ஞாயிறு
08 செப்டம்பர் 2024
65-0822M
கிறிஸ்து தம்முடைய சொந்த வார்த்தையில் வெளிப்படுத்தப்படுகின்றார்

அன்புள்ள பிரான்ஹாம் கூடாரமே,

நம்முடைய கண்கள் எவ்வளவு பாக்கியமானவைகள்; ஏனென்றால் அவைகள் காண்கின்றன. நம்முடைய காதுகள் எவ்வளவு பாக்கியமானவைகள்; ஏனென்றால் அவைகள் கேட்கின்றன. தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நாம் கண்டிருக்கிறதையும் கேட்டிருக்கிறதையும் காணவும் கேட்கவும் விரும்பினர், ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. நாம் கண்டும், தேவனுடைய சத்தத்தை கேட்டுமிருக்கிறோம்.

தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாகவே தம்முடைய வேதாகமத்தை எழுதுவதற்கு தெரிந்து கொண்டார். தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசி மூலமாகவே இந்தக் கடைசி காலத்தில் தம்முடைய எல்லா இரகசியங்களையும் தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்த தெரிந்து கொண்டார். இது அவருடைய குணாதிசயங்களாயும், அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயும் உள்ளது, இது யாவுமே அவருடைய ஒரு பாகமாக ஆக்குகிறது.

நம்முடைய காலம் வந்தபோது, அதே சமயத்தில் அவர் தம்முடைய தீர்க்கதரிசியை வரச் செய்திருந்தார். அவர் இவருக்கு உயிர்ப்பூட்டி, இவர் மூலம் பேசினார். இது அவருடைய முன்குறிக்கப்பட்ட மற்றும் அதைச் செய்வதற்கான வழியாயிருந்தது. வேதாகமத்தைப் போலவே, இது தேவனுடைய வார்த்தையாயுள்ளதேயன்றி, மனிதனின் வார்த்தை அல்ல.

நாம் ஒரு முற்றிலுமானதை, ஒரு முடிவானதை; இறுதியான வார்த்தையை உடையவர்களாய் இருக்க வேண்டும். சில மனிதர் வேதாகமம் தங்களுடைய முற்றிலுமானதாக இருக்கிறதேயன்றி, ஒலிநாடாவில் கூறப்பட்டது அல்ல என்று கூறுகிறார்கள்; அவர்கள் வேறு ஏதோ வித்தியாசமாக கூறுவது போல. தேவன் தம்முடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டை பலரிடமிருந்து மறைத்துள்ளார், ஆனால் அதை தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்தி, தெளிவுபடுத்தியிருப்பது மிகவும் அற்புதமானது. மற்றவர்கள் அதற்கு உதவ முடியாது, அவர்கள் குருடாக்கப்பட்டு, தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையின் முழுமையான வெளிப்பாட்டை பெறுகிறதில்லை.

தேவன் தம்முடைய வார்த்தையில் (வேதாகமம்) தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக பேசி, “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,” என்று நமக்குச் சொன்னார். இவ்வாறு, தேவனுடைய தீர்க்கதரிசிகள் வேதாகமத்தை எழுதினர். அது அவர்கள் அல்ல, ஆனால் தேவன் அவர்கள் மூலம் பேசுகிறார்.

எல்லா சத்தியங்களுக்கும் நம்மை வழிநடத்த அவர் சத்திய ஆவியை நமக்கு அனுப்புவார் என்று அவர் நம்முடைய நாளில் கூறினார். அவர் தன்னைப் பற்றி பேசமாட்டார்; ஆனால் அவர் எதைக் கேட்பாரோ, அதையே பேசுவார்: வரப்போகிற காரியங்களை அவர் நமக்கு அறிவிப்பார்.

ஒலிநாடாவில் உள்ள செய்தி தேவனுடைய சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டவைகளாகும். இதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. இது தேவன் தம்முடைய வார்த்தையை ஒலிநாடாக்களில் பேசும்போது அவர் தாமே வியாக்கியானிக்கிறார்.

