
அன்புள்ள மறைவான மன்னாவை புசிப்பவர்களே,
தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த தம்முடைய ஏழாம் தூதனான செய்தியாளரை அனுப்பினாரேயன்றி; மற்றொரு மனிதனை அல்ல, ஒரு மனிதக் குழுவை அல்ல, ஆனால் ஒரு மனிதனையே, ஏனெனில் செய்தியும் அவருடைய செய்தியாளரும் ஒன்றே. தேவனுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. அவர் அதை மனித உதடுகளின் மூலம் தம்முடைய மணவாட்டியிடம் பேசினார், அவர் அதை எப்படி சொன்னாரோ அதை அப்படியே நாம் விசுவாசிக்கிறோம்.
இன்றைக்கு எந்த சத்தம் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்றும், அது நம்மிடத்தில் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதற்கும் நாம் மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய நித்திய இலக்கு அந்த தீர்மானத்தைப் பொறுத்தது; எனவே நாம் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் எது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். எந்த சத்தம் தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிறது? எந்த சத்தம் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையதாயிருக்கிறது? இது என்னுடைய சத்தமாய், என்னுடைய வார்த்தைகளாய், என்னுடைய உபதேசமாக இருக்க முடியாது, ஆனால் அது வார்த்தையாக இருக்க வேண்டும், எனவே அது நமக்கு என்ன சொல்லுகிறது என்பதை புரிந்து கொள்ளும்படிக்கு நாம் வார்த்தைக்கு செல்ல வேண்டும்.
முடிவிலே நம்மை வழிநடத்த ஐந்து விதமான ஊழியத்தை அவர் எழுப்புவார் என்று அது நமக்குச் சொல்கிறதா? அவர்கள் தங்களுடைய ஸ்தானத்தை பெற்றிருப்பதை நாம் வார்த்தையில் தெளிவாகக் காணலாம்; மிக முக்கியமான ஸ்தானங்கள், ஆனால் மணவாட்டியாய் இருக்க நாம் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தங்களை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று எங்காவது வார்த்தை கூறுகிறதா?
தேவ சித்தத்திற்கு புறம்பாக அவருக்கு ஒரு சேவை செய்ய முயற்சிக்கும் அநேக மனிதர்கள் இந்த கடைசி நாட்களில் எழும்புவார்கள் என்று தீர்க்கதரிசி நமக்கு சொன்னார். அவர் அவர்களுடைய ஊழியத்தை ஆசீர்வதிப்பார், ஆனால் அவருடைய மணவாட்டியை வழிநடத்த அது அவருடைய பரிபூரண வழி அல்ல. அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியினுடைய சத்தத்தை விசுவாசித்து கேட்பதே அவருடைய பரிபூரண சித்தமாய் இருக்கிறது என்றும், அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வருவதாகவும் அவர் கூறினார். ஏனென்றால் அது, அது மாத்திரமே கர்த்தர் உரைக்கிறாவது என்பதை உடையதாய் இருக்கிறது. அதனால்தான் அவர் தன்னுடைய தூதனை அனுப்பினார்; அதனால்தான் அவர் இவரைத் தெரிந்து கொண்டார்; அதனால்தான் அவர் அதை ஒலிப்பதிவு செய்திருந்தார். இதுவே அவருடைய மணவாட்டிக்கு ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரமாயும், மறைவான மன்னாவுமாயிருக்கிறது.
ஏனென்றால் இந்த ஏழு சபை காலங்களிலுமே, மனிதர்கள் என்னுடைய வார்த்தைக்கு மேலாக தங்களுடைய சொந்த வார்த்தைக்கே மதிப்பு கொடுக்கிறார்களேத் தவிர, வேறொன்றையுமே நான் காணாதிருக்கிறேன். ஆகையால் நான் இந்த முடிவு காலத்திலே உங்களை என்னுடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிக் கொண்டிருக்கிறேன். இது முடிவு பெற்றாயிற்று. நான் உங்களிடத்தில் சரியாக பேசப் போகிறேன். ஆம், நான் இங்கே சபையின் மத்தியில் இருக்கிறேன். உண்மையும், சத்தியமும், ஆமெனின் தேவனானவர் தம்மை வெளிப்படுத்துவார். அது என்னுடைய தீர்க்கதரிசி மூலமாய் இருக்கும்" என்கிறார்./u>. ஒ, ஆம், அது அவ்வண்ணமாகவே இருக்கிறது.
