒரு வாத்து என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறீர். பரிசுத்தமுள்ள மற்ற ஜனங்களும் கூட இருக்கிறார்கள் என்று நான் உனக்குத் தெரியப்படுத்துவேன்!” என்றனர்.

எச்சரிக்கை, நியாயத்தீர்ப்பு சமீபித்துவிட்டது. மூல வார்த்தைக்குத் திரும்புங்கள். நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்துக்குத் திரும்புங்கள். தேவனுடைய தீர்க்கதரிசியண்டைக்குத் திரும்புங்கள். இந்த செய்தி, அவருடைய சத்தம். இது உங்களுக்கு முதன்மையானதும், மிக முக்கியமான காரியமுமாயும் இருக்க வேண்டும்.

இந்தச் செய்தியைப் பிரசங்கிக்கவும் போதிக்கவும் மற்றவர்களுக்கு ஒரு சத்தமும், அழைப்பும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் தேவனுடைய மணவாட்டியாக இருக்க விரும்பினால், ஒலிநாடாக்களும், அந்த சத்தமும், உங்களுடைய வீடுகளில் உங்களுடைய கார்களில், உங்களுடைய சபையில், நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தமாய் இருக்க வேண்டும்.

கர்த்தருடைய வருகை சமீபித்துவிட்டது என்று உலகத்திற்கு தேவனுடைய தீர்க்கதரிசி எச்சரிக்கையில்,ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களுடன் அந்த சத்தத்தைக் கேட்க வாருங்கள். இந்த செய்தியை கேட்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை 63-0724.

 

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

ஏசாயா 38:1-5
ஆமோஸ் அதிகாரம் 1