
Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்பான ஒன்று கூடும் மணவாட்டியே,
இப்பொழுது தேவன் எல்லா காலங்களிலும் தம்முடைய வழிகாட்டிகளை அனுப்பியிருக்கிறார். காலங்கள்தோறும், அவர் வழிகாட்டிகளை எப்பொழுதுமே அனுப்பாமல் இருந்ததில்லை. எல்லா காலங்களிலும், தேவன் தம்முடைய பிரதிநிதியாக யாரையாவது எப்பொழுதுமே ஒருவரை பூமியில், வைத்திருந்தார்.
நம்முடைய புரிந்துகொள்ளுதலையோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த எண்ணங்களையோ நாம் சார்ந்திருக்க தேவன் விரும்புகிறதில்லை. அதனால்தான் அவர் தம்முடைய மணவாட்டிக்கு ஒரு வழிகாட்டியை அனுப்புகிறார்; ஏனென்றால் அவருக்கு எப்படிச் செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் உள்ளது. தேவன் தம்முடைய திட்டத்தை ஒருபோதும் மாற்றவில்லை. அவர் தம்முடைய ஜனங்களுக்கு ஒரு வழிகாட்டியை அனுப்பத் தவறியதில்லை, ஆனால் நீங்கள் அந்த வழிகாட்டியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவர் தம்முடைய வழிகாட்டி மூலம் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அவருடைய வழிகாட்டி செல்லும்படி கூறுகிற வழியில் நீங்கள் செல்ல வேண்டும். உங்களுடைய வழிகாட்டியாக மற்ற சத்தங்களை கேட்டு நம்பினால், நீங்கள் வெறுமனே தொலைந்து போவீர்கள்.
அவர் நமக்குச் சொல்லவும், நமக்கு வெளிப்படுத்தவும் பல காரியங்கள் இருந்தன என்று பரி. யோவான் 16 கூறுகிறது, எனவே அவர் தம்முடைய பரிசுத்த ஆவியை வழிகாட்டும்படி அனுப்பி நமக்குச் சொல்லுவார். பரிசுத்த ஆவியானவரே ஒவ்வொரு காலத்திற்கும் தீர்க்கதரிசியாகிய வழிகாட்டி என்று அவர் கூறினார். இவ்வாறு, அவருடைய தீர்க்கதரிசிகள் பரிசுத்த ஆவியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அவருடைய மணவாட்டியை வழிநடத்த அனுப்பப்பட்டார்கள்.
பரிசுத்த ஆவியானவர், சில மனிதர்களின் குழுவை அல்ல, சபையை வழிநடத்த அனுப்பப்படுகிறார். பரிசுத்த ஆவியானவர் எல்லா ஞானமும் கொண்டவர். மனிதர்கள் வெற்றாச்சார முறையையுடையவர்களாகவும், அலட்சியமாகவும் மாறுகிறார்கள்.
அது மனிதன் அல்ல, ஆனால் அந்த மனிதனில் உள்ள பரிசுத்த ஆவி. தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், நம்முடைய பூமிக்குரிய வழிகாட்டியாக இருக்கவும், அவர் தெரிந்துகொண்ட மனிதன் நம்முடைய பரலோக வழிகாட்டியால் வழிநடத்தப்படுகிறார். அந்த வழிகாட்டியை நாம் பின்பற்ற வேண்டும் என்று வார்த்தை நமக்குச் சொல்கிறது. நாம் என்ன நினைத்தாலும், என்ன நியாயமானதாகத் தோன்றினாலும், அல்லது வேறு யாராவது என்ன சொன்னாலும் அது ஒரு பொருட்டல்ல, அதைப் பிரிக்க நாம் உட்பட்டவர்கள் அல்ல, வழிகாட்டி ஒருவர் மாத்திரமே.
தேவன் ஒரு வழிகாட்டியை அனுப்புகிறார், அது அவர் நியமித்த வழிகாட்டி என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
நம்முடைய தீர்க்கதரிசியாகிய வழிகாட்டி தேவனால் அவருடைய வார்த்தையைப் பேச நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய வார்த்தை தேவனுடைய வார்த்தை. தீர்க்கதரிசியாகிய வழிகாட்டி, அவர் மாத்திரமே வார்த்தையின் தெய்வீக வியாக்கியானத்தை உடையவராக இருக்கிறார். தேவன் தம்முடைய வார்த்தையை அவரிடம் உதட்டிலிருந்து செவிக்குப் பேசினார். எனவே, தேவன் வழிகாட்டியின் வார்த்தையை நீங்கள் ஒருபோதும் மறுக்கவோ, மாற்றவோ அல்லது நியாயப்படுத்தவோ முடியாது.