ஏழு சபை காலங்களிலுமே மனிதர் என்னுடைய வார்த்தைக்கு மேலாக தங்களுடையதற்கே மதிப்பு கொடுக்கிறார்கள். இது இப்போது நம்மிடையே நடந்து கொண்டிருக்கவில்லையா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டுமல்லவா? "சபையில் ஒலிநாடாக்களை இயக்காதீர்கள், ஆனால் உங்கள் போதகர் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், உங்கள் வீட்டில் ஒலிநாடாக்களை போட்டுக் கேளுங்கள்." அவர்கள் அவருடைய சத்தத்தை மிக முக்கியமான சத்தமாக ஒலிநாடாவில் இயக்குவதில்லை, ஆனால் அவர்களுடைய சத்தத்திற்கே முக்கியத்துவமளிக்கின்றனர்.
அவர்கள் தங்களையும், தங்களுடைய ஊழியத்தின் முக்கியத்துவத்தையும், மணவாட்டியை வழி நடத்துவதற்கும், வார்த்தையை கொண்டு வருவதற்குமான தங்களுடைய அழைப்பையும் ஜனங்களுக்கு சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் மணவாட்டி அதன் பேரில் நிற்க முடியாது. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். அவர்கள் அதன் பேரில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்; அது தேவனுடைய சத்தமேயல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. அதைத்தான் வார்த்தை கூறுகிறது.
இன்றைக்கு ஜனங்களுடைய மனதில் உள்ள கேள்வி என்னவென்றால்: தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த யாரைத் தெரிந்து கொண்டார், ஒலிநாடாக்களையா அல்லது ஐந்து விதமான ஊழியத்தையா? அந்த ஊழியம் மணவாட்டியை பரிபூரணப்படுத்துமா? அந்த ஊழியம் மணவாட்டிக்கு வழிகாட்டுமா? தேவனுடைய வார்த்தையின்படி, அது ஒருபோதும் அவருடைய வழியாயிருந்ததேயில்லை.
இந்தச் செய்தியை பல ஆண்டுகளாகப் பின்பற்றி விசுவாசிப்பதாக கூறுகிற பல மனிதர்கள் இன்று இருக்கிறார்கள், ஆனால் இப்போது நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக தங்களுடைய ஊழியத்தையே முன்வைக்கிறார்கள்.
பிறகு எந்த ஊழியத்தை நீங்கள் பின்பற்றுவீர்கள்? உங்கள் நித்திய இலக்கை எந்த ஊழியத்தில் வைப்பீர்கள்? அவர்கள் அனைவரும் செய்தியைப் பிரசங்கிக்க தேவனால் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். நான் அதை மறுக்கவோ கேள்வி கேட்கவோ இல்லை, ஆனால் ஐந்து விதமான ஊழியத்தின் பதவிகளில் உள்ள மிகவும் செல்வாக்கு மிக்க ஊழியர்களில் சிலர், "இது தேவனுடைய சத்தம் அல்ல, இது வெறுமனே வில்லியம் பிரான்ஹாமின் சத்தம்" என்று கூறுகிறார்கள். மற்றவர்கள், "ஒரே- மனிதனுடைய செய்தியின் நாட்கள் முடிந்துவிட்டன" அல்லது "இந்தச் செய்தி முற்றிலுமானதல்ல" என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர் உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறாரா?
நூற்றுக்கணக்கான தங்களுடைய தொடர் கூட்டங்களில் பிரசங்கித்த புருஷர்கள்; ஐந்து விதமான ஊழியத்தின் மகத்தான தலைவர்கள், இப்போது செய்தியை மறுதலித்து, "இந்த செய்தி தவறானது" என்று கூறுகிறார்கள்.
இன்றைக்கு பெரும்பாலான எல்லா ஊழியமும், “நீங்கள் சபையில் தேவனுடைய தூதனின் சத்தத்தைக் கேட்க வேண்டாம், உங்களுடைய வீடுகளில் மாத்திரமே கேட்க வேண்டும்” என்றும், சகோதரன் பிரான்ஹாம் சபையில் ஒலிநாடாக்களை இயக்குங்கள் என்று ஒருபோதும் கூறவேயில்லை” என்றும் கூறுகிறது.
