
அன்புள்ள பூரண சற்குணரே,
ஒலிநாடாக்களில் நாம் கேட்கும் சத்தம், ஏதேன் தோட்டத்திலும், சீனாய் மலையிலும், மறுரூப மலையிலும் அவருடைய வார்த்தையை ஒலித்த அதே சத்தமாயிருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவின் முழுமையான மற்றும் முடிவான வெளிப்பாட்டுடன் இன்று ஒலிக்கிறது. அது அவருடைய மணவாட்டியை வெளியே அழைத்து, எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு அவளை ஆயத்தப்படுத்துகிறது. மணவாட்டி அதைக் கேட்டுக் கொண்டும், அதை ஏற்றுக் கொண்டும், அதில் ஜீவித்துக்கொண்டும் இருக்கிறாள், அதை விசுவாசிப்பதன் மூலம் அவள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள்.
எந்த மனிதனும் நம்மிடமிருந்து அதை எடுத்துப் போட முடியாது. நம்முடைய ஜீவியங்களை சீர்குலைக்க முடியாது. அவருடைய ஆவி நமக்குள் கொழுந்து விட்டு எரிந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவர் தம்முடைய ஜீவனை, அவருடைய ஆவியை நமக்குக் கொடுத்திருக்கிறார், அவர் தம்முடைய ஜீவனை நம்மில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாம் தேவனுக்குள் மறைக்கப்பட்டு, அவருடைய வார்த்தையினால் போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். சாத்தானால் நம்மை தொட முடியாது. நாம் அசைக்கப்பட முடியாது. எதுவுமே நம்மை மாற்ற முடியாது. வெளிப்பாட்டினால், நாம் அவருடைய வார்த்தை மணவாட்டியாகியிருக்கிறோம்.
சாத்தான் நம்மை வீழ்த்த முயற்சிக்கும்போது, தேவன் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்பதை அவனுக்கு நினைவூட்டுகிறோம். அவர் நம்மை நோக்கிப் பார்க்கும்போது, அவர் பார்ப்பதெல்லாம் பசும் பொன்னையே. நம்முடைய நீதியே அவருடைய நீதி. நம்முடைய தன்மைகள் அவருடைய சொந்த மகிமையான தன்மைகளாகும். நம்முடைய அடையாளம் அவரில் காணப்படுகிறது. அவர் என்னவாக இருக்கிறார் என்பதை நாம் இப்பொழுது பிரதிபலிக்கிறோம். அவர் என்னவாக இருந்து வருகிறார் என்பதை நாம் இப்பொழுது வெளிப்படுத்துகிறோம்.
அவர் சாத்தானிடம், “நான் அவளில் எந்த குற்றத்தையும் காண்கிறதில்லை. அவள் பரிபூரணமாக இருக்கிறாள். எனக்கு அவள், என்னுடைய மணவாட்டியாய், உள்ளும் புறமும் மகிமையாயிருக்கிறாள். ஆதி முதல் அந்தம் வரை, அவள் என்னுடைய கிரியையாய் இருக்கிறாள், என்னுடைய கிரியைகள் யாவும் பரிபூரணமாக இருக்கின்றன. உண்மையில், அவளில் எனது நித்திய ஞானமும் நோக்கமும் அமைந்து வெளிப்படுத்தப்படுகிறது" என்று சொல்வதற்கு எவ்வளவாய் விரும்புகிறார்.
“என்னுடைய அன்பான மணவாட்டியை நான் பாத்திரமானவளாகக் கண்டேன். பொன்னானது அதிக அடிகளை சுமப்பது போல, அவள் எனக்காக வேதனையை சுமக்கிறாள். அவள் சமரசமாகிவிடாமல், தலை வணங்காமல், அல்லது உடைந்து போகாமல், ஒரு அழகான காரியமாக உருவாக்கப்பட்டிருக்கிறாள். இந்த ஜீவியத்தின் அவளுடைய சோதனைகளும் பரிசோதனைகளும் அவளை என்னுடைய இனிய இருதயமான மணவாட்டியாக ஆக்கியிருக்கிறது.”
அது கர்த்தரைப் போன்றது அல்லவா? நம்மை எப்படி ஊக்கப்படுத்துவது என்பது அவருக்குத் தெரியும். அவர் நம்மிடத்தில், "ஒருபோதும் திடனற்றுப் போகாதீர்கள், ஆனால் திடப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொல்லுகிறார். அவரிடத்தில் கொண்டுள்ள நம்முடைய அன்பின் பிரயாசங்களை அவர் காண்கிறார். நாம் எதனூடாக செல்ல வேண்டும் என்பதை அவர் காண்கிறார். நாம் செய்கிற அனுதின யுத்தங்களை அவர் காண்கிறார். அவர் நம் ஒவ்வொருவர் மூலமாக ஒவ்வொருவரையும் நேசிக்கிறார்.
