ஞாயிறு
15 ஜூன் 2025
65-1125
கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்புள்ள தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட சீமாட்டியே,

இதைத் தவிர்க்க வேறு வழி இல்லை, நீங்கள் தேவனுடைய ஆவிக்குரிய மரபணுவாயிருக்கிறீர்கள், அவருடைய சிந்தைகளின் பண்புகளின் வெளிப்பாடாய், உலகத் தோற்றத்திற்கு முன்பே அவருக்குள் இருந்தீர்கள்.

நாம் அதற்கு மேல் செல்ல முடியாது, பூமிக்குள் சென்ற அதே தானியத்தைப் போலவே இருக்கிறோம். மணவாட்டியின் ரூபத்தில், அதே வல்லமையுடன், அதே சபையுடன், அதே வார்த்தையுடன் ஜீவித்து, ஒரு தலையாக உருவாகி, எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக ஆயத்தமாக இருக்கும் அதே இயேசுவாக நாம் இருக்கிறோம்.

ஆவிக்குரிய மரணத்தால், நம்முடைய முதல் இணைப்பிலிருந்து நாம் பிரிக்கப்பட்டு, இப்போது மீண்டும் பிறந்து, அல்லது நம்முடைய புதிய ஆவிக்குரிய இணைப்பிற்கு மறுவிவாகம் செய்து கொண்டோம் என்று அவர் நமக்குச் சொன்னார். இனி நம்முடைய பழைய மாம்சப்பிரகாரமான ஜிவியமும், உலகத்தின் காரியங்களும் இல்லை, ஆனால் நித்திய ஜீவன். ஆரம்பத்தில் நம்மில் இருந்த ஜீவ அணு நம்மைக் கண்டுபிடித்துவிட்டதே!

அதன் அர்த்தம் என்ன? நமது பழைய புத்தகம் நம்முடைய பழைய இணைப்போடு போய்விட்டது, அது மாற்றப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். அது இப்போது தேவனுடைய ”புதிய புத்தகத்தில்” உள்ளது; ஜீவப் புத்தகத்தில் அல்ல... இல்லை, இல்லை, இல்லை... ஆனால் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவப் புத்தகத்தில் உள்ளது. ஆட்டுக்குட்டியானவர் மீட்டுவிட்டார். இது நம்முடைய விவாகச் சான்றிதழ், நம்முடைய உண்மையான நித்திய ஜீவ அணுவை பற்றிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் ஆயத்தமா? இதோ அது வருகிறது. உங்களை நீங்களே விழித்தெழ செய்து கொண்டு, மகிமையுடன் ஆரவாரமிட, ஆர்ப்பரிக்க ஆயத்தமாகுங்கள், அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள், இது ஒரு இரட்டைக் குழல் மற்றும் பரலோக சுமை ஏற்றுதலாகும்.

“என்னுடைய எல்லா தவறுகளுடனும், என்னுடைய எல்லா தோல்விகளுடனும் என் பழைய புத்தகம் என்று நீங்கள் என்னிடம் சொல்ல விரும்புகிறீர்களா...”

தேவன் அதை அவருடைய மறதியின் கடலில் போட்டுவிட்டார், நீங்கள் மன்னிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நீங்கள் நீதிமானாக்கப்பட்டீர்கள்...மகிமை! “நீதிமானாக்கப்பட்டீர்கள்”.

அதன் அர்த்தம் என்ன? தேவனுடைய பார்வையில் நீங்கள் அதை ஒருபோதும் செய்யவில்லை என்பதே அர்த்தமாகும். நீங்கள் தேவனுக்கு முன்பாக பரிபூரணமாக நிற்கிறீர்கள். மகிமை! இயேசு, வார்த்தை, உங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். ஒரு அசுத்தமான பாவியான, நீங்கள் அவராக, வார்த்தையாக மாற. அவர் உங்களைப் போலானார், நாம் வார்த்தையாக இருக்கிறோம்.

அதுவே நம்மை ஆரம்பத்திலிருந்தே முன்குறிக்கப்பட்ட அவருடைய சிறிய ஜீவ அணுவாக ஆக்குகிறது. நாம் வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, வார்த்தையின் மீது, கிறிஸ்துவின் முழு வளர்ச்சிக்கு வருகிறோம், அதனால் அவர் நம்மை அவருடைய மணவாட்டியாக மாற்ற முடியும்.

இப்போது என்ன நடக்கிறது?

உலகம் முழுவதிலுமிருந்து வார்த்தையின் பேரில் ஒன்றுகூடும் கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக் கூடாத இணைப்பாக இது உள்ளது.

