
அன்புள்ள விசுவாசத் திறவுகோலை வைத்திருப்பவர்களே,
“நான் ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல். நானே வழி, ஒரே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவின் இடத்தில் வரான். நான் எல்லா காரியங்களுக்கும் வாசலாய் இருக்கிறேன், விசுவாசமே நீங்கள் நுழையும் வாசலைத் திறக்கிற திறவுகோலாயுள்ளது.
இந்த திறவுகோலை வைத்திருக்கும் கரம் ஒன்று மாத்திரமே உள்ளது, அது விசுவாசத்தின் கரமாகும். தேவனுடைய எல்லா வாக்குத்தத்தங்களையும் திறக்கும் ஒரே திறவுகோல் விசுவாசம் மாத்திரமேயாகும். அவருடைய முடிக்கப்பட்ட கிரியைகளில் உள்ள விசுவாசமே தேவனுடைய ராஜ்யத்தின் உட்புறத்தில் உள்ள ஒவ்வொரு பொக்கிஷத்திற்கும் ஒவ்வொரு வாசலையும் திறக்கிறது. விசுவாசம் என்பது அவருடைய மணவாட்டிக்காக ஒவ்வொரு வாசலையும் திறந்து கொண்டிருக்கின்ற தேவனுடைய மகத்தான நிகர் ஒத்த திறவுகோலாகும். அந்த திறவுகோலை நாம் நம்முடைய விசுவாசத்தின் கரத்தில் வைத்திருக்கிறோம்.
அந்த விசுவாச திறவுகோல் நம்முடைய இருதயங்களில் உள்ளது, எனவே நாம், “இது தேவனுடைய வார்த்தை; இது நமக்கான தேவனுடைய வாக்குத்தத்தங்கள், நாம் அந்த திறவுகோலை வைத்திருக்கிறோம்” என்று கூறுகிறோம். அது மட்டுமல்லாமல் நாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு துளி விசுவாசத்துடனும், ஒரு துளியும் சந்தேகிக்காமல், நமக்கிடையே நிற்கிற ஒவ்வொரு வாசலையும், நமக்காக தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் நாம் திறக்கிறோம். இது அக்கினியின் உக்கிரத்தை அவிக்கிறது. இது சுகவீனத்திற்கான சுகமளித்தலைத் திறக்கிறது. இது நம்முடைய இரட்சிப்பைத் திறக்கிறது. நாம் வாசலண்டை வந்திருக்கிறோம், நாம் வார்த்தையினாலாவது அல்லது கிரியையினாலாவது எதைச் செய்தாலும், நாம் அதை அவருடைய நாமத்தில் செய்து, நாம் விசுவாச திறவுகோலை உடையவராய் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம், இது வேதத்தால் உருவாக்கப்பட்ட ஒரு திறவுகோலாயிருக்கிறது.
யார் என்ன நினைத்தாலும் நாம் கவலைப்படுவதில்லை, நிச்சயமாகவே ஒரு காரியம் உண்டு: தேவன் நம்மை அழைத்தார், நம்மை முன்குறித்தார், நமக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தினார், நாம் யாராக இருக்கிறோம் என்பதை நமக்கு சொன்னார், அவருடைய வார்த்தையைப் பின்பற்ற நாம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறோம், ஏனென்றால் அவர் நம்மை அவருடைய மணவாட்டியாயிருக்க அழைத்திருக்கிறார்.
பிதாவானவர் தனது ஏழு நட்சத்திரங்களையும், ஏழு தூதர்களையும், ஏழு காலங்களையும் தனது கையில் வைத்திருந்தார். அவர் அவைகளை தம்முடைய கரத்தில் பிடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் அவை அவருடைய வல்லமையுடன் தொடர்பு கொள்ளப்பட்டிருக்கின்றன. அதைத்தான் கரமானது குறிக்கிறது. அது தேவனுடைய வல்லமையைக் குறிக்கிறது! தேவனுடைய அதிகாரம்.
நாம் அவருடைய வார்த்தையை நம்முடைய விசுவாசத்தின் கரத்தில் வைத்துக் கொண்டிருப்பது, தேவனுடைய வல்லமையும், அதிகாரமும் நம்முடைய கரத்தில் இருப்பதைக் குறிக்கிறது, நமக்குத் தேவையாயிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்குமான ஒவ்வொரு வாசலையும் திறக்க அவர் நமக்கு திறவுகோலைக் கொடுத்துள்ளார். இது ஒவ்வொரு வாசலையும் திறக்கும் முதன்மையான திறவுகோலாகும்.
