
அன்புள்ள பரிபூரண விசுவாச விசுவாசிகளே,
ஒவ்வொரு நாளும் நம்முடைய இருதயங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் துடிக்கிறது. அவர் விரைவில் வருவதற்கான நேரத்திற்காகவே நாம் காத்திருக்கிறோம். எல்லா அச்சங்களும் மறைந்துவிட்டன. "நாம் அவருடைய மணவாட்டியா?" என்று இனி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் இது நம் இருதயங்களில் பதிந்துள்ளது, நாம் அவருடைய மணவாட்டி.
நாம் ஒரு பரலோக சூழ்நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் ஊழியத்திற்கு செவிகொடுத்து, அவருடைய சபையில் மாம்சத்தில் தோன்றியிருக்கிறோம். இந்த செய்தி தேவனுடைய வார்த்தையால் மிகவும் முழுமையாக ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது, அது ஒரு மனிதனாக இருக்க முடியாது, அது தேவன் தம்முடைய மணவாட்டியிடம் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதாக இருக்க வேண்டும்.
இந்த ஒலிநாடாக்களில் நம்முடன் பேசிக்கொண்டிருப்பது ஒரு மனிதன் அல்ல, அது தேவன் என்றே நாம் விசுவாசிக்கிறோம்.
நான் என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றால், “உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்.” சாத்தான் என்னைக் குறித்து தீதாக உங்களிடத்தில் பேச அனுமதிக்காதீர்கள்; ஏனென்றால் அவைகள் அதிகம் உள்ளன. ஆனால் நீங்கள் அந்த நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; ஏனென்றால், நீங்கள் அவ்வாறு நிலைத்திருக்கவில்லையென்றால், அது சம்பவிக்காது. ஒரு மனிதனாக, என்னைப் பார்க்காதீர்கள்; நான் ஒரு மனிதன், நான் தவறுகள் நிறைந்தவன். ஆனால் நான் அவரைக் குறித்து என்ன கூறிக் கொண்டிருக்கிறேன் என்பதையே நோக்கிப் பாருங்கள். அது அவரே. அந்த ஒருவர் அவரே.
அவர் என்ன கூறுகிறார் என்பதில் நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருந்து விசுவாசிக்க வேண்டும், இல்லையென்றால் அது நடக்காது. பலர் நினைப்பது போல், தேவனுடைய தீர்க்கதரிசியை நாம் ஒரு மனிதனாக நோக்கிப் பார்க்கிறதில்லை. நாம் மானிட மாம்சத்தின் திரைக்குப் பின்னால் இருக்கிறோம், நாம் பார்ப்பது மற்றும் கேட்பது எல்லாம் தேவன் மனித உதடுகளினூடாக பேசுவதை மட்டுமே, மேலும் நம்பிக்கைக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்.
அதுவே இன்றைக்கான இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு. ஒலிநாடாக்களில் பேசுவது தேவன், மனிதன் அல்ல என்று விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதைத் தவறவிட்டால், என் நண்பரே, நீங்கள் இந்த மணிநேரத்தின் செய்தியைத் தவறவிட்டுவிட்டீர்கள், நீங்கள் மணவாட்டியாக இருக்க முடியாது.
சாத்தான் அதற்கு தனது வியாக்கியானத்தை அளிக்கிறான், மேலும் 99% சமயங்களில் அவன் ஏவாளுக்கு செய்ததைப் போலவே செய்தியை மேற்கோள் காட்டுகிறான், ஆனால் அவள் வார்த்தையுடன் தரித்திருக்கும்படிக்கு கட்டளையிடப்பட்டாள்; ஆதாம் அவளிடம் சொன்னது தேவன் கூறினதைத்தானேயன்றி, வேறு யாரோ சொன்ன இது என்ன பொருட்படுத்துகிறது என்பதை அல்ல. அவள் தேவனுடைய சத்தத்தோடு தரித்திருந்திருக்க வேண்டும்.