அது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் என்றும், மனுஷகுமாரன் பேசுகிறார் என்றும் விசுவாசிப்பதாக கூறிவிட்டு, இப்படிப்பட்ட ஒரு வஞ்சகமான அறிக்கைக்கையை நம்புகிற ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ என்னால் நம்ப முடியவில்லை, இது உங்களுடைய வயிற்றில் உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் மணவாட்டியாய் இருந்தால், அது அவ்வாறு செய்யும்.
தேவன் தம்முடைய வார்த்தையைக் குறித்த சிந்தையை ஒருபோதும் மாற்றுவதில்லை. அவர் தம்முடைய ஜனங்களை வழிநடத்த எப்போதும் ஒரு மனிதனையே தெரிந்து கொண்டுள்ளார். மற்றவர்கள் அவர்களுடைய ஸ்தானத்தை பெற்றிருக்கிறார்கள், ஆனால் அவர் ஜனங்களை வழிநடத்தும்படி தெரிந்து கொண்டவரிடத்திற்கே ஜனங்களை அவர்கள் வழிநடத்த வேண்டும். ஜனங்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த ஊழியக்காரர்கள் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறதைக் கேளுங்கள். தீர்க்கதரிசியினுடைய ஊழியத்திற்கு முன்பாக தங்களுடைய ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க அவர்கள் மேற்கோள்களை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும்படி ரூபகாரப்படுத்தப்பட்டு, அவர் நிரூபித்திருக்கிற தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தை கேட்பதைக் காட்டிலும் எந்த மனிதனுடைய ஊழியம் மிக முக்கியமானதாக இருக்க முடியும்?
உண்மையாகவே அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதர்கள், அவர்கள் மேல் உண்மையான பரிசுத்த ஆவியிருக்க முடிந்தும், தவறாய் இருக்கிறார்கள் என்று அவர் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். உறுதியாக இருப்பதற்கு ஒரு வழி மாத்திரமே உள்ளது, மூல வார்த்தையுடன் தரித்திருங்கள், ஏனெனில் இந்த செய்தியும் செய்தியாளரும் ஒன்றே. கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும்படிக்கு தேவன் ஒரு சத்தத்தை மாத்திரமே தெரிந்துகொண்டார்…ஒன்றே.
ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தத்திலிருந்து தேவனுடைய வார்த்தையை கேட்பதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது வேறு எதுவும் இல்லை என்று உண்மையான ஊழியம் உங்களுக்கு சொல்லும். அவர்கள் பிரசங்கிக்கலாம், போதிக்கலாம் அல்லது அவர்கள் என்ன செய்ய அழைக்கப்பட்டாலும், அவர்கள் தேவனுடைய சத்தத்தை முதலில் வைக்க வேண்டும்; ஆனால் அவர்கள் அதைச் செய்து கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர்களுடைய ஊழியத்தையே முதலில் வைக்கிறார்கள். அவர்கள் விசுவாசிப்பதை அவர்களின் செயல்களே நிரூபிக்கின்றன.
சகோதரன் ஜோசப் ஊழியர்களை நம்புகிறதில்லை என்று கூறுவதன் மூலம் தங்களுடைய பிரசங்க பீடங்களில் தேவனுடைய சத்தத்தை முன்வைப்பதை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்கள் தவிர்க்கிறார்கள். அவர் சபைக்கு செல்வதை நம்புகிறதில்லை. அவர்கள் ஒரு மனிதனை ஆராதிக்கிறார்கள். அவர்கள் ஜோசப்பின் கோட்பாட்டை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் அதே ஒலிநாடாக்களை இயக்கி கேட்பதன் மூலம் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். முக்கிய கேள்வியிலிருந்து மக்களை திசை திருப்புதல். அவர்களுடைய ஊழியம்தான் முதன்மையானது என்று தங்களுடைய ஜனங்களுக்கு போதிப்பதன் மூலம் அவர்கள் எதை விசுவாசிக்கிறார்கள் என்பதை அவர்களுடைய செயல் நிரூபிக்கிறது.
