
அன்புள்ள தேவனின் தன்மையே,
நாம் நம்முடைய பரலோகப் பிதாவின் அதே தன்மையாயிருக்கிறோம்; ஏனென்றால், நாம் ஆதியில் அவருக்குள் இருந்தோம். நமக்கு இப்போது அது நினைவில் இல்லை, ஆனால் நாம் அங்கே அவருடன் இருந்தோம், அவர் நம்மை அறிந்திருந்தார். அவர் நம்மை மிகவும் நேசித்தார், அவர் நம்மை மாம்சமாக்கினார், அதனால் அவர் நம்மோடு தொடர்பு கொள்ளவும், நம்முடன் பேசவும், நம்மை நேசிக்கவும், நம்முடைய கரங்களை குலுக்கும் கூட முடிந்தது.
ஆனால் சாத்தான் வந்து, தேவனுடைய மூல வார்த்தையையும், அவருடைய ராஜ்யத்தையும், நமக்கான அவருடைய திட்டத்தையும் தாறுமாறாக்கினான். அவன் ஆண்களையும் பெண்களையும் திரித்து, நாம் வாழும் இந்த உலகத்தை தாறுமாறாக்கி, கைப்பற்றும் நோக்கத்தில் ஈடேறினான். அவன் பூமியைத் தன்னுடைய ராஜ்யமாகவும், அவனுடைய ஏதேன் தோட்டமாகவும் ஆக்கிக்கொண்டான்.
இது எப்போதும் இருந்து வந்ததிலேயே மிகவும் வஞ்சகமானதும், நம்பிக்கை துரோகமுமான வேளையாயுள்ளது. பிசாசு தன்னால் இயன்ற ஒவ்வொரு தந்திரமான பொறியையும் அமைத்துள்ளான்; ஏனென்றால் அவன் பெரிய வஞ்சகனாயிருக்கிறான். கிறிஸ்தவன் எந்தக் காலத்திலும் இருந்ததை விட இன்றைக்கு அவன் அதிக விழிப்புடன் ஆயத்தமான நிலையில் இருக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில், இது எல்லா காலங்களிலும் மிகவும் மகிமை வாய்ந்தது, ஏனென்றால் நாம் மகத்தான ஆயிர வருட அரசாட்சியை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய ஏதேன் தோட்டம் விரைவில் வரப்போகிறது, அங்கு நாம் பரிபூரண அன்பையும், தேவனுடைய அன்பைப் பற்றிய பரிபூரண புரிந்து கொள்ளுதலையும் பெறுவோம். நித்தியம் முழுவதும் நம்முடைய ஏதேனில் நாம் அவருடன் ஜீவனோடும், பாதுகாப்பாகவும் இருப்போம்.
இந்த நாளில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று மத்தேயு 24-ல் இயேசு நமக்குச் சொன்னார். இது எப்போதும் ஜீவித்ததிலேயே மிகவும் வஞ்சனையான நாள் என்றும், “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு அது மிக நெருக்கமாய் இருக்கும்”; என்றும் அவர் நம்மை எச்சரித்தார். ஏனென்றால், பிசாசின் தந்திரம் அவர்கள் கிறிஸ்தவர்களாக இல்லாதபோது, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று மக்களை நம்ப வைக்கும்.
ஆனால் இந்தக் காலம் வஞ்சிக்காத, வஞ்சிக்கப்பட முடியாத அவருடைய தூய வார்த்தை மணவாட்டியையும் கூட அளிக்கும்; ஏனென்றால் அவர்கள் அவருடைய மூல வார்த்தையுடன் தரித்திருப்பார்கள்.
யோசுவாவும் காலேபும் போலவே, நம்முடைய வாக்குப்பண்ணப்பட்ட தேசம் அவர்களுடையது போலவே கண்முன்னே வருகிறது. யோசுவா என்றால், "யெகோவா-இரட்சகர்" என்று நம்முடைய தீர்க்கதரிசி கூறினார். பவுல் மூல முதலான தலைவராக வந்ததைப் போலவே, சபைக்கு வரும் கடைசி-கால தலைவரை அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
யோசுவாவுடன் உண்மையாக இருந்தவர்களை காலேப் பிரதிநிதித்துவப்படுத்தினான். இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, தேவன் தம்முடைய வார்த்தையான ஒரு கன்னியாக அவர்களிடத்தில் தொடங்கினார்; ஆனால் அவர்கள் வேறு ஒன்றை விரும்பினர். நம்முடைய தீர்க்கதரிசி, "இந்த கடைசி கால சபையும் அவ்வண்ணமே செய்கிறது" என்று கூறினார். எனவே, தேவன் இஸ்ரவேலை அவருடைய சொந்த நியமிக்கப்பட்ட நேரம் வரும்வரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
ஜனங்கள் தங்களுக்கு தேவன் அளித்த தலைவரான யோசுவா மீது அழுத்தம் கொடுத்து, “தேசம் நம்முடையது, நாம் போய் அதை கைப்பற்றிக் கொள்வோம். யோசுவா, நீ எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டாய், நீ உன்னுடைய கட்டளையை இழந்துவிட்டிருக்க வேண்டும். உன்னிடத்தில் முன்பிருந்த வல்லமை உன்னிடத்தில்லை. நீ முன்பு தேவனிடத்தில் கேட்டு, தேவனுடைய சித்தத்தை அறிந்து, துரிதமாக செயல்படுவாய். உன்னோடு ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது” என்று கூறினர்.