இதுவே உலகம் எப்போதும் அறிந்துள்ளதில் மகத்தான நாளாய் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் ஜீவியம் தாமே, அவருடைய தீர்க்கதரிசியின் ஜீவியத்தில் ஜீவித்து, வெளிப்படுத்தப்பட்டு, இப்போது அவருடைய மணவாட்டியான, நமக்குள் மாம்சத்தில் ஜீவித்துக்கொண்டிருக்கிறது.
அவர் நமக்கு செய்யும்படி கட்டளையிட்டதை நாம் சரியாக செய்து கொண்டிருக்கிறோம்; ஒலிநாடாக்களில் தேவனுடைய சத்தத்தோடு தரித்திருப்பதன் மூலம் வார்த்தையுடன் தரித்திருங்கள். இதுவே இன்றைக்கான தேவனுடைய ஒலிநாடா ஊழியமும், நிகழ்ச்சி நிரலாயுமுள்ளது.
வில்லியம் மரியன் பிரான்ஹாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்றும், வார்த்தையில் மறைக்கப்பட்டிருந்த எல்லா ரகசியங்களையும் பேசி வெளிப்படுத்த தேவன் தெரிந்துகொண்ட ஒருவர் என்றும், இந்த தலைமுறைக்கு தேவனுடைய சத்தம் என்றும், மற்ற எந்த மனிதனும் கொண்டிராத விசுவாசத்தைக் கொண்டிருந்த ஒரு மனிதன் என்றும், கர்த்தருடைய தூதன், “ஜனங்கள் உம்மை விசுவாசிக்கும்படி செய்தால், உன்னுடைய ஜெபங்களுக்கு முன்பாக ஒன்றுமே நிற்காது” என்று சொன்ன ஒருவர் என்றும் நீங்கள் உண்மையாகவே விசுவாசித்தால், அப்பொழுது இந்த ஞாயிற்றுக்கிழமை மற்றெதைப் போன்றும் இல்லாத ஒரு முக்கியமான நாளாய் இருக்கும்.
இந்தச் செய்தியின் வெளிப்பாட்டை நம்மிடமிருந்து எப்போதுமே எடுத்துப்போடக் கூடியது எதுவும் இல்லை, எதுவுமே இல்லை. நாம் அதை ஒருபோதும் சந்தேகிக்க முடியாது. அவர் அதைக் கூறியிருந்தால், நாம் அதை விசுவாசிக்கிறோம். நாம் அவை எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம், ஆனால் அப்படியிருக்கும் போதும் நாம் அதை விசுவாசிக்கிறோம்.
இயேசுதாமே நமக்குச் சொன்னார்: “உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்.” அது நம்முடைய இருதயங்களில் பதியட்டும். அவருடைய ஆவி நம்மில் ஜீவித்துகொண்டிருக்கிறது. அதை நம்மால் புரிந்துகொள்ள முடியுமா? இப்போது, இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவரான, தேவன் தாமே, அக்கினித் ஸ்தம்பமாக, நம்மில் ஜீவித்துக் கொண்டும், வாசம் செய்துகொண்டும் இருக்கிறாரா? அது உண்மை என்று நாம் எப்படி அறிவோம்? தேவன் அவண்ணமாய்க் கூறினாரே!!
நாம் மிகுந்த ஒரு தோல்வியைத் தழுவியவர்கள் என்று சாத்தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் சொல்வது சரிதான், நாம் அவ்வாறு தான் இருக்கிறோம். அவன் நமக்கு நினைவூட்டுகிறான், நாம் வார்த்தையில் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அதுவும் சரிதான், நாம் அவ்வாறு இல்லை. நாம் செய்யக் கூடாது என்று தெரிந்த காரியங்களையே நாம் செய்கிறோம். எங்களை மன்னியும், கர்த்தாவே, அவன் சொல்வது சரிதான்.
ஆனால், நம்முடைய எல்லா தவறுகளிலும், நம்முடைய எல்லா பலவீனங்களிலும், நம்முடைய எல்லா தோல்விகளிலும் கூட, நாம் மணவாட்டி என்ற உண்மையை, அது மாற்றுகிறதில்லை. நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்!