தேவன் ஏன் நமக்கு ஒவ்வொரு கையிலும் 5 விரல்களைக் கொடுக்கிறார் என்பது இப்போது எனக்குத் தெரியும். 4 அல்ல, 6 அல்ல, 5, எனவே ஒவ்வொரு முறையும் நம் கைகளைப் பார்க்கும் போது, ஒவ்வொரு வாசலையும் திறக்கும் விசுவாசத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்வோம்.
இது மனித இனத்திற்கு ஒரு நித்திய அடையாளமாயிருக்கிறது, எனவே நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்; எப்பொழுதும் நினைவில் வைத்து தைரியமாக இருப்போம், அந்த விசுவாசத்தை நம்முடைய கரங்களில் வைத்திருக்கிறோம். அவர் நம்முடைய கடுகளவு விசுவாசத்தை உயர்த்தி, அவருடைய மகத்தான விசுவாசத்தை அவருடைய ஒருபோதும் தவறிப்போகாத, ஒருபோதும் தவறிப் போக முடியாத நித்திய வார்த்தையில் நமக்கு அளிக்கிறார்!!!
நாம் பரலோகத்திற்கு நம்முடைய கைகளை உயர்த்தி, ஒவ்வொரு கரத்திலும் 5 விரல்களை விரித்து, அவரிடம், "பிதாவே, நீர் பேசின ஒவ்வொரு வார்த்தையிலும் விசுவாசமுடையவர்களாய் இருந்து நாங்கள் விசுவாசிக்கிறோம். இது உம்முடைய வாக்குத்தத்தம், உம்முடைய வார்த்தை, நாங்கள் அப்படியே விசுவாசிப்போமானால் எங்களுக்கு தேவைப்படுகிற விசுவாசத்தை நீர் எங்களுக்கு அளிப்பீர்…நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று கூறுகிறோம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நம்மிடம் இராப்போஜன ஆராதனை இல்லாததால், ஞாயிற்றுக்கிழமை காலை உங்களுக்கு வசதியான நேரத்தில் உங்களுடைய சபையோடு, குடும்பத்தினரோடு அல்லது தனித்தனியாகக் கேட்க ஒரு செய்தியைத் தேர்வுசெய்ய உங்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். நம்முடைய விசுவாசத்தை மதிப்பிடுவதற்கு, வார்த்தையைக் கேட்பதை விட சிறந்த வழி உண்மையாகவே எதுவுமில்லை; ஏனென்றால், விசுவாசம் கேட்பதால், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதால் வருகிறது, அந்த வார்த்தை தீர்க்கதரிசியிடம் வந்தது.
நாம் அனைவரும் 62-1007 வாசலுக்குத் திறவுகோல் என்ற செய்தியைக் கேட்க, (உங்கள் உள்ளூர் நேர மண்டலத்தில்) மாலை 5:00 மணிக்கு ஒன்று சேருவோமாக. அறிவித்தபடி, இதை ஒரு விசேஷித்த இராப்போஜன ஆராதனையாக்க நான் விரும்புகிறேன், இது மாலை 5:00 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிபரப்பப்படும், (ஜெபர்சன்வில் நேரம்). இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஆராதனையை ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் பதிவிறக்கம் செய்து இயக்கலாம்: இங்கே இணைப்பு.
கடந்த காலத்தில் மற்ற வீட்டு இராப்போஜன ஆராதனைகளைப் போலவே, ஒலிநாடாவின் முடிவில் சகோதரன் பிரான்ஹாம் அப்பம் மற்றும் திராட்சை ரசத்திற்காக ஜெபம் செய்வார். இராப்போஜன ஆராதனைப் பகுதியை நீங்கள் முடிப்பதற்கான பல நிமிடங்களுக்கு இசைப்பேழையின் இசை இருக்கும். பிறகு, சகோதரன் பிரான்ஹாம் பாதங்களைக் கழுவுதல் தொடர்பான வேதவசனத்தை வாசிப்பார், அவருடைய வாசிப்பைத் தொடர்ந்து பாதங்களைக் கழுவும் ஆராதனைப் பகுதியை நீங்கள் முடிப்பதற்கு நற்செய்தி பாடல்கள் பல நிமிடங்கள் தொடரும்.
நம்முடைய வீடுகளிலோ, சபைகளிலோ, அல்லது நீங்கள் எங்கிருந்தாலும், நம் ஒவ்வொருவரோடும் போஜனம் பண்ணும்படி, நம்முடைய கர்த்தராகிய இயேசுவை அழைப்பதில் நாம் என்ன ஒரு சிலாக்கியத்தை உடையவர்களாக இருக்கிறோம். நீங்கள் அவரண்டை பேசும்போது எனக்காக ஜெபியுங்கள், நான் உங்களுக்காக நிச்சயமாக ஜெபித்துக் கொண்டிருப்பேன்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்