ஞாயிறு
25 ஆகஸ்ட் 2024
65-0801E
தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்

அன்புள்ள கழுகுகளே,

பிணம் இருக்கும் இடத்தில், கழுகுகள் கூடுகின்றன. இது சாயங்கால நேரம், மற்றும் தீர்க்கதரிசனம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் அவரை நம்முடைய சபைகளில், நம்முடைய வீடுகளில், மற்றும் புதரில் உள்ள நம்முடைய மண் குடிசைகளுக்குள் அழைத்திருக்கும்போது, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரிகின்றன. அவர் நம்மிடம் பேசி அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தப் போகிறார். நாம் தேவனுக்காக அதிக பசியாகவும் தாகமாகவும் இருக்கிறோம்.

அவர் முன்குறித்த, முன்னரே தீர்மானிக்கப்பட்ட, அவருடைய தீர்க்கதரிசி மூலமாக; அவருடைய வார்த்தை நமக்கு வரும் வழியை அவர் தெரிந்தெடுத்திருக்கிறார். அவருடைய மணவாட்டியாகிய, நம்மை, அந்த வேளையின் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களை பற்றிப் பிடிக்கும்படி அந்த வேளைக்கான மனிதனாய் இருக்கும்படி அவர் வில்லியம் மரியன் பிரான்ஹாமைத் தெரிந்து கொண்டார்.

அவருடைய ஸ்தானத்தை வேறொரு மனிதனால் எடுத்துக் கொள்ள முடியாது. இலக்கணமற்ற வார்த்தைகளில் அவர் தம்மை வெளிப்படுத்தும் விதத்தை நாங்கள் விரும்புகிறோம். இது தேவன் நம்முடைய செவிகளில் பேசிக்கொண்டிருப்பதாகும். தேவன், மானிட உதடுகளின் மூலமாக பேசி, அவர் செய்வதாக கூறினதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். அதுவே இதற்கு தீர்வாகிறதே!

தேவன் தரிசனங்களில் அவருடைய கைகளையும் கண்களையும் பயன்படுத்தினார். அவர் பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எதையும் அவரால் கூற முடியவில்லை. தேவன் அவருடைய நாவையும், விரலையும், அவருடைய சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பையும் தேவனோடு முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் தேவனுக்கான வாயாக இருந்தார்.

இந்தக் காலத்தில் சபையானது குழப்பமுறும் என்பதை தேவன் முன்னறிந்திருந்தார். ஆகையால், அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையினால் தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியை வெளியே அழைத்து வழிநடத்த, நம்முடைய காலத்திற்காக அவருடைய தீர்க்கதரிசியை அவர் ஆயத்தமாக வைத்திருந்தார்.

அவருடைய மகத்தான திட்டத்தில், அவருடைய வருகைக்கு முன்பாக அவருடைய தீர்க்கதரிசியை அவர் எடுத்துக் கொள்வார் என்பதையும் கூட அவர் அறிந்திருந்தார், எனவே அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டி எப்பொழுதுமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை தங்களுடைய விரல் நுனியில் வைத்திருக்கும் படியாக, அவர் அவருடைய சத்தத்தை ஒலிப்பதிவு செய்து, சேமித்து வைத்திருந்தார், அப்போது அவர்களிடம் கேள்வியே எழாது. அவர்கள் எல்லா நேரத்திலுமே கேட்கக்கூடிய தூய கன்னிகையான வார்த்தைக்கு வியாக்கியானமே தேவைப்படாது.

கடைசி நாட்களில் பல சத்தங்களும், நிறைய குழப்பங்களும் இருக்கும் என்று அவர் அறிந்திருந்தார். கடந்த மூன்று வாரங்களாக அவர் நம்மிடம் பேசி, நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற நேரத்தைக் குறிப்பிட்டார். கூடுமானால், கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்பதை குறித்து அவர் நம்மிடத்தில் சொன்னார்.

எவ்வாறு இப்பிரபஞ்சத்தின் தேவன் ஜனங்களின் இருதயங்களை குருடாக்கியிருக்கிறான். இந்த லவோதிக்கேயா காலத்தில் இந்த காரியங்கள் சம்பவிக்கும் என்று எவ்வாறு தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசனங்கள் மூலமாக கூறியிருக்கிறார். எதுவுமே செய்யப்படாமல் விடப்படவில்லை என்பதை அவர் நமக்கு சொன்னார்.

இந்த நாளில் செய்யும்படி அவரால் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட காரியங்களினால் நமக்கு முன்பாக அவர் தாமே தம்மை அடையாளம் காட்டியிருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நமக்கு அவருடைய செயல்களே நிரூபித்திருக்கின்றன. இது அவருடைய மணவாட்டிக்குள், ஜீவித்துக் கொண்டிருக்கிற, பேசிக் கொண்டிருக்கிற, தேவனுடைய சத்தமாயிருக்கிறது.

இந்த செய்தி எபிரெயர் 13:8 என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இது ஜீவனுள்ள வார்த்தையா? இது மாம்சத்தில் மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறதாய் இருக்கிறதா? நீங்கள் விசுவாசித்துக் கீழ்படிந்தால் இந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தீர்க்கதரிசனம் நடக்கும்.

உலக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று உலகம் முழுவதும் நடக்கும். தேவன் மனித உதடுகளால் பேசுவார், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் தம்முடைய மணவாட்டியுடன் பேசுவார். அவர் நம் அனைவருக்காகவும் ஜெபிக்கும்போது நாமும் ஒருவருக்காக ஒருவர் நம்முடைய கைகளை வைத்து அவர் ஜெபிக்கச் செய்வார்.