நாம் நம்மையோ அல்லது நம்மால் செய்யக்கூடிய எந்த காரியத்தையோ நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை, நாம் ஒரு அலங்கோலமாக இருக்கிறோம். அவர் நம்மைத் தெரிந்துகொண்டு, அவருடைய வார்த்தையின் ஒரு வெளிப்பாட்டைக் கொடுக்கிறார் என்பதை நாம் அறிவோம், அந்த வெளிப்பாட்டை நம்மிடமிருந்து எதுவும் எடுக்க முடியாது. அது நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் பதியப்பட்டுள்ளது.
நாங்கள் பரிபூரண விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டும் என்று அவர் எங்களிடம் சொன்னார். உம்முடைய வார்த்தையில் நாங்கள் பரிபூரண விசுவாசம் கொண்டிருக்கிறோம். கர்த்தர் உரைக்கிறதாவது என்று உம்முடைய தீர்க்கதரிசி கூறினதில் நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம். இது தீர்க்கதரிசியினுடைய வார்த்தையல்ல, ஆனால் எங்களுக்கான உம்முடைய வார்த்தை.
உம்முடைய தீர்க்கதரிசி எங்களுக்கு சொன்னது என்னவென்றால், என்னவெல்லாம் தேவையோ, நாங்கள் விசுவாசித்து, உமது வார்த்தையில் விசுவாசம் கொண்டிருந்தால், எங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் விசுவாசிக்கிறோம்.
கர்த்தாவே, எனக்கு ஒரு தேவை இருக்கிறது. உமது வார்த்தையில் நான் கொண்டுள்ள முழு விசுவாசத்தோடு நான் உமக்கு முன்பாக வந்து கொண்டிருக்கிறேன், ஏனென்றால் அது தவறிப் போக முடியாது. ஆனால் இன்றைக்கு, கர்த்தாவே, நான் என்னுடைய விசுவாசத்தோடு மாத்திரம் உமக்கு முன்பாக வந்துகொண்டிராமல், உம்முடைய வல்லமையான ஏழாம் தூதனாகிய செய்தியாளருக்கு நீர் அளித்த விசுவாசத்தோடு வருகிறேன்.
ஓ, தேவனாகிய கர்த்தாவே, எங்களிடத்தில் இரக்கமாயிருக்கும்படி நான் வேண்டிக்கொள்கிறேன். இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கிற ஒவ்வொரு புருஷனும் ஸ்திரீயும், எந்த விதமான ஒரு சுகவீனத்தை அல்லது துன்பத்தைக் கொண்டிருந்தாலும்; மோசே பிளவிலே தன்னையே ஜனங்களுக்காக வைத்ததுபோல, இன்றிரவு நான் என்னுடைய இருதயத்தை, கர்த்தாவே உமக்கு முன்பாக வைக்கிறேன். உம்மிடத்தில் எனக்குள்ள எல்லா விசுவாசத்தோடும், நீர் எனக்கு அளித்திருக்கிறதையும், நான் அவர்களுக்கு அளிக்கிறேன்.
நான் கூறுகிறேன்; நான் கொண்டுள்ள அப்படிப்பட்ட விசுவாசத்தை, நான் இந்த கூட்டத்தாருக்கு, நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அளிக்கிறேன்! உங்களுடைய சுகவீனங்களை அகற்றுங்கள், ஏனென்றால் உங்களுடைய ஜீவனை எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிற பிசாசைக் காட்டிலும் உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவராய் இருக்கிறார். நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். நீங்கள் மீட்கப்பட்டவர்கள்.
அது முடிந்ததுவிட்டது. அவருடைய வார்த்தை தவறிப் போக முடியாது. நமக்கு எது தேவையோ, அதை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
தேவனுடைய சத்தம் அவருடைய விசுவாசத்தை நம்முடைய விசுவாசத்தோடு அளிப்பதை கேட்கும்படிக்கு உலகத்தை சுற்றிலும் உள்ள மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்று கூடி தேவனிடத்தில் இருந்து வருகிற இந்த மகத்தான ஆசீர்வாதத்தையும் அபிஷேகத்தையும் பெற்றுக்கொள்ள ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
63-1110E உங்களிலிருக்கிறவர்