யோசுவா தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியாயிருந்தான், அவன் தேவனுடைய வாக்குத்தங்களை அறிந்திருந்தான். நம்முடைய தீர்க்கதரிசி நமக்குச் சொன்னார்:
“யோசுவா வார்த்தையோடு நிலைத்திருந்ததால், தேவன் முழுத் தலைமையையும் அவனுடைய கரங்களில் ஒப்படைத்தார். தேவனால் யோசுவாவை நம்ப முடிந்ததேயன்றி மற்றவர்களை அல்ல. எனவே இந்த கடைசி நாளில் அது மீண்டும் நிகழும். அதே பிரச்சனை, அதே அழுத்தங்கள்.”
தேவன் யோசுவாவுடன் செய்ததைப் போலவே, அவர் தம்முடைய தூதனான தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரான்ஹாமின் கரங்களில் முழு தலைமைத்துவத்தையும் கொடுத்தார்; ஏனென்றால், அவரால் இவரை நம்ப முடியும் என்றும், ஆனால் மற்றவர்களை நம்ப முடியாது என்று அவர் அறிந்திருந்தார். ஒரே சத்தம், ஒரே தலைவர், ஒரே முடிவான வார்த்தை, அப்பொழுதும் இப்போதும் இருக்க வேண்டியதாயிருந்தது.
கோடிக்கணக்கானோர் ஒலிநாடாக்களை கேட்பார்கள் என்று தீர்க்கதரிசி கூறினதை நான் எவ்வளவாய் விரும்புகிறேன். ஒலிநாடாக்களுக்கு ஒரு ஊழியம் உண்டு என்று அவர் கூறினார். தேவனுடைய முன்குறிக்கப்பட்ட வித்தைப் பிடிக்க ஒரு ஒலிநாடா (அவருடைய ஊழியம்) மூலம் வீடுகளுக்கும் சபைகளுக்கும் நம்மில் சிலர் நழுவிச் செல்வார்கள்.
நாம் திரும்பி வந்து, கர்த்தாவே, நாங்கள் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தோம் என்றும், நாங்கள் ஒலிநாடாக்களை இயக்கியபோது அதை விசுவாசித்தவர்களை நாங்கள் கண்டுபிடித்தோம் என்றும் கூறினோம். இப்போது நாங்கள் உலகம் முழுவதும் அதை பிரசங்கித்திருக்கிறோம், நீர் அதை கனப்படுத்துவீரா?
அவரோ: "அதை செய்யும்படிக்கே நான் உங்களை அனுப்பினேன்" என்று கூறுவார்.
தேவன் அதைக் கனப்படுத்துவார். உங்களுடைய வீடு ஒருபோதும் அசைக்கப்படாது. எல்லாவற்றையும் அழிக்க தேவன் சைகைக் கொடுக்கும்போது, உங்களுடைய குடும்பம் அனைத்தும், உங்களுடைய உடைமை அனைத்தும் உங்களுடைய வீட்டில் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் அங்கே நிற்கலாம். நீங்கள் ஜன்னலுக்கு வெளியே பார்க்க வேண்டியதில்லை, யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது இயங்கு பொத்தானை அழுத்தி கேளுங்கள்.
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, சாத்தானின் ஏதேன் 65-0829 என்பதைப் பற்றிய எல்லாவற்றையும் நாங்கள் கேட்கப் போகிறபடியால், தேவனுடைய மகத்தான, ஜீவனுள்ள, கடைசி-கால ஊழியத்தில் நாங்கள் புசிக்கும்போது, எங்களோடு சேர்ந்துகொள்ள வரும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
கூடுமானால், கர்த்தரின் வருகை வரை நாங்கள் ஜீவிப்போமாக. எங்களுடைய ஆதிக்கத்தில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் நாங்கள் அன்புடனும், புரிந்து கொள்ளுதலுடனும், இன்றைக்கு, காணாமற்போன ஆடுகள் ஒவ்வொன்றையும் தேவன் இவ்வுலகில் தேடிக் கண்டுபிடித்து வருகிறார் என்னும் புரிந்து கொள்ளுதலோடு செயல்படுவோமாக. நாங்கள் அந்த கடைசி நபரைக் கண்டுபிடிக்கும்படியாகவும், அதனால் கர்த்தாவே, நாங்கள் இங்கே இந்த பழைய சாத்தானின் ஏதேனை விட்டு வெளியேறி, பரம வீட்டிற்கு நாங்கள் செல்லும்படியாக, அவர்களிடம் நாங்கள் அனுபவம் கொண்ட அன்பின் ஜெபத்தாலும், தேவ வசனத்தாலும் பேசுவோமாக.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
2 தீமோத்தேயு 3:1-9
வெளிப்படுத்தின விசேஷம் 3:14
2 தெசலோனிக்கேயர் 2:1-4
ஏசாயா 14:12-14
மத்தேயு 24:24