ஞாயிறு
11 ஆகஸ்ட் 2024
65-0725E
மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?

அன்புள்ள ஒரே குழுவே,

நாம் மிகுந்த எதிர்பார்ப்பிலும் மற்றும் எதிர்பார்ப்புகளோடும் இருக்கிறோம். நம்மால் அதை உணர முடிகிறது, ஏதோ நடக்கப் போகிறது. உம்முடைய சத்தத்தைக் கேட்க; எதையும், நீர் கூறுகிற ஒவ்வொரு காரியத்தையும் பெற்றுக் கொள்ள, நாங்கள் ஒன்றிணைக்கப்பட விரும்புகிறோம்; எங்களுக்கு அது வேண்டும். நாங்கள் அதனுடைய பாகமாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசிக்கிறோம்.

என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது? தேவன் சரித்திரத்தை படைத்துக் கொண்டிருக்கிறார். தேவன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அது எப்போதும் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது எல்லா விமர்சகர்களையும், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் கேள்விப்பட்ட செய்தியின் பருந்துகளையும் கொண்டுவருகிறது, ஆனால் அது அவருடைய கழுகுகளையும் கூட ஒன்றாகக் கொண்டுவருகிறது. ஏனென்றால், பிணம் எங்கேயோ, அங்கே கழுகுகள் வந்து கூடும்.

இது தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் பதில், இதோ நான் உங்களுக்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன். தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை ரூபகாரப்படுத்திக் கொண்டிருக்கிறார். இது தேவன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறதாயுள்ளது. தேவன் சரித்திரத்தை படைத்துக் கொண்டு, அவருடைய வார்த்தையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இது மூன்றாவது இழப்பு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாகும்.

நான் செய்கிறதெல்லாமே எல்லா சபை தலைவர்களுடனும் உடன்படவில்லை என்பது போல் தென்படுகிறது என்பதும், மற்றும் அவர்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் கண்டனம் செய்வது போல் தென்படுகிறது என்பதும்,எனக்குத் தெரியும். ஆனால் இயங்கு பொத்தானை அழுத்தி, செய்தியை, அந்த சத்தத்தைக் கேட்டு, அதைப் பின்பற்றுகிற முன்குறிக்கப்பட்டிருக்கிற அந்த குறிப்பிட்ட ஜனக் குழுவாய் நாம் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன்.

நாம் கூட்டத்தை புறக்கணிக்கிறோம். நாம் அவிசுவாசியின் விமர்சனத்தை புறக்கணிக்கிறோம். நமக்கு அவர்களுடன் எந்த வாக்குவாதமும் இல்லை. நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது, அது விசுவாசித்து, நம்மால் அதைக் குறித்து பெற்றுக் கொள்ள முடிந்த ஒவ்வொரு துணுக்கையும் பெற்றுக் கொள்ளும்படி, இயேசுவின் பாதத்தண்டை அமர்ந்த மரியாளைப் போல அதை பதித்துக் கொள்வதேயாகும்.

நமக்கு வேறு எதிலும் ஆர்வம் இல்லை. நமக்கு வேறு எதுவும் தேவையில்லை. நாம் கேட்க வேண்டிய ஒவ்வொரு காரியமும் ஒலிநாடாக்களில் உள்ளது என்றே நாம் விசுவாசிக்கிறோம். தேவனுடைய வார்த்தைக்கு வியாக்கியானமே தேவையில்லை.

வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படுகிறது. ஐயா, இது என்ன சமயம், இது என்ன கவர்ச்சி? தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறாரே! அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.

கவர்ச்சி என்ன? தேவன், மீண்டும் ஒருமுறை, தம்முடைய வார்த்தையை நிறைவேற்றி, சபைகளிலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும், வீடுகளிலும், தேசம் முழுவதிலுமிருந்து சிறிய ஒலிபெருக்கிகள் மூலம் கேட்கும்படி மேற்கு கடற்கரை வரையிலும், அரிசோனா மலைகள் வரையிலும், டெக்ஸாஸ் சமவெளிகளிலும், கிழக்கு கடற்கரை வரையிலும் தேச முழுவதிலும் உலகத்தை சுற்றிலும் தம்முடைய மக்களை ஒன்று கூட்டுகிறார்.

பல மணி நேர இடைவெளியில் நாம் இருக்கிறோம், ஆனால் கர்த்தாவே, நாங்கள் ஒரே குழுவாகஒன்று கூடி, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காக காத்திருக்கிறோம். உம்முடைய தீர்க்கதரிசி இங்கே இருந்தபோது உம்முடைய மணவாட்டியை ஒன்றிணைக்க அவர் என்ன செய்தாரோ அதையே செய்யும்படி பின்பற்ற நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அவர் செய்ததே என்னுடைய உதாரணமாக இருக்கிறது.