ஜனங்கள் ஒரே ஒலிநாடாவை ஒரே நேரத்தில் கேட்பது ஒரு ஸ்தாபனம் என்று அவர்கள் கூறுகிறார்கள். சகோதரன் பிரான்ஹாம் இங்கே இருந்தபோது, ஒரே நேரத்தில் ஜனங்கள் எல்லோரும் செய்திகளை தொலைபேசி இணைப்பின் மூலம் சரியாக கேட்கும்படி செய்யவில்லையா?
நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், சகோதரன் பிரான்ஹாம் இன்றைக்கு மாம்சத்தில் இங்கே இருந்திருந்தால், ஒரே நேரத்தில் அவர் பேசுவதை கேட்க எல்லா மணவாட்டியையும் தொலைபேசி இணைப்பில் இணைத்திருக்க மாட்டாரா? தேவன் அவரை பரமவீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு செய்ததைப் போல மணவாட்டியை தன்னுடைய ஊழியத்தின் பேரில் ஒன்றாகக் கொண்டுவர முயற்சிக்கமாட்டாரா?
நான் இங்கே ஒன்றை இடையில் கூறட்டும். விமர்சகர்கள் சொல்வார்கள், பாருங்கள், அவர் மனிதனின் பேரில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்; அவர்கள் வில்லியம் மரியன் பிரான்ஹாம் என்ற ஒரு மனிதனை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்!! அதைக் குறித்தும் கூட வார்த்தை என்ன கூறுகிறது என்பதையும் நாம் பார்ப்போமாக:
ஏழாம் தூதனின் நாட்களில், லவோதிக்கேயா காலத்தில், அதனுடைய செய்தியாளன் பவுலுக்கு வெளிப்பட்டது போன்ற தேவ ரகசியங்களை. வெளிப்படுத்துவார். அவர் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூறுவார். அந்தத் தீர்க்கதரிசியை அவருடைய சொந்த நாமத்தில் ஏற்றுக்கொள்பவர்கள் அந்தத் தீர்க்கதரிசியினுடைய ஊழியத்தின் நற்பலனைப் பெறுவார்கள்.
மற்ற எல்லாவற்றையும் விட இது பிசாசுக்கு கோபத்தை உண்டாக்கப் போகிறது, மேலும் அவன் என்னை நோக்கி இன்னும் அதிகமாக தாக்குவான், ஆனால் ஜனங்களே, நீங்கள் இதை வார்த்தையுடன் சரிபார்ப்பது நல்லது. நான் இதைக் கூறினேன் என்பதனால் அல்ல, இல்லை, அப்படியானால் நான் மற்ற மனிதனைப் போல இருப்பேன், ஆனால் உங்கள் இருதயங்களையும் சிந்தனைகளையும் திறந்து வார்த்தையால் சரிபார்க்கவும். வேறு எந்த மனிதனாவது உங்களுக்கு கூறுவதையோ அல்லது வியாக்கியானிப்பதையோ அல்ல, ஆனால் தேவனுடைய தீர்க்கதரிசி என்ன சொன்னார் என்பதையேயாகும்.
இந்தக் கடிதத்திற்குப் பிறகு அவர்கள் உங்களுக்கு மேற்கோளுக்குப் பின் மேற்கோளை மேற்கோளாக கொடுப்பார்கள், மேலும் ஒவ்வொரு மேற்கோளுக்கும் நான் ஆமென் என்று கூறுகிறேன், ஆனால் முக்கியமான காரியத்தைக் குறித்து என்ன? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்க வேண்டும் என்றா அல்லது அவர்களுடைய ஊழியத்திற்கு செவி கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு சொல்ல அவர்கள் மேற்கோள்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களா? அவர்கள் செய்தி, தீர்க்கதரிசி என்று கூறினால், அப்பொழுது அந்த சத்தத்தை உங்களுடைய சபையில் முதலில் வைக்கும்படி அவர்களுக்கு சொல்லுங்கள்.
மனித இயல்பின் அடிப்படையில், எங்கே அநேக ஜனங்கள் இருக்கின்றார்களோ அங்கே அவர்கள் கொண்டிருக்கிற ஒரு பெரிய உபதேசத்தில் ஒரு சிறிய குறிப்புகளில்கூட அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பர் என்பதை எவருமே அறிவர்.