மற்ற மனிதர்கள் பேசுவதில் தொடர்ச்சி இல்லை, தேவன் பேசுவதில் மட்டுமே உள்ளது. ஒலிநாடாக்களில் சொல்லப்பட்டவை மாத்திரமே ஒருபோதும் மாறாத ஒரே சத்தமாய் உள்ளது. மனிதர் மாறுகிறார்கள், கருத்துக்கள் மாறுகின்றன, வியாக்கியானங்கள் மாறுகின்றன; தேவனுடைய வார்த்தை ஒருபோதும் மாறாது. இது மணவாட்டியினுடைய முற்றிலுமானதாக உள்ளது.

ஒரு பந்து விளையாட்டில் ஒரு நடுவர் முற்றிலுமானவராக இருப்பதற்கான உதாரணத்தை தீர்க்கதரிசி நமக்குத் தருகிறார். அவருடைய வார்த்தையே இறுதியானது. நீங்கள் அதை கேள்வி கேட்க முடியாது. அவர் என்ன கூறுகிறாரோ, அது தான் முடிவானது. இப்போது நடுவரிடம் அவர் சொல்ல வேண்டிய ஒரு விதி புத்தகம் உள்ளது. ஒரு பந்தை தவறவிடுவது அல்லது அடிக்க தவறவிடுவதற்கான பகுதிகள் எங்கே என்பதையும், நீங்கள் ஆட்ட களத்தில் பாதுகாப்பாக இருப்பதையும் மற்றும் நீங்கள் வெளியேற வேண்டியிருப்பதையும்; ஒரு பந்து விளையாட்டிற்கான விதிகள் என்ன என்பதையும் அது அவருக்குச் சொல்கிறது.

அவர் அந்த புத்தகத்தைப் படித்து, ஆய்ந்து பார்க்கிறார், அவர் பேசும்போது, அவர் தனது தீர்ப்பை வழங்குகிறார், அதுதான் விதி, அதுவே இறுதி வார்த்தை. அவர் கூறுவதில் நீங்கள் தரித்திருக்க வேண்டும், எந்த கேள்வியும் இல்லை, வாதமும் இல்லை, அவர் என்ன சொன்னாலும், அது அப்படியே இருக்க வேண்டும், மாற்றப்பட முடியாது. மகிமை.

நீங்கள் பிரசங்கிக்கவோ, அல்லது கற்பிக்கவோ கூடாது என்று சகோதரன் பிரான்ஹாம் கூறவில்லை; மாறாக, அவர் போதிக்கவும், உங்கள் போதகர்களுக்கு செவிகொடுக்கவும் கூறினார், ஆனால் ஒலிநாடாவில் உள்ள தேவனுடைய சத்தம் உங்களுடைய முற்றிலுமானதாக இருக்க வேண்டும்.

ஒரு கட்டு கம்பம் இருக்க வேண்டும்; வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு முடிவானது. ஒவ்வொருவரும் அந்த முடிவானதை பெற்றிருக்க வேண்டும். இது கடைசி வார்த்தை. அதைப் பெற தேவன் ஒரே ஒரு இடத்தை மட்டுமே அருளியுள்ளார், அது ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே. இது தேவனுடைய வார்த்தையின் தெய்வீக வியாக்கியானமாயுள்ளது. இது இறுதியான வார்த்தையாயுள்ளது, ஆமென் என்பதாகவும், கர்த்தர் உரைக்கிறதாவதாகவும் உள்ளது.

இயேசு தாமே அவருடைய வார்த்தையைப் பேசின அவர்களை நாம், "தேவர்கள்" என்று அழைக்கிறோம் என்று கூறினார்; மேலும் அவர்கள் தேவர்களாக இருந்தனர். தீர்க்கதரிசிகள் தேவனுடைய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டபோது, அவர்கள் தேவனுடைய வார்த்தையை சரியாகக் கொண்டுவந்தார்கள் என்றார். அது அவர்கள் மூலம் தேவனுடைய வார்த்தை பேசினதாயிருந்தது.

அதனால்தான் நம்முடைய தீர்க்கதரிசி மிகவும் தைரியமானவராக இருந்தார். அவர் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, பிழையில்லாத தேவனுடைய வார்த்தையைப் பேசும்படி செய்தார். தேவன் அவரை நம்முடைய காலத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். அவர் பேசும் செய்தியையும், நம்முடைய தீர்க்கதரிசியின் இயல்பு மற்றும் நம்முடைய காலத்தில் என்ன நடக்கும் என்பதையும் தேர்ந்தெடுத்தார்.