அவருடைய பார்வையில் நாம் பரிபூரணமாய் இருக்கிறோம். அவர் காலத்தின் துவக்கத்திலிருந்து நமக்காக காத்திருக்கிறார். நம்முடைய நன்மைக்காக மாத்திரமேயல்லாமல் வேற எதுவும் நமக்கு சம்பவிக்க அவர் அனுமதிக்கமாட்டார். சாத்தான் நமக்கு முன் வைக்கும் ஒவ்வொரு தடையையும் நாம் மேற்கொள்வோம் என்பதை அவர் அறிவார். நாம் அவருடைய மணவாட்டி என்பதை அவருக்கு நிரூபிக்க அவர் விரும்புகிறார். நாம் அசைக்கப்பட முடியாது. ஆதியிலிருந்தே அவர் காத்துக் கொண்டிருப்பது நமக்கே. அவரிடமிருந்தும் அவருடைய வார்த்தையிலிருந்தும் எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது.
அவர் உதட்டிலிருந்து நம்முடைய செவிக்கு பேசும்படியாக தம்முடைய வல்லமையுள்ள தூதனாகிய செய்தியாளரை நமக்கு அனுப்பினார். அவர் என்ன கூறினார் என்பதை குறித்த கேள்விகளே இல்லாத இருக்கும்படிக்கு அவர் அதை ஒலிப்பதிவு செய்திருந்தார். அவர் தம்முடைய மணவாட்டிக்காக வருமளவும் அவள் அதை புசிக்கும்படியாக அவர் அதை சேமித்து வைத்திருந்தார்.
நாம், “ஒலி நாடாவை கேட்கிற ஜனங்கள்” என்று கூறி மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டு, நம்மை துன்பப்படுத்தினாலும் அதை பொருட்படுத்தாமல் நாம் களிகூருகிறோம், ஏனென்றால் இதைத்தான் நாம் செய்யும்படி அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றவர்கள் செய்யும்படி வழிநடத்தப்படுவதை அவர்கள் உணருகிற விதமாக செய்ய வேண்டும் ஆனால் நம்மைப் பொறுத்தவரை, நாம் ஒரே சத்தமான, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
வேறு எதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. நாம் வேறு எதையும் புரிந்து கொள்ள முடியாது. நாம் வேறு எதுவும் செய்ய முடியாது. நாம் வேறு எதையும் ஏற்க முடியாது. மற்ற விசுவாசிகள் செய்யும்படி உணருகிற கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு நாம் எதிராக இல்லை, ஆனால் இதைத்தான் நாம் செய்யும்படி தேவன் நம்மை வழிநடத்தியிருக்கிறார், நாம் இங்கே தரித்திருக்க வேண்டும்.
நாம் திருப்தியடைந்துள்ளோம். நாம் தேவனுடைய சத்தத்தால் போஷிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் நம்மால் “ஆமென்” என்று கூற முடியும். இதுவே நமக்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் உள்ளது. நாம் வேறு எதுவும் செய்ய முடியாது.
எங்களோடு இணைந்து கொள்ள வருமாறு ஒவ்வொருவரையும் அழைக்க நான் விரும்புகிறேன். சகோதரன் பிரான்ஹாம் பூமியில் இருந்தபோது எப்படிச் செய்தாரோ, அந்தச் ஆராதனைகளையே நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அவர் இங்கு மாம்சத்தில் இல்லையென்றாலும், ஒலிநாடாக்களில் தம்முடைய மணவாட்டிக்கு தேவன் என்ன கூறியிருக்கிறாரோ அதுவே முக்கியமான காரியமாய் இருக்கிறது.
தொலைபேசி இணைப்பின் மூலமாக அவர் உலகத்தையே அழைத்தார், ஆனால் அவர்கள் விரும்பினால் மாத்திரமே. தேவனுடைய சத்தம் அவர்களுடன் ஒரே நேரத்தில் பேசுவதைக் கேட்க அவர் அவர்களை எங்கு வேண்டுமானாலும் கூட்டிச் சேர்த்தார். தேவனுடைய தீர்க்கதரிசி அதைத்தான் செய்தார், எனவே அவர் என்ன செய்தார் என்பதை நான் என் முன்மாதிரியாக செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே, தேவனுடைய செய்தியாளர் இப்பொல்லாத காலத்தின் தேவன் 65-0801M என்ற செய்தியை எங்களுக்கு கொண்டு வருவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தொலைபேசி இணைப்பில் எங்களுடன் இணைந்து கொள்ள வரும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
பரி. மத்தேயு 24வது அதிகாரம் / 27:15-23
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 14:12
அப்போஸ்தலர் 10:47-48
1 கொரிந்தியர் 4:1-5 / 14வது அதிகாரம்
2 கொரிந்தியர் 4:1-6
கலாத்தியர் 1:1-4
எபேசியர் 2:1-2 / 4:30
2 தெசலோனிக்கேயர் 2:2-4 / 2:11
எபிரேயர் 7வது அதிகாரம்
1 யோவான் அதிகாரம் 1 / 3:10 / 4:4-5
வெளிப்படுத்தின விசேஷம் 3:14 / 13:4 / அதிகாரங்கள் 6-8 மற்றும் 11-12 / 18:1-5
நீதிமொழிகள் 3:5
ஏசாயா 14:12-14