அங்கே வெளியே தொலைபேசி இணைப்புகளில் இணைக்கப்பட்டுள்ள நீங்கள், ஊழியக்காரர்கள் உங்கள் மேல் கைகளை வைத்திருக்கும் போதும், உங்களுடைய அன்பார்ந்தவர்கள் உங்கள் மீது கரங்களை வைத்திருக்கும் போதும், நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், அது முடிவு பெற்றுவிட்டது, அது முற்றுப் பெற்றுவிட்டது.

நம்முடைய தேவை என்னவாயிருந்தாலும், நாம் அதை விசுவாசித்தால்…தேவன் அதை நமக்குத் தருவார். நாம் விசுவாசிக்கிறோம். நாம் அவருடைய உண்மையான மணவாட்டியாய் இருக்கிறோம். அது சம்பவிக்கும். நாம் எங்கெல்லாம் கூடி இருக்கிறோமோ அங்கெல்லாம் அக்கினி ஸ்தம்பம் இருந்து, நமக்கு என்னவெல்லாம் தேவையாயிருக்கிறதோ, அதை நம் ஒவ்வொருவருக்கும் தரும். இது கர்த்தர் உரைக்கிறதாவது.

இப்பொழுது நாம் இங்கே சபையில் காணும் அதே பரிசுத்த ஒளியானது, ஒவ்வொருவர் மேலும் விழுந்து, இந்த நேரத்திலேயே அவர்கள் சுகமாக்கப்படுவார்களாக. கிறிஸ்துவின் பிரசன்னத்தில், நாங்கள் சத்துருவை, பிசாசை கடிந்து கொள்ளுகிறோம். கர்த்தராகிய இயேசுவின் கடுமையான பாடுகளின் மூலமாகவும், மரணத்தின் மூலமாகவும், மூன்றாம் நாளிலே வெற்றிச் சிறந்த உயிர்த்தெழுதலின் மூலமாகவும், ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றிரவு உயிரோடு, எங்கள் மத்தியில் இங்கே இருக்கிறார் என்ற அவருடைய நிரூபிக்கப்பட்ட அத்தாட்சியினால் சத்துரு தோற்கடிக்கப்பட்டிருக்கிறான் என்பதை நாங்கள் அவனுக்கு கூறுகிறோம். அவருடைய பிரசன்னத்தில், சபையில் சுழன்று கொண்டிருக்கிற இந்த மகத்தான ஒளியினால் அடையாளங் காட்டப்பட்டிருக்கிற, ஜீவனுள்ள தேவனின் ஆவி இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் ஒவ்வொரு இருதயத்தையும் விசுவாசத்தினாலும், வல்லமையினாலும், சுகமளிக்கும் வல்லமையினாலும் நிரப்பட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனுடைய மகிமைக்காக இதை அருளும்.

நீங்கள் அவருடைய மணவாட்டியாய் இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து எதையும் எடுக்க முடியாது, எதையும் எடுக்க முடியாது. சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான். உங்களிடம் ஒரு சிறு கரண்டியளவே அவர் இருப்பதாக நீங்கள் உணரலாம், அதுதான் உங்களுக்குத் தேவை, அது உண்மையானது. அது அவராயிருக்கிறது. நீங்கள் அவருடையவராய் இருக்கிறீர்கள் அவருடைய வார்த்தை தவறிப் போக முடியாது.

அதை விசுவாசியுங்கள், அதை ஏற்றுக் கொள்ளுங்கள், அதைப் பற்றிக் கொள்ளுங்கள். அது தவறி போக முடியாது. உங்களுக்கு வல்லமை இல்லை, ஆனால் நீங்கள் அவருடைய அதிகாரத்தை பெற்றுள்ளீர்கள். "நான் அதை எடுத்துக்கொள்கிறேன் கர்த்தாவே, இது என்னுடையது, நீர் அதை எனக்குத் தாரும், சாத்தான் அதை எடுத்துச் செல்ல நான் விடமாட்டேன்" என்று கூறுங்கள்.

நமக்கு என்னே ஒரு நேரம் இருக்கும். நான் மற்றெந்த இடத்திலும் இருக்க விரும்பவில்லை. பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சுற்றி இருப்பார். அதிகமான வெளிப்பாடு நமக்கு கொடுக்கப்பட்டது. நொறுங்குண்ட இருதயங்கள் சீர்படுத்தப்பட்டன. ஒவ்வொருவரும் சுகமடைந்தனர். "இப்போது நாம் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா, அது இப்பொழுதே எரியவில்லையா, அவருக்கே என்றென்றைக்கும் மகிமையும் கனமும் உண்டாவதாக" என்று எப்படி நம்மால் கூறாமல் இருக்க முடியும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

எங்களுடன் சேர்ந்து கொள்ள உலகை அழைக்கிறோம்:

நேரம்: பிற்பகல் 12:00, ஜெபர்சன்வில் நேரம்
செய்தி: 65-0801E தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

ஆதியாகமம்: 22:17-18
சங்கீதம்: 16:10 / அதிகாரம் 22 / 35:11 / 41:9
சகரியா 11:12 / 13:7
ஏசாயா: 9:6 / 40: 3-5 / 50:6 / 53:7-12
மல்கியா: 3:1 / 4வது அதிகாரம்
பரி. யோவான் 15:26
பரி. லூக்கா: 17:30 / 24:12-35
ரோமர்: 8:5-13
எபிரெயர்: 1:1 / 13:8
வெளிப்படுத்தின விசேஷம்: 1:1-3 / அதிகாரம் 10