நீங்கள் அவரை, அவரை மாத்திரமே பின்பற்ற வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நீங்கள் தொலைந்து போவீர்கள். தேவனால் நியமிக்கப்பட்ட வழிகாட்டியான அவரை விட்டுச் செல்லும்போது, நீங்கள் உங்களுடைய சொந்தமானதில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே அவர் தெரிந்துகொண்ட வழிகாட்டியுடன் நெருக்கமாக இருக்கவும், அவர் மூலம் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு கீழ்ப்படியவும் நாம் விரும்புகிறோம்.
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழல் என்று நம்முடைய வழிகாட்டி நமக்குக் கற்பித்துள்ளார்.
யாத்திராகமம் 13:21-ல் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு சென்று கொண்டிருந்த போது, அவர்கள் அதற்கு முன்பு அவ்வழியாக பிரயாணம் செய்ததில்லையென்று தேவன் அறிந்திருந்தார். அது நாற்பது மைல் தூரத்தில் மாத்திரமே இருந்தது. ஆயினும் அவர்களுடன் கூட செல்ல அவர்களுக்கு ஒன்று அவசியமாயிருந்தது. இல்லையேல் அவர்கள் வழிதப்பிவிடுவார்கள். எனவே அவர், தேவன் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியை அனுப்பினார். யாத். 13: 21. இந்தவிதமான ஏதோ ஒன்று, “அவர் வழியில் உங்களைக் காக்கிறதற்கும், இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்களுக்கு வழி காட்டவும், “நான் என் தூதனை, அக்கினி ஸ்தம்பத்தை உங்களுக்கு முன்னே அனுப்புகிறேன்” என்றார். . இஸ்ரவேல் புத்திரர் (இரவிலே) அக்கினி ஸ்தம்பமாகவும், பகலிலே மேகஸ்தம்பமாகவும் இருந்த அந்த வழிகாட்டியைப் பின் தொடர்ந்தனர். அது நின்றபோது, அவர்களும் நின்றனர். அது பிரயாணப்பட்ட போது. அவர்களும் பிரயாணப்பட்டனர். அவர்கள் அந்த தேசத்தினருகில் வந்த போது, அதில் பிரவேசிக்க அவர்கள் தகுதியாய் காணப்படவில்லை. எனவே அவர் அவர்களை மறுடியும் வனாந்தரத்துக்குக் கொண்டு சென்றார்.
அதுதான் இன்றைய சபை என்று அவர் கூறினார். நாம் நம்மைத் திருத்திக்கொண்டு ஒழுங்கமைத்திருந்தால் நாம் ஏற்கனவே சென்றிருப்போம், ஆனால் அவர் நம்மைச் சுற்றிச் சுற்றிச் சுற்றி வழிநடத்த வேண்டியிருந்தது.
அவர் பின்தொடர்ந்த அக்கினி ஸ்தம்பத்திலிருந்து கேட்டபடி அவர்கள் தங்களுடைய வழிகாட்டியைப் பின்பற்ற வேண்டியிருந்தது. தேவன் சொன்னதை அவர் அவர்களிடம் சொன்னார், அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும். அவர் வழிகாட்டியின் சத்தம். ஆனால் அவர்கள் தேவனால் நியமிக்கப்பட்ட வழிகாட்டியிடம் கேள்வி கேட்டு வாதம் செய்தனர், இதனால் அவர்கள் 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் அலைந்து திரிந்தனர்.
மோசேயின் நாட்களில் பல ஊழியர்கள் இருந்தனர். மோசேயால் இதையெல்லாம் செய்ய முடியாத நிலையில், மக்களுக்கு உதவ தேவன் அவர்களை நியமித்தார். ஆனால் மோசே சொன்னதை மக்களுக்குத் திரும்பச் சுட்டுக்காட்டுவதே அவர்களின் கடமை. வேதம் அந்த மனிதர் சொன்னதை எதுவும் கூறவில்லை, மக்களை வழிநடத்த வார்த்தையாயிருப்பதாக மோசே சொன்னதை மாத்திரமே அது கூறுகிறது.
தேவன் மோசேயை காட்சியிலிருந்து எடுத்துக்கொண்ட போது, யோசுவா மக்களை வழிநடத்த நியமிக்கப்பட்டார், இது இன்றைய பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. யோசுவா புதிதாக எதையும் பிரசங்கிக்கவில்லை, மோசேயின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை, வழிகாட்டி சொன்னதை வியாக்கியானிகவும் முயற்சிக்கவில்லை; அவர் மோசே சொன்னதைப் படித்து மக்களிடம், "வார்த்தையுடன் தரித்திருங்கள். மோசே சொன்னதைப் பின்பற்றுங்கள்" என்று கூறினார். மோசே சொன்னதை மட்டுமே அவர் படித்தார்.