அவர் பேசிய வார்த்தைகள், அவர் செயல்பட்ட விதம், மற்றவர்களை குருடாக்குகிறது, ஆனால் நம்முடைய கண்களைத் திறக்கிறது. அவர் அணிந்திருந்த உடையின் மாதிரியிலேயே இவருக்கு கூட அவர் அணிவித்தார். அவருடைய இயல்பு, அவரது லட்சியம், ஒவ்வொரு காரியமும் அவர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்க வேண்டியதாயிருந்தது. தேவனுடைய மணவாட்டியாகிய நமக்காக அவர் பரிபூரணமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனால்தான், நாம் ஒன்றாக கூடி வரும்போது, நாம் முதலில் கேட்க விரும்பும் சத்தம் இதுவாகும். தேவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதனிடமிருந்து பேசப்படும் தூய வார்த்தையை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறோம்.

மற்றவர்கள் அதைப் பார்க்கவோ, அல்லது புரிந்துகொள்ளவோ முடியாது என்பதை நாம் அறிவோம், ஆனால் அவர் தம்முடைய சபையோரிடம் மாத்திரமே பேசிக் கொண்டிருந்தார் என்று கூறினார். தேவன் மற்றவர்களுக்கு மேய்ப்பதற்காகக் கொடுத்ததற்கு அவர் பொறுப்பாயிருக்கவில்லை; அவர் நமக்கு எந்த வகையான உணவை போஷிக்கிறார் என்பதற்கு மட்டுமே அவர் பொறுப்பாக இருந்தார்.

அதனால்தான் நாம் பிரான்ஹாம் கூடாரம் என்று கூறுகிறோம், ஏனென்றால் ஒலிநாடாக்களைப் பெறவும் கேட்கவும் விரும்பும் சிறு மந்தையான கூடாரத்தில் உள்ள தன்னுடைய மக்களுக்கு மட்டுமே செய்தி என்று அவர் கூறினார். வழிநடத்துவதற்கு தேவன் அவருக்குக் கொடுத்திருந்ததை அவர் பேசிக்கொண்டிருந்தார்.

அவர், “மக்கள் உணவையும் பொருட்களையும் கலப்பினமாக்க விரும்பினால், தேவனிடமிருந்து வெளிப்பாட்டைப் பெற்று, தேவன் உங்களுக்கு செய்யும்படிச் சொல்வதைச் செய்யுங்கள். நானும் அதே காரியத்தையே செய்வேன். ஆனால் ஒலிநாடாக்களில் உள்ள இந்த செய்திகள் இந்த சபைக்கு மாத்திரமே” என்று கூறினார்.

தேவனுடைய சத்தத்தைப் புரிந்து கொள்ளவும், கேட்கவும் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றவும் அவர் அதை தம்முடைய மணவாட்டிக்காக உண்மையாகவே எவ்வளவு எளிமையாக்கியிருக்கிறார்.

அந்த சத்தத்தைக் கேட்க நீங்கள் எங்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 65-0822M - "கிறிஸ்து தம்முடைய சொந்த வார்த்தையில் வெளிப்படுத்தப்படுகிறார்" என்ற செய்தியை நாம் ஒரே நேரத்தில் கேட்போம்.

உங்களால் எங்களுடன் சேர்ந்து கொள்ள முடியாவிட்டால், உங்களால் முடிந்த போதெல்லாம் இந்தச் செய்தியைக் கேட்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

யாத்திராகமம் 4:10-12
ஏசாயா 53:1-5
எரேமியா 1:4-9
மல்கியா 4:5
பரி. லூக்கா 17:30
பரி .யோவான் 1:1 / 1:14 / 7:1-3 / 14:12 / 15:24 / 16:13
கலாத்தியர் 1:8
2 தீமோத்தேயு 3:16-17
எபிரெயர் 1:1-3 / 4:12 / 13:8
2 பேதுரு 1:20-21
வெளிப்படுத்தின விசேஷம் 1:1-3 / 10:1-7 / 22:18-19