இங்குள்ள பிரான்ஹாம் கூடாரத்தில் அனைவரையும் அமர வைக்க எங்களிடம் இடம் இல்லை, எனவே அவர் அப்போது செய்தது போல், நாம் தொலைபேசி மூலம் பரப்பும்படி அவர்களுக்கு வார்த்தையை அனுப்ப வேண்டும். நாங்கள் இங்கே, ஜெபர்சன்வில்லில், நம்முடைய சொந்த சபைகளில், நாம் இங்கே கூடி, கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

இந்த கடைசி நாட்களில் அநேகர் உம்முடைய பரிபூரண சித்தத்திற்கு புறம்பாக உமக்கொரு சேவையை செய்ய முயற்சிப்பார்கள் என்று நீர் எங்களிடத்தில் சொல்லியிருக்கிறீர். உண்மையான பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்ட கள்ளப் போதகர்கள் பலர் இருப்பார்கள். கர்த்தாவே, உறுதியாக இருப்பதற்கு எங்களுக்குத் தெரிந்த ஒரே வழி, வார்த்தையுடன், ஒலிநாடா போதனையுடன் தரித்திருத்தலே, உம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தோடு தரித்திருப்பதாகும்.

இதை பின்பற்றுவதைத் தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியாத உம்முடைய முன்குறிக்கப்பட்ட வித்தாய் நாங்கள் இருக்கிறோம் என்று விசுவாசிக்கிறோம்; இது எங்களுக்கு ஜீவனை பார்க்கிலும் மேலானதாக இருக்கிறது. எங்களுடைய ஜீவியங்களை எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் நீங்கள் அதை எடுத்துக்கொள்ளாதீர்கள்.

இந்த ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கப் போகிறது? தேவன் அவருடைய வார்த்தையை நிறைவேற்றுவார். தேசம் முழுவதும், ஒரு தொலைபேசி பரப்புதலின் வாயிலாக, நூற்றுக்கணக்கான மக்கள் தேசம் முழுவதும், ஒரு கடற்கரையிலிருந்து மற்றொன்றிற்கு, வடக்கிலிருந்து தெற்கே, கிழக்கிலிருந்து மேற்கு வரை ஒருவர் மீது ஒருவர் கரங்களை வைப்பார்கள்.

உலகெங்கிலும் உள்ள வெளிநாடுகளில் இருந்தும், நாம் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் கரங்களை வைப்போம். நீரோ, "எங்களுக்கு ஒரு ஜெப அட்டை தேவையில்லை, நாங்கள் ஒரு ஜெப வரிசையினூடாக வர வேண்டியதில்லை, எங்களுக்கு விசுவாசம் மாத்திரமே தேவை" என்று எங்களிடத்தில் சொன்னீர்.

நாங்கள் எங்களுடைய கரங்களை உயர்த்தி, "நான் ஒரு விசுவாசி" என்று கூறுவோம். என்ன நடக்கப் போகிறது?

சாத்தானே நீ தோற்கடிக்கப்பட்டாய். நீ ஒரு பொய்யன். மேலும், தேவனுடைய ஊழியக்காரன் என்ற முறையில், ஊழியக்காரர் என்ற முறையில், நீ தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜனங்களை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கட்டளையிடுகிறோம், ஏனெனில், “என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்” என்று எழுதியிருக்கிறதே.

அன்புள்ள தேவனே, அந்த நாளில் கல்வாரி மலையின் மேல் ஒரு கவர்ச்சியினால், எல்லா சுகவீனங்களையும், வியாதிகளையும், பிசாசினுடைய எல்லாக் கிரியைகளையும், நீர் தோற்கடித்துவிட்ட பரலோகத்தின் தேவனாயிருக்கிறீர். நீர் தேவனாயிருக்கிறீர். ஜனங்கள் உம்முடைய தழும்புகளால் குணமாகிறார்கள். அவர்கள் விடுதலையாயிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.

தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார்!

நாங்கள் 65-0725E மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன? என்ற செய்தியை கேட்க போகிறபடியால், அவருடைய மணவாட்டியின் ஒரு பாகமான, எங்களுடன் நீங்கள் வந்து செவிகொடுக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன். நாங்கள் ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரத்தில் ஒன்று கூடுவோம்.

ஒரே நேரத்தில் ஒரே செய்தியைக் கேட்க, ஒன்று கூடி வருவதன் மூலம் நாம் ஒரு ஸ்தாபனம் என்று சிலர் உணரலாம், ஆனால் சகோதரன் பிரான்ஹாம் இங்கே இருந்திருந்தால், உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டியை ஒன்று திரட்டி நாம் என்ன செய்கிறோமோ அதைச் சரியாகச் செய்வார் என்றே நான் நம்புகிறேன். அதே நேரத்தில் நீங்கள் அவருக்குச் செவிகொடுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 21:1-4
சகரியா 9:9 / 14:4-9
ஏசாயா 29:6
வெளிப்படுத்தின விசேஷம் 16:9
மல்கியா 3:1 / 4வது அதிகாரம்
பரி. யோவான் 14:12 / 15:1-8
பரி. லூக்கா 17:22-30