இன்றைய தினத்திற்கு என்ன ஒரு சரியான மாதிரி. தேவன் மோசேயை ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் ரூபகாரப்படுத்தினார். நம்முடைய தீர்க்கதரிசி அதே அக்னி ஸ்தம்பத்தினால் ரூபுகாரப்படுத்தப்பட்டார். மோசே பேசிய வார்த்தைகள் தேவனுடைய வார்த்தையாக இருந்தன, அவை உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டன. நம்முடைய நாளில் தேவனுடைய தீர்க்கதரிசி பேசினார், அது ஒலிநாடாவில் வைக்கப்பட்டது.
மோசே காட்சியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மோசே அவர்களுக்கு முன்பாகப் பேசிய வார்த்தைகளை வைத்து மக்களை வழிநடத்த யோசுவா நியமிக்கப்பட்டார். தேவனுடைய வழிகாட்டி பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கவும், அதில் நிலைத்திருக்கவும் அவர் அவர்களிடம் கூறினார்.
மோசே சுருள்களிலிருந்து வார்த்தைக்கு வார்த்தையாக எழுதியதை யோசுவா எப்போதும் வாசித்தார். அவர் எப்போதும் அவர்களுக்கு முன் வார்த்தையை வைத்தார். நம்முடைய நாளுக்கான வார்த்தை எழுதப்படவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மணவாட்டிக்கு அவர் பேசியதை வார்த்தைக்கு வார்த்தையாகக் கேட்கும்படி அது பதிவு செய்யப்பட்டு, இயங்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் கேட்கப்படுகிறது.
தேவன் ஒருபோதும் தம்முடைய திட்டத்தை மாற்றுவதில்லை. அவர் நம்முடைய வழிகாட்டி. அவருடைய சத்தம இன்று தம்முடைய மணவாட்டியை வழிநடத்தி ஒன்றிணைக்கிறது. நம்முடைய வழிகாட்டி அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் நம்மை வழிநடத்துகிற நம்முடைய வழிகாட்டியின் சத்தத்தை மட்டுமே நாம் கேட்க விரும்புகிறோம். இது கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக் கூடாத இணைப்பாய் உள்ளது. அவருடைய சத்தத்தை நாம் அறிவோம்.
நமது வழிகாட்டி பிரசங்கப்பீடத்திற்கு வரும்போது, பரிசுத்த ஆவி அவரைத் தொடுகிறார், அது இனி அவர் அல்ல, ஆனால் நம்முடைய வழிகாட்டி. அவர் தன்னுடைய தலையை ஆகாயத்தில் உயர்த்தி, “கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் உரைக்கிறதாவது!” என்று சத்தமிடுகிறார். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவின் மணவாட்டியின் ஒவ்வொரு உறுப்பினரும் அவரிடம் நேரடியாக வருகிறார்கள். ஏன்? அவர் பேசும் விதத்தில்தான் நம் தலைவரை நாம் அறிவோம்.
நமது வழிகாட்டி = வார்த்தை
வார்த்தை = தீர்க்கதரிசியிடம் வருகிறது
தீர்க்கதரிசி = தேவனுடைய ஒரே தெய்வீக வியாக்கியானி; அவருடைய பூமிக்குரிய வழிகாட்டி.
வார்த்தைக்குப் பின்னால் தரித்திருங்கள்! ஓ, ஆம், ஐயா! அந்த வழிகாட்டியுடன் தரித்திருங்கள். அதன் பின்னால் இருங்கள். அதன் முன் செல்லாதீர்கள், நீங்கள் அதன் பின்னால் தரித்ருங்கள். அது உங்களை வழிநடத்தட்டும், நீங்கள் அதை வழிநடத்த வேண்டாம். நீங்கள் அதை வழிநடத்த விட்டுவிடுங்கள்.
நீங்கள் தொலைந்து போக விரும்பவில்லையென்றால், ஜெபர்சன்வில் நேரப்படி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, நியமிக்கப்பட்ட அவருடைய பூமிக்குரிய வழிகாட்டியின் மூலமாக அவர் பேசப் போகின்றபடியால், நம்முடைய வழிகாட்டியினிடத்திற்கு வந்து செவி கொடுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி:
62-1014E — ஒரு வழிகாட்டி
வேதவாக்கியங்கள்:
பரி. மாற்கு 16:15-18
பரி. யோவான் 1:1 / 16:7-15
அப்போஸ்தலர் 2:38
எபேசியர் 4:11-13 / 4:30
எபிரெயர் 4:12
2 பேதுரு 1:21
யாத்திராகமம் 13:21