அங்குதான் காரியமே உள்ளது. இந்த ஒரு மேற்கோள் அது முடியாது என்று உங்களுக்கு சொல்கிறது, மேலும் அது மனிதக் குழுவாக இருக்காது. இது மனித இயல்பின் அடிப்படையில் மட்டுமேயுள்ளபடியால், இது ஜனங்களை ஒன்றிணைக்கும் ஊழியம் அல்ல, அவர்கள் முக்கிய கோட்பாடுகளின் குறைவான விஷயங்களிலேயே பிரிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் எல்லோராலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை, எனவே நீங்கள் மூல வார்த்தைக்குத் திரும்ப வேண்டும்.
அப்படியானால் இந்த கடைசிக் காலமானது மாசற்ற வார்த்தை மணவாட்டியை திரும்பவும் வெளிப்படுத்தப் போகின்றபடியால், இந்த கடைசி காலத்தில் திரும்ப அளிக்கப்படவிருக்கின்ற பிழையற்ற வல்லமையை யார் உடையவர்களாயிருப்பர்?
யார் நம்மை வழிநடத்துவார்? பிழையற்ற வல்லமை கொண்ட ஒரு சத்தம் மணவாட்டியை வழிநடத்த வேண்டும்.
அதாவது பவுலின் நாட்களில் பரிபூரணமாக அளிக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தையை நாம் மீண்டும் ஒருமுறை பெற்றுக் கொள்வோம் என்பதை அதன் பொருளாகும்.
மகிமை…இது பரிபூரணமாக கொடுக்கப்பட்டு, பரிபூரணமாக புரிந்து கொள்ளப்பட்டது. அதற்கு எந்த குறுக்கீடும் தேவையில்லை, அது பரிபூரணமாக கொடுக்கப்பட்டபடியால், மணவாட்டியாகிய, நாம், ஒவ்வொரு வார்த்தையையும் பரிபூரணமாக புரிந்துகொண்டு விசுவாசிக்கிறோம்.
அங்குதான் காரியம் உள்ளது. அவர் ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.
அவர் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.
அவர் யோவான் ஸ்நானனைப் போன்றும், பண்டைய எலியாவைப் போன்றும், உலகமார்க்கத்திற்கும், கல்விக்கும், ஸ்தாபனத்திற்கும் தொடர் பற்றவராயுள்ள ஒருவரையே அனுப்புகிறார்.
அவர் தேவன்கூறுவதை மாத்திரமே கேட்பார்.
அவர், "கர்த்தர் உரைக்கிறதாவதை" உடையவராயிருந்து, தேவனுக்காகவே பேசுவார்.
அவர் தேவனுக்காக பேசும் சத்தமாயிருந்து.
அவர் மல்கியா 4:6-ல் உரைக்கப்பட்டிருக்கிறபடியே, பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்திற்குத் திருப்புவார்.
அவர் கடைசி காலத்தின் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை திருப்பிக் கொண்டு வருவார், பவுல் கூறினதுபோன்ற சரியான சத்தியத்தைக் கூறுகிற ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிக்கே அவர்கள் செவி கொடுப்பர்.
அவர்கள் கொண்டிருந்த சத்தியத்தைப் போன்ற சத்தியத்தையே அவர் திரும்ப அளிப்பார்.
அந்த நாளில் அவரோடுள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கர்த்தரை உண்மையாய் வெளிப்படுத்துகிறவர்களுமாயும், அவருடைய சரீரமாயும், அவருடைய சத்தமாயுமிருந்து, அவருடைய கிரியைகளைச் செய்கிறவர்களுமாயிருப்பர். அல்லேலூயா! உங்களுக்கு அது புரிகின்றதா?
நாம் அதை பார்க்கிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம். நான் அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்.
அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12 மணிக்கு, சரியான சத்தியத்தை அவர் நமக்கு அளிக்கவுள்ளபடியால், இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை இணைக்கும் சத்தமான, தேவனுடைய வாய் பேசுவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால் எங்களுடன் சேர்ந்து கொள்ள வரும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
65-0725M — கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்