தேசம் முழுவதும் செல்கிறது. இப்பொழுது நியூயார்க்கில் பதினொன்று மணி கழிந்து இருபத்தைந்து நிமிடங்கள். பிலதெல்பியாவிலும் சுற்று புறத்திலும் இன்னும் மற்றவிடங்களிலுமுள்ள சபைகளிலும் அருமையான பரிசுத்தவான்கள் உட்கார்ந்து கேட்டு கொண்டிருக்கின்றனர். மெக்சிகோவிலும், கனடாவிலும், சுற்று வட்டாரங்களிலும், தென் அமெரிக்க கண்டத்தில் இருநூறு மைல் தூரத்திலுள்ள மக்கள் இப்பொழுது கேட்டு கொண்டிருக்கின்றனர் - லட்சக்கணக்கான மக்கள் கேட்டு கொண்டிருக்கின்றனர்.

சபையே, இதுதான் உங்களுக்கு நான் அளிக்கும் செய்தி. நீங்கள் பழைய இணைப்பிலிருந்து, வார்த்தையினால் ஆவிக்குரிய இணைப்பில் உள்ளீர்களே.

அது கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் இடையிலான ஆவிக்குரிய இணைப்பு, அது இப்போது சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். மாம்சம் வார்த்தையாகிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக்கொண்டிருக்கிறது. நாம் வெளிப்படுத்தப்பட்டு, ரூபுகாரப்படுத்தப்பட்டிருக்கிறோம்; இந்த நாளில் சம்பவிக்கும் என்று வேதம் கூறினதே, அதுவே இப்போது நம் ஒவ்வொருவருக்குள்ளும் நாளுக்கு நாள் சம்பவித்துக் கொண்டிருக்கிறது.

தேவன் ஒரு கற்புள்ள சபையை பெற்றுக் கொள்ளப் போகிறார். அவருடைய உண்மையான, உத்தகமான, வார்த்தை மணவாட்டி. நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தெரிந்து கொள்ளப்பட்டு சீமாட்டியாய் இருக்கிறோம்.

ஐயன்மீர், இதுவா சமயம்?

இந்தக் கடைசி நாட்களில் மணவாட்டியை ஒன்று சேர்க்கும் தேவனாகிய கர்த்தரின் செய்தியின் வெளிப்பாட்டை நாம் பெற்றிருக்கிறோம். வேறெந்த காலத்துக்கும் அது வாக்குத்தத்தம் பண்ணப்படவில்லை. இக்காலத்துக்கு மாத்திரமே அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. மல்கியா; 4, லூக்கா; 17:30 யோவான்; 14:12, யோவேல்; 2:38, யோவான் ஸ்நானன் தன்னை வேதவாக்கியங்களில் அடையாளம் காண்பித்தது போல், இந்த வாக்குத்தங்களும் அமைந்துள்ளன.

இந்த வேதவாக்கியங்களை யார் நிறைவேற்றினார்கள்?

அவருடைய பலமுள்ள ஏழாம் தூதன், வில்லியம் மாரியன் பிரான்ஹாம். அவர் எப்போதும் அதை மாதிரியின்படி செய்தார். அவர் அதை ஒவ்வொரு முறையும் மாதிரியின்படி செய்தார். அவர் அதை நம் நாளில் மீண்டும் செய்கிறார், கடைசி நாளில் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் தம்முடைய கற்புள்ள மணவாட்டியை அழைத்து ஒன்று சேர்க்கிறார்.

மணவாட்டி என்னே ஒரு மகிமையான நேரத்தை அனுபவிக்கிறாள். ஒவ்வொரு கூட்டமும் பெரிதாகவும், இனிமையாகவும், இனிமையாகவும் மாறி வருகிறது. இதுபோன்ற ஒரு காலம் இதற்கு முன்பு இருந்ததில்லை. எல்லா சந்தேகங்களும் மறைந்துவிட்டன.

கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு 65-1125 என்ற செய்தியில், நாம் யாராய் இருக்கிறோம் என்றும், நம்முடைய நாளில் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்றும், நம்முடைய நாளுக்கான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை பேசுப்போவதை நாங்கள் கேட்க போகிறபடியால் வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

வேதவாக்கியங்கள்:

பரி. மத்தேயு 24:24
பரி. லூக்கா 17:30 / 23:27-31
பரி. யோவான் 14:12
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 5:1 / 7:1-6
2 தீமோத்தேயு 2:14
1 யோவான் 2:15
ஆதியாகமம் 4:16-17 / 25-26
தானியேல் 5:12
யோவேல் 2:28
மல்கியா 4